Jump to content

எதிர்பார்ப்புகளை கிளப்பும் நடராஜன் பொங்கல் விழா.. ஜெ. வெளியேற்றிய பின் இவர் பேசியவை இது தான்!


Recommended Posts

எதிர்பார்ப்புகளை கிளப்பும் நடராஜன் பொங்கல் விழா.. ஜெ. வெளியேற்றிய பின் இவர் பேசியவை இது தான்!

Natarajan நடராஜன்

ஞ்சாவூரில் ஆண்டுதோறும் நடராஜன் நடத்தும் பொங்கல் விழா என்பது அரசியல் வட்டாரத்தில் மிகப் பிரபலம். இந்த ஆண்டு தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால் பரபரப்புக்கும், எதிர்பார்ப்புக்கும் பஞ்சமே இல்லை. வழக்கமாக நடப்பதுதான் என்றாலும், இதுவரை நடந்தது நடராஜன் நடத்திய பொங்கல் விழா. இப்போது அ.தி.மு.க.வின் தலைமை பொறுப்பை வகிக்கும், விரைவில் தமிழகத்தின் முதல்வர் ஆவார் என சொல்லப்படும் சசிகலாவின் கணவர் நடராஜன் நடத்தும் பொங்கல் விழா என்பதுதான் பரபரப்பும், எதிர்பார்ப்பும் பன்மடங்கு அதிகரிக்கக் காரணம்.

என்ன பேசப்போகிறார் நடராஜன்?

ஒவ்வொரு ஆண்டும் சசிகலாவின் கணவர் நடராஜனால் தஞ்சையில் நடத்தப்படும் ‘தமிழர் கலை இலக்கியத் திருவிழா’வில் அவருடைய பேச்சு அரசியல் அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தும். 'ஜெயலலிதா இருக்கும்போதே 'நான் அரசியலுக்கு வரட்டுமா? வேண்டாமா?' என கருத்து கேட்டவர். அவருடைய பேச்சில் சாவல்கள் நிறைந்து இருக்கும். நான் செல்போனில் பேச மாட்டேன், காரில் பயணம் செய்யமாட்டேன் என பல்வேறு வித்தியாசமான வாக்குறுதி எல்லாம் நடந்தது இந்த பொங்கல் விழாவில்தான்.

நடத்தலாமா, வேண்டாமா என்ற குழப்பத்துக்கிடையே, பொங்கல் விழாவை இந்த ஆண்டும் தொடர்ச்சியாக நடத்துவது என முடிவு செய்து விட்டார் நடராஜன். இந்த ஆண்டு பொங்கல் விழா அடுத்த மூன்று நாட்கள் நடக்கவிருக்கிறது. மனைவி அ.தி.மு.க.வின் பொறுப்பை ஏற்றுவிட்டார். தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்பார் எனவும் சொல்லப்படுகிறது. இந்த சூழலில் அவரது பேச்சில் அரசியலுக்கு பஞ்சமிருக்காது. ஜெயலலிதா இருந்தபோதே பல சவால்களை விடுத்தவர், இப்போது என்ன சொல்லப்போகிறார் என்பது கூர்ந்து கவனிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், 2011-ம் ஆண்டு சசிகலா, நடராஜன் உள்ளிட்ட மன்னார்குடி உறவுகளைக் கூண்டோடு வெளியேற்றிய பின்னர், அந்த பொங்கல் விழாவில் நடராஜன் என்னவெல்லாம் பேசினார் என்பதை பார்ப்போம்.

Natarajan நடராஜன்

2012 - 'கலைஞர் பின்னால் செல்லத் தயார்'

2012-ம் ஆண்டு பொங்கல் விழா. அதாவது ஜெயலலிதாவால் விரட்டியடிக்கப்பட்ட பின்னர் நடந்த முதல் விழாவில் பேசிய நடராஜன், "இந்த ஆண்டு தமிழர் கலை இலக்கிய விழா நடக்குமா? நடக்காதா என்று தஞ்சை மக்கள் எண்ணினார்கள். கடைசி தமிழன் இருக்கும் வரை கலை இலக்கியத் திருவிழா நடைபெறும். இதைப் பார்த்து சங்கமம் நிகழ்ச்சியை நடத்தியவர்கள் திகாரில் சங்கமித்து விட்டார்கள். நான் அப்படியல்ல. இதற்கென மருதப்பா அறக்கட்டளையை துவக்கியிருக்கிறேன் என்றவர், முல்லைபெரியாறு பிரச்னை தீரவேண்டுமானால் தேவிகுளம், பீர்மேடு பகுதிகளை தமிழகத்துடன் இணைக்க வேண்டுமென முன்னாள் முதல்வர் கலைஞர் அறிக்கை விட்டிருக்கிறார். அப்படியென்றால் காவிரிக்கு துரோகம் செய்துவரும் காங்கிரஸ் அரசை தூக்கி எறிந்துவிட்டு, காவிரிக்காக களமிறங்கி போராடினால் கலைஞர் பின்னால் செல்ல நான் தாயார்," என்று முழுங்கினார்.

ஜெயலலிதாவால் வெளியேற்றப்பட்ட ஒரு மாதத்தில் நடராஜன் இப்படி பேசியது அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சசிகலாவும், குடும்பத்தினரும் நடராஜனின் இந்த பேச்சைக் கேட்டு அதிர்ந்து போனார்கள் எனவும் சொல்லப்பட்டது.

Natarajan நடராஜன்

2013 - ஜெயலலிதாவுக்கு எதிராக ஜெயலலிதா ஸ்டைலில்...

2013-ம் ஆண்டு. "நான் யாருக்கும் துரோகம் செய்யவில்லை. ஆனால், என் மீது பொய் வழக்கு போட்டார்கள், சிறையில் அடைத்தார்கள். என் மீது பொய் வழக்கு போட்டவர்களுக்கு தேர்தல் நேரத்தில் நான் சொல்லுவேன், அதை நீங்கள் எனக்காக செய்ய வேண்டும். அப்படி செய்து அவர்களுக்கு நாம் பாடம் புகட்ட வேண்டும். அதை நீங்கள் செய்வீர்களா,"என்று ஜெயலலிதா பாணியில் கேள்வி எழுப்பினார் நடராஜன். இவர் மீது வழக்கு போட்டு சிறையில் அடைத்தது ஜெயலலிதா தலைமையிலான அரசு தான். ஜெயலலிதாவுக்கு எதிராக இவர் பேசிய இந்த பேச்சும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

2014- ஆட்சி மமதையில் இருக்கிறது தமிழக அரசு

Natarajan நடராஜன்2014-ம் ஆண்டு. "இந்தியாவில் உழவு தொழிலும், உணவு உற்பத்தியும் குறைந்து போய்விட்டது. பிரதமரிடம் உணவு உற்பத்தியை பெருக்குவதற்கான திட்டங்களே இல்லை, மாதத்தில் பத்து நாட்கள் மட்டும்தான் இந்தியாவில் இருக்கிறார். மீதி நாட்கள் வெளிநாடுகளுக்கு போய்விடுகிறார். ஜவஹர்லால் நேரு, இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி போன்றவர்களெல்லாம் தமிழ்நாட்டுக்கு வந்து சென்றிருக்கிறார்கள் இவர் (மன்மோகன்சிங்) தமிழகத்துக்கு வந்ததுண்டா? பிரதமர் (மன்மோகன்சிங்) ஒரு நிதியமைச்சர் (ப.சிதம்பரம்) வைத்திருக்கிறார். அவர் ஐந்து ஆண்டுகளில் செய்த சாதனைகள் என்ன? அவர் ஏரியாவில் ஊருக்கு ஊர் வங்கிகளை திறந்து வைத்ததுதான், மக்களிடம் வங்கியில் பணம் போடுவதற்கு எங்கே பணம் இருக்கிறது.

மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இதைப்பற்றி தமிழகத்திலுள்ள அமைச்சர்கள் யாராவது பேசுகிறார்களா? மீனவர்களை யாரோ என்றுதானே நினைக்கிறார்கள். விடுதலைப்புலிகள் இருக்கும்போது எங்களைத் தொட்டதே இல்லை என்று சொல்லுகிறார்கள் மீனவர்கள். ஆனால் தமிழக முதல்வர் (ஜெயலலிதா) என்னால் என்ன முடியும் என்கிறார். ஈழத் தமிழர்களின் ஈகிகளுக்காக கட்டப்பட்டுள்ளது முள்ளிவாய்க்கால் முற்றம். இந்த புகழ் இவருக்கு போய்ச் சேருவதா? என்று சிலருக்கு வருத்தம். முற்றத்தை இடித்த அதிகாரிகளை எனக்குத் தெரியும். அவர்களை இந்த தமிழக அரசு தண்டிக்காமல் ஆட்சி மமதையில் இருக்கிறது. அவர்கள் என் கையில் சிக்குவார்கள் நான் அப்போது நசுக்குவேன்.

Natarajan நடராஜன்

நேரடி அரசியலில் ஈடுபட வேண்டுமா? வேண்டாமா?

a1_11134.jpgதமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது, இன்றைய வேலையில்லா இளைஞர்கள் செயின் பறிப்பில் ஈடுபடுவது வேதனையை அளிக்கிறது. சுவிஸ் வங்கியில் பணம் போட்டு வைத்துள்ளவர்களின் பட்டியலை என்னால் வெளியிட முடியும். நான் மௌனம் சாதிப்பது எதிர்க்கட்சிகாரர்கள் நமக்கு நல்லது என்று நினைக்கிறார்கள், பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. நான் நேரடி அரசியலில் ஈடுபட வேண்டுமா? வேண்டாமா? என்று நீங்களே சொல்லுங்கள். வெளியில் இருந்து வந்தவர்களுக்கு இடம் கொடுத்த நாம் இல்லாமல் போய்விடக்கூடாது. நாங்கள் என்ன இளைத்தவர்களா? நான் எதிரிகளை அடையாளம் காட்டுவேன். அவர்களுக்கு நீங்கள் பாடம் புகட்ட வேண்டும். இப்போது நான் நேரடி அரசியலுக்கு வரணுமா? வேண்டாமா என்பதை தீர்மானிக்க இங்கு ஓட்டு பெட்டி வைத்துள்ளேன். வாக்களியுங்கள்," என்றவர், வாக்குச் சீட்டு கொடுத்து ஓட்டு போட வைத்தார். ஓட்டு எண்ணிக்கை அண்ணா நினைவு நாளான பிப்ரவரி மாதத்தில் வெளியிடுவேன் என்றார். ஓட்டும் எண்ணப்படவில்லை, முடிவையும் அறிவிக்கவில்லை.

 

2015- போராட்டம் நடத்தாதீர்கள்... என்னிடம் வாருங்கள்

Natarajan நடராஜன்2015-ம் ஆண்டு. விழாவுக்கு, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பங்கேற்பதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் அவர் பங்கேற்கவில்லை. அவருக்கு பதில் அவரது கடிதத்துடன் பிரணாப்பின் மைத்துனர் கிருஷ்ண மோகன்ஜி பங்கேற்றார். "டெல்டாவில் உருவெடுத்து வரும் மீதேன் திட்டத்தை யாரும் அரசியலாக்க வேண்டாம். அதற்காக யாரும் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தி நேரத்தை வீணடிக்க வேண்டாம். என்னிடம் வாருங்கள் நான் எல்லோரையும் டெல்லிக்கு அழைத்துக்கொண்டு போய் பேசி, மீதேன் திட்டம் வராமல் செய்துவிடுகிறேன். அதைப்பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம்.  மீத்தேன் திட்டம் வரவே வராது," என்று அடித்து பேசினார்.

"மக்களின் வாழ்வாதாரம் அடியோடு ஒழிக்கும் திட்டத்தை அரசு கைவிடவில்லையென்றால், குடியரசுத் தலைவரின் ஒப்புதலோடு, அந்த திட்டத்தை முடக்கலாம் என சட்ட நிபுணர்கள் சொல்லியிருக்கிறார்கள். பிராணப் முகர்ஜியின் மைத்துனர் கிருஷ்ணமோகன் மூலம் இந்த திட்டத்தை முடக்க காய்நகர்த்தி வருகிறார்," என இவரது பேச்சுக்கு நடராஜனின் ஆதரவாளர்கள் காரணம் சொன்னார்கள்.

2016- 'நான் வருவதை சிலர் தடுக்கிறார்கள்'

2016-ம் ஆண்டு. பொங்கல் விழாவில் சிறப்பழைப்பாளராக பங்கேற்றார் கார்கில் போர் கேப்டன் அருண் சக்கரவர்த்தி. அவர் "தமிழகத்தின் சிறந்த மனிதர் நடராஜனால், ஆண்டுதோறும் அழைக்கப்படுவதில் பெருமை கொள்கிறேன். இவரைப் போன்றவர்கள் டெல்லிக்கு வரவேண்டும், தமிழ்நாட்டுக்கு முதலமைச்சராக வரவேண்டும் இந்த தமிழர் கலை இலக்கிய திருவிழா தொடர்ந்து நடத்த வேண்டும்," எனச்சொல்லி நடராஜனை குஷிப்படுத்தினார்.

இடையில் குறுக்கிட்டு பேசிய நடராஜன், "நான் வருவதை சிலர் தடுக்க நினைக்கிறார்கள், அதை யாராலும் தடுக்க முடியாது," என்றார். இறுதிநாள் நிறைவுரையில், ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் புகழைப் பற்றி பேசிக்கொண்டிருந்தவர், "நீதிகட்சி தோன்றியபிறகு காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் வேரோடு அழிந்துவிட்டது. அதன்பிறகு தோன்றிய திராவிட கட்சிகள்தான் 50 ஆண்டுகளாக ஆட்சி செய்து வருகிறது. திராவிட கட்சிகளை இனி யாராலும் அழிக்க முடியாது," என்று பேசி முடித்தார்.

ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு முதல் நிகழ்ச்சி. மனைவி சசிகலா அ.தி.மு.க. தலைமையேற்ற பின்னர் முதல் நிகழ்ச்சி... இப்படி பல பரபரப்புகளுக்கிடையே நாளை துவங்குகிறது நடராஜனின் பொங்கல் விழா. நடராஜன் என்ன பேசப்போகிறார் என்பதே பெரும் எதிர்பார்ப்பை கிளப்பி விட்டிருக்கிறது.

http://www.vikatan.com/news/coverstory/77715-natarajans-speech-on-pongal-festival.art

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • பாஜகவோட கூட்டணிவைச்ச வாசனுக்கும் தினகரனுக்கும் மட்டும் அவர் கேட்ட சின்னத்தைக் கொடுத்தது என்ன மாதிரியான தேர்ததல் விதிமுறை?பாஜக இந்த முறை 3 வது இடம் பிடிக்கணும் அதுக்காககத்தான் இந்த குழறுபடிகள்.ஆனால் அது நடக்காது. தேர்தலிலே நிற்காத கமலுக்கு டோர்ச்லைற் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.
    • இந்திய‌ அள‌வில் ஏவிம் மிசினுக்கு எதிர்ப்பு கூடுதே அண்ணா அது எத‌ற்காக‌.................ப‌ல‌ர் ஊட‌க‌ங்ளில் நேர‌டியா சொல்லுகின‌ம் ஏவிம் மிசினில் குள‌று ப‌டி செய்ய‌லாம் என்று ஏன் அவ‌ர்க‌ள் மீது தேர்த‌ல் ஆனைய‌ம் வ‌ழ‌க்கு போட‌ வில்லை................இப்ப‌டி கேட்க்க‌ ப‌ல‌ இருக்கு...............யாழிலே வ‌ய‌தில் மூத்த‌வ‌ர்க‌ள் எழுதி விட்டின‌ம் இந்தியாவில் தேர்த‌ல் என்ப‌து க‌ண்துடைப்பு நாட‌க‌ம் என்று அப்ப‌ புரிய‌ வில்லை இப்ப புரியுது...............இப்ப இருக்கும் தேர்த‌ல் ஆனைய‌ம் கிடையாது மோடியின் ஆனைய‌ம்..............ப‌ல‌ருக்கு ப‌ல‌ ச‌ந்தேக‌ம் வ‌ந்து விட்ட‌து த‌மிழ் நாட்டு தேர்த‌ல் ஆனைய‌ம் மேல்..........................
    • வைகோ தனது மகனை அரசியிலில் முன்னிறுத்துவதற்காக நீண்டகாலம் வைகோவிற்கு விசுவாசமாக இருந்த கணேசமூர்த்த்திக்கு  தேர்தலில் இடங் கொடுக்கவில்லை.. திமுக ஒரு இடம்தான் கொடுக்குமென்றால் அதிமுகவுடன் கூட்டணி அமைந்திருந்தால் அவர்கள் கட்டாயம் 2 இடம் கொடுத்திருப்பார்கள்.கூட்டணிமாறுவது வைகோவுக்கு புதிதில்லை.வைகோவைக் திமுகவில் இருந்து வெளியேற்றியதற்காக எத்தனையோ போர் தீக்குளித்தார்கள். வாரிசு அரசியலை எதிர்த்து கட்சி தொடங்கியவர் அதே வாரிசு அரசியலைக் கையில் எடுத்தது மட்டுமல்ல யாரை எதிர்த்து கட்சி தொடங்கினாரோ அவரின் காலடியில் கிடக்கிறார். கணேசகமூர்த்தியின் சாவுக்கு வைகோவே பொறுப்பு.
    • தமிழ் தேசியத்தை தனது கட்சியின் கொள்கையாக கொண்டுள்ள சீமான் பிள்ளைகளை தமிழ்வழி கல்வியில் சேர்க்காதது தவறான முன்னுதாரணம்.. படிப்பது தேவாரம் இடிப்பது சிவன் கோவில் என்று வாழும் திராவிடகட்சிகளுக்கும் தனக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பதை தனது சில அண்மைக்கால நடவடிக்கைகள் மூலம் சீமான் வெளிப்படித்தி வருகிறார்.. அவரை நம்பி பின்தொடரும் பல லட்சம் இளைஞர்கள் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக நாம் தமிழர் இருக்கும் என்று வந்தவர்கள்.. இலட்சிய பிடிப்புள்ளவர்கள்.. இப்படியான செயல்களை அவர்களை வெறுப்பேற்றும்.. நமக்கெதுக்கு வம்பு.. நம்மூர் அரசியலே நாறிக்கிடக்கு.. தமிழக உறவுகள் தம் அரசியலை பார்த்துக்கொள்வார்கள்..
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.