Jump to content

தமிம் - மொமினுல் முயற்சிகளை வீணடித்த மழை: நியூசிலாந்து டெஸ்ட்டில் வங்காளதேசம் 154/3


Recommended Posts

தமிம் - மொமினுல் முயற்சிகளை வீணடித்த மழை: நியூசிலாந்து டெஸ்ட்டில் வங்காளதேசம் 154/3

 

நியூசிலாந்தில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியில் வங்காளதேச வீரர்கள் தமிம் இக்பால், மொமினுல் சிறப்பாக விளையாடியபோதும், மழை குறுக்கிட்டதால் அவர்களின் முயற்சிகள் எடுபடாமல் போனது.

 
 
தமிம் - மொமினுல் முயற்சிகளை வீணடித்த மழை: நியூசிலாந்து டெஸ்ட்டில் வங்காளதேசம் 154/3
 
வங்காளதேச கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான ஒருநாள் தொடரையும், 20 ஓவர் தொடரையும் நியூசிலாந்து 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்நிலையில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின், முதல் டெஸ்ட் வெலிங்டனில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து பீல்டிங்கைத் தேர்வு செய்ய, வங்காளதேசம் முதலில் பேட் செய்தது. தொடக்க வீரர் இம்ருல் கயஸ் 1 ரன்னில் ஆட்டம் இழந்தார். அதன்பின்னர் மற்றொரு தொடக்க வீரரான தமிம் இக்பால் மற்றும் மொமினுல் ஹக் ஆகியோர் சிறப்பாக ஆடி அரை சதம் அடித்தனர்.

தமிம் இக்பால் 56 ரன்னில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய மொகமதுல்லா 26 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.

இன்றைய போட்டியின்போது விட்டுவிட்டு மழை பெய்ததால் பல ஓவர்கள் பாதிக்கப்பட்டன. இறுதியில் போதிய வெளிச்சம் இல்லாததால் 40.2 ஓவர்களில் ஆட்டம் நிறுத்தப்பட்டது. அப்போது வங்காளதேச அணி 3 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்திருந்தது. மொமினுல் ஹக் 64 ரன்னுடனும், சாகிப்-அல்-அசன் 5 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/01/12133709/1061734/Rain-spoils-Mominul-and-Tamims-efforts.vpf

Link to comment
Share on other sites

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்: ‌ஷகிப் இரட்டை சதத்தால் வங்காளதேசம் ரன் குவிப்பு

 

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ‌ஷகிப்-அல்-ஹசன் மற்றும் முஷ்பிகுர் ரகிமின் அபார ஆட்டத்தால் வங்காள தேசம் அணி ரன்கள் குவித்தது.

 
 
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்: ‌ஷகிப் இரட்டை சதத்தால் வங்காளதேசம் ரன் குவிப்பு
 
நியூசிலாந்து - வங்காளதேசம் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி வெலிங்டனில் நேற்று தொடங்கியது.

வங்காளதேசம் 3 விக்கெட்டுக்கு 154 ரன் எடுத்திருந்தபோது மழை பெய்ததால் அத்துடன் முடித்து கொள்ளப்பட்டது. மொமினுல் ஹகி 64 ரன்னிலும், ‌ஷகிப்-அல்-ஹசன் 5 ரன்னிலும் களத்தில் இருந்தனர்.

இன்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. மொமினுல் ஹசி 64 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து ‌ஷகிப் அல்-ஹசன்- முஷ்பிகுர் ரகிம் ஜோடி சிறப்பாக விளையாடியது. நியூசிலாந்து பந்து வீச்சை நொறுக்கி ரன் குவித்தது. ஷகில்-அல்-ஹசன் இரட்டை சதம் அடித்து அசத்தினார். இது அவருக்கு முதல் இரட்டை சதமாகும்.

முஷ்பிகுர் ரகிம் 159 ரன்னில் அவுட் ஆனார். இருவரும் 5-வது விக்கெட்டுக்கு 359 ரன் சேர்த்தனர். வங்காளதேசம் 128 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 521 ரன் குவித்து இருந்தது.

டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்சில் அதிக ரன் எடுத்த வங்காளதேச வீரர் என்ற சாதனையை ‌ஷகிப்-அல்-ஹசன் படைத்தார்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/01/13111145/1061927/Bangladesh-521-runs-against-NZ-first-test.vpf

Link to comment
Share on other sites

ஷாகிப் 217, முஷ்பிகுர் 159; சாதனை கூட்டணி: நியூஸி. பவுலிங்கைப் புரட்டிய வங்கதேசம் 542/7

 

ஷாகிப் இரட்டைச் சதம், முஷ்பிகுர் ரஹிமுடன் 359 ரன்கள் கூட்டணி. | படம். கெட்டி இமேஜஸ்.
ஷாகிப் இரட்டைச் சதம், முஷ்பிகுர் ரஹிமுடன் 359 ரன்கள் கூட்டணி. | படம். கெட்டி இமேஜஸ்.
 
 

வெலிங்டனில் நடைபெறும் நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேசம் தன் முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 542 ரன்கள் எடுத்து அபாரமாக ஆடி வருகிறது.

இடது கை ஆல் ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன் 276 பந்துகளில் 31 பவுண்டரிகளுடன் 217 ரன்கள் எடுக்க, முஷ்பிகுர் ரஹிம் 260 பந்துகளில் 23 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 159 ரன்கள் எடுக்க, இருவரும் சேர்ந்து 5-வது விக்கெட்டுக்காக 359 ரன்களைச் சேர்த்து சாதனை புரிந்துள்ளனர், வங்கதேச கிரிக்கெட் வரலாற்றில் இதுவே அதிகபட்ச கூட்டணி ரன்கள். 542 ரன்கள் என்பது வங்கதேசத்துக்கு வெளியே இரண்டாவது பெரிய ஸ்கோராகும்.

ஷாகிப் அல் ஹசன் 217 ரன்கள் வங்கதேச கிரிக்கெட் டெஸ்ட் வரலாற்றில் அதிகபட்ச தனிப்பட்ட ரன்களாகும். பிட்ச் பேட்ஸ்மென்களின் சொர்க்கமான நிலையில் ஷாகிப், முஷ்பிகுர் இணைந்து கிட்டத்தட்ட 83 ஓவர்களை விளையாடி 359 ரன்களைச் சேர்த்தனர். ஷாகிப் அல் ஹசன் ஸ்ட்ரைக் ரேட் 78 ரன்கள் என்பதும் இரட்டைச் சதம் எனும்போது மிகப்பெரிய சாதனையே.

டிம் சவுதி, டிரெண்ட் போல்ட், நீல் வாக்னர், கொலின் டி கிராண்ட்ஹோம் இருந்தும் ஷாகிப், முஷ்பிகுர் இணையை உடைக்க முடியவில்லை.

முதல் நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட வங்கதேசம் தமிம் இக்பாலின் 50 பந்து 56 ரன்களுடன் 154/3 என்று இருந்தது, மொமினுல் ஹக் 64 ரன்களுடனும் ஷாகிப் 5 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இன்று காலை சவுதி பந்தை மொமினுல் எட்ஜ் செய்து 64 ரன்களில் வெளியேறினார். 160/4.

அதன் பிறகு நியூஸிலாந்து பந்து வீச்சு பிசுபிசுத்துப் போக 61 ஓவர்களில் 273 ரன்களை விட்டுக் கொடுத்தது. முஷ்பிகுர் தொடக்கத்தில் ஏகப்பட்ட ஷார்ட் பிட்ச் பந்துகளை எதிர்கொண்டு அடிகள் வாங்கினார், விரல்களை பந்து ‘பச்’ என்று அடித்தது. ஆனால் அவர் தைரியத்தை விட்டுக் கொடுக்கவில்லை. ஷார்ட் பிட்ச் பந்துகளுக்கிடையே புல் லெந்த் பந்துகளை அவர் பவுண்டரிகளாக மாற்றினார். ஆஃப் திசையில் கவர், மிட் ஆஃப், பாயிண்ட், லெக் திசையில் ஆன் டிரைவ், பிளிக், என்று அவர் கடைசியில் பாயிண்டில் அடித்த ஷாட் மூலம் தனது 4-வது சதத்தை எடுத்தார்.

ஆனால் மறுமுனையில் ஷாகிப் அல் ஹசனுக்கு ஷார்ட் பிட்ச் பந்துகள் எழும்பவில்லை இதனால் அவர் புல், கட் ஷாட்கள் என்று அசத்தினார். 150 பந்துகளில் 100 ரன்களை ஷாகிப் எடுத்தார். வங்கதேச கிரிக்கெட்டில் அதிக டெஸ்ட் ரன்கள் பட்டியலில் ஷாகிப் தற்போது 2-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

191 பந்துகளில் 150 ரன்களை 22 பவுண்டரிகளுடன் எட்டிய ஷாகிப் அல் ஹசன் 253 பந்துகளில் 30 பவுண்டரிகளுடன் இரட்டைச் சதம் எடுத்தார். கடைசியில் 217 ரன்கள் எடுத்த நிலையில் வாக்னரிடம் ஆட்டமிழந்தார். முஷ்பிகுர் ரஹிம் முன்னதாக வாட்லிங்கிடம் கேட்ச் கொடுத்து போல்ட்டிடம் வீழ்ந்தார். ஆஃப் ஸ்பின்னர் மெஹதி ஹசன் மிராஸ் வாக்னர் பந்தில் ரன் எடுக்காமல் ஆட்டமிழந்தார். ஆட்ட முடிவில் சபீர் ரஹ்மான் 10 ரன்களில் இருந்தார். நியூஸிலாந்து தரப்பில் நீல் வாக்னர் 124 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். போல்ட், சவுதி தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

டாஸ்வென்று வங்கதேசத்தை பேட் செய்ய அழைத்ததற்கு வில்லியம்சன் வருந்தியிருப்பார் என்பதோடு முஷ்பிகுர் ரஹிம் 28 ரன்களில் இருந்த போது 2-வது ஸ்லிப்பில் ஜீத் ராவல் விட்ட கேட்ச் மற்றும் ஷாகிப் அல் ஹசன் நேற்று 4 ரன்களில் இருந்த போது மிட்செல் சாண்ட்னர் எளிதான வாய்ப்பையும் கோட்டை விட்டதை நினைத்து நிச்சயம் கோபமடைந்திருப்பார்.

வங்கதேச கிரிக்கெட்டில் மறக்க முடியாத ஒரு நாளாக இது அமைந்துள்ளது. பிட்ச் பேட்டிங்கிற்கு சொர்க்கமானாலும் வங்கதேச ஸ்பின்னர்கள் நியூஸிலாந்துக்கு நெருக்கடி கொடுக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக மெஹதி ஹசன் மிராஸ் உள்ளார்.

http://tamil.thehindu.com/sports/ஷாகிப்-217-முஷ்பிகுர்-159-சாதனை-கூட்டணி-நியூஸி-பவுலிங்கைப்-புரட்டிய-வங்கதேசம்-5427/article9478550.ece

Link to comment
Share on other sites

வங்காள தேசம் 595 ரன்கள் குவித்து டிக்ளேர்: நியூசிலாந்து பதிலடி

 

வெலிங்கடனில் நடைபெற்று வரும் முதல் டெஸ்டின் முதல் இன்னிங்சில் வங்காள தேசம் 595 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்துள்ளது.

 
 
 
வங்காள தேசம் 595 ரன்கள் குவித்து டிக்ளேர்: நியூசிலாந்து பதிலடி
 
வங்காள தேசம் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் வெலிங்டனில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய வங்காள தேச அணி சாஹிப் அல் ஹசன் (217) மற்றும் முஷ்பிகுர் ரஹிம் (159) ஆகியோரின் அபார ஆட்டத்தால் நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 542 ரன்கள் குவித்திருந்தது, சபிர் ரஹ்மான் 10 ரன்கள் எடுத்த நிலையில் களத்தில் இருந்தார்.

இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. சபிர் ரஹ்மான் அவுட்டாகாமல் 54 ரன்கள் எடுக்க வங்காள தேசம் அணி 152 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 595 ரன்கள் குவித்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. நியூசிலாந்து அணியின் வாக்னர் அதிகபட்சமாக 4 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

BBD291E3-81F0-41D4-B91D-D8439797212C_L_s
விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் கம்ருல் இஸ்லாம் ரபி

பின்னர் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர் லாவல் 27 ரன்களில் ஆட்டம் இழந்தார். ஆனால் மற்றொரு தொடக்க வீரர் லாதம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்தார். அவருக்கு துணையாக கேப்டன் வில்லியம்சன் 53 ரன்னும், ராஸ் டெய்லர் 40 ரன்களும் சேர்த்தனர்.

334AFEFB-FAF1-4BE7-B5AF-DF1A54B4F988_L_s
விக்கெட் வீழ்த்திய தஸ்கினை பாராட்டும் சக வீரர்கள்

நியூசிலாந்து அணி 3-வது நாள் ஆட்ட முடிவில் 77 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 292 ரன்கள் எடுத்துள்ளது, லாதம் 119 ரன்களுடனும், நிக்கோல்ஸ் 35 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். தற்போது வரை நியூசிலாந்து அணி 303 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது. கைவசம் 7 விக்கெட்டுக்கள் உள்ளதால் வங்காள தேச அணியின் ஸ்கோரை எட்ட வாய்ப்புள்ளது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/01/14143759/1062134/wellington-test-bangladesh-595-8-newzealand-292-for.vpf

Link to comment
Share on other sites

வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட்: நியூசிலாந்து 539 ரன் குவிப்பு

 

வங்காளதேசம் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து 539 ரன் குவித்து பதிலடி கொடுத்தது

 
 
வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட்: நியூசிலாந்து 539 ரன் குவிப்பு
 
நியூசிலாந்து - வங்காள சேதம் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் வெல்லிங்டனில் நடைபெற்று வருகிறது.

வங்காளதேசம் முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்புக்கு 595 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. ஷகிப்-அல்-ஹாசன் இரட்டை சதமும் (217 ரன்), முஷ்பீகுர் ரகீம் சதமும் (159 ரன்) அடித்தனர். பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய நியூசிலாந்து நேற்றைய 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 292 ரன் எடுத்து இருந்தது. தொடக்க வீரர் டாம் லாதம் சதம் அடித்தனர். அவர் 119 ரன்னும், நிக்கோலஸ் 35 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

இன்று 4-வது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து விளையாடிய நியூசிலாந்து 539 ரன் குவித்து பதிலடி கொடுத்தது. டாம் லாதம் 177 ரன்கள் குவித்தார். 56 ரன்கள் முன்னிலையில் வங்காளசேதம் 2-வது இன்னிங்சை ஆடியது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/01/15135938/1062195/NZ-539-score-against-bangladesh-1st-test-match.vpf

Link to comment
Share on other sites

முதல் இன்னிங்ஸில் 595 ரன் குவித்தும் தோல்வியில் சாதனை படைத்த வங்கதேசம்! #NZvsBAN

உள்ளூரில் மட்டுமே புலிகள் என அறியப்பட்டு வந்த வங்கதேசப் புலிகள் அயல் மண்ணிலும் பட்டையைக்  கிளப்பத் தொடங்கியிருக்கின்றனர். வங்கதேசம்  நியூசிலாந்து மண்ணில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. இரண்டு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட்  கிரிக்கெட் போட்டி வெலிங்டன் பேசின் ரிசர்வ் மைதானத்தில்  தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன்  கேன் வில்லியம்சன் பவுலிங்கைத் தேர்ந்தெடுத்தார்.

வங்கதேசம் நியூசிலாந்து அணி இடையேயான டெஸ்ட் போட்டி

வேகப்பந்துக்கும், பேட்டிங் செய்வதற்கும் சொர்க்கபுரியாக  திகழக்கூடியவை நியூசிலாந்து மைதானங்கள். நியூஸி மண்ணில் அந்த  அணியை டெஸ்ட் போட்டிகளில் வீழ்த்துவது என்பது லேசுப்பட்ட காரியம் கிடையாது. வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் டிரெண்ட் போல்ட், டிம் சவுத்தீ,  நீல் வாக்னர், மிச்சேல் சான்டனர், காலின் டி கிராண்ட்ஹாம் என பிரதான பந்துவீச்சாளர்கள் நியூசிலாந்து அணியில் இடம் பெற்றனர். மெஹந்தி ஹாசன், டஸ்கின் அகமது, கம்ருல் இஸ்லாம் ரபி, சுபாசிஸ் ராய் ஆகிய பந்துவீச்சாளர்கள் வங்கதேசம் பக்கம் இருந்தனர். இதில் டஸ்கின் அகமதுவைத் தவிர வேறு யாருக்கும் ஒரளவு கூட சர்வதேச போட்டிகளில் ஆடிய அனுபவம் கிடையாது. இதனால் வங்கதேச அணியை எளிதில் வீழ்த்திவிடமுடியும் என நம்பிக்கையோடு களமிறங்கியது நியூசிலாந்து.

முதல் நாள் கடுமையான புயல் வீசியதால், கிரிக்கெட் ஆட்டம் அடிக்கடி தடைபட்டது. அன்றைய தினம் வெறும் 40 ஓவர்கள் விளையாட முடிந்தது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 154/3 என்ற நிலையில் இருந்தது வங்கதேசம். மறுநாள் ஷகிப் அல் ஹசன், முஷ்பிகுர் ரஹீம் இருவரும் இணைந்து ஒரு அசாத்தியமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த இருவரையும் பிரிப்பதற்குள் மண்டை காய்ந்தது நியூசிலாந்து. இருவரும் சீராக பவுண்டரி விளாசிக்கொண்டே இருந்தனர். ஐந்து  ரன்னுடன் அன்றைய தினம் ஆட்டத்தை தொடங்கிய ஷகிப்  அல் ஹசன் அபாரமாக விளையாடி இரட்டைச் சதம் அடித்தார். முஷ்பிகுர் ரஹீமும், ஷகிப்பும் இணைந்து ஐந்தாவது விக்கெட்டுக்கு 359 ரன்கள் சேர்த்து வரலாற்றுச் சாதனை படைத்தனர். முஷ்பிகுர் ரஹீம் 260 பந்துகளைச் சந்தித்து, 23 பவுண்டரி, ஒரு சிக்ஸருடன் 159 ரன்களைக்  குவித்த நிலையில்  அவுட் ஆனார். அதற்கடுத்த சில ஓவர்களிலேயே ஷகிப்பும் நடையை கட்டினார். 276 பந்துகளில் 31 பவுண்டரிகள் உதவியுடன் 217 ரன்களை எடுத்து அவுட் ஆனார்  ஷகிப். டாப் ரேட்டிங் அணியுடனான டெஸ்ட் போட்டியில், அதுவும் அந்த அணியின் சொந்த மண்ணில் வங்கதேச வீரர் ஒருவர் இரட்டைச் சதம் எடுப்பது வரலாற்றுச் சாதனையாகும்.

வங்கதேசம் அணியைச் சேந்த ஷகிப் அல் ஹசன் இரட்டைச் சதம் விளாசினார்.

இரண்டாவது நாள் ஆட்ட நேர இறுதியில் 543/7 என இருந்தது வங்கதேசம். இரண்டாவது நாள் மட்டும் 389 ரன்களை அதிரடியாகச் சேர்ந்திருந்தது வங்கதேசம். மூன்றாவது நாள் வங்கதேச வீரர் சபீர்  ரஹ்மான் அரை சதம் எடுத்த பிறகு 595/8 என்ற நிலையில் டிக்ளேர் செய்தது வங்கதேசம்.

இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து, மெதுவாக இன்னிங்ஸை ஆரம்பித்து. தொடக்க வீரர் டாம் லாதம் நங்கூரமிட்டு ஒரு பக்கம் ரன்களை குவித்து கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் நிக்கோலஸ், வில்லியம்சன், சான்ட்னர் ஆகியோர்  தங்கள் சார்பாக அரைசதம் விளாசினார். லாதம் 177 ரன்கள் எடுக்க, நியூசி 539 ரன்களுக்கு இன்னிங்ஸை இழந்தது. இதையடுத்து 56 ரன்கள் முன்னிலையுடன் ஆட்டத்தை ஆரம்பித்தது வங்கதேசம். இன்னும் இருநூறு ரன்களை சேர்த்திருந்தால் நியூசிலாந்துக்கு எளிதாக நெருக்கடியை தந்திருக்க முடியும் என்ற நிலையில் வங்கதேசம் சொதப்ப ஆரம்பித்தது. நீல் வாக்னர், சான்ட்னர்  சுழற்பந்து வீச்சில் வங்கதேசம் சுருண்டது. முதல் இன்னிங்சில் இரட்டைச் சதம் அடித்த ஷகிப், இந்த இன்னிங்சில் டக் அவுட் ஆனார். முஷ்பிகுர் ரஹீம் காயமடைந்து ரிட்டையர்டு ஆனார். சபீர் ரஹ்மான் மட்டுமே அரைசதம் கடந்தார். இதையடுத்து 160 ரன்களுக்கு இன்னிங்ஸை இழந்தது வங்கதேசம். 

Tom latham smashes century against bangladesh

217  ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் பேட்டிங் பிடித்த நியூசிலாந்து, டெஸ்ட் போட்டியை ஒருநாள் போட்டி போல  ஆடியது. தொடக்க வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தாலும் வில்லியம்சனும், ராஸ் டெய்லரும் இணைந்து அணியை வெற்றி பெற வைத்தார்கள். குறிப்பாக கேன் வில்லியம்சன் 90 பந்துகளில் 15 பவுண்டரியோடு 104 எடுத்து நாட் அவுட்டாக இருந்து வெற்றிக்கு வித்திட்டார். 

வெற்றியை நெருங்கி வந்து கோட்டை விடுவது வங்கதேசத்துக்கு வாடிக்கையாக இருக்கிறது. வெற்றி மிதப்பில் தான் இந்த போட்டியையும் இழந்திருக்கிறது  வங்கதேசம்.

கடைசி நாளில் மேஜிக் வெற்றி  பெற்ற நியூசிலாந்து அணிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. அதே சமயம் முதல் இன்னிங்சில் 595  ரன் குவித்த பிறகு ஒரு அணி தோல்வி அடைவது வரலாற்றில் இது தான் முதல் முறை.  122 ஆண்டுகளுக்கு முன்னர் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 586 ரன்கள் எடுத்தும், இங்கிலாந்திடம் தோல்வியைத் தழுவியது. ஆஸ்திரேலியாவிடம் இருந்த அந்த மோசமான சாதனையை 122 ஆண்டுகளுக்கு பிறகு தனது  வசமாக்கியிருக்கிறது வங்கதேசம்.

http://www.vikatan.com/news/sports/77901-bangladesh-lost-the-match-after-scored-595-runs-in-the-first-innings.art

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கையில் காாமல் ஆக்கப்பட்டவா்கள் தொடர்பிலான விசாரணைகளில் சிறிதளவு முன்னேற்றமும் ஏற்படவில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது. 2023 இல் உலக நாடுகளில் மனித உரிமை நிலவரம் குறித்த தனது வருடாந்த அறிக்கையில் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது. 1983ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டுவரை இடம் பெற்ற மனித உரிமை துஷ்பிரயோகங்கள் தொடர்பிலான விசாரணைகளில் சிறிதளவு முன்னேற்றம் இல்லை அதேபோல 1988 – 89 ஜேவிபி கிளர்ச்சி காலத்தில் இடம்பெற்ற மனித உரிமை துஷ்பிரயோகங்கள் குறித்த விசாரணைகளிலும் எந்த முன்னேற்றமும் இல்லை என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது. அதிகளவில் கவனத்தை ஈர்த்த காணாமல்போன சம்பவங்கள் குறித்த விசாரணைகளிலும் முன்னேற்றம் இல்லை எனவும் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரி வித்துள்ளது. முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரணாகொட தொடர்புபட்ட 2008 2009 இல் கொழும்பில் 11 தனிநபர்கள் கடத்தப்பட்டு காணாமல்போன சம்பவம் தொடர்பிலான விசாரணைகளில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. எனினும் மனித உரிமை மீறல்கள் குற்றச்சசாட்டுகளுடன் தொடர்புபடாத காரணங்களிற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வடமேல்மாகாண ஆளுநர் பதவியிலிருந்து கரணாகொடவை நீக்கினார் என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது. 2023இல் இலங்கையில் அரசாங்கத்தின் அதிகாரிகள் சார்பில் எவரும் காணாமல் போகச் செய்யப்பட்டதாக அறிக்கைகள் எவையும் கிடைக்கவில்லை என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளதுடன் அக்டோபர் இறுதிவரை எவரும் காணாமல்போகச்செய்யப்பட்டதாக தனக்கு அறிக்கைகள் எவையும் கிடைக்கவில்லை என காணாமல் போனோர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இலங்கை அரசாங்கமும் அதன் முகவர்களும் கண்மூடித்தனமான அல்லது சட்டவிரோத கொலைகளில் ஈடுபட்டனர் பல தகவல்கள் வெளியாகியுள்ளன என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது. பொலிஸாரின் தடுப்பில் பல உயிரிழப்புகள் இடம்பெற்றன பல சம்பவங்கள் ஒரேமாதிரியானவையாக காணப்பட்டன என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தனது வருடாந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. குற்றம் இடம்பெற்ற பகுதிக்கு விசாரணைக்காக சந்தேகநபர்களை பொலிஸார் கொண்டு சென்ற வேளையே பல கொலைகள் இடம்பெற்றன என தெரிவித்துள்ள அமெரிக்க இராஜாங்க திணைக்களம் விசாரணையின் போது சந்தேக நபர்கள் தங்களை தாக்கிவிட்டு தப்பியோட முயற்சித்தனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளது. https://www.ilakku.org/காணாமல்-ஆக்கப்பட்டோா்-வி/?amp ஆடு நனையுதென்று ஓநாய் ஒன்று அழுகிறது.
    • கண் சத்திர சிகிச்சையின் போது தரம் குறைந்த மருந்து பயன்படுத்தப்பட்டதன் காரணமாக பார்வையிழந்த நோயாளிகள் , கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்துள்ளனர். கடந்த 2023ம் ஆண்டின் ஏப்ரல் மாதமளவில் நுவரெலியா மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட கண் சத்திர சிகிச்சையின் பின்னர் ஆறு நோயாளிகள் பார்வைத் திறனை முற்றாக இழந்திருந்தனர். குறித்த நோயாளிகளுக்கான சத்திர சிகிச்சையின் போது prednisolone acetate எனும் தரம் குறைந்த மருந்து பயன்படுத்தப்பட்டிருப்பதும், கெஹெலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சுப் பதவியைப் பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னரே குறித்த மருந்துப் பொருள் இறக்குமதி செய்யப்பட்டிருப்பதும் விசாரணைகளில் தெரியவந்திருந்தது. அறுநூறு மில்லியன் ரூபா நட்ட ஈடு சத்திர சிகிச்சையின் பின்னர் பார்வைத் திறனை இழந்த நோயாளிகளுக்கு நட்டஈடு வழங்கப்படு்ம் என்று அன்றைய சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல அறிவித்திருந்த போதும், அவ்வாறான இழப்பீடுகள் எதுவும் இதுவரை வழங்கப்படவில்லை. இந்நிலையில் குறித்த ஆறு நோயாளிகளும் ஒன்றிணைந்து கெஹெலிய ரம்புக்வெல்லவிடம் நட்டஈடு கோரி வழக்குத் தாக்கல் செய்துள்ளனர். ஒரு நோயாளிக்கு நூறு மில்லியன் ரூபா வீதம் ஆறுநோயாளிகளுக்கும் அறுநூறு மில்லியன் ரூபா நட்ட ஈடாக வழங்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். https://tamilwin.com/article/people-blinded-by-substandard-medicine-sue-kehelia-1714075637
    • நீங்கள் சொன்ன இந்த கொற்றலை இன்று காய்ந்த சோமாலியாவில் திறந்து விட்டனராம். மிகவும் அழகு என்று எல்லோரும் புகழ்கின்றனர்.  
    • ஆனால் எனது உறவினர்கள் நண்பர்கள் பலர்  வெளிநாட்டு குடியுரிமை உடனே இலங்கையில் சொத்துக்கள் வைத்துள்ளார்கள்    மேலும் நாவற்குழியில்.  பெரிய றால்.  பண்ணை ஒன்று   வெள்ளைக்காரன் வைத்திருந்தார்    1980 இல் கொழும்பில்  கிரான்பாஸ் றோட்டில்.  லீபர். பிறதர். என்ற பெயரில் வெள்ளைக்காரன் சவர்க்கார உற்பத்தி  ஜாம். பட்டர்.  தாயாரிக்கும். தொழில்சாலை வைத்திருந்தார்   1980 தான்  அரசாங்கம் முதலீட்டாளர்களை. வெளிநாட்டிலிருந்து எப்படி வரவேற்கிறது?? 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.