Jump to content

வடக்கு – கிழக்கு மாகாணங்களின் மீள்கட்டமைப்பு!! இலங்கையிலிருந்து கனடா விரைந்த முக்கியஸ்தர்கள்


Recommended Posts

இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாண அரசு அமைச்சுக்களுடன் இணந்து ‘இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களின் மீள்கட்டமைப்பு’ என்ற சர்வதேச உயர்நிலை மாநாடு கனடாவில் நடைபெறவுள்ளது. நிறைவானதும், நிலையானதுமான வேலைத்திட்டங்களைக் கையாண்டு தாயகத்தில் வாழும் தமிழ்ச் சமுதாயத்தை 21ம் நூற்றாண்டின் உலகப் பொருளாதாரத்தோடு இணைத்துச் செல்லவும், குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் கல்வி மற்றும் சுகாதாரக் கட்டமைப்பில் ஒரு வலுவான அடித்தளத்தை மீளக்கட்டுவதற்கு வழிகோலும் வகையிலும் இம் மூன்று நாள் மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. ஸ்காபரோவிலுள்ள உயர்கல்வி நிலையமான Centennial Collegeஇல் 2017 ஜனவரி மாதம் 15ம் 16ம், 17ம் தேதிகளில் மாநாடு நடைபெறவுள்ளது.

இம் மூன்று நாட்களும், தமிழர் தாயகத்தின் பொருளாதார, கல்வி மற்றும் சுகாதாரக் கட்டமைப்புக்களின் நிலை மற்றும் தேவைகள் என்பன வடக்கு கிழக்கு மாகாண அரசுகளின் கல்வி, சுகாதார அமைச்சர்கள், சிரேஷ்ட அதிகாரிகள் ம்ற்றும் தாயகத்தின் துறைசார் வல்லுனர்களால் முன்வைக்கப்படும், புலம்பெயர் தமிழ் அறிவியலாளர்கள், துறைசார் வல்லுனர்கள், சர்வதேச தொழில்நுட்ப நிபுணர்கள் பலரும் இம்மாநாட்டில் பங்கேற்று, வடக்குக் கிழக்கு மாகாணங்களின் தேவைகளை ஆழமாக ஆராய்ந்து, அதற்கான தீர்வுகளையும் செயல்திட்டங்களையும் முன்மொழிவர். அத்துடன், திட்டங்கள் நிறவேற்ற வடக்கு கிழக்கு மாகாண அமைச்சுக்களுக்கு உதவும் வண்ணம் புலம்பெயர் தேசங்களில் உள்ள சர்வதேச அறிவுசார் வல்லுனர்களையும், தொழில் முனைவர்களையும் கொண்ட மீள்கட்டமைப்பு ஆலோசனைக் குழுக்களும் அமைக்கப்படும்.

கனடியத் தமிழர் பேரவை (CTC) ஒழுங்கமைக்கும் இந்த சர்வதேச மாநாட்டினை நடத்துவதற்கு கனடியத் தமிழர் மருத்துவ சங்கம் (CTMA), சர்வதேச மருத்துவ சுகாதார நிறுவனம் (IMHO), தமிழ் மருத்துவ அறிஞர் நிறுவனம்- பிரித்தானியா (MIOT-UK), தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு – கனடா (TNA-Canada), கனடாவின் சில முக்கிய கல்விச்சபைகள் மற்றும் பல தமிழ் அமைப்புக்கள் தமது ஒத்துழைப்பை வழங்குகின்றன. இந்த சர்வதேச மாநாட்டிற்கான ஆலோசனைகளை அமெரிக்க தலைநகரான Washington D.C.யில் அமைந்துள்ள துரைசிங்கம் நிறுவனம் (Thuraisingham & Associates) வழங்கி உதவுகிறது.

தமிழர் தாயகத்தின் மீளக்கட்டுமானத்திற்கான தேவைகள் நிறைந்திருக்கும் இன்றைய சூழலில் இம்மாநாட்டினைச் சிறப்பாக நடத்தி, அதன்மூலம் வடக்கு கிழக்கு வாழ் நம் மக்களுக்கு உதவுவதற்கு உங்கள் அனைவரினதும் பேராதரவைக் கோரி நிற்கிறோம். மேலதிக விபரங்களை மாநாட்டு இணையத்தளத்தில் அறிந்து கொள்ளலாம். என ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

toronto-airport

toronto-airport01

toronto-airport02

toronto-airport03

toronto-airport04

toronto-airport05

toronto-airport06

toronto-airport07

toronto-airport08

toronto-airport09

toronto-airport10

toronto-airport11

toronto-airport12

toronto-airport13

toronto-airport14

toronto-airport15

toronto-airport16

toronto-airport17

toronto-airport18

toronto-airport19

toronto-airport20

toronto-airport21

toronto-airport23

toronto-airport24

toronto-airport25

 

இணையத்தளம்: www.developnortheast.org

 

 

 

http://www.canadamirror.com/canada/78369.html

 

 

 

Link to comment
Share on other sites

ஈழத்தமிழர் இனச்சிக்கலுக்கு என்ன தீர்வு கிடைக்கப் போகின்றது? கனடாவில் குருகுலராசா

இன்று தமிழர் கொண்டாடும் விழாக்களில் காலத்தால் பழமையானது பொங்கல் விழாவாகும். ஏறத்தாழ 2500 ஆண்டுகளாகத் தமிழர் பொங்கல் விழாவைக் கொண்டாடி வருவதற்குச் சங்க இலக்கியங்கள் சான்று பார்க்கின்றன என்பதை நீங்கள் அறிவீர்கள் என வடமாகாணக் கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராசா தெரிவித்துள்ளார்.

கனடாவில் நடைபெற்ற பொங்கல் விழாவில் உரையாற்றுகையில் இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,

தமிழர் கொண்டாடும் வேறெந்த விழாவுக்கும் இத்தகைய தொன்மையும், சிறப்பும் இல்லை என்பதை நான் உங்களுக்கு கூறவேண்டியதில்லை.

செய் நன்றி மறவாமை என்னும் தமிழரது பண்பாட்டுக்கு எடுத்துக் காட்டாக விளக்கும் இந்த விழாவைச் சொந்த நாட்டோடு விட்டுவிடாமல் இந்த நாட்டுக்கும் கொண்டு வந்து போற்றிப் பேணுவது பெருமை தரும் செயலாகும்.

அந்த வகையிலே உலகிலே வாழும் ஒன்பது கோடி தமிழரோடு இணைந்து நாமும் பொங்கல் விழாவைக் கொண்டாடி மகிழ்வோம்.

உங்களது அயராத கூட்டு முயற்சியால் கனடிய நாடாளுமன்றத்தில் ஜனவரி மாதம் தமிழ் மரபுத்திங்கள் என ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள சூழலில் இம்முறை பொங்கல் விழாவை கொண்டாடுவது மட்டற்ற மகிழ்ச்சியை அளிக்கின்றது.

மாநகரம், மாநிலம், மத்திய என மூன்றுமட்ட அரசுகளும் ஜனவரி மாதத்தைத் தமிழ் மரபுத் திங்கள் என ஏற்றுக் கொள்ளச் செய்த உங்கள் அனைவருக்கும் தாயக மக்கள் சார்பில் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெவித்துக் கொள்ளுகின்றேன்.

ஜனவரி மாதம் தமிழ் மரபுத்திங்கள் என ஏற்றுக் கொள்ளப்பட்டுதன் மூலம் கனடாவில் வாழும் பல்லின மக்களும் தமிழ் மொழியின் அருமை, பெருமைகளையும் தமிழரது கலைகள் மற்றும் பண்பாட்டு விழுமியங்களையும் அறியும் வாய்ப்புக் கிடைத்துள்ளமை அறிந்து புளகாங்கிதம் அடைகின்றேன்.

எமது தாயகம் முப்பது ஆடு காலப் போரிலே பாரிய உயிர் இழப்பையும் பொருள் இழப்பையும் சந்தித்ததைத் தாங்கள் அறிவீர்கள். இந்த இழப்புகளுக்கு உள்ளாகிச் சொல்லொணாத துன்பத்தை எமது மக்கள் அனுபவித்து வருகின்றார்கள் என்பதையும் நான் உங்களுக்கு நான் கூறவேண்டியதில்லை.

எமது மக்களை இன்ப,துன்பங்களில் இருந்து மீட்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி கடந்த இரண்டு ஆண்டுகளாக நிபுணர்களைக் கொண்டு ஆய்வு செய்து வட மாகாண சபை அறிக்கை இட்டுள்ளது

இவ்வாறு ஆய்வு செய்யப்பட்ட கல்வி, சுகாதாரம் பற்றிய அறிக்கைகளின் அடிப்படையில் பன்னாட்டு நிபுணர்கள் பங்கு கொள்ளும் மாநாடு ஒன்று அடுத்து வரும் 15 ஆம், 16 ஆம், 17 ஆம் திகதிகளில் சென்டானியல் கல்லூரியிலில் நடைபெறவுள்ளதை நீங்கள் அறிவீர்கள்.

இந்த மாநாட்டிலே பங்குகொள்ள வடக்குக் கிழக்கு மாகாண கல்வி மற்றும் சுகாதாரத் துறையைச் சேர்ந்த உயர் அதிகாரிகளும் வடக்குக் கிழக்கு மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதி நிதிகளாகிய நாமும் யாழ்ப்பாணம் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழகங்களை சேர்ந்தோருமாக 25 பேர்வந்துளோம்.

அமெரிக்கா, அவுத்திரேலியா, பிரித்தானியா உள்ளிட்ட உலகின் பல நாடுகளில் இருந்தும் 50 இற்கும் மேற்பட்ட துறைசார் நிபுணர்களும் வந்துள்ளனர்.

இந்த மாநாட்டின் விளைவாக தாயக மக்களுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும் எனவும் அவர்களது துன்பங்கள் நீங்கவும் வழிபிறக்குமென நம்புகிறோம்.

இந்தமாநாடு வெற்றி பெற மாநாட்டு அமைப்பாளர்களுக்கு உங்கள் ஆதரவை வழங்க வேண்டு என தாயக மக்கள் சார்பாக வேண்டிக்கொள்ளுகின்றேன்.

இலங்கையிலே புதிய அரசியல் அமைப்பு உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஈழத்தமிழர் இனச்சிக்கலுக்கு என்ன தீர்வு கிடைக்கப் போகின்றது? அதிகாரங்கள் பகிரப்படுமா? வடக்குக் கிழக்கு இணைக்கப்படுமா? போன்ற விடயங்களை அறிய நீங்கள் ஆர்வமாக இருப்பீர்கள் என்பதை நான் அறிவேன்.

அரசியல் அமைப்பு வழி காட்டல் குழுவிலே சம்பந்தன் ஐயாவும், நாடாளுமன்ற உறுப்பினர் சட்டவல்லுநர் சுமந்திரனும் உறுப்பினர்களாகவிருந்து கடுமையாக உழைத்து வருகின்றனர்.

அத்துடன்,எமது உரிமைகளை வென்றெடுக்கவேண்டும் என்ற நோக்கோடு பல்வேறு பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். அவற்றையெல்லாம் இப்பொழுது விரித்துரைப்பது பொருத்தமானதல்ல.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஐயா அரசியலுக்குப் புதிதாகக் கொண்டுவரப்பட்டவரல்ல. தந்தை செல்வநாயகம் காலம் தொடக்கம் இன்று வரை அரசியலில்இருப்பவர்.

அவர் இலங்கைக் குடியரசுத் தலைவராகப் பணிபுரிந்த ஜே ஆர் ஜெயவர்த்தனா, விஜயதுங்கா, பிரேமதாசா, சந்திரிகா பண்டார நாயக்கா , மகிந்தராசபக்ச முதலியோரோடும் இந்தியப்பிரதமராகப் பணிபுரிந்த இந்திராகாந்தி , இராசீவ் காந்தி , வி பி சிங் , நரசிம்மராவ் , குஜரால், வாஜ்பாய் , மன்மோகன்சிங் முதலியோரோடும் ஈழத்தமிழர் இனச்சிக்கலுக்குத் தீர்வு காண முயன்ற நீண்ட நெடிய பட்டறிவு மிக்கவர்.

மேலும், அவர் எமது சிக்கலுக்கு நியாயமான நிலைத்து நிற்கக் கூடிய ஒருத்தீர்வை விரைவில் காண்பார் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு என வடமாகாணக் கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராசா குறிப்பிட்டுள்ளார்.

 

http://www.tamilwin.com/statements/01/131876?ref=morenews

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.