Jump to content

ஜல்லிகட்டுக்கு ஆதரவு தெரிவிக்க சென்ற ஆர்யா விரட்டியடிப்பு : கவுதமன் வைத்தியசாலையில் : தனது டுவிட் தொடர்பிலும் ஆரியா விளக்கம்


Recommended Posts

ஜல்லிகட்டுக்கு ஆதரவு தெரிவிக்க சென்ற ஆர்யா விரட்டியடிப்பு : கவுதமன் வைத்தியசாலையில் : தனது டுவிட் தொடர்பிலும் ஆரியா விளக்கம்

 

police-have-beaten-cinema-director-gowth

 

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக அவனியாபுரம் பகுதிக்கு சென்ற நடிகர் ஆர்யாவை,அந்த பகுதியைச் சேர்ந்த ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் விரட்டி அடித்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. இதேவேளை பொலிஸாரின் தாக்குதலில் காயமடைந்த இயக்குனர் கவுதமன் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார். 

இதேவேளை தனது டுவிட்டர் பக்கத்தில் ஜல்லிகட்டு என்றால் என்ன என்று பதிவேற்றம் செய்தமை தொடர்பாக ஆர்யா நேற்று விளக்கமளித்திருந்தார். இந்நிலையில் இன்று ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக அவனியாபுரம் பகுதிக்கு சென்ற போதே ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் விரட்டி அடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

 

அமீர் இயக்கத்தில் ஜல்லிக்கட்டை கதைக்கருவாகக் கொண்டு ‘சந்தனத் தேவன்’ என்ற படம் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த படத்தில் நடிகர் ஆர்யா, அவரது தம்பி சத்யா ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இந்நிலையில் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் இன்று காலை வீதிமறியல் போராட்டம் நடைபெற்றது.what-is-jallikatu.jpg

இதில் நூற்றுக்கணக்கான ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது,போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதற்காக அங்கு இயக்குநர் அமீர், நடிகர்கள் ஆர்யா,சத்யா, இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா ஆகியோர் சென்றுள்ளனர்.

ஆனால் நடிகர் ஆர்யா பீட்டா அமைப்புக்கு ஆதரவு தெரிவிப்பவர் என்றும், ஜல்லிக்கட்டு எதிர்ப்பாளர் என்றும் கூறி போராட்டத்தில் இருந்த ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் கோஷங்களை எழுப்பினர்.

கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து சந்தனத் தேவன் படக்குழுவினர் அந்த இடத்திலிருந்து திரும்பிச் சென்றனர்.

இதேவேளை தொடர்ந்து மதுரை அவனியாபுரத்தில் உச்சநீதிமன்றத்தின் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்த முயற்சித்த ஜல்லிக்கட்டு ஆர்வலர்களுடன் இணைந்து போராட்டம் நடத்திய திரைப்பட இயக்குனர் கவுதமன் மீது பொலிஸார் தாக்குதல் நடத்தியதில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

http://www.virakesari.lk/article/15420

Link to comment
Share on other sites

ஆர்யா முதலில் பீட்டாவில் இருந்து விலகி விட்டு ஜல்லிகட்டு ஆதரவு கூட்டத்துக்கு போகணும் அதுதான் முறை அதைவிட்டு சிங்களவன் போல் சைனாவுக்கும் அமெரிக்காவுக்கும் வாலும் தலையும் காட்டக்கூடாது

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.