Jump to content

எங்களது வீடுகளில் சிங்கள மக்கள் தங்கியிருக்கிறார்கள்! வலி.வடக்கு மக்கள் கவலை


Recommended Posts

27 வருடங்களாக சொந்த நிலத்தில், சொந்த வீட்டில் வாழ முடியாமல் நலன்புரி நிலையங்களில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

ஆனால் எங்களுடைய நிலத்தில், எங்களுடைய வீட்டில் சிங்கள மக்கள் தங்கியிருக்கின்றார்கள் எங்களுடைய கடலில் நீராடி மகிழ்கிறார்கள் என வலி.வடக்கு மக்கள் கவலையுடன் கூறியுள்ளனர்.

இன்றைய தினம் ஊறணி, மயிலிட்டி மற்றும் நல்லிணக்கபுரம் பகுதிகளை சேர்ந்த மக்கள் கடற்றொழில் செய்வதற்காக ஊறணி பகுதியில் 400 மீற்றர் கரையோர பகுதியும், 2 ஏக்கர் நிலமும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வுக்கு வ லிவடக்கில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் பெருமளவில் வந்திருந்தனர்.

இதன்போது படையினரின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள மக்களுடைய வீடுகளில் சிங்கள மக்கள் தங்கியிருந்து குடும்பம் குடும்பமாக கடலில் நீராடி மகிழ்வதை நேரில் பார்த்தனர்.

இந்நிலையில் இந்த விடயம் தொடர்பாக மக்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கவலை வெளியிட்டிருக்கின்றனர்.

விடயம் தொடர்பாக மக்கள் மேலும் குறிப்பிடுகையில்,

27 வருடங்களாக நாங கள் இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் அகதி வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

எங்களுடை ய நிலத்தை பார்க்க முடியாது. வீடுகளை பார்க்க முடியாது. ஆனால் சிங்கள மக்கள் மட்டும் தங்கியிருந்து நீராடி மகிழலாம்.

இது என்ன நியாயம்? எனவே எங்களுடைய நிலத்தில் எங்களை மீள்குடியேற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கேட்டு கொண்டனர்.

 

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

http://www.tamilwin.com/community/01/131715?ref=morenews

47 minutes ago, TNT said:

எங்களுடை ய நிலத்தை பார்க்க முடியாது. வீடுகளை பார்க்க முடியாது. ஆனால் சிங்கள மக்கள் மட்டும் தங்கியிருந்து நீராடி மகிழலாம்.

இது என்ன நியாயம்? எனவே எங்களுடைய நிலத்தில் எங்களை மீள்குடியேற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கேட்டு கொண்டனர்.

Link to comment
Share on other sites

6 hours ago, TNT said:

இதன்போது படையினரின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள மக்களுடைய வீடுகளில் சிங்கள மக்கள் தங்கியிருந்து குடும்பம் குடும்பமாக கடலில் நீராடி மகிழ்வதை நேரில் பார்த்தனர்.

உண்மையாவா?

ஆமா இன்று விடுவிக்கப்பட்டதாக கூறப்படும் பகுதிகளில் ஒரு வீட்டையாவது உங்களால் காட்ட முடியுமா?

முதலில் இது விடுவிக்கப்பட்டதா என்று மக்களை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் - அதற்குப்பிறகு பார்க்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஜீவன் சிவா said:

உண்மையாவா?

ஆமா இன்று விடுவிக்கப்பட்டதாக கூறப்படும் பகுதிகளில் ஒரு வீட்டையாவது உங்களால் காட்ட முடியுமா?

முதலில் இது விடுவிக்கப்பட்டதா என்று மக்களை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் - அதற்குப்பிறகு பார்க்கலாம்.

இதை யாரிடம் கேட்கிறீர்கள் ஜீவன்?

Link to comment
Share on other sites

1 hour ago, MEERA said:

இதை யாரிடம் கேட்கிறீர்கள் ஜீவன்?

இணைத்தவரிடமும் + மூலத்திடமும்.

ஊறணியில் எடுத்த வீடியோவே என்னிடம் உள்ளது. அது போன நொவெம்பரில் எடுத்தது. அங்கு இருந்த நூற்றுக்கணக்கான வீடுகளில் எதுவுமே இல்லை, சில (ஆக மிஞ்சினால் ஒரு மூன்று) இப்பவும் உள்ளது - அங்கு இராணுவமே உள்ளது. இப்போது அங்கு வீடுகள் முளைத்ததாகவும் இப்போது அங்கு சிங்கள குடும்பங்கள் கும்மாளம் அடிப்பதாகவும் எழுதுவது தவறு என்பதை சுட்டிக்காட்டினேன் - அம்புட்டுத்தான்.

உண்மையை எழுதி பாருங்கள் - முடியவில்லையா 
உண்மை எதுவென்று தேடிப்பாருங்கள்
அதுவும் முடியவில்லையா - சும்மா இருங்கள்
புரளியை கிளப்பாதீங்கள்

ஆனால் நம் மக்கள் இவற்றை கடந்து வெகுதூரம் வந்து விட்டார்கள் - இனி பருப்பு வேகாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Quote

இன்றைய தினம் ஊறணி, மயிலிட்டி மற்றும் நல்லிணக்கபுரம் பகுதிகளை சேர்ந்த மக்கள் கடற்றொழில் செய்வதற்காக ஊறணி பகுதியில் 400 மீற்றர் கரையோர பகுதியும், 2 ஏக்கர் நிலமும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வுக்கு வ லிவடக்கில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் பெருமளவில் வந்திருந்தனர்.

இதன்போது படையினரின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள மக்களுடைய வீடுகளில் சிங்கள மக்கள் தங்கியிருந்து குடும்பம் குடும்பமாக கடலில் நீராடி மகிழ்வதை நேரில் பார்த்தனர்.

படையினரின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள பகுதி என்றுதானே இருக்கிறது, ஊறணி என்று இல்லையே? 

25 minutes ago, ஜீவன் சிவா said:

இணைத்தவரிடமும் + மூலத்திடமும்.

ஊறணியில் எடுத்த வீடியோவே என்னிடம் உள்ளது. அது போன நொவெம்பரில் எடுத்தது. இப்போது அங்கு வீடுகள் முளைத்ததாகவும் இப்போது அங்கு சிங்கள குடும்பங்கள் கும்மாளம் அடிப்பதாகவும் எழுதுவது தவறு என்பதை சுட்டிக்காட்டினேன் - அம்புட்டுத்தான்.

உண்மையை எழுதி பாருங்கள் - முடியவில்லையா 
உண்மை எதுவென்று தேடிப்பாருங்கள்
அதுவும் முடியவில்லையா - சும்மா இருங்கள்
புரளியை கிளப்பாதீங்கள்

ஆனால் நம் மக்கள் இவற்றை கடந்து வெகுதூரம் வந்து விட்டார்கள் - இனி பருப்பு வேகாது.

உந்த பருப்பு கிளிநொச்சியில் இருந்தே அவிகிறது.

Link to comment
Share on other sites

5 minutes ago, MEERA said:

படையினரின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள பகுதி என்றுதானே இருக்கிறது, ஊறணி என்று இல்லையே? 

உந்த பருப்பு கிளிநொச்சியில் இருந்தே அவிகிறது.

நீங்கள் தொடர்ந்து அவியுங்கள் 
அவிஞ்சால் நாளை பேசலாம்.

மக்கள பற்றி மட்டும் எழுதிடாதீங்கோ!!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, ஜீவன் சிவா said:

நீங்கள் தொடர்ந்து அவியுங்கள் 
அவிஞ்சால் நாளை பேசலாம்.

மக்கள பற்றி மட்டும் எழுதிடாதீங்கோ!!!!

நீங்கள் அவிக்கின்றபடியால் மற்றவர்களையும் அப்படி நினைக்க வேண்டாம்.

யாழ்ப்பாணத்தில் வருடக்கணக்காக சிறீலங்கா புலனாய்வினரே இல்லை என்று அவித்த ஆள் அல்லவா தாங்கள். 

அங்குள்ள மக்களை பற்றி எழுத உங்களை விட எனக்கு மிக அதிக உரிமை உள்ளது. 

Link to comment
Share on other sites

8 hours ago, MEERA said:

நீங்கள் அவிக்கின்றபடியால் மற்றவர்களையும் அப்படி நினைக்க வேண்டாம்.

யாழ்ப்பாணத்தில் வருடக்கணக்காக சிறீலங்கா புலனாய்வினரே இல்லை என்று அவித்த ஆள் அல்லவா தாங்கள். 

அங்குள்ள மக்களை பற்றி எழுத உங்களை விட எனக்கு மிக அதிக உரிமை உள்ளது. 

மீரா! இப்பிடி பட்டு பட்டு என்று உண்மைகளை போட்டு உடைக்கிறீங்களே!!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.