Jump to content

மொஸ்கோ ஹோட்டலுக்கு பாலியல் தொழிலாளிகளை அழைத்துச் சென்ற டொனால்ட் ட்ரம்ப் படுக்கையில் சிறுநீர் கழித்தாராம்; ரஷ்ய புலனாய்வாளர்களிடம் வீடியோ உட்பட ஆதாரங்கள் உள்ளதாக செய்தி - பொய்யான செய்திகள் என ட்ரம்ப் மறுப்பு


Recommended Posts

மொஸ்கோ ஹோட்­ட­லுக்கு பாலியல் தொழி­லா­ளி­களை அழைத்துச் சென்ற டொனால்ட் ட்ரம்ப் படுக்­கையில் சிறுநீர் கழித்­தாராம்; ரஷ்ய புலனாய்வாளர்களிடம் வீடியோ உட்பட ஆதாரங்கள் உள்ளதாக செய்தி - பொய்யான செய்திகள் என ட்ரம்ப் மறுப்பு
 

அமெ­ரிக்க ஜனா­தி­ப­தி­யாக தெரிவு செய்­யப்­பட்­டுள்ள டொனால்ட் ட்ரம்ப் 5 வரு­டங்­க­ளுக்கு முன்னர் ரஷ்ய ஹோட்­ட­­லொன்றில் விலை­மாது ஒரு­வ­ரிடம் பாலியல் உறவு கொண்­ட­தா­கவும் ஹோட்டல் அறையின் படுக்­கையில் சிறுநீர் கழித்­த­தா­கவும் உறு­திப்­ப­டுத்­தப்­ப­டாத தக­வல்கள் வெளி­யா­கி­யமை பர­ப­ரப்பை  ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. 

 

217862017-01-11T214147Z_99288514_RC16FA6

 

'வோட்­டர்ஸ்­போர்ட்கேட்' (Watersportsgate) என இந்த சர்ச்சை குறிப்பிடப்­ப­டு­கி­றது.
டொனால்ட் ட்ரம்பின் பாலியல் நட­வ­டிக்­கைகள் அடங்­கிய வீடியோ ஒளிப்­ப­தி­வுகள் ரஷ்ய புல­னாய்­வா­ளர்­க­ளிடம் இருப்­ப­தா­கவும் டொனால்ட் ட்ரம்ப் குறித்த பல தக­வல்­களை ரஷ்ய புல­னாய்­வுத்­து­றை­யினர் சேக­ரித்து வைத்­துள்­ள­தா­கவும் செய்தி வெளி­யா­கி­யுள்­ளது.

 

டொனால்ட் ட்ரம்பை மிரட்­டு­வ­தற்கு இந்த இர­க­சிய ஆவ­ணங்­களை ரஷ்யா பயன்­ப­டுத்தி வரு­வ­தா­கவும் கூறப்­ப­டு­கி­றது. பிரித்­தா­னிய புல­னாய்வு அமைப்பின் உள­வா­ளி­யான கிறிஸ்­டோபர் டேவிட் ஸ்டீலினால் தொகுக்­கப்­பட்ட ஆவ­ண மொன்றில்,  இது தொடர்­பான விப­ரங்கள் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தாக அமெ­ரிக்க ஊட­கங்கள் தெரி­வித்­துள்­ளன. சி.என்.என். தொலைக்­காட்சி இத்­த­க­வலை முதலில் வெளி­யிட்­டது.

 

மொஸ்கோ ரிட்ஸ் கார்ல்டன் ஹோட்­டலில் தங்­கி­யி­ருந்த டொனால்ட் ட்ரம்ப் பாலியல் தொழி­லா­ளிகள் பலரை ஹோட்டல் அறை­க­ளுக்கு அழைத்துச் சென்­ற­தா­கவும் ஹோட்டல் அறையின் படுக்­கையில் டொனால்ட் ட்ரம்ப் சிறுநீர் கழித்த­தா­கவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

ஆனால், டொனால்ட் ட்ரம்ப், இச்­ செய்­திகள் பொய்­யா­னவை எனக் கூறி­யுள்ளார். தான் ஜனா­தி­ப­தி­யாக தெரி­வு­செய்­யப்­பட்­ட­வுடன் நியூ­யோர்க்கில் நேற்­று­ முன்­தினம் நடை­பெற்ற செய்­தி­யாளர் மாநா­டொன்றில் பங்­கு­பற்­றிய டொனால்ட் ட்ரம்ப், தன்னைப் பற்றி உறு­திப்­ப­டுத்­தப்­ப­டாத செய்திகளை ஊட­கங்கள் வெளி­யி­டு­வ­தாக குற்றம் சுமத்­தினார்.

 

ரஷ்யா உட்­பட வெளி­நா­டு­க­ளுக்கு தான் பயணம் செய்­யும் ­போ­தெல்லாம், ஹோட்டல் அறை­களில் இர­க­சிய கெம­ராக்கள் பொருத்­தப்­பட்­டுள்­ள­னவா என்­பதில் தான் கவ­ன­மாக இருப்­பது வழக்கம் எனவும் டொனால்ட் ட்ரம்ப் தெரி­வித்­துள்ளார்.

 

21786trump1-copy.jpg

 

2013 ஆம் ஆண்டு மொஸ்­கோவில் நடை­பெ­ற்ற மிஸ் யூனிவர்ஸ் அழ­கு­ ராணி போட்­டி­யின்­போது தான் மொஸ்­கோ­வுக்குச் சென்­றி­ருந்­த­தா­கவும் டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். அக் ­கா­லத்தில் மிஸ் யூனிவர்ஸ் போட்­டி­களை நடத்தும் நிறு­வ­னத்தின் உரி­மை­யா­ள­ராக டொனால்ட் ட்ரம்ப் விளங்­கி­யமை குறிப்­பி­டத்­தக்­கது.

 

 'என்னைச் சூழ மெய்ப்­ பா­து­கா­வ­லர்கள் இருப்பர். 'உங்கள் ஹோட்டல் அறை­களில் மற்றும் நீங்கள் எங்கு சென்­றாலும் அங்கே கெம­ராக்கள் இருக்­கக்­கூடும் என நான் அவர்­க­ளுக்கு எப்­போதும் கூறுவேன்' என டொனால்ட் டரம்ப் தெரி­வித்தார்.

 

'கெம­ராக்கள் குறித்து நீங்கள் கவ­ன­மாக இருக்க வேண்டும். இல்­லா­விட்டால் இரவு நேர தொலைக்­காட்­சி­களில் நீங்கள் பார்க்­கப்­ப­டு­வீர்கள்' எனவும் அவர் கூறினார்.

 

சி.என்.என். தொலைக்­காட்சி பொய் செய்தி வெளி­யி­டு­வ­தா­கவும் டொனால்ட் ட்ரம்ப் கூறினார். இச்­செய்­தி­யாளர் மாநாட்டில், சி.என்.என். செய்­தி­யாளர் ஜிம் அக்­கோட்­டா­வுடன் டெனால்ட் ட்ரம்ப் வாக்­கு­வா­தத்தில் ஈடு­பட்டார்.

 

அச் ­செய்­தி­யாளர் கேள்வி கேட்­ப­தற்கும் டொனால்ட் ட்ரம்ப் அனு­ம­திக்க மறுத் தார். 'நீங்கள் போலிச் செய்­திகள்' என அவர் கூறினார்.

 

ரஷ்­யாவும் மறுப்பு


இதே­வேளை, ரஷ்ய ஜனா­தி­பதி மாளி­கையும் டொனால்ட் ட்ரம்ப் தொடர்­பான மேற்­படி செய்­தி­களை மறுத்­துள்­ளது. இது குறித்து ரஷ்ய அதிபர் விளா­டிமிர் புட்­டினின் செய்தித் தொடர்­பாளர் டிமித்ரி பெஸ்காவ் கூறும்­போது, 'இவை அர்த்த மற்ற சோடிக்­கப்­பட்ட தக­வல்கள். ரஷ்யா, அமெ­ரிக்­கா­வுக்கு இடை­யி­லான உறவை சீர்­கு­லைக்கும் முயற்­சி­யாக இத்­த­கைய தக­வல்கள் வெளி­யிடப் பட்­டுள்­ளன' எனக் கூறி­யுள்ளார்.


21786ritz-carlton-hotel-moscow-copy.jpg

 

ஒன்­றுக்கு மேற்­பட்ட செக்ஸ் டேப்கள்


ஆனால், டொனால்ட் ட்ரம்பின் பாலியல் வீடி­யோவை தவிர வேறு பல ஆவ­ணங்­களும் ரஷ்­யா­விடம் இருக்­கக்­கூடும் என அமெ­ரிக்கப் புல­னாய்வு அமைப்­பான சி.ஐ.ஏ. நம்­பு­வ­தாக பி.பி.சி. யின் வோஷிங்டன் செய்­தி­யாளர் போல் வூட் தெரி­வித்­துள்ளார்.

 

டொனால்ட் ட்ரம்பின் செக்ஸ் டேப் குறித்து தெரியவந்ததாக கடந்த ஓகஸ்ட் மாதம், இரண்டாவது தகவல் மூலமொன்றினாலும்  தனக்குத் தெரியவந்ததாக போல்வூட் கூறியுள்ளார்.

 

அத்துடன் டொனால்ட்  ட்ரம்ப் தொடர்பான ஒன்றுக்கு மேற்பட்ட செக்ஸ் டேப்கள் இருப்பதாக சி.ஐ.ஏ. வட்டாரங்கள் தனக்குத் தெரிவித்ததாகவும் போல் வூட் தெரிவித்துள்ளார்.

 

ரஷ்யா ஊடு­ரு­வி­யி­ருக்­கலாம் என ட்ரம்ப் ஒப்­புதல்


இதே­வேளை, அமெ­ரிக்க ஜனா­தி­பதித் தேர்­த­லிலில் தலை­யீடு செய்­வ­தற்கு ரஷ்யா முயற்­சித்­தி­ருக்­கலாம் என டொனால்ட் ட்ரம்ப் முதல் தட­வை­யாக ஒப்­புக்­கொண்­டுள்ளார்.

 

எதிர்­வரும் 20 ஆம் திகதி ஜனா­ப­தி­யாக பத­வி­யேற்­க­வுள்ள டொனால்ட் ட்ரம்பின் நிர்­வா­கத்தில் வெள்ளை மாளிகை அதி­கா­ரி­களின் பிர­தா­னி­யாக பணி­யாற்­ற­வுள்ள பிரைபஸ் இத்தகவலை தெரிவித்துள்ளார்.

- See more at: http://www.metronews.lk/article.php?category=lifestyle&news=21786#sthash.vxoKiQMk.dpuf
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர் ஆள் கொஞ்சம் சிக்கல் சிங்காரம் போல கிடக்குது. மோனிக்காவோட, கிளிண்டன் கூத்தடித்த மாதிரி, உந்தாள், பல மொனிக்காகளோட கூத்து அடியாமல் இருந்தால் போதும்.

வெள்ளமாளிகைக்கு நிறைய நப்பி, டயாப்பர் தேவைப்படும்.

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஆள்,  படுக்கையில்... சிறு நீர்  மட்டுமல்ல. வயித்தாலையும் அடித்து விட்டு,  துடைக்காமல்.... 
"பெர்ஃபூயும்" அடிச்சுட்டு.. கம்மென்று, போற ஆள்.
ஹிலாரி கிளின்ரனை... தோற்கடித்த, அமெரிக்க மக்கள்.. அடுத்த அஞ்சு வருசத்துக்கு, 
மூக்கை.... பொத்திக் கொண்டு இருக்க, வேண்டியதுதான்.    :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரசியலிலை இதெல்லாம் சகஜமப்பா!!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அடுத்த‌ பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லில் ஸ்டாலின் தான் பிர‌த‌மரா போட்டி போடுவார் என்று அமெரிக்கா க‌னடா தொட்டு ப‌ல‌ நாட்டில்  க‌தை அடி ப‌டுது.....................துண்டறிக்கை பார்த்தே த‌மிழ‌ ஒழுங்காய் வாசிக்க‌ தெரியாது............ பிரத‌மர் ஆகினால் ஒட்டு மொத்த‌ உல‌க‌மே அதிரும் ஸ்டாலின் ஜயாவின் பேச்சை கேட்டு  😁😜................ வீட்டில் சீமான் பிள்ளைக‌ளுக்கு க‌ண்டிப்பாய் தூய‌ த‌மிழ் சொல்லிக் கொடுப்பார் அதில் எந்த ச‌ந்தேக‌மும் இல்லை யுவ‌ர் ஆன‌ர்.............ஆட்சிக்கு வ‌ராத‌ ஒருத‌ர‌ 68கேள்வி கேட்ப‌து எந்த‌ வித‌த்தில் ஞாய‌ம்...........ஒரு முறை ஆட்சி சீமான் கைக்கு போன‌ பிற‌க்கு அவ‌ர் த‌மிழை தமிழை வளர்க்கிறாரா அல்ல‌து திராவிட‌த்தை போல் தமிழை அழிக்கிறாரா என்று பின்னைய‌ காலங்களில் விவாதிக்க‌லாம்............இப்ப‌ அவ‌ர் எடுக்கும் அர‌சிய‌லை ப‌ற்றி விவ‌திப்ப‌து வ‌ர‌வேற்க்க‌ த‌க்க‌து...................
    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.