Jump to content

இரண்டு கேப்டன் இந்தியாவிற்கு ஒத்து வராது: டோனி


Recommended Posts

இரண்டு கேப்டன் இந்தியாவிற்கு ஒத்து வராது: டோனி

இரண்டு கேப்டன் முறை இந்திய கிரிக்கெட்டிற்கு ஒத்து வராது என்று கேப்டன் பதவியில் இருந்து விலகிய பின் முதன்முதலாக மகேந்திரசிங் டோனி அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

 
 
இரண்டு கேப்டன் இந்தியாவிற்கு ஒத்து வராது: டோனி
 
இந்திய ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த மகேந்திர சிங் டோனி கடந்த சில நாட்களுக்கு முன் திடீரென கேப்டன் பதவியில் இருந்து ஓய்வு பெற்றார். ஆனால் தொடர்ந்து விளையாடுவேன் என்று அறிவித்தார்.

ஓய்வு அறிவிற்குப்பின் இன்று முதன்முதலாக டோனி பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில் ‘‘இரண்டு கேப்டன் (டெஸ்ட் அணி, ஒருநாள் அணி) இந்திய கிரிக்கெட்டிற்கு ஒத்து வராது. எனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்ய இது சரியான நேரம். விராட் கோலியின் தலைமையின் இந்திய அணி இதுவரை பெறாத வகையில் சிறப்பான வெற்றியை பெறும்.

நான் சாம்பியன் டிராபி வரை கேப்டனாக நீடித்தால் எந்தவித மாற்றமும் ஏற்படப்போவதில்லை. ஆஸ்திரேலியா தொடரின் இடையிலேயே நான் ஏன் கேப்டன் பதவியில் இருந்து விலகினேன் என்பதை அறிய விரும்புகிறார்கள்’’ என்றார்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/01/13153624/1062010/Split-captaincy-does-not-work-in-India-Dhoni.vpf

Link to comment
Share on other sites

கோலிக்கு தோனியின் அட்வைஸ்!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி செய்தியாளர்களிடம், 'சரியான தருணம் என கருதிதான் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினேன். ஒவ்வொரு விதமான போட்டிக்கும், ஒரு கேப்டன் என்பது இந்தியாவுக்கு பொருந்தவில்லை. டெஸ்ட்டை விட ஒருநாள் போட்டிக்கு தலைமை வகிப்பது எளிமையான ஒன்றுதான். கோலிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வேன். கோலி ஃபீல்டிங் அமைப்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்,

Dhoni

கோலி தலைமையில் இந்திய அணி பல புதிய சாதனைகளை படைக்கும். தற்போது சூழ்நிலைக்கு 4-வது வீரராக களமிறங்க விருப்பம் தெரிவித்தேன். ஆனால், அணிக்கு தகுந்தது போல எந்த நிலையிலும் களமிறங்க தயராக உள்ளேன் ' என்றார்.

http://www.vikatan.com/news/sports/77753-dhoni-advice-to-kholi.art

Link to comment
Share on other sites

தனித்தனி கேப்டன்கள் பயனளிக்காது என்பதே பதவி விலகக் காரணம்: மனம் திறந்த தோனி

 

 
 
 
புனேயில் பயிற்சியின் போது விராட் கோலி, தோனி. | படம். பிடிஐ,
புனேயில் பயிற்சியின் போது விராட் கோலி, தோனி. | படம். பிடிஐ,
 
 

டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் விராட் கோலி ஸ்திரமடைவதற்காக காத்திருந்ததாக தோனி தனது கேப்டன்சி விலகல் பற்றி முதல் முறையாக நீண்ட பேட்டி அளித்துள்ளார்.

புனேயில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் தோனி கூறியதாவது:

“தொடக்கம் முதலே, நான் டெஸ்ட் போட்டிகளிலிருந்து விலகியதிலிருந்தே, ஒவ்வொரு வடிவத்திற்கும் வேறு கேப்டன்கள் என்பது இந்திய அணியைப் பொறுத்தவரை ஒத்து வராது என்றே கருதினேன். நம் அமைப்பில் அது பயனளிக்காது.

நான் சரியான தருணத்திற்காக காத்திருந்தேன். டெஸ்ட் வடிவத்தில் விராட் கோலி சவுகரியமான ஒரு ஸ்திர நிலையை எட்டட்டும் என்று காத்திருந்தேன். தற்போது அவர் அனைத்து வடிவங்களுக்கும் கேப்டன் பொறுப்பேற்க தயாராகிவிட்டதாகவே நான் முடிவெடுத்தேன். இதில் தவறில்லை, சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட சரியான முடிவுதான் இது. இதுதான் தருணம் என்று நான் உணர்ந்தேன்.

இங்கிலாந்தில் சாம்பியன்ஸ் கோப்பையை வென்று மேலும் நகர வேண்டும் இதற்கு விராட் கோலிக்கு வழிவிடவேண்டும் என்று முடிவெடுத்தேன். சாம்பியன்ஸ் டிராபி வரை நான் கேப்டனாக நீடித்திருந்தால் மாற்றங்கள் ஏற்பட்டிருக்காது.

ஆஸ்திரேலியாவில் பாதி தொடரிலேயே நான் ஏன் ஓய்வு அறிவிக்க வேண்டும் என்று பலரும் நினைக்கலாம், ஆனால் நாம் பெரிய புலத்தை யோசிக்க வேண்டும். எது அணிக்குப் பயனளிக்கும் என்பதை யோசிக்க வேண்டும். இன்னொரு போட்டி என்ற எனது எண்ணிக்கையால் பெரிய வித்தியாசம் ஒன்றும் ஏற்பட்டுவிடப்போவதில்லை.

சஹா ஆஸ்திரேலியாவில் இருந்தார், அவர் ஆஸ்திரேலியாவில் இன்னொரு டெஸ்ட் விளையாட வாய்ப்பளிக்க வேண்டும். எனவே அனைத்தும் நன்றாகச் சென்றால் அயல்நாட்டு தொடர்களுக்கு டெஸ்ட் போட்டிகளுக்கு அவர்தான் விக்கெட் கீப்பராகச் செல்லப் போகிறார். அவருக்கு அதற்கு ஆஸ்திரேலியாவில் அனுபவம் பெற வாய்ப்பு ஏற்படுத்த வேண்டும், அதே போல் விராட் கோலிக்கும்தான்.

அணியில் விக்கெட் கீப்பர்தான் அறிவிக்கப்படாத துணை கேப்டன், களவியூகம் அமைப்பது துணைக் கேப்டன் அல்லது விக்கெட் கீப்பரிடம் வழக்கமாக அளிக்கப்படுவதுதான். இந்த இடத்தில் இனி எனது பணி என்னவெனில் கேப்டன் என்ன விரும்புகிறார் என்பதை நான் நெருக்கமாக கவனிக்க வேண்டும். அவருக்கு தேவையான களவியூகம் என்னவென்பதையும் கவனிக்க வேண்டும்.

நான் விராட் கோலியிடம் இது குறித்து ஏற்கெனவே பேசியுள்ளேன், களவியூகம் எப்படி அமையவேண்டும், பீல்டர்களை எங்கு நிறுத்த வேண்டுமென்று அவர் விரும்புகிறார் என்பதை கலந்தாலோசித்துள்ளேன். உதாரணமாகச் சொல்ல வேண்டுமெனில் தேர்ட் மேன் நிலையை அவர் எப்படி விரும்புகிறார். ஷார்ட் தேர்ட் மேனா? கொஞ்சம் வைடாக வேண்டுமா? என்பது குறித்து ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அபிப்ராயம் இருக்கும். என்னைப்பொறுத்தவரையில் ஷார்ட் தேர்ட் மேன், அல்லது ஷார்ட் பைன் லெக் எனக்கு சற்று அருகில் இருக்க வேண்டும் அதுதான் பேட்ஸ்மெனுக்கு கடினமாக இருக்கும் என்று நினைப்பேன். இதற்கெல்லாம் நான் மாற்றிக்கொள்ள வேண்டும், ஆனால் ஒட்டுமொத்தமாக பெரிய மாற்றங்கள் இருக்காது.

தேவைப்படும்போது, விராட் கோலிக்கு என்னால் முடிந்த அறிவுரைகளை வழங்குவேன். களவியூகமே நான் அதிகம் கவனம் செலுத்தும் இடம். நான் கோலியுடன் ஆலோசனை செய்ய வேண்டும், நான் இந்த இடத்தில்தான் இருக்க வேண்டும் அதுதான் உத்தி ரீதியாக சரியானது என்று அவர் நினைக்கும் போது நான் என் இஷ்டப்படி நகர்ந்து கொண்டிருக்கக் கூடாது, ஆனால் இதெல்லாம் பெரிய விஷயமில்லை. எப்படியிருந்தாலும் சில ஆட்டங்களுக்கு களவியூகம் மீது என் கவனம் இருக்கும்.

ஒரு வீரரின் திறமை என்னவாக இருந்தாலும் அதனை 100% பயன்படுத்திக் கொள்வதுதான் எனது கேப்டன்சி அணுகுமுறை. 90% முதல் 110% வரை சாதித்தால் உண்மையில் நன்றாக ஆடுவதாகவே அர்த்தம்.

80% திறமை உள்ள வீரரிடமிருந்து 150% ஆட்டத்திறனை நாம் எதிர்பார்க்க முடியாது. இங்குதா நடைமுறை ரீதியாக நாம் சிந்திக்க வேண்டும், நேர்மையாக சிந்திக்க வேண்டும். ஒவ்வொருவரையும் ஒவ்வொரு விதமாக கையாள வேண்டும், சிலருக்கு ஓரிரு வார்த்தைகளே போதும் சிலருக்கு கடுமையான வார்த்தைகள் தேவைப்படும். சிலருக்கு பார்வை ஒன்றே போதும். ஒரு தருணத்தில் ஒருவருக்கு என்ன தேவை என்பதை புத்திசாலித்தனமாக முடிவெடுக்க வேண்டும்.

அணியின் திறன் என்னவென்பதை அறிந்திருந்தால் அவர்கள் தங்கள் திறனுக்கேற்ப ஆடுவதை உறுதி செய்ய முடியும். சில வேளைகளில் பிரச்சினை ஏற்படும், 2-3 பேட்ஸ்மென்கள் ரன்கள் எடுக்காமல் இருப்பார்கள், கஷ்டப்படுவார்கள். இது ஒரு பெரிய தடைதான். ஆனால் நாம் பெரிய தொடர்களை கருத்தில் கொள்ள வேண்டும், ஐசிசி உலகக்கோப்பை போன்ற தொடர்களில் நாக்-அவுட் சுற்றில் யார் அணியை வெற்றிக்கு இட்டுச் செல்வார்கள் என்பதை கண்டறிய வேண்டும். ஆனால் முடிவில் ஒரு தனிப்பட்ட வீரருக்கு சில ஆட்டங்களே அளிக்க முடியும். ஒட்டுமொத்தமாக இதைத் தவிர ஒன்றும் செய்ய முடியாது, இதற்குமே வீர்ர்கள் மீது நம்பிக்கை வைப்பது அவசியம்.

நான் கேப்டன்சி ஏற்றபோது அணியில் நிறைய மூத்த வீரர்கள். ஆனால் அவர்கள் ஒருகட்டத்தில் ஓய்வு பெற வேண்டி வந்தது. எனவே மாறும் அணியை இயல்பாக்குவது முதல் கடமை. ஒரு நல்ல விஷயம் என்னவெனில், மூத்த வீரர்கள் போன பிறகு அணிக்கு வந்த இளம் வீரர்கள் தற்போது சிறப்பாக ஆடிவருகின்றனர் எனப்தே.

நாம் அவர்களில் முதலீடு செய்துள்ளோம், இவர்கள்தான் இந்திய கிரிக்கெட் பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்வார்கள். எனவே இதைப் பார்ப்பதற்கு திருப்திகரமாக உள்ளது. ஒட்டுமொத்தமாக இந்தப் பயணத்தை நான் நேசித்தேன். இந்த திருப்திதான், அது வெற்றிகாலங்களாக இருந்தாலும் தோல்வி காலங்களாக இருந்தாலும், நம் முகத்தில் புன்னகையை வரவழைப்பது. பயணம் என்பதே முக்கியம்.

இவ்வாறு பேசினார் தோனி.

http://tamil.thehindu.com/sports/தனித்தனி-கேப்டன்கள்-பயனளிக்காது-என்பதே-பதவி-விலகக்-காரணம்-மனம்-திறந்த-தோனி/article9479022.ece?homepage=true

Link to comment
Share on other sites

டோனியின் கருத்துக்கள் விலை மதிப்பற்றதாக இருக்கும்: விராட் கோலி

 

ஒருநாள் மற்றும் டி20 போட்டியின்போது டோனியின் கருத்துக்கள் விலை மதிப்பற்றதாக இருக்கும் என கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

 
 
டோனியின் கருத்துக்கள் விலை மதிப்பற்றதாக இருக்கும்: விராட் கோலி
 
இந்திய அணியின் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டின் கேப்டனாக இருந்த டோனி கடந்த 4-ந்தேதி கேப்டன் பதவியில் இருந்து விலகினார். அதன்பின் விராட் கோலி கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

மூன்று வகை கிரிக்கெட் போட்டிக்கும் கேப்டனாக பதவி ஏற்றுள்ள விராட் கோலி இன்று முதன்முறையாக பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் டோனி பற்றி கூறுகையில் ‘‘நான் முதலில் என்னுடைய கேப்டனுக்கான நுனுக்கங்களை வெளிப்படுத்துவேன். ஆனால் டோனியின் கருத்துக்கள் விலை மதிப்பற்றதாக இருக்கும். அவருடைய வார்த்தைகள்தான் என்னை டி.ஆர்.எஸ். முறை மீது நம்பிக்கை வைக்க முக்கிய காரணமாக இருந்தது.

கிரிக்கெட் போட்டியில் டோனி ஒரு நுண்ணறிவுமிக்க வீரர். நான் பார்த்ததில் அவருடைய விக்கெட்டுக்காக அப்பீல் 95 சதவீதம் சரியாகத்தான் இருக்கும். டிஆர்எஸ் குறித்து கவலை ஏற்பட்டபோது அவர் மட்டும்தான் எனக்கு நம்பிக்கை அளித்தார். கிரிக்கெட் மைதானத்தில் எங்களுடைய வெளிப்பாடு குறித்து நாங்கள் நன்றாக புரிந்து வைத்துள்ளோம். அவருடைய கருத்துக்கள் விலைமதிப்பற்றதாக இருக்கும்’’ என்றார்.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் புனேவில் நாளை பகல் - இரவு ஆட்டமாக தொடங்குகிறது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/01/14161933/1062147/Mahendra-Singh-Dhoni-inputs-will-be-priceless-Virat.vpf

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.