Jump to content

சோமாலியா குழந்தைகளுக்கு சொத்தில் பாதி: ஏ.ஆர்.ரஹ்மான்! மாஷா அல்லாஹ்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சோமாலியா குழந்தைகளுக்கு சொத்தில் பாதி: ஏ.ஆர்.ரஹ்மான்! மாஷா அல்லாஹ்!

 
Rahman_liveday.jpg

ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான், ஒரே நேரத்தில் இரண்டு ஆஸ்கர் அவார்டு வாங்கிய தமிழன். இதோ மீண்டும் 2016&க்கான ஆஸ்கர் விருதும் ஓ.கே. ஆகிவிட்டது.

தமிழ் படங்களுக்கு இசை அமைப்பதை குறைத்துக் கொண்ட ரஹ்மான் ஹாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அங்கு அவரது சம்பளம் பல மில்லியன் கோடிகள்.

எங்கு எந்த நாட்டில் இருந்தாலும், ஐந்து வேளை தொழுகையை கட்டாயமாக நிறைவேற்றுவார். அதே போல எந்த நாட்டில் இருந்தாலும் ரம்ஜான் நோன்பு கட்டாயமாக இருந்து விடுவார்.

தான தர்மம் செய்வதிலும் தயாள குணம் கொண்டவர் ரஹ்மான். ஒரு இசை முயற்சிக்காக சோமாலியா சென்றார் ரஹ்மான். அங்கு 3000 ஆண்டு பழமையான இசைக் கருவிகள் புழக்கத்தில் இருந்து வருகிறது.

மூன்று வருடங்கள் பழகினால் மட்டுமே அந்த கருவியை வாசிக்க முடியும். ரஹ்மான் அந்த கருவியை பார்த்து ஒரு டஜன் வாங்கிக் கொண்டார். விலைபேசி வாங்கியும் கொண்டார்.

ஆனால், பரிதாபம் 3000 வருட பாரம்பரிய இசைக்கருவி சில நூறுகளே…! பார்த்தார் ரஹ்மான். இந்த இசைக்கருவிகளுக்கு சில நூறுகள் விலை என்பது அவமானம். இது விலைமதிப்பில்லாத கருவி.

வறுமை, பசி, பட்டினியால் வாடும் சோமாலியா குழந்தைகள் நலனுக்காக பல கோடிகளை நன்கொடையாக கொடுத்து விட்டார். ஆடிப்போனது சோமாலியா அரசு. அவர்களால் நம்பவே முடியவில்லை.

சோமாலியா பிரதமர் அழுதே விட்டார். சட்டென்று ரஹ்மான் கால்களில் விழப்போனார். பதறிப் போய் தடுத்த ஏ.ஆர்.ரஹ்மான் ஒரே ஒரு வார்த்தை சொன்னார்.

எல்லாப் புகழும் இறைவனுக்கே…!

https://liveday.in/dont-miss-headline-news-today/rahman-donor/

இது தான் இசுலாமியத்தின் கொடுமை
இனத்தை மறந்து
மதத்தை பீடித்துக்கொள்ளும்.

இத்தனை லட்சம் சொந்த இன மக்கள்அழிந்தபோதும்
சொந்த மொழி பேசும் இத்தனை லட்சம் மக்கள் பட்டினி வாழ்வை எதிர் கொண்டபோதும் வராத கருணை இசுலாமிய நாடுமீது வருகிறது...

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழக் குழந்தைகள் மீது கருணை இல்லா விட்டலாவது பரவாயில்லை. தமிழக் குழந்தைகள் மீதும் இல்லை என்பது தான் வேதனை. பிழைக்க மட்டும் தமிழ்நாடு தேவை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

ஈழக் குழந்தைகள் மீது கருணை இல்லா விட்டலாவது பரவாயில்லை. தமிழக் குழந்தைகள் மீதும் இல்லை என்பது தான் வேதனை. பிழைக்க மட்டும் தமிழ்நாடு தேவை

சொந்த நாட்டய் உயர்த்துவதில் தவறு இல்லை.
வாழ்க்கைக்கே அல்லலுறுபவர்களை தூக்கி விடுவதிலும் தவறு இல்லை.

ஈழத்தை பொறுத்தவரை அங்கே உணவனுக்கு கஷடப்பட வேண்டிய தேவை யாருக்கும் இல்லை.
போதிய அளவில் எல்லாம் இருக்கிறது ........ அதை கொள்ளை அடிப்பதால்த்தான் பிரச்சனை.
ஒவ்வரு கோவிலிலும் எவளவை கொட்டுகிறோம் ஒரு நாளைக்கு.
அதையே ஒரு ஏழையின் வாயில் கொட்டினால் எவ்ளவு புண்ணியம் கிடைக்கும்??

தமிழகம் கேரளா இரண்டும் இப்போ இந்தியாவிலேயே பணக்கார மாநிலங்கள் 
கூலி வேலை செய்ய தமிழகத்தில் ஆட்கள் இல்லை ........... உத்திரபிரதேசம் மகாராஷ்ட்டிரா போன்ற 
இடங்களில் இருக்கு ஏழைகள் இப்போ தமிழகத்திட்கு கூலி வேலை தேடி வருகிறார்கள்.

ஈழத்திலும் தமிழகத்திலும் ஏழைகள் இருக்கிறார்கள் ....
அவர்களை நேரில் கண்டு ஏதும் கொடுத்தால் தவிர .... வேறு ஒரு மாதிரியியும் அவர்களிடம் 
உதவிகளை சேர்க்க முடியாது.
இடையில் இருப்பவன் கொள்ளை அடிப்பான் ..... லூசு முத்தினவன் கோவில் கட்டுவான்.

சோமாலியாவின் நிலைமை வேறு விதமானது .....
ரகுமானின் செயல் மிகவும் பாராடடத்தக்கது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
ஈழத்தில் கிழக்கு மாகணத்தில் எவ்வளவு சனம் சாப்பாட்டுக்கு வழியில்லாமல் கஸ்டப்படுவது மருதருக்கு தெரிந்திருக்க நியாயமில்லைத் தான்...அவர்களுக்கு ரகுமானின் உதவி தேவை இல்லை...ஆனால் தமிழகத்தில் எவ்வளவு சனம் பட்டினியால் வாடுது அந்த சனங்களுக்காவது ரகுமான் உதவி இருக்கலாம்.
தமிழகத்திற்கு வடக்கில் இருந்து கூலித் தொழிலாளார்கள் வரக் காரணம் அவர்கள் குறைந்த கூலியில் வேலை செய்வார்கள் என்பதால் தானே தவிர தமிழகத்தில் ஒருத்தரும் வறுமையில் இல்லையில் என்பது சரியான கருத்தல்ல.
குறைந்தபட்சம் இந்தியாவில் கஸ்டப்படுபவர்களுக்காவது உதவி இருக்கலாம்...ஆபிரிக்காரருக்கு உதவ போனதிற்கு காரணம் உலகலாவீய பொப்பிலாரிட்டியே தவிர வேறோன்டும் இல்லை
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, விசுகு said:

சோமாலியா குழந்தைகளுக்கு சொத்தில் பாதி: ஏ.ஆர்.ரஹ்மான்! மாஷா அல்லாஹ்!

இவர் முதல் ஒஸ்கார் மெடல் எடுக்கேக்கையே சொன்னனான்...

இவர் சரியில்லாதவர் எண்டு.......அப்ப ஒரு சில சனம் சொல்லிச்சு ஹொலிவூட்டிலை முதன் முதல் தமிழ் கதைச்ச பெருமை இவரைத்தான் சாரும் எண்டு..... சொன்ன வசனம் "எல்லாப்புகளும் அல்லாவுக்கே" எண்டது வேறை விசயம்.......


ஐரோப்பாவிலை ஜேர்மனியிலை எல்லாம் இந்திய குழந்தைகளுக்கு சாப்பிட காசு எண்டு பேப்பரிலையும் ரிவியள்லையும் காசு சேர்க்கிறாங்கள்.... இவர் என்னடாவெண்டால் தன்ரை சொத்திலை பாதியெண்டு பந்தாகாட்டி அடுத்த ஒஸ்காருக்கு அலுவல் பாக்கிறார் பந்தா சகுனி.....

சோமாலியாவுக்கு ஐரோப்பாவும் அமெரிக்காவும் உதவிசெய்து செய்து  களைச்சுப்போச்சுது....இப்ப புதிசாய் வந்துட்டார் சோமண்ணை ஏ,ஆர். ரகுமான்.

மதம் மாறிய இவருக்கு நான் சொல்வது:- மதம் என்பது உன் மனம். உதவி என்பது எந்தமதத்திலிருந்தும் செய்யலாம்.
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தன் நாட்டிலேயே குழந்தை தொழிளாளர் முதல் அடிப்படைத் தேவைகளை தன்னும் பூர்த்தி செய்ய இயலாது இருக்கிறார்கள்..அப்படியிருக்கையில் இவரது செயலை நினைக்கும் போது மன வருத்தமாவேயுள்ளது..ஒரு விதத்தில் அடுத்த கட்ட பொப்பிலாருற்றிக்குரிய நகர்வு..

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, யாயினி said:

தன் நாட்டிலேயே குழந்தை தொழிளாளர் முதல் அடிப்படைத் தேவைகளை தன்னும் பூர்த்தி செய்ய இயலாது இருக்கிறார்கள்..அப்படியிருக்கையில் இவரது செயலை நினைக்கும் போது மன வருத்தமாவேயுள்ளது..ஒரு விதத்தில் அடுத்த கட்ட பொப்பிலாருற்றிக்குரிய நகர்வு..

 

 சரியான கருத்தை சொல்லியிருக்கிறீர்கள் சகோதரி.  :322_star: :322_star::322_star::323_star2:

 

Link to comment
Share on other sites

வருகின்ற மாதம் ரகுமான் ரொரன்டோவுக்கு அழைக்கப்பட்டு அவரின் சேவையை பாராட்டி ஒரு இசை நிகழ்ச்சி எம்மவரால் நடாத்தப்படுகிறது. ரகுமானின் இசையில் பாடிய வட அமெரிக்காவில் வாழும் பாடகர்களும் கனேடிய இளம்பாடகர்களும் பாட உள்ளனர். நுழைவுக்கட்டணம் $40 ம் அதற்கு மேலும். சேர்க்கப்படும் பணம் (செலவுகள் தவிர்த்து) ரகுமானின் பெயரில் இயங்கும் தொண்டு நிறுவனத்துக்கு வழங்கப்படுமாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு வெம்ப்ளி அரீனாவில் சென்ற செப்டம்பர் மாதம் நடைபெறுவதாக இருந்த இவரது இசைநிகழ்ச்சி மார்ச் 24 ம் திகதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

f3831e3bb35b00dc6846e3a2d916107a.jpg

"இந்தியா" என்றால் வட இந்தியர்கள் கட்டமைக்க நினைப்பது மேலே காட்டப்பட்டுள்ள விம்பத்தைத்தான். அண்மையில் பண மதிப்பு இல்லாமல் செய்ததில் கூட இந்த சிந்தனை இருந்தது. ஏழைகள், தெருவோர வணிகர்கள் குறித்து எதுவித கவலையும் அதில் இருக்கவில்லை.

இப்போது ஏ.ஆர். ரகுமான் செய்வதும் இதைத்தான். சோமாலியாவுக்கு உதவி வழங்கி மேலே உள்ள Bollywood சிந்தனையை பிரதிபலித்திருக்கிறார். ஆனால் நிதர்சனம் வேறு விதமாக உள்ளது.

56f3a1f1858c0db5204bf238_750xNxrural-pov

இத்தகைய போலி மேட்டுக்குடி சிந்தனைக்கு எதிர்வினையாகத்தான் Slumdog Millionaire என்கிற படத்தை இங்கிலாந்துக்காரர் எடுத்து வெளியிட்டார்கள். அதற்கு Oscar விருதும் கொடுத்தாகள். tw_blush: தெரியாத்தனமாக ஏ.ஆர். ரகுமானும் மாட்டிக்கொண்டார். மேட்டுக்குடி அமிதாப் பச்சன் இப்படத்தைக் கண்டித்தார். இப்போது ஏ.ஆர். ரகுமானும் தனது தவறை திருத்திக்கொண்டு மேட்டுக்குடி வழியில் பயணிக்கிறார். :D:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நாங்கள் மேலைத்தேச நாடுகளில் மத்தியதர வர்க்கம் ஆனால் இலங்கை போன்ற 3ஆம் உலக நாடுகளுக்கு சென்றால் உயர்தட்டு வர்க்கம், அங்கே விடுமுறைகாலத்தில் அங்கேயுள்ள மக்களால் பெறமுடியாத பொருள், சேவைகளை பெற்றுகொள்ளலாம், மேலும் வெளிநாட்டில் இருந்துவிட்டு இந்த மாதிரி 3ஆம் உலக நாடுகளில் குடியேறும்போது எமது பணத்தின் மூலம் பொருள்கள், சேவைகளை அதிகமாக பெற்று வசதியாக வாழலாம், இந்த சொந்த அனுபவம் ஒட்டு மொத்த இலங்கை மக்களின் நாளாந்த வாழ்வு பிரதிபலிக்குமா என்பது தெரியவில்லை.
    • கடலை போட்டவரிடம் பால் கேட்டிருக்கலாமே! எருமைப் பாலாவது கிடைத்திருக்கும்😜
    • பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் 29 MAR, 2024 | 02:32 PM   இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளான இன்றைய தினம் (29) பெரிய வெள்ளியாக உலகெங்கும் அனுஷ்டிக்கப்படுகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் இன்று பெரிய வெள்ளியை முன்னிட்டு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் திருச்சிலுவை பாதை நிகழ்வுகள் பக்திபூர்வமாக நடைபெற்றன. மனுக்குலத்தின் விடியலுக்காகவும் உலக மாந்தர்களின் மீட்புக்காகவும் அன்று கல்வாரியில் துன்பங்களை அனுபவித்து சிலுவைச் சாவினை ஏற்றுக்கொண்ட இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளின் வெள்ளியான இன்று மட்டக்களப்பில் உள்ள பல தேவாலயங்களில் சிலுவைப் பாதை நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.    தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயம்  மட்டக்களப்பு தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன. இந்த சிலுவைப் பாதை ஊர்வலம் குருக்கள்மடம் தூய அசீசியார் ஆலயத்தில் இருந்து செட்டியாளயம், மாங்காடு, தேற்றாத்தீவு ஆகிய ஊர்களின் பிரதான வீதியூடாக தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தை வந்தடைந்தது. புனித யூதாததேயு திருத்தலத்தின் அருட்தந்தையின் தலைமையில் நடைபெற்ற இந்த சிலுவைப் பாதை நிகழ்வில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். புளியந்தீவு புனித மரியாள் பேராலயம்  மட்டக்களப்பு மாவட்டத்துக்கான பிரதான சிலுவைப்பாதை நிகழ்வு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தின் பங்குத்தந்தை அருட்பணி ஜே.நிக்ஸன் அடிகளார் தலைமையில் நடைபெற்றது.  இந்த சிலுவைப் பாதை புனித மரியாள் பேராலயத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு, மத்திய வீதி வழியாக சென்று, வைத்தியசாலை வீதியை அடைந்து, மீண்டும் பேராலயத்தை  அடைந்தது.  இந்த சிலுவைப்பாதையில் அதிகளவிலான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பக்திபூர்வமாக சிலுவை சுமந்து வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினத்தை நினைவுகூரும் உயிர்த்த ஞாயிறு தேவாராதனை ஞாயிற்றுக்கிழமை (31) இடம்பெறவுள்ளது.  https://www.virakesari.lk/article/179968
    • அபிவிருத்தி லொத்தர் சபை அதன் 40 வருட வரலாற்றில் 2023 இல் அதிகூடிய இலாபத்தை பதிவு செய்துள்ளது. இதன்படி, அபிவிருத்தி லொத்தர் சபையானது 2022-2023 ஆம் ஆண்டில் 32% இலாபமீட்டி புதிய சாதனையை படைத்துள்ளது, இது 2022 இல் பெற்ற இலாபத்தின் இருமடங்காகும். இதன்டபடி, ஜனாதிபதி நிதியத்திற்கு அபிவிருத்தி லொத்தர் சபையினால் வழங்கப்பட்ட பங்களிப்பு கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது 13 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 3,622,506,725 ரூபா 03 பில்லியன் இலக்கை கடந்துள்ளது. அதே சமயம், அரசாங்கத்திற்கான பங்களிப்பை 6% உயர்த்தி 5,193,833,721 ரூபாவினை வழங்கியுள்ளது. அவிருத்தி லொத்தர் சபையின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அஜித் குணரத்ன நாரங்கல இது குறித்து கருத்து தெரிவிக்கையில், சவாலான காலப்பகுதியில் நாட்டின் பொருளாதாரத்தின் எதிர்மறையான விளைவுகளை குறைக்க அபிவிருத்தி லொத்தர் சபை கையாண்ட உத்திகளால் மிகக் குறுகிய காலத்தில் வருமான அதிகரிக்க வழி செய்துள்ளது. வழமையான லொத்தர் சீட்டுகள் மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விசேட சீட்டுகளுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையை அதிகரிக்க அபிவிருத்தி லொத்தர் சபை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்நாட்டு பயனாளிகளுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக லொத்தர் சீட்டுகளை அறிமுகப்படுத்தும் நடவடிக்கையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தலைவர் தெரிவித்தார். அபிவிருத்தி லொத்தர் சபையின் வருமானத்தில் 50% இந்த நாட்டில் கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக ஒதுக்கப்படுவதாகவும் அவர் அவர் மேலும் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/297543
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.