Jump to content

' ராஜீவ் கொலையாளிகளை சோனியா அறிவார்!' -சந்திராசாமி புதிரும் ரங்கநாத்தின் மரணமும்


Recommended Posts

' ராஜீவ் கொலையாளிகளை சோனியா அறிவார்!'  -சந்திராசாமி புதிரும் ரங்கநாத்தின் மரணமும் 

rajiv_assa_14280.jpg

ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு விடுதலையான பெங்களூரு ரங்கநாத், இன்று காலை இறந்துவிட்டார். ' ராஜீவ் படுகொலையின் மர்மங்களை முழுமையாக அறிந்தவர். மிகுந்த வறுமைச் சூழலில்தான் இறந்து போனார்' என வேதனைப்படுகின்றனர் தமிழ் உணர்வாளர்கள். 

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் மரணம் தொடர்பான வழக்கு விவரங்களை அறிந்து வைத்திருப்பவர்களுக்கு பெங்களூரு ரங்கநாத்தை நன்றாகவே தெரியும். ஸ்ரீபெரும்புதூர் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ராஜீவ்காந்தியை படுகொலை செய்துவிட்டு, தப்பியோடிய சிவராசன், சுபா உள்ளிட்டவர்கள் ரங்கநாத்தின் வீட்டில்தான் அடைக்கலம் ஆனார்கள். நண்பர் ஒருவரின் வேண்டுகோளுக்காக உதவி செய்யப் போன ரங்கநாத்துக்குக் கிடைத்தது எல்லாம், ஏழு ஆண்டு சிறைத் தண்டனையும் உடலை வாட்டி வதைத்த நோய்களும்தான். ராஜீவ் வழக்கில் 26-வது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்ட ரங்கநாத், தூக்கு தண்டனைக் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர். பின்னர் மேல்முறையீட்டில் விடுதலை செய்யப்பட்டார். கொலைக்குப் பிறகான நாட்களை விரிவாகவே மேடைகளில் பேசி வந்தார் ரங்கநாத்.

ranga1_14451.jpg"பெங்களூருவில் பசவண்ணன் குடியில்தான் என்னுடைய வீடு இருந்தது. அப்போது புலிகள் இயக்கத்துக்கு ஆதரவாக நண்பர் ராஜன் செயல்பட்டு வந்தார். ராஜீவ்காந்தி படுகொலை சம்பவம் முடிந்த பிறகு, 1991-ம் ஆண்டு ஜூலை மாதம் 30-ம் தேதி, 'எனது நண்பர்களுக்கு வீடு வேண்டும்' என ராஜன் கேட்டார். நானும் சம்மதித்தேன். மறுநாள், ' சி.பி.ஐ நெருக்கடி அதிகமாகியிருக்கிறது. உடனே வீடு வேண்டும்' என அவசரப்படுத்தினார். டிரைவர் கீர்த்தி, சுரேஷ் மாஸ்டர், ஒற்றைக்கண் சிவராசன், சுபா என மொத்தம் 6 பேர் என் வீட்டுக்கு வந்தனர். அந்த நேரத்தில், இலங்கையில் நடந்த சண்டையில் அடிபட்ட 13 பேர் முத்தத்தி கோயில் காட்டுப் பகுதியில் ரகசிய சிகிச்சை பெற்று வந்தனர். வீரப்பனைத் தேடி காட்டுக்குள் அலைந்த அதிரடிப்படையின் கண்களில் இவர்கள் சிக்கிவிட்டார்கள். அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில், என் வீட்டை போலீஸார் நெருங்கிவிட்டார்கள். இதைக் கேள்விப்பட்டவுடன், கோணன்னகுண்ட இடத்துக்கு வீடு மாறினோம். அவர்களோடு நானும் சென்றதுதான் மிகப் பெரிய தவறு" என விவரிக்கும் ரங்கநாத், 

கொலையாளிகளான சிவராசன் தலைக்கு பத்து லட்சமும் சுபா தலைக்கு ஐந்து லட்சமும் விலை நிர்ணயித்து இருந்தார்கள். அன்று ஆகஸ்ட் 17-ம் தேதி. வெளியில் சென்று விட்டு, வீட்டுக்கு வந்தபோது அதிரடிப்படை வீரர்கள் என் வீட்டை வளைத்திருந்தனர். சி.பி.ஐ இயக்குநர் கார்த்திகேயனும் அங்கிருந்தார். சிவராசனிடம் பேச்சுவார்த்தை நடத்த என்னை அழைத்துச் சென்றனர். பிறகு, என்ன உத்தரவு வந்ததோ, என் வீட்டை நோக்கி துப்பாக்கியால் சுட ஆரம்பித்துவிட்டனர். சிவராசன் குப்பியைக் கடித்தபடி நெற்றிப் பொட்டில் அவராகவே சுட்டுக் கொண்டு இறந்து கிடந்ததார். சுபா, கீர்த்தி, நேரு, சுரேஷ் மாஸ்டர் உள்பட அனைவரும் சயனைடு சாப்பிட்டு இறந்துபோனார்கள். அதன்பிறகு, என்னைக் குற்றவாளியாகச் சித்திரிக்க என் மனைவியையே எனக்கு எதிராக சாட்சி சொல்ல வைத்தனர். சிவராசன், சுபா ஆகியோர் என்னுடன் தங்கியிருந்தபோது நடந்த பல விஷயங்கள் யாருக்கும் தெரியாது. இப்போது உள்ளது போல தொலைத்தொடர்பு வசதிகள் அப்போது கிடையாது. எஸ்.டி.டி. போன் பூத்துகளும் குறைவாகத்தான் இருந்தன. எம்.ஜி. ரோட்டில் உள்ள காமதேனு ஓட்டலுக்கு போன் பேசுவதற்குச் செல்வார் சிவராசன். நான்கு முறை அவர்களோடு சென்றிருக்கிறேன். ' சந்திராசாமிக்குத்தான் போன் பேசுகிறோம். அவருடன் தமிழில்தான் பேசுவோம். அதை அங்குள்ள ஒருவர் மொழி பெயர்த்துச் சொல்வார். கொலை வெற்றிகரமாக முடிந்ததும் நேபாளம் வழியாக நாங்கள் தப்பிச் செல்ல அவர்தான் வழி உருவாக்கித் தரப் போகிறார்' என்று சொன்னார்கள். 

chandraswami_14182.JPGசிவராசனோ, ' ஹரித்துவாரில் உள்ள சந்திராசாமியின் ஆசிரமத்தில் ராஜீவ்காந்தியைக் கொன்ற பெல்ட் பாம், துப்பாக்கி ஆகியவற்றை வைத்து மிகப் பெரிய யாகமே நடந்தது. ‘நீங்கள் தமிழ்நாட்டுக்குப் போகும் காரியம் பெரும் வெற்றி பெறும்' என வாழ்த்தினார் சந்திராசாமி என்றார். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. இதை அப்படியே கார்த்திகேயனிடம் கூறினேன். அதிர்ச்சியோடு என்னைப் பார்த்தவர், ‘சந்திராசாமி தொடர்பு பற்றி உனக்கு எப்படித் தகவல் தெரியும்?' என மிரட்டியவர், கொஞ்சமும் தாமதிக்காமல் பேப்பர் வெயிட்டை எடுத்து என் வாயில் பலமாக அடித்தார். அதில் ஒரு பல் உடைந்துவிட்டது. லத்தியை எடுத்து இரண்டு கால்களையும் அடித்து நொறுக்கினார். என் மனைவியையே எனக்கு எதிராக வாக்குமூலம் கொடுக்க வைத்தார்கள். 98-ம் ஆண்டு மார்ச் மாதம் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. மேல்முறையீட்டில் உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டேன். 'என்னிடம் பேசுவதற்கு சோனியா காந்தி விரும்புகிறார்' என்ற தகவலைக் கேள்விப்பட்டு, தமிழக காங்கிரஸ் கட்சி பிரமுகர் மூலம் டெல்லி சென்றேன். அவர் என்னிடம் கேட்ட ஏழு கேள்விகளுக்கும் விரிவாக பதில் அளித்தேன். அருகில் இருந்த பிங்கி என்பவர் மொழிபெயர்த்தார். அதிர்ச்சியோடு நான் பேசுவதை கவனித்துக் கொண்டிருந்தார் சோனியா. நான் குறிப்பிட்டுச் சொன்னவர்கள் மீது, எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அமைதியாகிவிட்டார். உண்மையை அறிந்தவன் என்ற அடிப்படையில், சிறைவாசத்தை அனுபவித்தேன்" எனக் குமுறலோடு பேசியிருந்தார் ரங்கநாத். அவருடைய வாக்குமூலம் அரசியல் அரங்கில் அதிர்வலைகளைக் கிளப்பினாலும், கால ஓட்டத்தில் கரைந்து போனது. 

" ராஜீவ் கொலை வழக்கில் சதித் தீட்டியதாக ரங்கநாத் மீது வழக்குப் பதியப்பட்டது. இதற்கு ஆதாரமாக அவர் மனைவி மிருதுளா தமிழில் எழுதிய ஐந்து பக்க கடிதத்தை தடா நீதிமன்றத்தில் சி.பி.ஐ அதிகாரிகள் சமர்ப்பித்தனர். கன்னட மொழி பேசும் அவர் மனைவிக்கு தமிழ் எழுதத் தெரியாது என்ற உண்மை, நீதிமன்றத்தில் எடுபடவில்லை. இந்த வழக்கில் சந்திராசாமிக்கு உள்ள தொடர்புகளைப் பற்றி விசாரணையின்போது, தெளிவாக எடுத்துச் சொன்னவர் அவர். அதற்கான அவர் அனுபவித்த சித்ரவதைகள் கொஞ்சம் நஞ்சமல்ல. பின்னாளில் வழக்கில் இருந்து விடுதலையான பிறகு, ' உண்மைக் குற்றவாளிகளை வெளியில் காட்டாமல், சதி வேலைகளுக்கு கார்த்திகேயனும் உடந்தையாக இருந்தார்' என்பதை பல மேடைகளில் பேசினார். சோனியா காந்தியை நேரில் சந்தித்தும் விளக்கினார். இன்று வரையில் ரங்கநாத்தின் குற்றச்சாட்டுகளுக்கு எந்தப் பதிலையும் கார்த்திகேயன் அளிக்கவில்லை. இந்த வழக்கில் உள்ள சர்வதேச சதிப் பின்னலை சோனியா அறிவார். 'தன்னுடைய பிள்ளைகளுக்கு எந்தப் பாதிப்பும் வந்துவிடக் கூடாது' என்பதற்காகத்தான் அமைதியாக இருக்கிறார். ஏழு ஆண்டு சிறைத் தண்டனையின் விளைவாக பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாகியிருந்தார் ரங்கநாத். சிறுநீரக செயலிழப்பு காரணமாக கடந்த ஒரு மாதமாக அவரால் செயல்பட முடியவில்லை. வழக்குக்கு சம்பந்தமே இல்லாதவருக்கு வாழ்நாள் முழுக்க தண்டனையைக் கொடுத்தது சி.பி.ஐ. ராஜீவ் மரணத்தோடு குழிதோண்டிப் புதைக்கப்பட்ட உண்மைகளை இதுநாள் வரையில் தாங்கி வந்த, ரங்கநாத்தும் மறைந்துவிட்டார். வேறு என்ன சொல்வது?" என வேதனைப்பட்டார் காங்கிரஸ் பிரமுகர் திருச்சி வேலுச்சாமி. 

http://www.vikatan.com/news/india/77657-sonia-gandhi-knows-who-killed-rajiv-gandhi.art

Link to comment
Share on other sites

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் சிக்கிய ரங்கநாத் பெங்களூருவில் மரணம்

 

 
 
 
 
ranganath_3117185f.jpg
 
 
 

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் 9 ஆண்டு கள் தண்டனை அனுபவித்து விடு தலையான ரங்கநாத் பெங்களூரு வில் நேற்று காலமானார்.

பெங்களூருவில் உள்ள பசவண்ணகுடியை சேர்ந்தவர் ரங்கநாத் (60). இவர் வீடு, காலி மனை தரகு தொழில் செய்து வந்தார். 1991 மே 21-ம் தேதி இரவு பெரும்புதூர் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி மனித வெடிகுண்டு மூலம் படு கொலை செய்யப்பட்டார். இதில் தொடர்புடைய சிவராசன், சுபா உள்ளிட்டோர் தமிழகத்தில் இருந்து பெங்களூருவுக்கு தப்பி வந்தனர்.

அப்போது சிவராசன், சுபா, ஓட்டுநர் கீர்த்தி, சுரேஷ் மாஸ்டர் உள்ளிட்ட 6 பேருக்கு ரங்கநாத் சில நாட்கள் தனது வீட்டில் அடைக் கலம் கொடுத்தார். இதைத் தொடர்ந்து பெங்களூரு இந்திைராநகர், கோனனே குன்டே உள்ளிட்ட இடங்களில் வாடகைக்கு வீடு பிடித்துக்கொடுத்தார். இந்த விவகாரம் சிபிஐ அதிகாரிகளுக்கு தெரியவந்தது. ரங்கநாத் கைது செய்யப்பட்டு ராஜீவ் வழக்கில் 26-வது குற்றவாளியாக சேர்க்கப் பட்டார். இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் ரங்கநாத் உள்ளிட்ட 27 பேருக்கு தூக்கு தண்டனை விதித்தது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட‌ மேல்முறையீட்டில் ரங்கநாத்துக்கு 9 ஆண்டுகள் சிறை தண்டனையாக குறைக்கப் பட்டது. சில ஆண்டுகளுக்கு முன்னர் சிறையில் இருந்து விடுதலையான இவர், பெங்களூருவில் வசித்து வந்தார்.

உடல் நலக்குறைவால் பாதிக்கப் பட்டிருந்த அவர் கடந்த மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். அவர் நேற்று அதிகாலை காலமானார். பசவண்ணகுடியில் உள்ள ரங்கநாத்தின் வீட்டில் வைக் கப்பட்டிருந்த அவரது உடலுக்கு உறவினர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர். அப்போது சமூக செயற்பாட்டாளர் பேட்ரிக், கர்நாடகத் தமிழ் அமைப்புகளை சேர்ந்த மணிவண்ணன், இல. பழனி உள்ளிட்டோரும் ரங்கநாத் தின் உடலுக்கு அஞ்சலி செலுத் தினர். பனசங்கரியில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

http://tamil.thehindu.com/opinion/reporter-page/ராஜீவ்-காந்தி-படுகொலை-வழக்கில்-சிக்கிய-ரங்கநாத்-பெங்களூருவில்-மரணம்/article9477557.ece?homepage=true

Link to comment
Share on other sites

இறுதிவரை விளங்காத சந்திராசாமி புதிர்

 

சந்திராசாமி
சந்திராசாமி
 
 

ரங்கநாத்துக்கு அவரது நண்பர் ராஜனின் மூலமாக விடுதலை புலிகள் ஆதரவாளர்களுடன் தொடர்பு ஏற்பட்டது. ராஜீவ் காந்தி படுகொலைக்கு பிறகு, போலீஸார் சிவராசன் குழுவினரை நாடு முழு வதும் தேடினர். சிவராசன் தலைக்கு ரூ.10 ல‌ட்சம், சுபா தலைக்கு ரூ.5 லட்சம் வெகுமதி நிர்ணயித்தனர். அதே ஆண்டு ஜூலை 30-ல் சிவராசன், சுபா, ஓட்டுநர் கீர்த்தி, சுரேஷ் மாஸ்டர் உள்ளிட்ட 6 பேர் பெங்களூருவில் உள்ள ரங்கநாத்தின் வீட்டுக்கு சென்றனர்.

சிவராசன் குழுவினர் சில நாட்கள் த‌னது வீட்டில் தங்க ரங்கநாத் இடம் கொடுத்தார். இதனை மோப்பம் பிடித்த போலீஸார் ரங்கநாத்தின் வீட்டை நெருங்கினர். இரவோடு இரவாக சிவராசன், சுபா உள்ளிட்டோரை அழைத்துக்கொண்டு கோனனே குன்டேவில் தனியாக இருந்த‌ வீட்டில் ரங்கநாத் குடியேறினார். சிபிஐ இயக்குநர் கார்த்திகேயன் தலைமையிலான போலீஸார் ஆகஸ்ட் 17-ல் கோனனே குன்டே வீட்டை சுற்றி வளைத்தனர்.

அப்போது சிபிஐ இயக்குநர் கார்த்திகேயன், ரங்கநாத் மூலமாக சிவராசனுடன் பேச்சுவார்த்தை நடத்த முயற்சித்தார். திடீரென மேலிட உத்தரவின்படி பேச்சு வார்த்தையை கைவிட்டு சிவராச னின் வீட்டை நோக்கி துப்பாக்கி யால் சுட ஆரம்பித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சிவராசன் குப்பியைக் கடித்தபடி நெற்றிப் பொட்டில் சுட்டுக்கொண்டு இறந்தார். இதேபோல சுபா, ஓட்டுநர் கீர்த்தி, நேரு, சுரேஷ் மாஸ்டர் உள்ளிட்ட‌ அனைவரும் ச‌யனைடு குப்பியை விழுங்கி இறந்தனர்.

இது தொடர்பாக ரங்கநாத் திடன் சிபிஐ அதிகாரிகள் விசா ரணை நடத்தியபோது, “எம்.ஜி. சாலையில் உள்ள அஜந்தா, காமதேனு விடுதிகளுக்கு சிவராசன் செல்வார். அங்கிருந்த எஸ்டிடி பூத்தில் இருந்து ஹரித் துவாரில் இருந்த சந்திரா சாமிக்கு போன் பேசுவார். அப்போது

‘கொலை வெற்றிகரமாக முடிந்து விட்டது. விரைவில் நேபாளத் துக்கு தப்பி செல்ல வேண்டும். நீங்கள் தான் உதவ வேண்டும்' என சந்திராசாமியுடன் சிவராசன் பேசினார்” என ரங்கநாத் தெரிவித்தார்.

இந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து சோனியா காந்தி, ரங்கநாத்தை சந்திக்க விரும்பினார். டெல்லி சென்ற ரங்கநாத்திடம் சோனியா காந்தி 7 கேள்விகளை கேட்டார். அப்போது ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சந்திராசாமி உள்ளிட்டோருக்கு இருந்த தொடர்பை ரங்கநாத் விவரித்தார். ஆனால் மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தபோதுகூட ரங்கநாத்தின் புகார் குறித்து விசாரிக்கப்படவில்லை. ரங்கநாத் தெரிவித்த கருத்துகளை மையமாக வைத்து சயனைடு, மெட்ராஸ் கபே உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகின. ஆனால் ராஜீவ் கொலை வழக்கில் சந்திராசாமி குறித்த புதிர்களும் மர்மங்களும் மறையாத நிலையில் ரங்கநாத்தும் மறைந்துவிட்டார்.

http://tamil.thehindu.com/india/இறுதிவரை-விளங்காத-சந்திராசாமி-புதிர்/article9477467.ece

Link to comment
Share on other sites

"ராஜீவ் காந்தி படுகொலைக்கு பின்புலமாக இருந்தவர்கள் யார்?": வழக்கில் தொடர்புடையவரின் நேர்காணல்

ராஜீவ் காந்தி

றைந்த பிரதமர் ராஜீவ் காந்தி சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில், கடந்த 1991-ம் ஆண்டு மே மாதம் 21-ம் தேதி, விடுதலைப்புலிகளின் தற்கொலைப் படையால் கொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் தொடர்புடைய ஒற்றைக்கண் சிவராசன், சுபா ஆகியோர் பெங்களூருவில் தங்குவதற்கு வீடு கொடுத்தவர் ரங்கநாத். இதனால் இவருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டது. பிறகு இந்த வழக்கில் 1999-ல், 26 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையில் 19 பேருக்கு ரத்து செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர். விடுதலை ஆனவர்களில் ரங்கநாத்தும் ஒருவர். 

ரங்கநாத் விடுதலை ஆன பிறகு பெங்களூருவில் உள்ள பசவனக்குடியில் தன் மனைவி மிர்துளாவோடு வசித்து வந்தார். ராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, பல சித்ரவதைகளுக்கு ஆளான நிலையில், உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டு சரியாகப் பேச முடியாமல் தவித்தார். தலைக்குச் செல்லும் நரம்புகளில் ரத்த ஓட்டம் சீராக இல்லாமல் போனதால், அடிக்கடி மயங்கி விழுந்து, உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டார்.  இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்  ரங்கநாத் மரணமடைந்தார். அவரது உடல் பசவனக்குடியில் இருந்து பனசங்கரியில் தகனம் செய்யப்படுகிறது.

ரங்கநாத்தைச் சந்தித்தபோது அவரிடம் பல கேள்விகளை முன்வைத்து பேசி இருக்கிறோம். இத்தருணத்தில் அந்த கேள்விகளும், அவருடைய பதில்களும்....

"ராஜீவ் காந்தி கொலைக்கும் உங்களுக்குமான தொடர்பு என்ன?"

"விடுதலைப் புலிகள் பெங்களூருவுக்கு வருவதும், போவதும், வாடகை வீடு எடுத்துத் தங்குவதும் சர்வ சாதாரண விஷயம். அவர்களின்ranganath_10038.jpg தோழமைக் கழகம் கூட இங்குதான் இருந்தது. ராஜீவ் கொலை 1991 மே 21-ம் தேதி நடந்தது. 2 மாதங்கள் கழித்து, ஆகஸ்ட் 1-ம் தேதி என்னுடைய நண்பர் ராஜன் 8 பேரை பெங்களூருவில் புட்டனஹள்ளியில் உள்ள என் வீட்டிற்கு கூட்டி வந்து . ‘இவர்கள் இலங்கையில் போரில் பாதிக்கப்பட்டவர்கள். ராஜீவ் காந்தி கொலையால் தமிழ்நாட்டில் மருத்துவம் செய்ய மறுக்கிறார்களாம். அதனால் பெங்களூருவில் தங்கி மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ள வந்திருக்கிறார்கள். இவர்களுக்கு ஒரு மாதத்திற்கு வீடு வாடகைக்கு எடுத்துக் கொடு’ என்று கேட்டார். 

ஒரு மாதத்திற்கெல்லாம் யாரும் வீடு கொடுக்க மாட்டாங்க. எங்க மாடி போர்ஷன் காலியாகத் தான் இருக்கு. தங்கி கொள்ளுங்கள் என்றேன். தங்கிக் கொண்டார்கள். அடுத்த நாள் ஆகஸ்ட் 2-ம் தேதி நள்ளிரவில் சிவராசன், சுபா, நேரு, சுரேஷ் மாஸ்டர், அமான், கீர்த்தி, ரங்கன் என 7 பேர் வந்து அந்த 8 பேரோடு மாடியில் தங்கினார்கள். விடிந்ததும் புதிதாக வந்திருக்கிற இவர்கள் யார்? என்று சூரி என்பவரிடம் கேட்டேன். ‘இவங்கள் எங்கள் நண்பர்கள். அவர்களும் போரினால் பாதிக்கப்பட்டவர்கள். மருத்துவ சிகிச்சைக்காக வந்திருக்கிறார்கள். ஓரிரு நாட்களில் கிளம்பிடுவாங்க என்றார். இது எனக்கும், என் மனைவிக்கும் பிடிக்கவில்லை. சுமார் நான்கு, ஐந்து நாட்கள் கழித்து டி.வி-யில் தேடப்படும் ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகள் என்று சிவராசன், சுபா, நேரு என இவர்கள் போட்டோக்களை பார்த்து அதிர்ச்சி அடைந்தோம். எல்லோரையும் வீட்டை விட்டு காலி பண்ணச் சொன்னேன். மாறாக, எங்களை அவர்களின் கஸ்டடிக்கு உட்படுத்தி ‘வெளியில் ஏதாவது மூச்சு விட்டால் கொன்று விடுவதாக’ மிரட்டினார்கள். இதுதான் எங்களுக்கும் ராஜீவ் கொலைக்குமான தொடர்பு".

"ராஜீவ் காந்தி படுகொலை பற்றி அவர்களிடம் கேட்கவில்லையா?"

"முதல் இரண்டு நாட்கள் மிரட்டினார்கள். அப்புறம். சாதாரணமாக அன்பாகப் பேசினார்கள். அப்போது நானும், என் மனைவியும் காங்கிரஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் கோபமாக ஏன் எங்க தலைவர் ராஜீவ்காந்தியை கொன்றீர்கள்? என்று கேட்டோம், அதற்கு சிவராசனும், சுபாவும் கத்தை கத்தையாக போட்டோக்களையும் பேப்பர்களையும் எடுத்து வந்து எங்களிடம் காட்டினார்கள். ராஜீவ் காந்தி அனுப்பிய அமைதிப் படையால் எங்கள் இனம் அழிந்த கொடுமைகளைப் பாருங்கள். உங்க ஊர் பத்திரிகைகளில், இதையெல்லாம் எழுத மாட்டார்கள் என்று இன்டர்நேஷனல் ஹெரால் ட்ரிமினல் என்ற பத்திரிகையை காட்டினார்கள். பள்ளி செல்லும் சின்னக் குழந்தைகள் முதல் வயதான பாட்டிகள் வரை கற்பழித்துக் கொலை செய்யப்பட்டிருந்ததை எழுதி இருந்தார்கள். இந்திய அமைதி படையால் 3,000 பேர் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டதும், 5,000 பேர் காணாமல் போனதும், 12,000 பேர் இறந்து போனதும், 50,000 பேர் குடிபெயர்ந்து போனதையும் ஆதாரப்பூர்வமாக சொல்லி கண் கலங்கினார்கள். இவ்வளவு உயிர்கள், இறப்பதற்கு காரணமாக இருந்தவரை கொன்றது தப்பா? என்று எங்களிடமே கேள்வி கேட்டார்கள். இந்த நேரத்தில் ராகுலுக்கு ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். எல்லா உயிர்களையும் சமமாக மதிப்பவன்தான் தலைவன். பாவத்தின் சம்பளம் மரணம் என்று பைபிள் சொல்கிறது. ராஜீவ் தப்பு பண்ணினார், அனுபவித்தார். சிவராசன் தப்பு பண்ணினார் அனுபவித்தார். ஆனால், இந்த வழக்கில் தூக்கு தண்டனை வரை போன 26 பேரும் நிரபராதிகள். அவர்களை விடுவதுதான் நியாயம்".

"அப்புறம் என்ன நடந்தது?"

"அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுக்கு சந்தேகம் வந்துவிடும். அதனால். என் மூலமாகவே வேறு வீடு வாடகைக்கு எடுத்து தரச் சொன்னார்கள். கோனேகொண்டேவில் ஒரு வீடு வாடகைக்கு எடுத்தேன். அந்த வீட்டில் சிவராசன், சுபா, நான், என் மனைவி உட்பட 9 பேர் தங்கினோம். அடுத்து முத்தத்திக்காட்டில் உள்ள என்னுடைய நண்பர் வீடு காலியாக இருந்தது. அந்த வீட்டை வாடகைக்கு எடுத்துக் கொடுத்தேன். அதில் உடல் காயங்களால் பாதிக்கப்பட்டவர்கள் அங்கு தங்கினார்கள். அந்த இடம் வீரப்பன் ஏரியா என்பதால் வீரப்பன் தேடுதல் வேட்டைக்கு வந்த போலீஸை பார்த்து, 'நம்மைத்தான் பிடிக்க வருகிறார்கள்' என்று வீட்டின் கதவைப் பூட்டி குப்பியை நுகர்ந்து 12 பேர் இறந்தார்கள். காவல்துறை சத்தம் கேட்டு ஓடிவந்து சுற்றி வளைத்ததில், 4 பேர் கைது செய்யப்பட்டார்கள். இது ஆகஸ்ட் 17-ம் தேதி நடந்தது.

அடுத்த நாள் இரவே நாங்கள் தங்கி இருந்த கோனேகொண்டே வீட்டைச் சுற்றிவளைத்து ஆகஸ்ட் 19-ம் தேதி காலை துப்பாக்கியால் சூட்டார்கள். குப்பியை நுகர்ந்து வீட்டுக்குள்ளேயே 7 பேர் இறந்து விட்டனர். முத்தத்திக்காட்டில் 17-ம் தேதி சம்பவம் நடந்ததும் என் மனைவியை வீட்டை விட்டு கிளம்பிப் போக சொல்லி விடுகிறார்கள். அவரது தம்பி வீட்டுக்கு என் மனைவி போய் விட்டார். நானும் துப்பாக்கிச் சூடு நடந்தபோது வெளியே வந்து விட்டேன். மீண்டும் வீட்டிற்குப் போகும்போது என்னையும் அதன்பிறகு என் மனைவியையும் அரெஸ்ட் செய்தார்கள்".

"முதன் முதலில் முருகன், பேரறிவாளன், சாந்தனை எப்போது சந்தித்தீர்கள்? இதுபற்றி அவர்களிடம் கேட்டதுண்டா?"

"என்னைக் கைது செய்ததும், ஜெ நகர் போலீஸ் ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு போனார்கள். பிறகு கங்கா நகரில் உள்ள சி.பி.ஐ அலுவலகத்தில் ஒப்படைத்தார்கள். ஹெலிகாப்டர் மூலமாக சென்னை ஆவடி மல்லிகை அரங்கம், பூந்தமல்லி சிறை, செங்கல்பட்டு சிறை என பல இடங்களில் மாற்றுகிறார்கள். செங்கல்பட்டு சிறைச்சாலையில்தான் இவர்களை சந்தித்திதேன். பேரறிவாளன், சாந்தன், முருகன் எல்லோருக்கும் 19, 20 வயது சின்னப் பசங்க விளையாட்டுத்தனமாக இருந்தார்கள். இரண்டு வருடம் கழித்து அவர்களிடம் நன்றாகப் பேசி பழகும் வாய்ப்பு கிடைத்தது. அப்போதுதான் ‘‘ஏன் தம்பி இந்த செயல்களில் ஈடுபட்டீர்கள்?’’ என்று கேட்டேன். சத்தியமாக இந்த கொலையைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்று அவரவர் சூழ்நிலைக் கைதிகளான கதைகளைச் சொன்னார்கள். ஏன், எதற்கு என்று தெரியாமலேயே பேரறிவாளன் பேக்டரி வாங்கி கொடுத்ததும், சிவராசன் வந்த படகில் சாந்தனும் வந்த குற்றத்திற்காகவும், நளினியின் தம்பி இச்சம்பவத்தில் ஈடுபட்டதால் நனினி, முருகன் மாட்டியதும் தெரிய வந்தது. இவர்கள் ஒருவர் கூட குற்றவாளிகள் இல்லை என்பதை தெரிந்து கொண்டேன். இவர்களோடு 9 வருடம் நானும் சிறையில் இருந்தேன். பேரறிவாளன் தனக்கு இல்லை என்றாலும் மற்றவர்களுக்கு உதவும் குணம் உடையவன். சாந்தன் சிறந்த சிந்தனையாளன். அற்புதமான கற்பனை நீதிக் கதைகளை எழுதக் கூடியவன். முருகன் தீவிர பக்திமான். இவர்கள் எல்லோரும் ஒரு எரும்புக்குக் கூட துன்பம் ஏற்படுத்தாதவர்கள்"

"ராஜீவ் காந்தி படுகொலைக்கு பின்புலமாக இருந்தவர்கள் யார்?"

ராஜீவ் காந்தி"26 பேருக்கு விதிக்கப்பட்டு இருந்த தூக்கு தண்டனை 1999-ல் 19 பேருக்கு ரத்து செய்யப்பட்டு விடுதலை ஆனோம். அப்போது, தமிழ்நாட்டில் உள்ள ஒரு முக்கிய காங்கிரஸ் பிரமுகர் சோனியா காந்தி, உங்களைப் பார்க்க வேண்டும் என்று அழைத்துக் கொண்டு போனார். டெல்லியில் அர்ஜூன் சிங்கை சந்தித்து விட்டு தனி அறையில் சோனியாவோடு 45 நிமிடம் பேசினேன். அப்போது நீங்கள் கேட்கும் அதே கேள்வியைத் தான் அவுங்களும் கேட்டாங்க. 

ராஜீவ்காந்தியை எங்க வீட்டில் தங்கி இருப்பவர்கள்தான் கொலை செய்திருக்கிறார்கள். என்று எங்களுக்குத் தெரிந்ததும் எங்களை அவர்கள் ஹோம் அரெஸ்ட் பண்ணிட்டாங்க. அதனால் யாரிடமும் எதுவும் சொல்ல முடியாத நிலையில் இருந்தோம். ஓரிரு நாட்களில எங்களிடம் எல்லா தகவலும் சொன்னாங்க. விடுதலைப் புலிகள் இயக்கத்தில் கட்டுப்பாடுகள் அதிகம் என்பதால் வெளியில் வந்து விட்டோம். இந்திய அமைதிப்படை செய்த கொடூரத்தால்தான் ராஜீவைக் கொன்றோம். அதற்கு ஸ்கெட்ச் போட்டு கொடுத்தது சந்திரா சாமி. அவரின் உதவியால் ஓரிரு நாட்களுக்குள் நேபாளம் போயிடுவதாகவும் சொன்னாங்க. அது சம்பந்தமாக, அடிக்கடி சந்திரா சாமியிடம் போனில் பேசியதை நானே கேட்டிருக்கிறேன். அவர்களுக்குள் சுப்பிரமணியசாமியைப் பற்றியும் பேசுவார்கள்’’ என்று சொல்லிவிட்டு... சந்திராசாமியை விசாரித்தால் எல்லாம் உண்மையும் தெரியும். அதுமட்டுமல்ல. ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் கொலையாவதற்கு 2 மாதத்திற்கு முன்பே அந்த இடத்தை சந்திரா சாமியும், சுப்பிரமணியசாமியும் ஒன்றாகச் சென்று பார்த்திருக்கிறார்கள். அதற்குப் பதிலளித்த சுப்பிரமணியசாமி, ‘‘டெல்லி செல்லுவதற்காக நானும் சந்திராசாமியும் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு வந்தோம். நேரடியாக டெல்லிக்கு பிளைட் இல்லாததால் இருவரும் காரில் பெங்களூருக்கு விமான நிலையத்திற்குச் சென்றோம். அப்போது அந்த இடத்தில் சிறுநீர் கழிப்பதற்காக காரை நிறுத்தினோம்’’ என்று சொல்லி இருப்பது ஜெயின் கமிஷனில் பதிவாகி இருக்கிறது. இதையெல்லாம் தெளிவாக விசாரித்தால் உண்மைகள் தெரியவரும் என்றேன். 
 
அதன்பிறகு. சோனியா காந்தி சொல்லி, எனக்கு போலீஸ் பாதுகாப்பும் போட்டார்கள். என்ன, ஏது என்று தெரியாமல் வீடு கொடுத்தவனுக்கும், பொருள் வாங்கிக் கொடுத்தவனுக்கும் அடி, உதை, சிறைக் கொடுமை, தூக்குத் தண்டனை. ஆனால் சிவராசன் இறக்கும் வரை சந்திரா சாமியிடமும், சுப்பிரமணியசாமியிடமும் தொடர்பில் இருந்தார்கள். அவர்களை விசாரிக்காததும், சிறையில் அடைக்காததும் ஏன்?" என்ற மர்மம் நிறைந்த கேள்விகளோடு நிறுத்தினார். 

இதையெல்லாம் நம்மிடம் பகிர்ந்துக் கொண்ட ரங்கநாத் இறந்து விட்டார். 

http://www.vikatan.com/news/coverstory/77781-interview-with-ranganath-an-accused-in-rajiv-gandhi-assassination.art

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.