Jump to content

அ.தி.மு.க., மீது பா.ஜ., பரிவு காட்டுவது ஏன்


Recommended Posts

அ.தி.மு.க., மீது பா.ஜ., பரிவு காட்டுவது ஏன்
 
 
 

அடுத்த சில மாதங்களில் நடக்கவுள்ள, ஜனாதிபதி தேர்தல் வரை, அ.தி.மு.க., என்ற, 'தேன் கூடு' கலையாமல் பார்த்துக் கொள்ள, பா.ஜ., முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

 

Tamil_News_large_169013120170114000206_318_219.jpg

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை, எதிர்த்து வந்தார். ஆனால், அவரது மறைவுக்கு பின், தமிழக அரசு நிர்வாகத்தில், கவர்னர் வித்யாசாகர் ராவ் தலையிட துவங்கினார். அதை தொடர்ந்து, 'உதய்' மின் திட்டம், உணவு மானிய திட்டம் போன்ற, ஜெ., கடுமையாக எதிர்த்து வந்த, மத்திய அரசு திட்டங்களுக்கு, தமிழக அரசு திடீரென பச்சைக் கொடி காட்டியது.

ஜெ., போன்ற பெரிய ஆளுமை இல்லாமல், பலவீனமாக இருந்த அ.தி.மு.க.,வை, பா.ஜ.,

பணிய வைப்பதாக, பரவலாக பேச்சு எழுந்தது; அதை, தமிழக பா.ஜ., மறுத்து வருகிறது. இதுதவிர, முன்னெப்போதும் இல்லாத வரையில், மத்திய இணையமைச்சர், பொன். ராதாகிருஷ்ணன், ஒரு மணி நேரத்திற்கு மேலாக, முதல்வர் பன்னீர்செல்வத்தை சந்தித்துபேசியுள்ளார். தமிழிசையும், அவரை, சென்னை கோட்டையில் சந்தித்தார்.

இந்நிலையில், தமிழக நிர்வாகத்திலும், அ.தி.மு.க., விஷயத்திலும், மத்திய அரசும், பா.ஜ.,வும் காட்டும் பரிவுக்கான பின்னணி தெரிய வந்துள்ளது.இது குறித்து, அ.தி.மு.க., நிர்வாகி ஒருவர் கூறியதாவது: சேவை வரி சட்டத்திருத்த மசோதா, ராஜ்யசபாவில் அறிமுகமான போது, அ.தி.மு.க., அதை எதிர்த்து; ஆனாலும், ஓட்டெடுப்பின் போது, சபையை விட்டு வெளியேறியது. இது, பா.ஜ.,விற்கு சாதகமான முடிவாகவே பார்க்கப்பட்டது.

அதற்கு, ஜெ., - மோடி இடையே நிலவிய நட்பும் முக்கிய காரணம்.ஆனால், ஜெ., மறைவுக்குப் பின், பா.ஜ., அத்தகைய பரிவு காட்ட வேண்டிய அவசியம் இல்லை.எனினும், வரும் ஜூலையில், ஜனாதிபதி தேர்தலும், ஆகஸ்டில், துணை ஜனாதிபதி தேர்தலும் வருகிறது.அ.தி.மு.க., வசம் தற்போது, லோக்சபாவில், 37 எம்.பி.,க் களும், ராஜ்ய சபாவில், 13 எம்.பி.,க்களும் உள்ளனர். மேலும்,

 

அ.தி.மு.க., விற்கு, 135 எம்.எல்.ஏ.,க்களும் உள்ளனர். அதனால், ஜனாதிபதி தேர்தலில், அ.தி.மு.க., வின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.

அ.தி.மு.க., உடையாமல் இருந்தால், ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி தேர்த லில், பா.ஜ., வேட்பாளர்களுக்கு சிந்தாமல், சிதறாமல், அதன் ஓட்டுகள் கிடைக்கும் என, பா.ஜ., நம்புகிறது. அதனால் தான், தமிழக அரசியல் விஷயங்களில், அதீத ஆர்வமும், வலுவான தலைமை இல்லாத, அ.தி.மு.க., மீது பரிவும் காட்டுவதாக கருதுகிறோம், என்றார்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1690131

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.