Jump to content

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை நீக்கியே தீருவோம்


Recommended Posts

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை நீக்கியே தீருவோம்

akila-73b2ec4238f45bd6073370e24cee2d1e36089306.jpg

 

பாராளுமன்றத்தை பலப்படுத்தும் முறைமை வரும் என்கிறது ஐ.தே.க.

(எம்.எம்.மின்ஹாஜ்)

நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறை­மையை நாம் நீக்­கியே தீருவோம். தற்­போதே அர­சி­ய­ல­மைப்பின் பிர­காரம் பாரா­ளு­மன்ற முறை­மை‍யை கொண்டு வரு­வ­தற்கு அனைத்து ஏற்­பா­டு­களும் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரி­ய­வசம் தெரி­வித்தார்.

புதிய தேர்தல் முறைமை விவ­கா­ரத்தில் அவ­ச­ரப்­பட்டு எத­னையும் செய்ய முடி­யாது. இது எதிர்­கா­லத்தில் பாதிப்பை ஏற்­ப­டுத்தும் விட­ய­மாகும். எனினும் எல்லை நிர்­ணய அறிக்­கையில் விரைவில் ஐக்­கிய தேசியக் கட்சி பிர­தி­நிதி கைச்­சாத்­தி­டுவார். அதன்­பின்னர் விரைவில் தேர்­த­லுக்கு செல்வோம் என்றும் அவர் குறிப்­பிட்டார்.

ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலை­மை­ய­க­மான சிறி­கொத்­தாவில் நேற்று நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டின் போதே அமைச்சர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அங்கு கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரி­ய­வசம் மேலும் குறிப்­பி­டு­கையில்,

பாரா­ளு­மன்­றத்தில் அண்­மையில் நிலை­பெ­றுதகு அபி­வி­ருத்தி சட்­ட­மூ­லமே சமர்ப்­பிக்­கப்­பட்­டது. ஆனா லும் சிங்­கள பத்­தி­ரி­கை­களில் இதனை அபி­வி­ருத்­திக்­கான விசேட ஏற்­பா­டுகள் சட்­ட­மூ­ல­மாக செய்தி என பிர­சு­ரித்­துள்­ளனர். அதற்கும் இதற்கும் தொடர்பே கிடை­யாது. சிறப்பு அமைச்சு என்று ஒன்று இல்லை. அப்­படி அமைச்சை உரு­வாக்­கு­வ­தற்­கான தேவையும் கிடை­யாது. முன்­னைய ஆட்­சிக்­கா­லத்தின் போது சிறப்பு அமைச்­சர்கள் பலர் இருந்­தனர். ஆனால் நாம் அவ்­வாறு அமைச்சை உரு­வாக்க முனை­ய­வில்லை. அபி­வி­ருத்தி தொடர்­பான விசேட ஏற்­பா­டு­க­ளுக்­கான சட்­ட­மூ­லத்தின் மூலம் நாட்டில் முன்­னெ­டுக்­கப்­படும் அபி­வி­ருத்­தியை துரி­த­ப­டுத்­து­வ­தற்கே திட்­ட­மிட்­டுள்ளோம்.

அத்­துடன் புதிய தேர்தல் முறைமை தொடர்­பான எல்லை நிர்­ணய அறிக்­கையில் ஐக்­கிய தேசியக் கட்சி பிர­தி­நிதி இது­வரை கைச்­சாத்­தி­ட­வில்லை என்ற குற்­றச்­சாட்டு பர­வ­லாக முன்­வைக்­கப்­ப­டு­கின்­றது. தேர்தல் முறைமை என்­பது சாதா­ரண விட­ய­மல்ல. எதிர்­கா­லத்தில் பாதிப்பை ஏற்­ப­டுத்த கூடி­யது. ஆகையால் அனை­வ­ருக்கும் ஏற்­பு­டை­ய­தான தேர்தல் முறை­மையே கொண்டு வரப்­பட வேண்டும். இந்த விவ­கா­ரத்தில் அவ­ச­ர­மாக செயற்­பட வேண்­டி­ய­தில்லை. இருந்­த­போ­திலும் எல்லை நிர்­ணய அறிக்­கையில் ஐக்­கிய தேசியக் கட்சி பிர­தி­நிதி விரைவில் கைச்­சாத்­தி­டுவார். அத்­துடன் அறிக்­கையில் கைச்­சாத்­திட்டு உடன் தேர்­த­லுக்கு செல்வோம்.

சுதந்­திரக் கட்­சியின் மத்­திய குழுவில் 2020 ஆம் ஆண்டு ஜனா­தி­பதி தேர்­தலில் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை நிய­மித்­துள்­ளனர். அது சுதந்­திரக் கட்­சி­யி­னரின் தீர்­மா­ன­மாகும். ஆனாலும் நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறை­மையை நீக்­கியே தீருவோம். ஜனா­தி­பதி முறை­மையை கொண்டு வந்­தது ஐக்­கிய தேசியக் கட்­சி­யாகும். எனினும் அதன்­பா­திப்­பு­களை எமக்கு நன்கு தெரியும்.

இதன்­கா­ர­ண­மாக புதிய அர­சி­ய­ல­மைப்பில் ஜனா­தி­பதி முறை­மையை நீக்­கி­யுள்ளோம். பாரா­ளு­மன்ற முறை­மையை அறி­மு­கப்­ப­டுத்­தி­யுள்ளோம் என்றார்.

இதன்போது ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பும் போது,

கேள்வி ஜனாதிபதி முறைமை தொடர்ந்து வந்தால் ஐக்கிய தேசியக் கட்சி பொது வேட்பாளரையா நியமனம் செய்வீர்கள்?

பதில் அதனை இப்போதைக்கு தீர்மானிக்க முடியாது. அவ்வாறு வந்தால் கட்சியின் செயற்குழுவே தீர்மானிக்கும் என்றார்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-01-13#page-1

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.