Jump to content

அனுராதபுர சிறைசாலையில் அவஸ்தைபடும் அரசியல்கைதி


Recommended Posts

அனுராதபுர சிறைசாலையில் அவஸ்தைபடும் அரசியல்கைதி: குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-

அனுராதபுர விமானபடை தாக்குதல் வழக்கு தொடர்பில் சந்தேகத்தின்பேரில் பயங்கரவாத சட்டத்தின்கீழ் அனுராதபுர சிறைசாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதி ஒருவரை சிறைக்குள்ளே சிறைவைத்து இம்சைபடுத்துவதாக தெரிவிக்கபடுகிறது.

கடந்த 2009 ஆண்டு பயங்கரவாத சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டுள்ள யாழ்ப்பாணம் சுன்னாகத்தை சேர்ந்த ராசவல்லவன் என்பவருக்கு எதிராக கடந்த 2008 ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அனுராதபுர விமானபடை தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புள்ளதாக தெரிவித்து அனுராதபுர விசேட மேல் நீதிமன்றில் வழக்கு நடைபெற்று வருக்கின்றது.  இந்தநிலையில் குறித்த அரசியல் கைதி சிறையில் இருந்து தப்பிச்செல்ல திட்டம் இட்டு இருப்பதாக போலி குற்றசாட்டை முன்வைத்து சாதாரணமாக ஒரு கைதிக்கு இருக்ககூடிய அனைத்து  உரிமைகளும்  அவரிடமிருந்து பறிக்கப்பட்டு கடந்த மூன்று வருடங்களாக சிறைசாலைகுள்ளே பிரத்தியோகமாக அமைக்கப்பட பூட்டிய சிறிய அறைக்குள் தனிமையில் சிறைவைக்கப்பட்டுள்ளதாக அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

அதுதவிர நீண்டகாலமாக பெற்றோர் உறவினரை பாக்காமல் இருந்த தமது மகனை உறவினர் சந்திப்புக்கு யாழ்ப்பாண சிறைசாலைக்கு கொண்டுவந்த போதும் யாழ்ப்பாண சிறைசாலை நிர்வாகத்தினர் அவரை ஏற்காது திருப்பி அனுப்பயுள்ளனர். இது தொடர்பில் யாழ் மனித உருமை அலுவலகத்திடமும் சிறைசாலை ஆணையாளரிடமும் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்திடமும் பெற்றோர் முறை இட்டபோதும் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்று பெற்றோர் விசனம் தெரிவிக்கின்றனர்.

 மூன்று வருடங்களுக்கு மேலாக குறுகிய அறைக்குள் அடைத்துவைக்கப்பட்டுள்ள தனது மகன், உடல் உள ரீதியாக பாரிய தாக்கம் அடைந்துள்ளதாகவும் பெற்றோர் கலை வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை  வயது முதிர்ந்த எம்மால் அடிக்கடி அனுராதபுர சிறைசாலைக்கு சென்று பார்க்கமுடியாதுள்ளது அதற்கான வசதி வாய்ப்புகளும் எம்மிடம் இல்லை என்றும் வேதனை வெளியிட்டுள்ள பெற்றோர்,  நீண்டகாலம் சிறை வைக்கப்படிருக்கும் தமது பிள்ளை நல்லாட்சிலேனும் விடுதலை பெற்று வீடு வருவான் என்று எண்ணிய தமக்கு பெரு ஏமாற்றமே என கூறியுள்ளனர்.  இத்தகைய  கொடுமையான செயற்பாடுகள் திட்டம் இட்ட பழிவாங்கலான செயற்பாடு என கூறும் அவர்கள் இவ்விடயத்தில் சம்மந்தப்பட்ட துறையினர் துரிதகவனம் செலுத்தி உடனடி தீர்வினை எட்டவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

http://globaltamilnews.net/archives/13568

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையிலேயே இவைகள் தான் கவலை தரும் செய்திகள்.


சம்பந்தன் கொம்பனி இன்னும் பேப்பர் படித்துக்கொண்டா இருக்கிறார்கள்.....இதுக்கை அப்பப்ப எழும்பி நிண்டு மௌன அஞ்சலி வேறை...tw_angry:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.