Jump to content

தினம் ஒரு மந்திரம்... தை பிறந்ததும் வழி பிறந்தது; ஒளியும் பிறக்கட்டும்! #Manthra


Recommended Posts

தினம் ஒரு மந்திரம்... தை பிறந்ததும் வழி பிறந்தது; ஒளியும் பிறக்கட்டும்! #Manthra


மந்திரம்

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். இதோ தை மாதமும் பிறந்துவிட்டது. வழியும்கூட பிறந்திருக்கும். ஆனால், வழி மட்டும் பிறந்துவிட்டால் போதுமா? பிறந்துள்ள வழியில் செல்ல ஒளியும் பிறக்கவேண்டும் அல்லவா?

ஒளி என்றால் வெளிச்சம் என்பது மட்டுமே பொருள் அல்ல; ஒருவரிடம் இல்லாததை எது தருகிறதோ அதுவே ஒளி!வறுமையில் வாடும் ஒருவனுக்கு பொருட்செல்வம் கிடைப்பதுதான் அவனுக்கான ஒளி;கல்வி அறிவு இல்லாதவனுக்கு அறிவுச் செல்வம் கிடைப்பதுதான் அவனுக்கான ஒளி; கண்களின் பார்க்கும் திறன் இல்லாதவர்களுக்கு பார்க்கும் திறன் கிடைப்பதுதான் அவனுக்கான ஒளி. மொத்தத்தில், ஒருவனுக்குத் தேவையான ஒன்று அவனுக்குக் கிடைப்பதுதான் அவனுக்கான ஒளி!

சரி,

இந்த ஒளி என்பது எங்கிருந்து மனிதனுக்குக் கிடைக்கிறது?

சூரியனில் இருந்தா? சந்திரனில் இருந்தா? அல்லது வானத்தில் மின்னும் நட்சத்திரங்களில் இருந்தா? உண்மையில் இந்த மூன்றில் இருந்தும் ஒளி கிடைப்பதில்லை. பின் இந்த ஒளி எங்கிருந்துதான் கிடைக்கிறது? இதைப் பற்றி கடோபநிஷத்தில் ஒரு மந்திரம் உள்ளது. அந்த மந்திரம் இதுதான்.

கடோபநிஷதம் நசிகேதனுக்கும் யமனுக்கும் இடையில் நடந்த உரையாடல்களின் தொகுப்பாகும்.

 

ந தத்ர ஸூர்யோ பாதி சந்த்ர தாரகம்

ந இமோ வித்யுதோ பாந்தி குதோய மக்னி:

தமேவ பாந்தமனுபாதி ஸர்வம்

தஸ்ய பாஸா ஸர்வமிதம் விபாதி

எங்கே சூரியன் ஒளிர்வதில்லையோ அங்கே சந்திரனும் நட்சத்திரங்களும்கூட ஒளிர்வதில்லை. மின்னலும் ஒளிர்வதில்லை. இந்த அக்னியில் இருந்து வரும் ஒளியினால்தான் அத்தனையும் ஒளிர்கின்றன. இந்த அக்னியின் மூலம் எது என்று பார்த்தால், அந்த மூலம்தான் ஆதிசக்தியான பிரம்மம். அந்த பிரம்மத்தில் இருந்தே அனைத்தும் ஒளியைப் பெறுகின்றன.

இந்த மந்திரத்தைப் பாராயணம் செய்தால் இறைவனின் அருளால் இறைவனை உணரமுடியும்; இறைவனின் அருளால் வாழ்க்கை மகிழ்ச்சியும் நிம்மதியும் தருவதாக அமையும்.

இந்த மந்திரத்தை பாராயணம் செய்யமுடியாதவர்களுக்கு தாயுமானவரின் இந்தப் பாடலை பாராயணம் செய்யலாம்.

தாயுமானவர் திருமறைக்காடு என்னும் வேதாரண்யம் என்ற ஊரில் பிறந்தவர். இவர் திருச்சியை ஆண்டு வந்த விசயரகுநாத சொக்கலிங்கம் என்ற அரசரிடம் அரண்மனைக் கணக்கராக பணிசெய்து வந்தார். தமிழ், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் மிகுந்த பாண்டித்யம் பெற்றுத் திகழ்ந்தவர். ஒருமுறை இவர் அரச சபையில் இருந்தபோது, முக்கியமான ஒரு ஆவணத்தை கசக்கி தூரமாகப் போட்டார். இப்படிச் செய்வது அரசரையும் அரசியையும் அவமதிப்பதாகும் என்று அவையில் இருந்த மற்றவர்கள் கண்டனம் தெரிவித்தனர். அதேநேரத்தில் அங்கு வந்த சிவாச்சார்யர்கள் திருவானைக்கா அகிலாண்டேஸ்வரியின் ஆடையில் நெருப்பு பற்றிக்கொண்டதாகவும், தாயுமானவர் வந்து தம் கைகளால் கசக்கி அணைத்ததாகவும் தெரிவித்தனர். இதனால், அங்கிருந்தவர்கள் அனைவரும் தாயுமானவரின் தெய்விகத்தன்மையைப் புரிந்துகொண்டார்கள்.

தாயுமானவர் எண்ணற்ற பக்திப் பாடல்களை இயற்றி உள்ளார். நாம் முன்பு பார்த்த கடோபநிஷத மந்திரத்துக்கு பதிலாக தாயுமானவரின் இந்தப் பாடலையும் பாராயணம் செய்யலாம்.

 

கண்முதற் புலன்கள் அந்தக்கரணங்கள் விளங்குமெத்தால்

தண்மதியருக்கனங்கி தாரகை விளங்குமெத்தால்

விண்முதற் பூதமியாவும் விளங்குமெத்தால் - அந்த

உண்மையாம் சிவப்ரகாச ஒளியது வாழி

 

மிகவும் எளிமையான இந்தப் பாடலை தினமும் பாராயணம் செய்தால், இறைவனின் அருள் என்னும் ஒளி பெற்று சிறப்புற வாழலாம்.

http://www.vikatan.com/news/spirituality/77748-mantra-for-positive-energy.art

Link to comment
Share on other sites

உயர்வான வாழ்க்கைக்கு உன்னத மந்திரம்! தினம் ஒரு மந்திரம்-2 #Manthra

மந்திரம்

ஒவ்வொரு மனிதருமே வாழ்க்கையில் உன்னத நிலையை அடைய விரும்புவது இயல்புதான். ஆனால், பூர்வபுண்ணியம் இருந்தால்தான் விரும்புவதை அடைய முடியும். அதைத்தான் `பிராப்தம்' என்று சொல்வார்கள். ஒருவருக்கு, தான் விரும்பியதை அடையக்கூடிய பூர்வபுண்ணியம் இல்லையென்றாலும்கூட, அவர் அம்பிகையைப் போற்றி மந்திரம் ஒன்றைச் சொல்வதன் மூலம் வாழ்க்கையில் தான் விரும்பிய உன்னத நிலையை அடைய முடியும்.

அம்பிகையை தியானித்து வழிபடுவதற்கு எத்தனையோ மந்திரங்கள், ஸ்லோகங்களின் வடிவில் அமைந்திருக்கின்றன. அந்த மந்திரங்களில் பிரதானமாக அமைந்திருப்பது `சௌந்தர்யலஹரி'. ஜகத்குரு ஆதிசங்கரரால் அருளப்பட்ட சௌந்தர்யலஹரி, நூறு ஸ்லோகங்களைக்கொண்டது. ஒவ்வொரு ஸ்லோகமும் ஒரு குறிப்பிட்ட பலனைத் தருவதாக அமைந்திருக்கிறது. அந்த ஸ்லோகங்களுள் ஒரு ஸ்லோகம்தான், பிராப்தம் இல்லாமலேயே வாழ்க்கையில் உன்னத நிலைக்கு ஒருவரை உயர்த்தும் மந்திரம்.

அந்த ஸ்லோகம்:

த்ரயாணாம் தேவானாம் த்ரிகுண - ஜநிதானாம்தவ சிவே
பவேத் பூஜா பூஜா தவ சரணயோர்-யா விரசிதா
ததா ஹி த்வத் பாதோத்வஹன-மணிபீடஸ்ய நிகடே
ஸ்திதா ஹ்யேதே சச்வன் - முகுலித - கரோத்தம்ஸ-மகுடம்

சிவ பத்தினியே! உன்னுடைய திருவடிகளில் செய்யப்படுகின்ற பூஜையானது மும்மூர்த்திகளுக்கும் பொருந்தக்கூடியதாகவே ஆகிறது. காரணம், மும்மூர்த்திகளுமே உன்னுடைய மூன்று குணங்களில் இருந்து தோன்றியவர்கள்தாம். மேலும், அவர்கள் எப்போதும் உன்னுடைய ரத்னமயமான சிம்மாசனத்துக்கு அருகில், தங்களுடைய கைகளைக் குவித்து தலைக்கு மேல் வைத்தபடி நின்றுகொண்டு இருக்கிறார்கள். எனவே, உனக்குc செய்கின்ற பூஜை மும்மூர்த்திகளுக்கும் சேர்த்தே பூஜை செய்ததாக அமைகின்றது. 

அபிராமி

இந்த அற்புதமான மந்திரம் ஒன்றைப் பாராயணம் செய்ய இயலாதவர்கள், அபிராமி அந்தாதியில் உள்ள இந்தப் பாடலை பாராயணம் செய்யலாம்.

அபிராமி அந்தாதிப் பாடல், திருக்கடவூரில் அருளாட்சிபுரியும் அம்பிகை அபிராமியைப் போற்றி அபிராமிபட்டர் பாடியதாகும். நூறு பாடல்களைக்கொண்ட அபிராமி அந்தாதியின் ஒவ்வொரு பாடலும், சௌந்தர்யலஹரி ஸ்லோகங்களைப்போலவே ஒவ்வொரு பலனை அருளக்கூடியது.

சரபோஜி மன்னர், 'இன்றைக்கு என்ன திதி?' என்று கேட்டதற்கு, அபிராமியின் பக்தரான அபிராமிபட்டர், 'இன்றைக்கு பௌர்ணமி திதி என்று சொல்லிவிட்டார். ஆனால், உண்மையில் அன்றைக்கு அமாவாசை திதி. பட்டர் சொன்னதுபோல் அன்றைக்கு பௌர்ணமி நிலவு தோன்றாவிட்டால், அவரை சிரச்சேதம் செய்துவிடுவதாகக் கூறிவிட்டு மன்னர் சென்றுவிட்டார். அம்பிகையின் தியானத்தில் லயித்திருந்த அபிராமி பட்டர், தியானம் கலைந்து எழுந்ததும் நடந்ததை அறிந்துகொண்டார். 

ஆனாலும் அவர் கலங்கவில்லை. தன்னை அப்படி சொல்லச் செய்தவள் அபிராமி அம்பிகையே என்று உறுதியாக நம்பிய அவர், அம்பிகையின் அருள் வேண்டி பாடிய பாடலே அபிராமி அந்தாதி. அபிராமி அந்தாதியின் 79-வது பாடலான 'விழிக்கே அருளுண்டு வேதம் சொன்ன அபிராமவல்லிக்கு வேதம் சொன்ன' என்ற பாடலைப் பாடியதுமே அம்பிகை தன் தாடங்கத்தைக் கழற்றி விண்ணில் வீச, அந்தத் தாடங்கம் முழுநிலவாகப் பிரகாசித்தது. அனைவரும் அபிராமி அம்பிகையின் அருளையும், அபிராமிபட்டரின் பக்தித் திறனையும் கண்டு பரவசம் அடைந்தனர்.

அந்தப் பாடல்:

வையம் துரகம் மதகரி மாமகுடம் சிவிகை
பெய்யும் கனகம் பெருவிலை ஆரம் - பிறைமுடித்த
ஐயன் திருமனையாள் அடித் தாமரைக்கே அன்பு - முன்பு
செய்யும் தவமுடையாருக்கு உளவாகிய சின்னங்களே.

அபிராமி அம்பிகையை தியானிப்பவர்களுக்கு அரசருக்கு நிகரான வாழ்க்கை அமையும் என்பதே இந்தப் பாடலின் சாரம். இந்தப் பாடலை தினசரி தொடர்ந்து பாராயணம் செய்து வந்தால், வாழ்க்கையில் உன்னத நிலையை அடையலாம். தினசரி பாராயணம் செய்து அம்பிகையின் அருளைப் பெறுவோம்.

http://www.vikatan.com/news/spirituality/77751-mantra-for-positive-energy.art

Link to comment
Share on other sites

தினம் ஒரு மந்திரம் - 3 எதிரிகளை வெல்ல என்ன வழி..? #Mantra

தினம் ஒரு மந்திரம்

வாழ்க்கையில் முன்னேறவேண்டும்; சாதனைகளைப் புரியவேண்டும் என்ற லட்சியம் பொதுவாக எல்லோருக்கும் இருக்கவே செய்யும். அதற்கான முயற்சிகளிலும் ஈடுபடவே செய்வார்கள். ஆனால், வாழ்க்கையில் முன்னேறவேண்டும்; சாதிக்கவேண்டும் என்ற எண்ணம் ஒருவருக்கு இருந்தாலும், அவர் முன்னேற முடியாதபடி பல எதிரிகள் ஏற்படுவதும் இயல்புதான். இங்கே எதிரிகள் என்பது வெளியில் இருக்கும் எதிரிகளை மட்டுமல்ல, நம் மனதுக்குள் மறைந்திருக்கும் எதிரிகளையும் சேர்த்துத்தான் குறிப்பிடுகிறோம்.

ஓர் உயர்ந்த லட்சியத்துடன் சாதிக்கத் துடிக்கும் நமக்கு, பிரதான எதிரி நம்முடைய மனம்தான். நம் மனதுக்குள் இருக்கும் பொறாமை, பேராசை, சுயநலம் போன்றவை நம்முடைய முன்னேற்றத்துக்குத் தடைக்கற்களாக மாறி, நம்மை முன்னேறவிடாமல் தடுத்துவிடுகின்றன. எனவே, முதலில் நம்முடைய மனதில் இருக்கும் மறைமுக எதிரிகளை நாம் இல்லாமல் செய்யவேண்டும்; அதன்பிறகு வெளியில் இருக்கும் எதிரிகளையும் நாம் இல்லாமல் செய்துவிடலாம்.

நம்முடைய முன்னேற்றத்துக்குத் தடையாக உள்ளும் புறமும் இருக்கும் எதிரிகளை வெற்றி கொண்டால்தான், நம்மால் வாழ்க்கையில் சாதனை படைத்து முன்னேற முடியும்.

நமக்குள் இருக்கும் எதிரிகளையும் சரி, நமக்கு வெளியில் இருக்கும் எதிரிகளையும் சரி வெற்றி கொள்ளவேண்டும் என்றால், அதற்கு ஒரே வழி அம்பிகையின் திருவடிகளைச் சரண் அடைவதுதான்.


பிரளயத்துக்குச் சாட்சியாக இருப்பவளும், பிரளயத்துக்குப் பிறகு பிரபஞ்சத்தை மீண்டும் படைப்பவளுமாகிய ஆதிசக்தி அவள். ஆயிரமாயிரம் திருநாமங்கள் கொண்ட அம்பிகையின் அளப்பரிய சக்தியானது நம்முடைய உள்ளும் புறமும் உள்ள எதிரிகளை இல்லாமல் செய்துவிடுகிறது. எனவே, அம்பிகையின் திருவடிகளைச் சரண் அடைந்து, இங்கே கொடுக்கப்பட்டு இருக்கும் சௌந்தர்யலஹரி ஸ்லோகத்தை தினமும் 27 முறை பூரண நம்பிக்கையுடன் பாராயணம் செய்யலாம். அல்லது அபிராமி அந்தாதியில் உள்ள பாடலையும் பாராயணம் செய்யலாம்.

இப்படி பாராயணம் செய்வது, முன்னேற்றப் பாதையில் எதிர்ப்படும் எதிரிகளை அகற்றி, நம்மை வெற்றிப் பாதைக்கு இட்டுச் செல்லும்.

விரிஞ்சி பஞ்சத்வம் வ்ரஜதி ஹரிராப்னோதி விரதம்
விநாசம் கீனாசோ பஜதி தனதோ யாதி நிதனம்
விதந்த்ரீ மாஹேந்த்ரீ விததிரபி ஸம்மீலித - த்ருசா
மஹா - ஸம்ஹாரே அஸ்மின் விஹரதி ஸதி த்வத்பதிரஸௌ.


'பிரம்மா, விஷ்ணு, யமன், குபேரன், ஒருவர் பின் ஒருவராக வரும் இந்திரன் அனைவருமே மகா பிரளய காலத்தில் இல்லாமல் போகிறார்கள். ஆனால், அந்த மகா பிரளய காலத்தில் சிவன் சம்ஹார தாண்டவம் புரிவதை, சர்வ வல்லமை கொண்ட தேவி! நீ மட்டும் புன்னகையுடன் பார்த்துக்கொண்டு இருக்கிறாய்.'


இந்த ஸ்லோகத்தைப் பாராயணம் செய்ய இயலாதவர்கள், அபிராமி அந்தாதியில் இடம் பெற்றிருக்கும் இந்தப் பாடலைப் பாராயணம் செய்யலாம்.

http___photolibrary.vikatan.com_images_g


தோத்திரம் செய்து, தொழுது, மின் போலும் நின் தோற்றம் ஒரு
மாத்திரைப் போதும் மனத்தில் வையாதவர்- வண்மை, குலம்,
கோத்திரம், கல்வி, குணம், குன்றி, நாளும் குடில்கள் தொறும்
பாத்திரம் கொண்டு பலிக்கு உழலாநிற்பர்- பார் எங்குமே.


'அபிராமி அம்பிகையே! உன்னுடைய புகழைப் பாடி, உன்னை வணங்காவிட்டாலும்கூட பரவாயில்லை. ஆனால், மின்னலைப் பழிக்கும் ஒளியுடன் பிரகாசிக்கும் உன்னுடைய அருள் வடிவத்தை ஒரு நொடிப் பொழுதாவது நினைக்காதவர்கள், தாங்கள் பெற்றிருக்கும் செல்வம், வள்ளல்தன்மை, குலச் சிறப்பு, உயர் கல்வி ஆகிய அனைத்தையும் இழந்து, வாழ்க்கையில் மிகுந்த கஷ்டத்தை அனுபவிப்பார்கள்'

அம்பிகையை நினைக்காத மனதில்தான் பொறாமை, பேராசை, சுயநலம் போன்ற உள் பகைகள் தோன்றும். அந்த உள் பகைகளே, நமக்கான எதிரிகள் ஏற்படுவதற்கும் காரணமாக அமைந்துவிடும். அப்போது நம்மால் எப்படி முன்னேற முடியும்? எனவே, மிகவும் எளிமையான இந்த வழியைப் பின்பற்றி, நம்முடைய வாழ்க்கையில் உள்ளும் புறமும் எதிரிகளே இல்லாமல் செய்து, வாழ்க்கையில் முன்னேறி சாதனைகளைப் புரிவோம்.

http://www.vikatan.com/news/spirituality/77925-mantra-for-positive-energy.art

Link to comment
Share on other sites

நவகிரக தோஷம் விலக... நன்மைகள் பெருக! தினம் ஒரு மந்திரம் - 4 #Manthra

தினம் ஒரு மந்திரம்


வாழ்க்கையில் கஷ்டங்களே இல்லாமல், எல்லோரும் சுகமாகத்தான் வாழவேண்டும் என்று நினைக்கிறார்கள். ஒருவருக்கு அவருடைய ஜாதகத்தில் என்னதான் கிரக நிலைகள் நல்லபடி அமைந்திருந்தாலும்கூட, ஏதேனும் ஒரு கட்டத்தில் அவரும் சில கஷ்டங்களைச் சந்திக்கவே நேரிடுகிறது. கிரக நிலைகள் நல்லபடி இருப்பவர்களுக்கே இப்படி என்றால், கிரக தோஷம் உள்ள ஜாதக அமைப்பைப் பெற்றிருப்பவர்களைப் பற்றி சொல்லவே வேண்டாம். பல நேரங்களில் பல விதமான கஷ்டங்களை அனுபவிக்கவே நேரிடும்.

ஒருவருடைய ஜாதகத்தில் கிரக நிலைகள் நல்லபடி அமையாமல், பாதகம் உண்டாக்கும் வகையில் அமைந்திருந்தாலும் அதுபற்றி கவலையே படவேண்டியதில்லை. அப்படிப்பட்டவர்களும் மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் வாழவேண்டும் என்பதற்காகவே, நம்முடைய பாரத புண்ணிய பூமியில் தோன்றிய மகான்கள் அற்புதமான பல வழிகளைக் காட்டி இருக்கிறார்கள்.

அந்த வழிகளுள் ஒன்றுதான் தெய்வ மந்திரங்களைப் பாராயணம் செய்வதும். தெய்வ மந்திரங்கள் என்றால் சமஸ்கிருதத்தில் இருக்கும்; அதன் உச்சரிப்பு பிசகாமல் எப்படி  பாராயணம் செய்வது என்ற கவலையே யாருக்கும் வேண்டாம். தமிழிலும் பல அற்புதமான துதிப் பாடல்களும், பதிகங்களும் இருக்கவே செய்கின்றன. குறிப்பாக பன்னிரு திருமுறைகள், அபிராமி அந்தாதி, திவ்விய பிரபந்தம் போன்ற வழிபாட்டு மந்திரங்களைச் சொல்லலாம்.

அம்மன்

 

இந்த வருடம் மூன்று கிரகப் பெயர்ச்சிகள் நடைபெற இருக்கின்றன. ஆகஸ்டு மாதம் ராகு - கேது பெயர்ச்சியும், செப்டம்பர் மாதம் குரு பெயர்ச்சியும், டிசம்பர் மாதம் சனி பெயர்ச்சியும் நடைபெற உள்ளன. எனவே இந்த வருடம் நடைபெற இருக்கும் கிரக பெயர்ச்சிகளால் நமக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் இருப்பதற்காக இங்கே கொடுக்கப்பட்டு இருக்கும் மந்திரங்களை தினமும் பாராயணம் செய்யலாம்.

அஹ: ஸூதே ஸவ்யம் தவ நயனமர்காத்மகதயா
த்ரியாமாம் வாமம் தே ஸ்ருஜதி ரஜனி நாயகதயா
த்ருதீயா தே த்ருஷ்டிர் - தரதலித ஹேமாம்புஜ - ருசி:
ஸமாதத்தே ஸந்த்யாம் திவஸ நிசயோ - ரந்தரசரீம்

'தேவீ, உன்னுடைய வலக் கண் சூரியனைப் போன்று திகழ்ந்து பகலை ஏற்படுத்துகிறது; உன்னுடைய இடக் கண் சந்திரனைப் போன்று திகழ்ந்து இரவை உண்டாக்குகிறது; இரண்டுக்கும் மத்தியில் அமைந்திருக்கும் மூன்றாவது கண்ணோ, அப்போதுதான் சிறிதே மலர்ந்த பொற்றாமரை மலரைப் போல் திகழ்ந்து, இரவுக்கும் பகலுக்கும் இடைப்பட்ட சந்தியா காலத்தை உணர்த்துகிறது.
இரவும், பகலும், இரண்டுக்கு இடைப்பட்ட சந்தியா காலமும் உன்னுடைய கண்களில் இருந்துதான் உண்டாகிறது. எனவே தேவீ, நீயே காலங்களைப் படைப்பவளாக இருப்பதுடன், காலங்களுக்கு அப்பாற்பட்டவர்களாகவும் இருக்கிறாய் என்பதுதான் இந்த ஸ்தோத்திரத்தின் சாரம்.

சௌந்தர்யலஹரியின் இந்த ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்ய இயலாதவர்கள், சீர்காழி தலத்தில் அவதரித்து, அம்பிகையினால் ஞானப் பால் புகட்டப்பெற்ற திருஞானசம்பந்தர் அருளிய கோளறு பதிகம் முழுவதையுமோ அல்லது இங்கே கொடுக்கப்பட்டு இருக்கும் ஒரு பாடலை மட்டுமோ பாராயணம் செய்யலாம்.

சிவன்

 


திருஞானசம்பந்தர் பெருமானும், திருநாவுக்கரசர் பெருமானும் திருமறைக்காடு என்னும் தலத்தில் இருந்தபோது, பாண்டிய மகாராணி மங்கையர்க்கரசியாரிடம் இருந்து திருஞானசம்பந்த பெருமானுக்கு அழைப்பு வருகிறது. சைவம் துறந்து சமணம் சார்ந்த பாண்டிய மன்னை திரும்பவும் சைவத்துக்கு மாறச் செய்யவேண்டும் என்பதுதான் அழைப்புக்கான காரணம்.

உடன் இருந்த திருநாவுக்கரசர் பெருமானுக்கு உள்ளுக்குள் கலக்கம். திருஞானசம்பந்தக் குழந்தை மதுரைக்குப் போனால், அங்கிருக்கும் சமணர்களால் எதுவும் ஆபத்து வந்துவிடுமோ என்று அஞ்சினார். மேலும் அப்போது கிரகநிலைகளும் சாதகமாக இல்லை. எனவே, அப்போதைய கிரகநிலைகள் சாதகமாக இல்லை என்று கூறி, திருஞானசம்பந்தரை மதுரைக்குப் போகவேண்டாம் என்று தடுத்தார். ஆனாலும் பாண்டிய நாட்டில் சைவத்தை நிலைநிறுத்தவேண்டும் என்ற காரணத்துக்காக மதுரைக்குச் செல்ல விரும்பிய திருஞானசம்பந்தர், எல்லாம் வல்ல இறைவன் நமக்கு பக்கத் துணை இருக்கும்போது, நவகிரகங்களால் நமக்கு ஆபத்து ஒன்றும் இல்லை சிவபெருமான்என்று கூறி, கோளறு பதிகம் பாடி திருநாவுக்கரசர் பெருமானை சமாதானம் செய்துவிட்டு மதுரைக்குப் புறப்பட்டுச் சென்றார். பாண்டி நாட்டில் சைவம் தழைக்கவும் செய்தார்.

திருஞானசம்பந்தர் பெருமானின் கோளறு பதிகத்தை முழுவதும் பாராயணம் செய்யாவிட்டாலும், இங்கே உள்ள இந்தப் பாடலை மட்டுமாவது பாராயணம் செய்யலாம்.

 

வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன் மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமேலணிந்தென் உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழன் வெள்ளி சனிபாம்பி ரண்டு முடனே
ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே.

 

http://www.vikatan.com/news/spirituality/78006-powerful-mantra-for-positive-energy.art

Link to comment
Share on other sites

கண்பார்வைக் குறைபாடுகள் நீங்க..! தினம் ஒரு மந்திரம் - 5 #Manthra

ண்கள் இறைவன் மனிதர்க்கு அருளிய பெருங்கொடை. கண்கள் இருந்தால்தான் நாம் இந்த உலகத்தைப் பார்க்கமுடிவதுடன், பல விஷயங்களையும் கற்றும் அனுபவித்தும் புரிந்து தெளிய முடியும். கண்கள் இருந்தால்தான், இறைவனின் பல திருக்கோலங்களை நம்மால் தரிசித்து வழிபடமுடியும். கண்கள் இல்லையென்றால், நம்மால் எதையுமே அதன் உண்மைத் தன்மையுடன் அறிந்துகொள்ள முடியாது. கோயிலில் பிரதிஷ்டை செய்யும் தெய்வ விக்கிரகங்ளுக்குக் கண்கள் திறக்கும் வைபவம் மிகுந்த முக்கியத்துவம் பெற்றிருப்பதில் இருந்தே நாம் கண்களின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ளலாம்.

மந்திரம்

 

நம்மில் பலருக்குக் கண்பார்வையில் சிற்சில குறைபாடுகள் ஏற்படலாம். அதனால், பார்க்கும் திறன் குறைந்து சிலபல சிரமங்களுக்கு ஆளாக நேரும். கண் பார்வைக் குறைபாடுகள் எதுவாக இருந்தாலும், இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் சௌந்தர்யலஹரி ஸ்லோகத்தை பக்திபூர்வமாக பாராயணம் செய்து வந்தால், கண்பார்வைக் குறைபாடுகள் நீங்கி பார்வையில் தெளிவு உண்டாகும்.

அந்த ஸ்லோகம் இதுதான்.

லோகாச் சதுர்த்தச மஹேந்த்ர முகாச்ச தேவா:

மூர்த்தித்ரயம் முனிகணாச்ச வஸிஷ்ட முக்யா: |

ஸத்யோ பவந்தி ந பவந்தி ஸமஸ்த மூர்த்தே:

உன்மீலனேன தவ தேவி நிமீலனேன ||

இந்த ஸ்லோகத்தின் சாரம் இதுதான்.

தேவீ, பக்தர்கள் கேட்கும் வரங்களை நீ உடனுக்குடன் கொடுத்துவிடுவதால், நீ யாருக்குமே கடன்பட்டவள் இல்லை. உன்னுடைய அருளைப் பெற்ற பக்தர்களே உனக்குக் கடன்பட்டவர்கள் ஆகின்றனர். நீ இப்படி பக்தர்கள் எப்போது என்ன வரம் கேட்பார்களோ என்று நினைத்து, பக்தர்களின் கோரிக்கைகளை கேட்பதற்காக உன் அழகிய விழிகளைக் கூட மூடாமல், எப்போதும் விழித்துக்கொண்டே இருக்கிறாய். உன்னைப் போலவே மீன்களும் கண் சிமிட்டாமல் இருக்கிறது. காதுவரை நீண்டிருக்கும் உனது அழகிய திருநயனங்கள, உன் கண்களைப் போலவே எப்போதும் கண் சிமிட்டாமல் இருக்கும் மீன்களைப் பற்றி கோள் சொல்வதுபோல் இருக்கிறது.

என்ன ஒரு அழகான உவமை அம்பிகையின் நீண்ட திருநயனங்களுக்கு?!

இந்த ஸ்லோகத்தைப் பாராயணம் செய்யமுடியாதவர்கள், காஞ்சிபுரத்தில் அருளும் அருள்மிகு ஏகாம்பரநாதர்பேரில் பதிகம் பாடி ஒரு கண்ணின் பார்வையைப் பெற்ற சுந்தரரின் பதிகத்தை பாராயணம் செய்யலாம்.

மந்திரம்

தம்பிரான் தோழர் என்ற சிறப்பினைப் பெற்ற சுந்தரர்திருவாரூரில் பரவை நாச்சியாரை திருமணம் செய்துகொண்டவர், திருவொற்றியூருக்கு வந்தபோது, தனக்கு ஏற்கெனவே திருமணம் ஆகிவிட்டதை மறைத்து, அங்கிருந்த சங்கிலிநாச்சியாரை திருமணம் செய்துகொள்ள விரும்பினார். ஆனால், சங்கிலிநாச்சியார் இறைவனை சாட்சியாகக் கொண்டு திருமணம் செய்துகொள்ள விரும்பினார். அப்படியே இறைவனின் உத்தரவின்படி கோயிலில் இருந்த மகிழமரத்தை சாட்சியாக வைத்து சங்கிலிநாச்சியாரை திருமணம் செய்துகொண்டார்.

பிறகு சங்கிலிநாச்சியாரைப் பிரிந்து செல்ல எண்ணியபோது, இறைவன் சுந்தரரின் கண் பார்வையைப் பறித்துவிட்டார். தன் தவற்றுக்கு வருந்திய சுந்தரர், காஞ்சிபுரம் தலத்துக்கு வந்து ஏகாம்பரநாதரைப் பணிந்து, 'ஆலம்தான் உகந்து அமுது செய்தானை' என்று தொடங்கும் பதிகத்தை பாடினார். அதன் பயனாக ஒரு கண்ணில் பார்வை பெற்றார். மற்றொரு கண் பார்வையை திருவாரூரில் பெற்றார் என்பது சுந்தரரின் வாழ்க்கை வரலாறு.

சுந்தரர் காஞ்சியில் பாடிய பதிகம் முழுவதையுமோ அல்லது இங்கே கொடுக்கப்பட்டு இருக்கும் ஒரு பாடலை மட்டுமோ பாராயணம் செய்து, இறைவன் அருளால் கண் பார்வையில் உள்ள குறைபாடுகள் நீங்கப்பெறலாம்.

ஆலந்தான் உகந்து அமுது செய்தானை

ஆதியை அமரர் தொழுதேத்தும்

சீலம்தான் பெரிதுமுடையானை

சிந்திப்பாரவர் சிந்தையில் உள்ளானை

ஏலவார்க் குழலாள் உமையம்மை

என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற

காலகாலனைக் கம்பன் எம்மானை

காணக் கண் அடியேன் பெற்றவாறே.

மிகவும் அற்புதமான சக்தி வாய்ந்த பாடல் இது. அன்பர்கள் இந்தப் பாடலை மட்டுமாவது பாராயணம் செய்து பலன் பெறலாம்.

http://www.vikatan.com/news/spirituality/78148-to-get-rid-of-the-eye-problems-daily-devotional-manthra.art

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தினம் ஒரு மந்திரமும் அதற்கு தோதான தேவாரங்களும் அமிர்தம்....! tw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழக தேர்தல் நிலவரம் – தந்தி டிவி கருத்துக்கணிப்புகள் தெரிவித்திருப்பது என்ன? திமுக 34 இடங்களில் வெல்லும். அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறாது. பாஜக 1 இடத்தில் வெற்றிபெறும். இழுபறி நீடிக்கும் இடங்கள் 5 என தந்திடிவி தெரிவித்துள்ளது இந்திய நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் 5 தொகுதிகளில் கடுமையான இழுபறி நீடிக்கும் என்று தந்தி டிவி கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தொகுதிகளில் பாஜக அதிமுக திமுக இடையே கடுமையான போட்டி நிலவும் என்று கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் நாளை மறுநாள்  தேர்தல் நடக்க உள்ளது. திமுக அதிமுக பாஜக நாம் தமிழர் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. தமிழ்நாட்டில் 4 முனை போட்டி தீவிரமாக நிகழ்ந்து வருகிறது. இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்த அளவில் வரும் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் திமுக 21 தொகுதிகளும் அதன் கூட்டணி கட்சிகள் மற்ற தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. தேர்தல் தொடர்பாக வரிசையாககருத்துக்கணிப்புகள்   வெளியாகி வருகின்றன. அந்த வகையில்  தேர்தல் தொடர்பாக தந்தி டிவி கருத்துக்கணிப்பை மேற்கொண்டுள்ளது மொத்தமாக திமுக 34 இடங்களில் வெல்லும். அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறாது. பாஜக 1 இடத்தில் வெற்றிபெறும். இழுபறி நீடிக்கும் இடங்கள் 5 என தந்திடிவி தெரிவித்துள்ளது : வேலூர் திருநெல்வேலி கோயம்புத்தூர் கள்ளக்குறிச்சி பொள்ளாச்சி உச்சக்கட்ட  ஆகிய இடங்களில் இழுபறி நீடிக்கும் என்று கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில் வேலூர் திருநெல்வேலி கோயம்புத்தூர் ஆகிய தொகுதிகளில் திமுக – பாஜக இடையே இழுபறி நீடிக்கும். கள்ளக்குறிச்சி பொள்ளாச்சி ஆகிய தொகுதிகளில் அதிமுக – திமுக இடையே இழுபறி நீடிக்கும் என்று தந்தி டிவி கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. வாக்கு சதவிகிதம்: திமுகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 42 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். அதிமுகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 34 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். பாஜகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 18 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். நாம் தமிழருக்கு வாக்கு அளிப்போம் என்று 5 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர் : புதுச்சேரியில் பாஜகவிற்கான வெற்றி வாய்ப்பு உள்ளதாக கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.   https://akkinikkunchu.com/?p=274079
    • 50 நாடுகளுக்கு இலவச வீசா – உல்லாசப் பயணிகளை கவர இலங்கை திட்டம் April 18, 2024   இலங்கையின் சுற்றுலாத் துறையை மேலும் வலுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய 50 க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அண்மைக்காலமாக இலங்கை வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியா உட்பட பல ஐரோப்பிய நாடுகளில் இருந்து அதிகளவான சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருகின்றனர். குறிப்பாக ரஷ்யா, ஜேர்மன், பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து அதிகளவான சுற்றுலா பயணிகள் வருகை தருவதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை புதிய விசா முறையொன்றை நடைமுறைப்படுத்தல் மற்றும் புதிய இணைய வழிமுறையை செயற்படுத்தும் பணிகள் நேற்று முதல் ஆரம்பிக்கப் பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. புதிய விசா நடைமுறை, அதற்கான கட்டணங்கள், பூர்த்திசெய்யப்பட வேண்டிய தேவைப்பாடுகள் மற்றும் இலங்கையில் தங்கியிருக்கக்கூடிய காலப்பகுதிகள் என்பன கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 27 ஆம் திகதி விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டது.   https://www.ilakku.org/50-நாடுகளுக்கு-இலவச-வீசா-உல/  
    • ராம‌ன், ர‌ஹ்மான் சர்ச்சை: எவ‌ரையேனும் புண்ப‌டுத்தியிருந்தால் ம‌ன்னியுங்கள்! - உல‌மா க‌ட்சித் த‌லைவ‌ர் அப்துல் ம‌ஜீத்.- ”சில‌ வ‌ருட‌ங்களுக்கு முன் உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர் என்ற‌ வ‌கையில் தன்னால்  கூற‌ப்ப‌ட்ட‌ ராம‌ன், ர‌ஹ்மான் க‌ருத்துக்க‌ள் எவரையேனும் புண்படுத்தியிருந்தால்  அதற்காக  தான் ப‌கிர‌ங்க‌ ம‌ன்னிப்பு கேட்பதாக” முபாற‌க் அப்துல் ம‌ஜீத் மௌல‌வி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” இஸ்லாமிய‌ ம‌த‌த்தை பொறுத்த‌ வ‌ரை முத‌ல் ம‌னித‌ன் ஆத‌ம் ஒரு முஸ்லிமாக‌வே வாழ்ந்தார் என்ப‌தால் உல‌கில் உள்ள‌ அனைத்து ம‌த‌ங்க‌ளைச்  சேர்ந்தோரும் ச‌கோத‌ர‌ர்க‌ளே ஆவர். இத‌னால் ஆதிகால‌ முஸ்லிம்க‌ளின் சிறிய‌ க‌தைக‌ள் பின்னாளில் பெரும் க‌ற்ப‌னை காவிய‌ங்க‌ளாக‌ மாறியுள்ள‌ன‌ என்ப‌தே என‌து ந‌ம்பிக்கை. இந்த‌ வ‌கையில்தான் நான் மேற்ப‌டி க‌ருத்துக்க‌ளை சொல்லியிருந்தேன். ஆனால் அர்ர‌ஹ்மான் என்ப‌து இறைவ‌னின் திருப்பெய‌ர்க‌ளில் ஒன்று என்ப‌தால் அத‌னோடு ஒருவ‌ரை இணைப்ப‌து இறைவ‌னை அவமதிக்கும் செயல்  என‌ நான்  ம‌திக்கும், ஒருவ‌ர் என‌க்கு வ‌ருத்த‌த்துட‌ன் கூறிய‌தால்  நான் தெரிவித்த கருத்து அவ‌ர‌து ம‌ன‌தை மிக‌வும் காய‌ப்ப‌டுத்தியுள்ள‌து என்ப‌தைப் புரிந்துகொண்டேன். ம‌க்களை எமாற்றும், இன‌வாத‌, ல‌ஞ்ச‌ம் வாங்கும், மோச‌மான‌ ம‌னித‌ர்க‌ளின் உள்ள‌ங்க‌ளை விட‌ ந‌ல்ல‌வ‌ர்க‌ள் ம‌ன‌து புண்படும் என்றால் அத‌னை த‌விர்ப்ப‌து ந‌ல்ல‌து. அந்த‌ வ‌கையில் ர‌ஹ்மானோடு ராம‌னை இணைத்து க‌ருத்து சொன்ன‌மைக்காக‌ நான்  ம‌ன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்” இவ்வாறு தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1378686 @colomban
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.