Jump to content

யூடியூபில் தன் சமையலால் கலக்கும் நிஷா மதுலிகா!


Recommended Posts

யூடியூபில் தன் சமையலால் கலக்கும் நிஷா மதுலிகா!

 

சியாவில் அதிகம் பார்க்கப்படும் ஐந்து வீடியோக்களில் ஒன்று, நிஷா மதுலிகாவின் சமையல் குறிப்பு பற்றிய வீடியோ. பல மில்லியன் பார்வையாளர்கள் இதுவரை இவரது சமையல் வீடியோக்களைப்  பார்த்திருக்கிறார்கள். பல லட்சக்கணக்கானவர்கள் சந்தா செலுத்தி இவர் தரும் சமையல் குறிப்புகளை பார்த்துவருகிறார்கள். நிஷாவின் சிறப்பு... பூண்டு மற்றும் வெங்காயம் சேர்க்காத சைவ உணவு ரெசிப்பிக்களை மட்டுமே பதிவிடுவது! டெல்லிக்கு அருகில் உள்ள நொய்டாவில் வசிக்கிறார் நிஷா.

p26.jpg

‘’என் கணவரின் தொழிலில் அவருக்கு உதவியாக இருந்தேன். அதிலிருந்து ஓய்வு பெற்ற பின், 2007-ம் ஆண்டில் ஒரு பிளாக் ஆரம்பித்து, நான் சிறப்பாகச் செய்வதாக நினைத்த சில சமையல்களின் செய்முறைகளை அதில் பதிவிட்டேன். பலரும் அவற்றைப் படித்து சமையல் செய்துபார்த்து, சிலர் நன்றிகளையும், சிலர் எனது குறிப்புகளில் உள்ள தவறுகளையும் பகிர்ந்தனர். பல்வேறு தரப்பினரின் கருத்துகளுக்கு ஏற்ப பல மாற்றங்கள் செய்து, தொடர்ந்து சமையல் குறிப்புகளைப் பதிவிட்டேன். என் கணவர், அவற்றைப் புகைப்படங்களுடன் பதிவிடச் சொல்லி ஆலோசனை கூறியதுடன், அதற்காக ஒரு கேமராவும் வாங்கிக்கொடுத்தார். பிளாகில் பதிவிடுவதில் உள்ள நடைமுறைச் சிரமங்களை கருத்தில்கொண்டு, என் மகன் எனக்கு www.nishamadhulika.com என்ற  வலைதளத்தை ஆரம்பித்துக்கொடுத்தான். அடுத்தகட்டமாக, சமையல் செய்முறை வீடியோக்களையும் பதிவிடும்படி அதில் பலரும் வேண்டுகோள் விடுத்தனர்.

நான் அதிகாலை நான்கு மணிக்கே எழுந்து, முதல் நாள் எழுதிவைத்த நோட்ஸ்களின் உதவியுடன், அன்றைய ரெசிப்பிக்குத் தேவையான பொருட்களைத் தயாராக எடுத்துவைக்க, ஏழு மணிக்கு என் கணவர் வீடியோ ஷூட் செய்ய ஆரம்பிப்பார். வீடியோ எடுப்பதில் எங்களுக்குப் பயிற்சி இல்லை. எனவே, வீடியோ சரியான தரத்தில் இல்லாதபோது உணவு வகைகளைத் திரும்பத் திரும்ப சமைத்திருக்கிறேன். இப்படிப் பல போராட்டங்களுக்குப் பிறகு, உணவின் பக்குவமும், வீடியோவின் தரமும் ஒரே நேர்க்கோட்டில் அமையப்பெற்றோம். ஆரம்பத்தில் டிஜிட்டல் கேமராவில் ஷூட் செய்த நாங்கள், விரைவில் DSLR கேமராவை வாங்கினோம்’’ என்று சொல்லும் நிஷா, 2011-ம் ஆண்டில் இருந்து யூடியூபில் தன் சமையல் வீடியோக்களைப் பதிவிட ஆரம்பித்திருக்கிறார். இதுவரை ஆயிரத்துக்கும் அதிகமான வீடியோக்களைப் பதிவிட்டுள்ள இவருக்கு, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் மற்றும் அரபு நாடுகள் என உலகம் முழுக்கப் பார்வையாளர்களும், சந்தாதாரர்களும் உள்ளனர்.

p26a.jpg

‘’என் அம்மாவும், மாமியாரும் எனக்குக் கற்றுக்கொடுத்த சமையல், இப்படி என்னை உலகளவில் பிரபலமாக்கும் என்று கனவிலும் நினைத்ததில்லை. யூடியூப் மற்றும் எனது வலைதளத்தில் பலரும் போட்டிபோட்டு தங்கள் விளம்பரங்களைப் பதிவிடக் கேட்பதால், ஐ.டி. கம்பெனியில் பணிபுரியும் உயர் அதிகாரி வாங்கும் சம்பளத்துக்கு இணையாக இப்போது எனக்கு வருமானம் கிடைக்கிறது. யூடியூப் நிறுவனம் வெளியிட்ட தன் புத்தகத்தில் என்னைப் பற்றியும் குறிப்பிட்டிருப்பதைப் பெருமையாக நினைக்கிறேன்’’ என்று பரவசப்படும் நிஷாவின் வீடியோக்கள் இந்தியில் ஷூட் செய்யப்பட்டு, ஆங்கில சப் டைட்டிலுடன் பதிவிடப்படுகின்றன.

‘’ஆரம்பத்தில் என் கணவரும் மகனும் எனக்கு உதவினர். இப்போது ஐந்து பேரை பணிக்கு அமர்த்தியுள்ளேன். ஒவ்வொரு வாரமும் இரண்டு அல்லது மூன்று வீடியோக்களை அப்லோடு செய்கிறோம். பண்டிகைக் காலத்தில் அதிகமான சமையல் குறிப்புகளைப் பதிவிடுகிறேன். ஷூட்டிங் இல்லாத நேரத்தில் சமையல் குறிப்பெடுத்து வைப்பது, சமைத்துப் பார்ப்பது என, இந்த 56 வயதிலும் நான் பிஸியாக இருப்பதில் பெருமையாக இருக்கிறது.

சமையல் என்றால் என்னவென்றே தெரியாதவர்களுக்கும் புரியும்வகையில் என் ரெசிப்பி வீடியோக்கள் எளிமையாக இருப்பதும், ஒவ்வொருவரின் சந்தேகத்துக்கும் நான் தவறாமல் பதில் அளிப்பதும்தான் என் வெற்றிக்குக் காரணம் என்று நினைக்கிறேன்!’’

தன் கரண்டியால் யூடியூபில் கலக்கிவரும் நிஷாவுக்கு வாழ்த்துகள்!

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.