Jump to content

சீனாவின் விடாப்பிடி


Recommended Posts

சீனாவின் விடாப்­பிடி

IMG5129-7eb99f776cb6de3eebab60de3a58c04526a2b0c7.jpg

 

“இலங்கை ஒரு சிறிய நாடு அல்ல, மிகப்­பெ­ரிய வாய்ப்­பு­களைக் கொண்ட ஒரு நாடு, அதனால் தான் இங்கு கூடி­யி­ருக்­கிறோம்” இவ்­வாறு கூறி­யி­ருந்தார் இலங்­கைக்­கான சீனத் தூதுவர் யி ஷியான்லிங்.

கடந்த 7ஆம் திகதி ஹம்­பாந்­தோட்­டையில் சீனாவின் முத­லீட்டில், கைத்­தொழில் வல­யத்தை ஆரம்­பித்து வைக்கும் நிகழ்வில் உரை­யாற்­றிய போதே சீனத் தூதுவர் அவ்­வாறு குறிப்­பிட்­டி­ருந்தார்.

ஹம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தின் 80 வீத உரி­மை­யையும், ஹம்­பாந்­தோட்­டையை உள்­ள­டக்­கிய பகு­தியில் 15 ஆயிரம் ஏக்கர் காணி­க­ளையும் சீனா 99 வருட குத்­த­கைக்குப் பெற்றுக் கொள்­ள­வுள்ள விவ­காரம், இலங்கை அர­சி­யலில் கடு­மை­யான கொந்­த­ளிப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

நிலங்­க­ளையும், துறை­மு­கத்­தையும் சீனா­வுக்கு குத்­த­கைக்கு வழங்­கு­வதை மஹிந்த ராஜபக் ஷவும், ஜே.வி­.பி.யும் கடு­மை­யாக எதிர்த்து வரு­கின்­றன.

ஆனாலும், எதிர்­மறை சக்­தி­களின் இந்த எதிர்ப்­பு­க­ளினால் சீனா பின்­வாங்கி விடாது என்­பதை சீனத் தூதுவர் தெளி­வா­கவே குறிப்­பிட்­டி­ருக்­கிறார்.

இலங்­கையில் தனது முத­லீ­டு­களை அபி­வி­ருத்­திக்­கான உதவி என்று காட்­டிக்­கொள்ள சீனா முனைந்­தாலும், உண்மை அதற்கும் அப்­பாற்­பட்­டது.

இலங்­கைக்கு இப்­போது தேவைப்­ப­டு­வது, பொரு­ளா­தார வீழ்ச்­சியில் இருந்து மேல் எழும்­பு­வது மாத்­தி­ரமே. அதற்கு சீனாவைப் பயன்­ப­டுத்திக் கொள்­கி­றது அர­சாங்கம்.

இந்தச் சந்­தர்ப்­பத்தை சீனா தனக்குச் சாத­க­மாகப் பயன்­ப­டுத்திக் கொள்­கி­றது. பூகோள அர­சியல் போட்­டியில், இலங்­கையை தக்­க­வைத்துக் கொள்ளல் என்­பது முக்­கி­ய­மான விடயம்.

இந்­தியப் பெருங்­க­டலில் இலங்கைத் தீவின் அமை­விடம் மிகவும் முக்­கி­ய­மா­னது. அண்­மையில் இலங்­கைக்கு வந்­தி­ருந்த அமெ­ரிக்­காவின் பசுபிக் கட்­டளை தள­பதி அட்­மிரல் ஹரி பி ஹரிஸ் இதனை தெளி­வாகக் கூறி­யி­ருக்­கிறார்.

இந்­தி­யாவின் முன்னாள் தேசிய பாது­காப்பு ஆலோ­சகர் சிவ்­சங்கர் மேனன் அண்­மையில் எழு­தி­யுள்ள நூல் ஒன்றில், இலங்கைத் தீவை ஒரு விமா­னந்­தாங்கி கப்பல் என்று குறிப்­பிட்­டி­ருக்­கிறார்.

இந்­தியப் பெருங்­க­டலின் கேந்­திர முக்­கி­யத்­து­வம் வாய்ந்த இடத்தில் இருப்­பதால் தான், இலங்­கையை தமது வசம் வைத்­தி­ருப்­ப­தற்கு, அமெ­ரிக்கா, இந்­தியா, சீனா போன்ற நாடுகள் முயற்­சித்துக் கொண்­டி­ருக்­கின்­றன.

இந்­தியா, அமெ­ரிக்­காவின் சார்பு நிலையில் இருந்து கொண்டு, சீனாவை ஓரம்­கட்டிக் கொண்டு, ஆட்­டத்தை ஆரம்­பித்த தற்­போ­தைய அர­சாங்­கத்­தினால், பொரு­ளா­தார ரீதி­யாக பலம்­பெற முடி­ய­வில்லை.

அதற்குப் பின்னர் தான் சீனா­வையும் அர­வ­ணைத்துக் கொண்டு ஆடத் தொடங்­கி­யி­ருக்­கி­றது.

கொழும்பு நிதி நகரம், ஹம்­பாந்­தோட்டை துறை­முகம், ஹம்­பாந்­தோட்டை கைத்­தொழில் வலயம் என்று தற்­போது சீனா முப்­பெரும் திட்­டங்­களில் முத­லீடு செய்யத் தயா­ராக இருக்­கி­றது.

எல்லாம் சரி­யாக நடந்தால் அடுத்த 3 தொடக்கம் 5 ஆண்­டு­களில், 5 பில்­லியன் டொலர் முத­லீ­டுகள் மேற்­கொள்­ளப்­படும் என்று சீனத் தூதுவர் தெரி­வித்­துள்ளார்.

இலங்­கையைப் பொறுத்­த­வ­ரையில் இனிமேல் கடன் வாங்கி பொரு­ளா­தா­ரத்தைச் சீர­மைக்க முடி­யாது என்ற கட்­டத்தில் தான் வெளி­நாட்டு முத­லீ­டு­களை ஈர்த்து பொரு­ளா­தா­ரத்தை உயர்த்த முடிவு செய்­தி­ருக்­கி­றது.

சீனா மட்­டும்தான் இப்­போது பேர­ளவு நிதி முத­லீட்டை மேற்­கொள்ளக் கூடிய நாடாக இருக்­கி­றது.

இலங்­கையில் சீனா­வுக்குத் தேவைகள் அதிகம் இருப்­பதால், கண்ணை மூடிக் கொண்டு, கால்­வைக்­கவும் சீனா தயா­ராக இருக்­கி­றது.

ஹம்­பாந்­தோட்­டையில் மஹிந்­த­விடம் எதிர்­பார்த்­ததை விடவும் அதி­க­மான வாய்ப்­பு­களை தற்­போ­தைய அர­சாங்கம் கொடுக்கத் தயா­ராக இருப்­பதை சாத­க­மாகப் பயன்­ப­டுத்திக் கொள்­கி­றது சீனா.

மிகப்­பெ­ரிய ஒரு நாட்­டுக்­கு­ரிய வாய்ப்­பு­களை கொண்ட நாடாக இலங்­கையைப் பார்க்­கி­றது சீனா. வெறும் பொரு­ளா­தாரப் பெறு­மா­னங்­களை மட்டும் வைத்து, இந்த வாய்ப்­பு­களை எடை போடு­வ­தற்கு சீனா தயா­ராக இல்லை.

இலங்­கையின் கேந்­திர முக்­கி­யத்­துவம் அத்­த­கை­ய­தொரு முடி­வுக்கு வர சீனாவைத் தூண்­டி­யி­ருக்­கி­றது.

ஹம்­பாந்­தோட்டைத் துறை­மு­கத்தை இரா­ணுவ நலன்­க­ளுக்குப் பயன்­ப­டுத்தும் திட்டம் சீனா­விடம் இருந்­தாலும், அதற்­கான வாய்ப்­பு­களை இலங்கை அர­சாங்கம் இப்­போது வழங்கத் தயா­ராக இல்­லா­வி­டினும், தனது கட்­டுப்­பாட்டில் ஹம்­பாந்­தோட்டைத் துறை­முகம் இருப்­பது சீனாவைப் பொறுத்­த­வ­ரையில் பெரும் பலம்.

இப்­போது சீனா அதனைத் தான் முக்­கி­ய­மான விட­ய­மாகப் பார்க்­கி­றது.

கடல்­க­டந்த தளங்­களை அமைக்கும் விட­யத்தில் சீனா அக்­கறை கொண்­டி­ருந்­தாலும், அவ­ச­ரப்­ப­ட­வில்லை. இது­வ­ரையில் டி.ஜி­.போட்­டியில் மாத்­தி­ரமே கடற்­படைத் தளத்தை அமைக்க சீனா முடிவு செய்­தி­ருக்­கி­றது,

எனவே, ஹம்­பாந்­தோட்­டையில் அத்­த­கை­ய­தொரு வச­தியை ஏற்­ப­டுத்திக் கொள்ளும் அவ­சரம் சீனா­வுக்குக் கிடை­யாது. ஆனால், அத்­த­கை­ய­தொரு ஆர்வம் சீனா­விடம் இருக்­கி­றது.

இப்­போது அவ­ச­ரப்­பட்டு, ஹம்­பாந்­தோட்­டையில் தளம் அமைக்கக் கோரினால் அது எத்­த­கைய விளைவை ஏற்­ப­டுத்தும் என்­பது சீனா­வுக்கு நன்­றா­கவே தெரியும்.

இந்­தியா, அமெ­ரிக்கா போன்ற நாடுகள் அதனைக் கடு­மை­யாக எதிர்க்கும்.  உள்­நாட்­டிலும் எதிர்ப்­பு­களைச் சந்­திக்க நேரிடும். 

ஆனால், ஹம்­பாந்­தோட்டை துறை­மு­கத்­தையும், அதனைச் சுற்­றி­யுள்ள பகு­தியில் கைத்­தொழில் வல­யத்­தையும் கட்­டுப்­பாட்டில் கொண்டு வந்­து­விட்டால், அடுத்த 99 ஆண்­டு­க­ளுக்குள் சீனாவின் கனவு நன­வாகும் வாய்ப்­புகள் இருக்­கின்­றன.

     அந்தக் கால இடை­வெ­ளிக்கும் அர­சியல் மாற்­றங்கள் நிக­ழலாம். இரா­ணுவ மாற்­றங்கள் இடம்­பெ­றலாம். அதை­விட, சீனாவின் பிர­சன்­னத்தை அச்­சு­றுத்­த­லோடு பார்க்­கின்ற ஒரு நிலை அடுத்த பத்து அல்­லது அதற்­க­டுத்­த­டுத்த ஆண்­டு­களில் மறைந்­து­விடும்.

  காலடி எடுத்து வைக்கும் வரையில் தான் கடு­மை­யான எதிர்ப்­புகள் இருக்கும். கால் வைத்த பின்னர் அந்த எதிர்ப்­புகள்

     படிப்­ப­டி­யாக குறையத் தொடங்­கி­விடும்.

அத­னைத்தான் சீனா கவ­னத்தில் கொண்­டி­ருக்­கி­றது. இலங்­கையில் சீனாவின் முத­லீடு பொரு­ளா­தார நோக்­கத்தைக் கொண்­ட­தல்ல. அது முற்­றிலும் பூகோள அர­சியல் நல­னையும், பாது­காப்பு நல­னையும் அடிப்­ப­டை­யாகக் கொண்­ட­தே­யாகும்.

இத்­த­கைய நிலையில், ஹம்­பாந்­தோட்டை துறை­மு­கத்­தினால் ஏற்­ப­டக்­கூ­டிய நட்­டத்தை அல்­லது கைத்­தொழில் வல­யத்தை அமைப்­ப­தற்­காக செல­வி­டு­கின்ற முத­லீட்­டை­யிட்டு சீனா கவ­லைப்­ப­டாது.

இலங்­கை­யி­லி­ருந்து சீனா­வுக்கு, தேவைப்­ப­டு­வது போரு­ளா­தார இலா­பங்­களோ, வரு­மா­னங்­களோ அல்ல. அதற்கு அப்­பாற்­பட்ட ஆதா­யங்­களை இங்கு நிலை­கொள்­வதன் மூலம் சீனா­வினால் பெற­மு­டியும்.

என­வேதான், மெது­மெ­து­வாக தனது பலத்தை இலங்­கையில் பெருக்கிக் கொள்ளத் திட்­ட­மி­டு­கி­றது சீனா.

இலங்­கையில் மஹிந்த ராஜபக் ஷ என்ற தனது நண்­பனின் எதிர்ப்­பு­களைக் கூடப் பொருட்­ப­டுத்­தாமல், முத­லீ­டு­களில் கவனம் செலுத்த ஆரம்­பித்­தி­ருக்­கி­றது சீனா.

மஹிந்த ராஜபக் ஷவைப் பொறுத்­த­வ­ரையில் சீனா­வுக்கு வேண்­டி­ய­வ­ரா­கவோ சிறந்த நண்­ப­னா­கவோ இருக்­கலாம். ஆனால், அவர் அதி­கா­ரத்­துக்கு வரும் வரைக்கும், சீனா­வினால் இலங்­கையில் தனது நலன்­களை விட்டுக் கொடுத்துக் கொண்­டி­ருக்க முடி­யாது.

இல­வு­காத்த கிளி­யாக இருப்­ப­தற்கு சீனா தயா­ராக இல்லை. அத­னால்தான், தற்­போ­தைய அர­சாங்கம் தள்­ளாடிக் கொண்­டி­ருந்த சந்­தர்ப்­பத்தை சரி­யாகப் பயன்­ப­டுத்திக் கொண்­டி­ருக்­கி­றது.

இப்­போது மஹிந்த ராஜபக் ஷ எதிர்த்­தாலும், உள்­ளூரில் அல்­லது, வெளி­நாட்­டி­லி­ருந்து எதிர்ப்­புகள் வந்­தாலும், ஹம்­பாந்­தோட்­டையில் முத­லீ­டு­களைச் செய்யும் முடிவில் இருந்து சீனா ஒரு­போதும் பின்­வாங்கப் போவ­தில்லை.

உள்ளூர் மக்கள் எதிர்ப்புத் தெரி­விப்­பார்கள் என்­பதால், இந்தத் திட்­டத்தில் முத­லீடு செய்ய வேண்டாம் என்று மஹிந்த ராஜபக் ஷ சீனா­விடம் எச்­ச­ரித்­தி­ருந்தார்.

ஆனால் சீனா அவ­ரது சொல்லைக் கேட்­க­வில்லை. உள்ளூர் மக்கள் எதிர்த்­தாலும், யார் எதிர்த்­தாலும், ஹம்­பாந்­தோட்­டையை வசப்­ப­டுத்தும் முடிவை மாற்றப் போவ­தில்லை என்­பதில் உறு­தி­யாக இருக்­கி­றது.

இது மஹிந்த ராஜபக் ஷவுக்கு ஏமாற்­றத்­தைக்­கூட அளித்­தி­ருக்­கலாம்.

எத்­த­கைய சக்­திகள் எதிர்த்­தாலும், தமது முடிவை மாற்ற முடி­யாது என்­பதில் சீனா உறு­தி­யான நிலையில் இருக்­கி­றது. உள்­நாட்டில் எதிர்ப்புக் கிளம்­பி­னாலும், அதனை பெரிய விட­ய­மாக சீனாவோ, அர­சாங்­கமோ கரு­த­வில்லை.

அதற்கு மாற்­றான திட்­டங்­களை நடை­மு­றைப்­ப­டுத்தத் தொடங்­கி­யுள்­ளது,

தொழிற்­ப­யிற்சி நிலை­யத்தை அமைத்து, தொழிற்­சா­லை­களில் பணி­யாற்­ற­வுள்­ளோ­ருக்கு பயிற்சி அளிக்க சீனா திட்­ட­மிட்­டுள்­ளது. இது தொழிற்­சா­லைகள் தொடங்­கப்­ப­டு­வ­தற்கு முன்­னரே, அதற்கு எதிராகக் காணப்படும் எதிர்ப்புகளை உடைக்கும்.

தமக்கு வேலை கிடைக்கும் என்பது உறுதியானால், போராட்டத்தின் மீது ஆர்வம் குறையத் தொடங்கும். இந்த விடயத்தில் சீனாவும், இலங்கை அரசாங்கமும் திட்டம் போட்டு காய்களை நகர்த்துகின்றன.

இந்த நிலையில் மஹிந்த ராஜபக் ஷவின் எதிர்ப்பு படிப்படியாக குறையத் தொடங்கலாம். ஆனால் அரசியல் ரீதியாக பலமிழந்துள்ள மஹிந்தவுக்கு ஹம்பாந்தோட்டை அமைதியடைவது ஆபத்தானது. எனவே அம்பாந்தோட்டையை சுற்றி, எப்போதும் குழப்பம் நீடிப்பதையே அவர் விரும்புவார்.

அதனைத் தடுக்கவே தொழிற்பயிற்சி நிலையத்தையும் சீனா தொடங்கியுள்ளது. இது ஹம்பாந்தோட்டை விடயத்தில் சீனா மிக திட்டமிட்டு செயற்படுகிறது என்பதை வெளிப்படுத்துகிறது.

கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் போல இதுவும் பிசுபிசுத்து விடாதபடி சீனா, பார்த்துக் கொள்ளும் என்பது தெளிவாகவே தெரிகிறது.

http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-01-15#page-2

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ரு 80 வடை போல பாரிய களவு எண்டால் கூட பரவாயில்லை🤣
    • வயது குறைந்த பிள்ளைகள் விளையாட்டுத்தனமாக செய்திருக்கலாம்.
    • ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா அமைப்பு 19 APR, 2024 | 12:04 PM   இஸ்ரேலின் தாக்குதல் காரணமாக ஈரானின் அணுநிலையங்கள் எவற்றிற்கும் பாதிப்பு ஏற்படவில்லை என சர்வதேச அணுசக்தி முகவர் அமைப்பு தெரிவித்துள்ளது. நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வருவதாக தெரிவித்துள்ள அந்த அமைப்பு அனைத்து தரப்பினரும் கடும் நிதானத்தையும் பொறுமையையும் கடைப்பிடிக்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது. இராணுவமோதல்களின் போது அணுசக்தி நிலையங்கள் ஒருபோதும் இலக்காக கருதப்படக்கூடாது என ஐநா அமைப்பு தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/181443
    • Published By: DIGITAL DESK 3   19 APR, 2024 | 02:36 PM   (எம்.நியூட்டன்) போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் பெரிய முதலையை பிடியுங்கள். பொலிஸாருக்கும் தொடர்பு இருப்பதாக மக்கள் தெரிவிக்கிறார்கள் என மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. யாழ். மாவட்ட செயலக ஒருங்கிணைப்பு குழு கூட்டம்  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் ஆகியோரது இணைத்தலைமையில் இன்று வியாழக்கிழமை (19) நடைபெற்றது. இதன்போது, பொலிஸாரால் போதைப்பெருள் கடத்தல் தொடர்பில் கருத்துகள் முன்வைக்கப்பட்டது. குறிப்பாக ஹெரோயின் தற்போது கிடைப்பதில்லை. அதற்கு பதிலாக மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு பயன்படுத்தப்படும் மருந்து வில்லைகளே பயன்படுத்தி வருகிறார்கள். இது தொடர்பாக மன்னாரில் சிலரை கைது செய்து சட்ட நடவடிக்கைக்குட்படுத்தியுள்ளோம். மேலும், கஞ்சா போதைப்பொருள் இந்தியாவில் இருந்தே வடபகுதிக்கு கடத்தப்படுகிறது. இங்கிருந்தே  தென் மாகாணங்களுக்கு கடத்தப்படுகிறது. இது தொடர்பில் பல ஆய்வுகள் விசாரணைகள் மேற்கொண்டுவருகிறோம். சிலரை கைது செய்யக்கூடியதாக இருக்கிறது. பெரும்புள்ளிகள் அகப்படவில்லை. எனினும், தொடர் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றோம். பொதுமக்கள் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது என பொலிஸார் தெரிவித்தனர்.  குறித்த விடயம் தொடர்பில்  பொது அமைப்புகள் சார்பில் கலந்து கொண்டிருந்த நபர்  கருத்து தெரிவிக்கையில், சில கிராம் கணக்கில் வைத்திருப்பவர்களையே கைது செய்துள்ளார்கள். பெரும் முதலைகள் எவரும் கைது செய்யப்படவில்லை. அப்பாவிகளை கைது செய்து விட்டு கைது செய்கிறோம் என கூறகூடாது. போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும்  பொலிஸாருக்கும் தொடர்பு இருப்பதாக பொதுமக்கள் தரப்பில் கதைகள் வருகிறது. எனவே பொலிஸார் அவதானமாக செயல்பட்டு வடக்கில் போதைப்பொருளை தடுப்பதற்கு  பொலிஸார் பூரண ஒத்துழைப்பை தரவேண்டும் என தெரிவித்தார். https://www.virakesari.lk/article/181451
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.