Jump to content

ரட்ணசிறியின் வீடு சம்பந்தனுக்கு கையளிப்பு


Recommended Posts


ரட்ணசிறியின் வீடு சம்பந்தனுக்கு கையளிப்பு
 
 

article_1484279483-1.jpgஎதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கு உத்தியோகபூர்வ இல்லம் வழங்கப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் மறைந்த ரட்ணசிறி விக்ரமநாயக்கவுக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லமே, சம்பந்தனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோரின் தலையீட்டில், பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் ஊடாக இந்த வீடு, சம்பந்தனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

சம்பந்தன், எதிர்க்கட்சித் தலைவராக தெரிவு செய்யப்பட்டு ஒன்றரை வருடங்களின் பின்னரே, அவருக்கு உத்தியோகபூர்வ இல்லமொன்று வழங்கப்படவுள்ளது.

அவர் தனக்கான உத்தியோகபூர்வ இல்லத்தை வழங்குமாறு பல தடவைகள் அரசாங்கத்திடம் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எதிர்க்கட்சித் தலைவரான் இரா.சம்பந்தன், வீடு சின்னமான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

- See more at: http://www.tamilmirror.lk/189703/ரட-ணச-ற-ய-ன-வ-ட-சம-பந-தன-க-க-க-யள-ப-ப-#sthash.pUhWtU0d.dpuf
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2016 இல் எதிர்ப்பார்த்த தீர்வு கிடைச்சிட்டுது. ரட்னசிறி மண்டையப் போடும் வரைக்கும் உந்தத் தீர்வை ஒத்தி வைச்சது ரெம்ப தப்பு. தலீவர் எவ்வளவு கலங்கல் கலங்கிட்டார். புதுவருடமும் அதுவுமா அறிக்கை விட வைச்சிட்டாங்களே.. இத முதலே கொடுத்திருக்கலாம். tw_blush::rolleyes:

Link to comment
Share on other sites

இதுக்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா .........................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நவீனன் said:
ரட்ணசிறியின் வீடு சம்பந்தனுக்கு கையளிப்பு

இது வாழ்க்கையின் ஒரு படி முன்னேற்றம்.........வாழ்க தலைவா...tw_yum:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முன்னர் இந்தியாவில் வீடு தற்போது இலங்கையில், முன்னேற்றம்

Link to comment
Share on other sites

8 hours ago, குமாரசாமி said:

இது வாழ்க்கையின் ஒரு படி முன்னேற்றம்.........வாழ்க தலைவா...tw_yum:

 

7 hours ago, MEERA said:

முன்னர் இந்தியாவில் வீடு தற்போது இலங்கையில், முன்னேற்றம்

இது நல்லா இருக்கே 

சம்பந்தனுக்கு வீடு கிடைச்சபோது துள்ளுற  அதே மனுஷர்தான் மக்களுக்கு வீடு கிடைக்க கூடாதென்றும் துள்ளுகினம்.

ஒரு எதிர்க்கட்சி தலைவருக்கு ஒரு வாசஸ்தலம் இருக்க வேண்டும் என்பது நியதி.

ஆனால் மக்களுக்கு இல்லையே!

வாழ்க தமிழ் 

இலட்சியவாதிகள் தூங்குவதில்லை

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, ஜீவன் சிவா said:

 

இது நல்லா இருக்கே 

சம்பந்தனுக்கு வீடு கிடைச்சபோது துள்ளுற  அதே மனுஷர்தான் மக்களுக்கு வீடு கிடைக்க கூடாதென்றும் துள்ளுகினம்.

ஒரு எதிர்க்கட்சி தலைவருக்கு ஒரு வாசஸ்தலம் இருக்க வேண்டும் என்பது நியதி.

ஆனால் மக்களுக்கு இல்லையே!

வாழ்க தமிழ் 

இலட்சியவாதிகள் தூங்குவதில்லை

எதிர்க் கட்சி தலைவர், பதவி என்பது... கம்பீரமானது.
சபையில்... குறட்டை  விடவும்,  நியூஸ்  பேப்பர்  படிப்பவர்களுக்குமான... பதவி அல்ல.
சம்பந்தனுக்கு... கிடைத்த, இந்த  எ. க. தலைவர் பதவி....  பிச்சை எடுத்ததால்,  கிடைத்த பதவி மட்டுமல்ல,
தமிழர் மீ து.... சிங்களம் நடத்திய, போர்க் குற்ற விசாரணைகளில் இருந்து... 
மகிந்தவும், சிங்களமும்... தப்பிக்க,  சம்பந்தனுக்கு... கொடுத்த பரிசு. 
அதனை.... முதலில் புரிந்தால்,  எந்தக் குழப்பமும், இராது..... ஜீவன்  சிவா. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சம்மந்தன் ஜயா 11/2 வருடம் பொறுமையாய் இருந்து தனக்குரிய வீட்டை பெற்ற மாதிரி தமிழருக்கும் எதாவது பெற்றுத் தருவார். பொறுமையாய் இருங்கள் மக்களே   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த ராஜபக்ச... இன்று நினைத்தாலும்,  மைத்திரி ராஜபக்சவிடம் உள்ள... பாராளுமன்ற உறுப்பினர்களை, 
திரும்ப எடுத்து....  நல்ல பதவிக்கோ, நல்ல இடத்துக்கோ.... வர முடியும். அந்தளவுக்கு.... அவருக்கு  சிங்கள  பா. ஊ. க்களின் செல்வாக்கு உள்ளது.

தமிழர் மீது..... தொடுத்த, போர்க் குற்ற விசாரணையில் தப்பவே.... 
இப்போது... சம்பந்தன், ஸ்ரீ லங்கா  பாராளுமன்றத்தின்... பம்மாத்து, எ.க. தலைவராக,  
நம்ம ஆள்... அங்கை  இருந்து... கொட்டாவி,  விடுகிறார். 
அதுக்கு... பக்க பலமாக,  சும்மும்.... இருக்க,  அவங்க காட்டில், மழை  பெய்யுது.    

போர் பிரச்சினை.... சர்வதேச மட் டத்தில்  நீர்த்துப்  போகும் வரைக்கும்,  இவர்கள் ராஜாவாக  இருப்பார்கள்.
அது, முடிந்த பின்..... ஆனந்த சங்கரி, டக்ளஸ் தேவானந்தா,  முரளிதரன், பிள்ளையான்.... மாதிரி, காணாமல் போய் விடுவார்கள்.

இது... தெரியாமால்,  நாங்கள்... 
சம்பந்தனுக்கு .... "வாழ் நாள் வீரர்"  என்ற... பட்டம்  கொடுக்கவும், ஒரு கோஸ்டி... இருக்கு  எண்டு நினைக்க, உப்பிடியான அரசியல் திரி பக்கம்  வரவே..... ஓங்காளிச்சுக்  கொண்டு,   சத்தி  வருது. :316_new_moon_with_face: tw_astonished:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஜீவன் சிவா said:

 

இது நல்லா இருக்கே 

சம்பந்தனுக்கு வீடு கிடைச்சபோது துள்ளுற  அதே மனுஷர்தான் மக்களுக்கு வீடு கிடைக்க கூடாதென்றும் துள்ளுகினம்.

ஒரு எதிர்க்கட்சி தலைவருக்கு ஒரு வாசஸ்தலம் இருக்க வேண்டும் என்பது நியதி.

ஆனால் மக்களுக்கு இல்லையே!

வாழ்க தமிழ் 

இலட்சியவாதிகள் தூங்குவதில்லை

 

 

ஜீவன் நான் எழுதியதன் அர்த்தம் உங்களுக்கு புரியவில்லை. சம் எப்பவும் தனது விடயத்தில் உசார். 

எந்த இடத்திலும் மக்களுக்கு வீடு கிடைக்க கூடாது என்று நான் எழுதவில்லை, கிடைக்கின்ற வீடு அம்மக்களுக்கு ஏற்றதாக இருக்க வேண்டும்.

பொருத்து வீட்டில் விறகு அடுப்பு எரிக்க / பாவிக்க முடியாது. அப்போ அந்த மக்களால் ஒவ்வொரு மாதமும் எரிவாயு வாங்க முடியுமா அல்லது விறகு அடுப்பு எரிக்க கூடியவாறு இன்னொரு குசினியை கட்ட முடியுமா? மீண்டும் தகர குசினியா????

 

(இலட்சியவாதிகள் தூங்குவதில்லை -  ஒரு விடயத்தை எடுத்தால் அந்த விடயம் முடியும் வரை உறங்குவதில்லை)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஜீவன் சிவா said:

 

இது நல்லா இருக்கே 

சம்பந்தனுக்கு வீடு கிடைச்சபோது துள்ளுற  அதே மனுஷர்தான் மக்களுக்கு வீடு கிடைக்க கூடாதென்றும் துள்ளுகினம்.

ஒரு எதிர்க்கட்சி தலைவருக்கு ஒரு வாசஸ்தலம் இருக்க வேண்டும் என்பது நியதி.

ஆனால் மக்களுக்கு இல்லையே!

வாழ்க தமிழ் 

இலட்சியவாதிகள் தூங்குவதில்லை

அல்லாவுக்கு பகிடியும் தெரியாது வெற்றியும் தெரியாது....tw_yum: tw_yum:

கள்ளர்களும் தூங்குவதில்லை.

Link to comment
Share on other sites

20 hours ago, குமாரசாமி said:

கள்ளர்களும் தூங்குவதில்லை.

உண்மை குமாரசாமி அண்ணை:grin::grin::grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரட்ணசிறி  என்பவர்

தமிழர்கள் சிங்களவர்களைச்சுற்றி கொடியாக இருக்கணும் என்றவர்

சம்பந்தர் ஐயாவும் அந்த இடத்துக்கு வந்துவிட்டார்

சரியான தெரிவு தான்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.