Jump to content

தமிம் - மொமினுல் முயற்சிகளை வீணடித்த மழை: நியூசிலாந்து டெஸ்ட்டில் வங்காளதேசம் 154/3


Recommended Posts

தமிம் - மொமினுல் முயற்சிகளை வீணடித்த மழை: நியூசிலாந்து டெஸ்ட்டில் வங்காளதேசம் 154/3

 

நியூசிலாந்தில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியில் வங்காளதேச வீரர்கள் தமிம் இக்பால், மொமினுல் சிறப்பாக விளையாடியபோதும், மழை குறுக்கிட்டதால் அவர்களின் முயற்சிகள் எடுபடாமல் போனது.

 
 
தமிம் - மொமினுல் முயற்சிகளை வீணடித்த மழை: நியூசிலாந்து டெஸ்ட்டில் வங்காளதேசம் 154/3
 
வங்காளதேச கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான ஒருநாள் தொடரையும், 20 ஓவர் தொடரையும் நியூசிலாந்து 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்நிலையில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின், முதல் டெஸ்ட் வெலிங்டனில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து பீல்டிங்கைத் தேர்வு செய்ய, வங்காளதேசம் முதலில் பேட் செய்தது. தொடக்க வீரர் இம்ருல் கயஸ் 1 ரன்னில் ஆட்டம் இழந்தார். அதன்பின்னர் மற்றொரு தொடக்க வீரரான தமிம் இக்பால் மற்றும் மொமினுல் ஹக் ஆகியோர் சிறப்பாக ஆடி அரை சதம் அடித்தனர்.

தமிம் இக்பால் 56 ரன்னில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய மொகமதுல்லா 26 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.

இன்றைய போட்டியின்போது விட்டுவிட்டு மழை பெய்ததால் பல ஓவர்கள் பாதிக்கப்பட்டன. இறுதியில் போதிய வெளிச்சம் இல்லாததால் 40.2 ஓவர்களில் ஆட்டம் நிறுத்தப்பட்டது. அப்போது வங்காளதேச அணி 3 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்திருந்தது. மொமினுல் ஹக் 64 ரன்னுடனும், சாகிப்-அல்-அசன் 5 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/01/12133709/1061734/Rain-spoils-Mominul-and-Tamims-efforts.vpf

Link to comment
Share on other sites

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்: ‌ஷகிப் இரட்டை சதத்தால் வங்காளதேசம் ரன் குவிப்பு

 

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ‌ஷகிப்-அல்-ஹசன் மற்றும் முஷ்பிகுர் ரகிமின் அபார ஆட்டத்தால் வங்காள தேசம் அணி ரன்கள் குவித்தது.

 
 
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்: ‌ஷகிப் இரட்டை சதத்தால் வங்காளதேசம் ரன் குவிப்பு
 
நியூசிலாந்து - வங்காளதேசம் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி வெலிங்டனில் நேற்று தொடங்கியது.

வங்காளதேசம் 3 விக்கெட்டுக்கு 154 ரன் எடுத்திருந்தபோது மழை பெய்ததால் அத்துடன் முடித்து கொள்ளப்பட்டது. மொமினுல் ஹகி 64 ரன்னிலும், ‌ஷகிப்-அல்-ஹசன் 5 ரன்னிலும் களத்தில் இருந்தனர்.

இன்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. மொமினுல் ஹசி 64 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து ‌ஷகிப் அல்-ஹசன்- முஷ்பிகுர் ரகிம் ஜோடி சிறப்பாக விளையாடியது. நியூசிலாந்து பந்து வீச்சை நொறுக்கி ரன் குவித்தது. ஷகில்-அல்-ஹசன் இரட்டை சதம் அடித்து அசத்தினார். இது அவருக்கு முதல் இரட்டை சதமாகும்.

முஷ்பிகுர் ரகிம் 159 ரன்னில் அவுட் ஆனார். இருவரும் 5-வது விக்கெட்டுக்கு 359 ரன் சேர்த்தனர். வங்காளதேசம் 128 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 521 ரன் குவித்து இருந்தது.

டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்சில் அதிக ரன் எடுத்த வங்காளதேச வீரர் என்ற சாதனையை ‌ஷகிப்-அல்-ஹசன் படைத்தார்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/01/13111145/1061927/Bangladesh-521-runs-against-NZ-first-test.vpf

Link to comment
Share on other sites

ஷாகிப் 217, முஷ்பிகுர் 159; சாதனை கூட்டணி: நியூஸி. பவுலிங்கைப் புரட்டிய வங்கதேசம் 542/7

 

ஷாகிப் இரட்டைச் சதம், முஷ்பிகுர் ரஹிமுடன் 359 ரன்கள் கூட்டணி. | படம். கெட்டி இமேஜஸ்.
ஷாகிப் இரட்டைச் சதம், முஷ்பிகுர் ரஹிமுடன் 359 ரன்கள் கூட்டணி. | படம். கெட்டி இமேஜஸ்.
 
 

வெலிங்டனில் நடைபெறும் நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேசம் தன் முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 542 ரன்கள் எடுத்து அபாரமாக ஆடி வருகிறது.

இடது கை ஆல் ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன் 276 பந்துகளில் 31 பவுண்டரிகளுடன் 217 ரன்கள் எடுக்க, முஷ்பிகுர் ரஹிம் 260 பந்துகளில் 23 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 159 ரன்கள் எடுக்க, இருவரும் சேர்ந்து 5-வது விக்கெட்டுக்காக 359 ரன்களைச் சேர்த்து சாதனை புரிந்துள்ளனர், வங்கதேச கிரிக்கெட் வரலாற்றில் இதுவே அதிகபட்ச கூட்டணி ரன்கள். 542 ரன்கள் என்பது வங்கதேசத்துக்கு வெளியே இரண்டாவது பெரிய ஸ்கோராகும்.

ஷாகிப் அல் ஹசன் 217 ரன்கள் வங்கதேச கிரிக்கெட் டெஸ்ட் வரலாற்றில் அதிகபட்ச தனிப்பட்ட ரன்களாகும். பிட்ச் பேட்ஸ்மென்களின் சொர்க்கமான நிலையில் ஷாகிப், முஷ்பிகுர் இணைந்து கிட்டத்தட்ட 83 ஓவர்களை விளையாடி 359 ரன்களைச் சேர்த்தனர். ஷாகிப் அல் ஹசன் ஸ்ட்ரைக் ரேட் 78 ரன்கள் என்பதும் இரட்டைச் சதம் எனும்போது மிகப்பெரிய சாதனையே.

டிம் சவுதி, டிரெண்ட் போல்ட், நீல் வாக்னர், கொலின் டி கிராண்ட்ஹோம் இருந்தும் ஷாகிப், முஷ்பிகுர் இணையை உடைக்க முடியவில்லை.

முதல் நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட வங்கதேசம் தமிம் இக்பாலின் 50 பந்து 56 ரன்களுடன் 154/3 என்று இருந்தது, மொமினுல் ஹக் 64 ரன்களுடனும் ஷாகிப் 5 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இன்று காலை சவுதி பந்தை மொமினுல் எட்ஜ் செய்து 64 ரன்களில் வெளியேறினார். 160/4.

அதன் பிறகு நியூஸிலாந்து பந்து வீச்சு பிசுபிசுத்துப் போக 61 ஓவர்களில் 273 ரன்களை விட்டுக் கொடுத்தது. முஷ்பிகுர் தொடக்கத்தில் ஏகப்பட்ட ஷார்ட் பிட்ச் பந்துகளை எதிர்கொண்டு அடிகள் வாங்கினார், விரல்களை பந்து ‘பச்’ என்று அடித்தது. ஆனால் அவர் தைரியத்தை விட்டுக் கொடுக்கவில்லை. ஷார்ட் பிட்ச் பந்துகளுக்கிடையே புல் லெந்த் பந்துகளை அவர் பவுண்டரிகளாக மாற்றினார். ஆஃப் திசையில் கவர், மிட் ஆஃப், பாயிண்ட், லெக் திசையில் ஆன் டிரைவ், பிளிக், என்று அவர் கடைசியில் பாயிண்டில் அடித்த ஷாட் மூலம் தனது 4-வது சதத்தை எடுத்தார்.

ஆனால் மறுமுனையில் ஷாகிப் அல் ஹசனுக்கு ஷார்ட் பிட்ச் பந்துகள் எழும்பவில்லை இதனால் அவர் புல், கட் ஷாட்கள் என்று அசத்தினார். 150 பந்துகளில் 100 ரன்களை ஷாகிப் எடுத்தார். வங்கதேச கிரிக்கெட்டில் அதிக டெஸ்ட் ரன்கள் பட்டியலில் ஷாகிப் தற்போது 2-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

191 பந்துகளில் 150 ரன்களை 22 பவுண்டரிகளுடன் எட்டிய ஷாகிப் அல் ஹசன் 253 பந்துகளில் 30 பவுண்டரிகளுடன் இரட்டைச் சதம் எடுத்தார். கடைசியில் 217 ரன்கள் எடுத்த நிலையில் வாக்னரிடம் ஆட்டமிழந்தார். முஷ்பிகுர் ரஹிம் முன்னதாக வாட்லிங்கிடம் கேட்ச் கொடுத்து போல்ட்டிடம் வீழ்ந்தார். ஆஃப் ஸ்பின்னர் மெஹதி ஹசன் மிராஸ் வாக்னர் பந்தில் ரன் எடுக்காமல் ஆட்டமிழந்தார். ஆட்ட முடிவில் சபீர் ரஹ்மான் 10 ரன்களில் இருந்தார். நியூஸிலாந்து தரப்பில் நீல் வாக்னர் 124 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். போல்ட், சவுதி தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

டாஸ்வென்று வங்கதேசத்தை பேட் செய்ய அழைத்ததற்கு வில்லியம்சன் வருந்தியிருப்பார் என்பதோடு முஷ்பிகுர் ரஹிம் 28 ரன்களில் இருந்த போது 2-வது ஸ்லிப்பில் ஜீத் ராவல் விட்ட கேட்ச் மற்றும் ஷாகிப் அல் ஹசன் நேற்று 4 ரன்களில் இருந்த போது மிட்செல் சாண்ட்னர் எளிதான வாய்ப்பையும் கோட்டை விட்டதை நினைத்து நிச்சயம் கோபமடைந்திருப்பார்.

வங்கதேச கிரிக்கெட்டில் மறக்க முடியாத ஒரு நாளாக இது அமைந்துள்ளது. பிட்ச் பேட்டிங்கிற்கு சொர்க்கமானாலும் வங்கதேச ஸ்பின்னர்கள் நியூஸிலாந்துக்கு நெருக்கடி கொடுக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக மெஹதி ஹசன் மிராஸ் உள்ளார்.

http://tamil.thehindu.com/sports/ஷாகிப்-217-முஷ்பிகுர்-159-சாதனை-கூட்டணி-நியூஸி-பவுலிங்கைப்-புரட்டிய-வங்கதேசம்-5427/article9478550.ece

Link to comment
Share on other sites

வங்காள தேசம் 595 ரன்கள் குவித்து டிக்ளேர்: நியூசிலாந்து பதிலடி

 

வெலிங்கடனில் நடைபெற்று வரும் முதல் டெஸ்டின் முதல் இன்னிங்சில் வங்காள தேசம் 595 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்துள்ளது.

 
 
 
வங்காள தேசம் 595 ரன்கள் குவித்து டிக்ளேர்: நியூசிலாந்து பதிலடி
 
வங்காள தேசம் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் வெலிங்டனில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய வங்காள தேச அணி சாஹிப் அல் ஹசன் (217) மற்றும் முஷ்பிகுர் ரஹிம் (159) ஆகியோரின் அபார ஆட்டத்தால் நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 542 ரன்கள் குவித்திருந்தது, சபிர் ரஹ்மான் 10 ரன்கள் எடுத்த நிலையில் களத்தில் இருந்தார்.

இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. சபிர் ரஹ்மான் அவுட்டாகாமல் 54 ரன்கள் எடுக்க வங்காள தேசம் அணி 152 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 595 ரன்கள் குவித்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. நியூசிலாந்து அணியின் வாக்னர் அதிகபட்சமாக 4 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

BBD291E3-81F0-41D4-B91D-D8439797212C_L_s
விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் கம்ருல் இஸ்லாம் ரபி

பின்னர் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர் லாவல் 27 ரன்களில் ஆட்டம் இழந்தார். ஆனால் மற்றொரு தொடக்க வீரர் லாதம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்தார். அவருக்கு துணையாக கேப்டன் வில்லியம்சன் 53 ரன்னும், ராஸ் டெய்லர் 40 ரன்களும் சேர்த்தனர்.

334AFEFB-FAF1-4BE7-B5AF-DF1A54B4F988_L_s
விக்கெட் வீழ்த்திய தஸ்கினை பாராட்டும் சக வீரர்கள்

நியூசிலாந்து அணி 3-வது நாள் ஆட்ட முடிவில் 77 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 292 ரன்கள் எடுத்துள்ளது, லாதம் 119 ரன்களுடனும், நிக்கோல்ஸ் 35 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். தற்போது வரை நியூசிலாந்து அணி 303 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது. கைவசம் 7 விக்கெட்டுக்கள் உள்ளதால் வங்காள தேச அணியின் ஸ்கோரை எட்ட வாய்ப்புள்ளது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/01/14143759/1062134/wellington-test-bangladesh-595-8-newzealand-292-for.vpf

Link to comment
Share on other sites

வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட்: நியூசிலாந்து 539 ரன் குவிப்பு

 

வங்காளதேசம் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து 539 ரன் குவித்து பதிலடி கொடுத்தது

 
 
வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட்: நியூசிலாந்து 539 ரன் குவிப்பு
 
நியூசிலாந்து - வங்காள சேதம் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் வெல்லிங்டனில் நடைபெற்று வருகிறது.

வங்காளதேசம் முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்புக்கு 595 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. ஷகிப்-அல்-ஹாசன் இரட்டை சதமும் (217 ரன்), முஷ்பீகுர் ரகீம் சதமும் (159 ரன்) அடித்தனர். பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய நியூசிலாந்து நேற்றைய 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 292 ரன் எடுத்து இருந்தது. தொடக்க வீரர் டாம் லாதம் சதம் அடித்தனர். அவர் 119 ரன்னும், நிக்கோலஸ் 35 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

இன்று 4-வது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து விளையாடிய நியூசிலாந்து 539 ரன் குவித்து பதிலடி கொடுத்தது. டாம் லாதம் 177 ரன்கள் குவித்தார். 56 ரன்கள் முன்னிலையில் வங்காளசேதம் 2-வது இன்னிங்சை ஆடியது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/01/15135938/1062195/NZ-539-score-against-bangladesh-1st-test-match.vpf

Link to comment
Share on other sites

முதல் இன்னிங்ஸில் 595 ரன் குவித்தும் தோல்வியில் சாதனை படைத்த வங்கதேசம்! #NZvsBAN

உள்ளூரில் மட்டுமே புலிகள் என அறியப்பட்டு வந்த வங்கதேசப் புலிகள் அயல் மண்ணிலும் பட்டையைக்  கிளப்பத் தொடங்கியிருக்கின்றனர். வங்கதேசம்  நியூசிலாந்து மண்ணில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. இரண்டு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட்  கிரிக்கெட் போட்டி வெலிங்டன் பேசின் ரிசர்வ் மைதானத்தில்  தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன்  கேன் வில்லியம்சன் பவுலிங்கைத் தேர்ந்தெடுத்தார்.

வங்கதேசம் நியூசிலாந்து அணி இடையேயான டெஸ்ட் போட்டி

வேகப்பந்துக்கும், பேட்டிங் செய்வதற்கும் சொர்க்கபுரியாக  திகழக்கூடியவை நியூசிலாந்து மைதானங்கள். நியூஸி மண்ணில் அந்த  அணியை டெஸ்ட் போட்டிகளில் வீழ்த்துவது என்பது லேசுப்பட்ட காரியம் கிடையாது. வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் டிரெண்ட் போல்ட், டிம் சவுத்தீ,  நீல் வாக்னர், மிச்சேல் சான்டனர், காலின் டி கிராண்ட்ஹாம் என பிரதான பந்துவீச்சாளர்கள் நியூசிலாந்து அணியில் இடம் பெற்றனர். மெஹந்தி ஹாசன், டஸ்கின் அகமது, கம்ருல் இஸ்லாம் ரபி, சுபாசிஸ் ராய் ஆகிய பந்துவீச்சாளர்கள் வங்கதேசம் பக்கம் இருந்தனர். இதில் டஸ்கின் அகமதுவைத் தவிர வேறு யாருக்கும் ஒரளவு கூட சர்வதேச போட்டிகளில் ஆடிய அனுபவம் கிடையாது. இதனால் வங்கதேச அணியை எளிதில் வீழ்த்திவிடமுடியும் என நம்பிக்கையோடு களமிறங்கியது நியூசிலாந்து.

முதல் நாள் கடுமையான புயல் வீசியதால், கிரிக்கெட் ஆட்டம் அடிக்கடி தடைபட்டது. அன்றைய தினம் வெறும் 40 ஓவர்கள் விளையாட முடிந்தது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 154/3 என்ற நிலையில் இருந்தது வங்கதேசம். மறுநாள் ஷகிப் அல் ஹசன், முஷ்பிகுர் ரஹீம் இருவரும் இணைந்து ஒரு அசாத்தியமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த இருவரையும் பிரிப்பதற்குள் மண்டை காய்ந்தது நியூசிலாந்து. இருவரும் சீராக பவுண்டரி விளாசிக்கொண்டே இருந்தனர். ஐந்து  ரன்னுடன் அன்றைய தினம் ஆட்டத்தை தொடங்கிய ஷகிப்  அல் ஹசன் அபாரமாக விளையாடி இரட்டைச் சதம் அடித்தார். முஷ்பிகுர் ரஹீமும், ஷகிப்பும் இணைந்து ஐந்தாவது விக்கெட்டுக்கு 359 ரன்கள் சேர்த்து வரலாற்றுச் சாதனை படைத்தனர். முஷ்பிகுர் ரஹீம் 260 பந்துகளைச் சந்தித்து, 23 பவுண்டரி, ஒரு சிக்ஸருடன் 159 ரன்களைக்  குவித்த நிலையில்  அவுட் ஆனார். அதற்கடுத்த சில ஓவர்களிலேயே ஷகிப்பும் நடையை கட்டினார். 276 பந்துகளில் 31 பவுண்டரிகள் உதவியுடன் 217 ரன்களை எடுத்து அவுட் ஆனார்  ஷகிப். டாப் ரேட்டிங் அணியுடனான டெஸ்ட் போட்டியில், அதுவும் அந்த அணியின் சொந்த மண்ணில் வங்கதேச வீரர் ஒருவர் இரட்டைச் சதம் எடுப்பது வரலாற்றுச் சாதனையாகும்.

வங்கதேசம் அணியைச் சேந்த ஷகிப் அல் ஹசன் இரட்டைச் சதம் விளாசினார்.

இரண்டாவது நாள் ஆட்ட நேர இறுதியில் 543/7 என இருந்தது வங்கதேசம். இரண்டாவது நாள் மட்டும் 389 ரன்களை அதிரடியாகச் சேர்ந்திருந்தது வங்கதேசம். மூன்றாவது நாள் வங்கதேச வீரர் சபீர்  ரஹ்மான் அரை சதம் எடுத்த பிறகு 595/8 என்ற நிலையில் டிக்ளேர் செய்தது வங்கதேசம்.

இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து, மெதுவாக இன்னிங்ஸை ஆரம்பித்து. தொடக்க வீரர் டாம் லாதம் நங்கூரமிட்டு ஒரு பக்கம் ரன்களை குவித்து கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் நிக்கோலஸ், வில்லியம்சன், சான்ட்னர் ஆகியோர்  தங்கள் சார்பாக அரைசதம் விளாசினார். லாதம் 177 ரன்கள் எடுக்க, நியூசி 539 ரன்களுக்கு இன்னிங்ஸை இழந்தது. இதையடுத்து 56 ரன்கள் முன்னிலையுடன் ஆட்டத்தை ஆரம்பித்தது வங்கதேசம். இன்னும் இருநூறு ரன்களை சேர்த்திருந்தால் நியூசிலாந்துக்கு எளிதாக நெருக்கடியை தந்திருக்க முடியும் என்ற நிலையில் வங்கதேசம் சொதப்ப ஆரம்பித்தது. நீல் வாக்னர், சான்ட்னர்  சுழற்பந்து வீச்சில் வங்கதேசம் சுருண்டது. முதல் இன்னிங்சில் இரட்டைச் சதம் அடித்த ஷகிப், இந்த இன்னிங்சில் டக் அவுட் ஆனார். முஷ்பிகுர் ரஹீம் காயமடைந்து ரிட்டையர்டு ஆனார். சபீர் ரஹ்மான் மட்டுமே அரைசதம் கடந்தார். இதையடுத்து 160 ரன்களுக்கு இன்னிங்ஸை இழந்தது வங்கதேசம். 

Tom latham smashes century against bangladesh

217  ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் பேட்டிங் பிடித்த நியூசிலாந்து, டெஸ்ட் போட்டியை ஒருநாள் போட்டி போல  ஆடியது. தொடக்க வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தாலும் வில்லியம்சனும், ராஸ் டெய்லரும் இணைந்து அணியை வெற்றி பெற வைத்தார்கள். குறிப்பாக கேன் வில்லியம்சன் 90 பந்துகளில் 15 பவுண்டரியோடு 104 எடுத்து நாட் அவுட்டாக இருந்து வெற்றிக்கு வித்திட்டார். 

வெற்றியை நெருங்கி வந்து கோட்டை விடுவது வங்கதேசத்துக்கு வாடிக்கையாக இருக்கிறது. வெற்றி மிதப்பில் தான் இந்த போட்டியையும் இழந்திருக்கிறது  வங்கதேசம்.

கடைசி நாளில் மேஜிக் வெற்றி  பெற்ற நியூசிலாந்து அணிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. அதே சமயம் முதல் இன்னிங்சில் 595  ரன் குவித்த பிறகு ஒரு அணி தோல்வி அடைவது வரலாற்றில் இது தான் முதல் முறை.  122 ஆண்டுகளுக்கு முன்னர் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 586 ரன்கள் எடுத்தும், இங்கிலாந்திடம் தோல்வியைத் தழுவியது. ஆஸ்திரேலியாவிடம் இருந்த அந்த மோசமான சாதனையை 122 ஆண்டுகளுக்கு பிறகு தனது  வசமாக்கியிருக்கிறது வங்கதேசம்.

http://www.vikatan.com/news/sports/77901-bangladesh-lost-the-match-after-scored-595-runs-in-the-first-innings.art

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 😀..... மிக்க நன்றி. இல்லை, நான் இங்கு முந்தி எழுதவில்லை. இந்த மாதம் முதலாம் திகதி தான் நான் இங்கு இணந்தேன். இது சத்தியமான உண்மை. ஆனால் பல வருடங்களாக களத்தை வாசித்து வருகின்றேன்.
    • Courtesy: Mossad   இவ்விரு கருத்துருவாக்கங்களும் தற்கால இலங்கைத் தமிழ் அரசியல்ச் சூழலில் சுமந்திரன் என்ற தமிழரசுச் கட்சியின் முக்கிய பிரமுகருக்கு உரித்துடையவை. இருபதாம் நூற்றாண்டின் இறுதிக் காலப்பகுதிகளில் மென் வலு என்ற கருத்துடைவாத வார்த்தை ஜோசப் நையலினால் பிரபலப்படுத்தப்பட்டாலும் இருபத்தியோராம் நூற்றாண்டில் சர்வதேச உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும், கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்கப்படும் ஒரு நியாயப்படுத்தல் பதமாக மாறி முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது. இவ் வார்த்தைப்பதமானது அரசியலில் பிரயோகிக்கப்படும் சந்தர்ப்பத்தில் குறித்த தளத்திற்கு ஒரு கொள்கைப் பிரகடனத்தின்பால் இறமையுடன் செயற்படும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசாக அமைந்திருக்க வேண்டும். அரசுக்கு மாத்திரமே ராஜதந்திர நடவடிக்கைகள் மற்றும் நகர்வுகளை மேற்கொள்ள முடியும். பூகோள அரசியலின் நகர்வுகளுக்கு அமைவான நகர்வுகளை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட இலக்கினை அடைவதற்காக மேற்கொள்ள முடியும். வெவ்வேறுபட்ட இரு வேறு நிலைப்பாட்டை உடைய அதிகார இறமைத் தளங்கள் தான் ஒன்றின் மீது மற்றொன்று மென்வலுவைப் பிரயோகிக்க முடியும். தொடர்தேர்ச்சியாக கால ஓட்டத்திற்கு அமைவாக மாற்றம்பெறும் தேவைகளை அடைவதில் பிரயோகிக்கப்படும் நெகிழ்ச்சியைக் குறிக்கும் ஒரு பதமாக மென்வலுப்பிரயோகம் என்பது அர்த்தப்படுத்தப்பட முடியும்.   அரசியலில் மென் வலுவைப் பிரயோகத்திற்கு உட்படுத்துவதற்கு இறமையுடைய மக்கள் ஆணையைப்பெற்ற ஒரு தளம் இன்றியமையாதது. அத் தளத்தின் இலக்குகள் மற்றும் தேவைகள் என்பன கால மாற்றத்திற்கு உட்பட்டவைகளாகவும் காலத்திற்கு காலம் மாறிகளாகவும் காணப்படுதல் அவசியமானது. கட்சிகள் மென்வலுவைப் பாவிக்க முடியுமா என்றதொரு ஆழமான கேள்விவரும் நிலையில், ஒரு நாட்டுக்குள் இருக்கும் கட்சிகள் இயல்பான நிலையில் ஒன்றுடன் ஒன்று மென்வலுவில் அணுக முடியாது. ஒரு கட்சி தன்னுடன் சம பயணத்தில் இருக்கும் பிறிதொரு கட்சியுடன் மென்வலுவில் அணுகுகின்றது என்றால் அணுகப்படும் கட்சியை விடவும் அணுகும் கட்சி மிகவும் நெய்மையான நிலையில் இருப்பதையும் கொள்கைகள் குன்றி வீரியம் குறைந்து வழியற்ற நிலையில் பிறிதொரு நிலைப்பாடுடைய கட்சியை தனது நலனுக்காக ஆதரிக்கின்றது என்ற கருத்து மேலோங்கலும், அணுகும் கட்சிக்கு கொள்கைகள், கோட்பாடுகள் என்பன நிலையானதாக இருக்க முடியாது என்பதையும் வெளிப்படுத்துவதாக அமையும். தமிழரசுக்கட்சியில் மென்வலு அரசியல் முன்னெடுப்புக்கள் தொடர்பில் பேசும்போது சுமந்திரனைத் தவிர்த்து ஒருவிடயங்களையும் பேச முடியாது. காரணம் தமிழரசுக் கட்சியில் மென்வலு அரசியலின் பிதாமகர் சுமந்திரனே ஆவர். தமிழரசுக் கட்சியானது அல்லது அன்றைய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பானது மென்வலு அரசியல் பிரயோகத்தினை இலங்கையின் அரசாங்கத்துடன் மேற்கொண்டிருந்தது. இங்கே தான் விடயச் சிக்கல்கள் உருவாகின்றது. இலங்கை அரசுடன் யாருக்கு மென்வலு நகர்வை மேற்கொள்ள முடியும்? இரு தரப்பும் வென்று அரசு அமைக்கும் ஒரே நோக்கத்திற்காக தேர்தலில் போட்டியிடுகின்றார்கள், ஒவ்வொரு கட்சியும் கூட்டணியும் தனித்துவமான தங்களது பண்புகளைக் கூறி வாக்குச்சேகரிக்கின்றார்கள். ஒரு தரப்பினர் ஆட்சியமைக்கின்றார்கள், மற்றைய தரப்புக்கள் எதிர்த்தரப்பு ஆகின்றார்கள். எதிர்த்தரப்பு ஆன தழிழரசுக்கட்சி அல்லது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆளுந்தரப்புடன் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் பொருத்திக்கொள்ளும் இணக்கங்களுக்கு மென்வலு அணுகுமுறை என அர்த்தம் கற்பிப்பதை விடவும் டக்ளஸ் தேவானந்தாவின் கட்சி அமைக்கப்பட்ட அரசாங்கத்துடன் இணைந்து இணக்க அரசியல் என்ற பதத்தினை பாவித்துக்கொண்டு பயணிப்பது நேர்மையானதும் உண்மையானதும் ஆகின்றது.   அரசியல் கட்சிகள் மென்வலு அரசியலைப் பிரயோகிப்பதை தெளிவாக வரையறுப்பதாயின், தேர்தலில் விஞ்ஞாபன ரீதியாக முன்வைக்கப்பட்ட விடயதானங்களை அப்பட்டமாக மீறி வாக்களித்த வாக்காளர்களையும் கட்சியின் தொண்டர்களையும் ஏமாற்றி அவ் வாக்குக்களால் ஆட்சியேறிய வேட்பாளர்கள் சுயதேவைக்காக தீர்மானங்களை மாற்றி அவற்றிற்கு அர்த்தம் கற்பிக்க பிரயோகிக்கும் ஒரு கவசவாய்க்கியமே மென்வலு என வரையறுக்கலாம். தமிழரசுக் கட்சி யார்மீது மென்வலு பிரயோகித்திருக்க முடியும்? ஒரு கட்சி தன்னுடைய கொள்கைகள், கோட்பாடுகள் மற்றும் பிரகடனங்களுடன் இணங்கிப்போகின்ற நிலையுடன் ஏதோ ஒரு பொது சிந்தனைக்காக இணைந்துள்ள ஒரு கட்சியுடன் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிக் கூட்டணியுடன் ஒரு நெகிழ்ச்சித் தன்மையான அணுகு முறைகளை கையாள முனைவதுதான் மென்வலு அணுகுமுறையாகும். மாறாக கட்சிகள் என்ற நிலையில் இருந்து ஆட்சியாளர்களானபின்னர் அது அரசாங்கம் என அழைப்படும். இவ்வாறு அரசாங்கத்துடன் மென்வலு அணுகுமுறை என கூறி ஒட்டிக்கொள்வது நிபந்தனைகள் அற்ற ஆதரவு என்பதே நிதர்சனமானது. இதற்கு பிரதியுபகாரமாக ஆட்சியாளர்கள் தங்களை தக்கவைப்பதற்காக இவ்வாறான கட்சிகளுக்கு பல சலுகைகளை வழங்கவோ அல்லது மென்வலுதாரர்கள் பெற்றுக்கொள்ளவோமுடியும். தமிழரசுக் கட்சியானது தான் அடங்கு கூட்டமைப்பாக உள்ள ஏனைய கட்சிகளுடனோ அல்லது கூட்டணிகளுடனோதான் மென்வலு அணுகுமுறையைக் கையாள முடியும். சற்று ஆழமாக நோக்கின் தமிழ் தேசிய கூட்டமைப்பில் காணப்படும் அங்கத்துவ கட்சிகளுடன் தமிழரசுக் கட்சி மென்வலுவைப் பிரயோகிக்க வேண்டுமே அன்றி அரசாங்கத்துடன் அல்ல என்பது மாத்திரமே யதார்த்தமாக உள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆரம்பத்தில் அகில இலங்கைத் தமிழ் மக்கள் காங்கிரஸ் தொடக்கம் ஈற்றில் ரெலோ, புளொட் வரைக்கும் மென்வலுவின் தோல்வி காரணமாகவே சிதைந்து சென்றன என்பதை யாரும் மறுக்க முடியாது. இவ் அனைத்து சிதைவுகளிலும் ஒற்றுமைத்தன்மையான விடயமாக காணப்படுவது வெளிச்சென்ற அத்தனை கட்சிக்காரர்களது கைகளும் காட்டிய காரணகர்த்தா சுமந்திரன் மாத்திரமே. இவ்வாறான நிலையில் இலங்கை அரசாங்கத்துடன் தமிழ்தேசிய கூட்டமைப்பு மேற்கொண்ட இணக்க அரசியலை மென்வலு அணுகுமுறை என சுமந்திரன் தரப்பு விளிப்பது வேடிக்கைக்குரிய கருத்தாடல் ஆகின்றது. தமிழரசுக் கட்சி தான் அடங்கிய மற்றும் முன்னிலையில் இருந்த கூட்டணியில் கட்சிகளுக்கு இடையே உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும,; கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்க வேண்டிய மென்வலு அணுகுமுறையை தவற விட்டு தமிழ் மக்களது தரப்பின் அரசியல் ஸ்திரத்தினை அடியோடு சாய்த்துவிட்டது என்ற பழியை எவ்வகையிலும் கடந்துசெல்ல முடியாது. இவ் அனைத்து கைங்கரியங்களும் தனியே சுமந்திரன் என்றதொரு ஒற்றை அரசியல்வாதியை மாத்திரமே நேரடியாகச் சாருகின்றன. மறுபுறம் இவற்றிற்கு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காது அனுமதித்த தமிழரசுக் கட்சியின் ஏனைய கட்சி உறுப்பினர்களையும் மௌமாக அனுமதித்தது, அல்லது இடையூறுகள் மேற்கொள்ளாது துணைபுரிந்தது என்ற வகையில் தவறானவர்கள் ஆக்குகின்றது. அவசியமான இடத்தில் பிரயோகிக்கத் தவறிய மென்வலுவை தங்களது சுயதேவை நிகழ்சிநிரல் நிறைவேற்றங்களுக்காக பாவிக்கப்பட்டதா? என்ற கேள்விக்கு தமிழரசுக் கட்சியின் 2024 கட்சித்தலைவர் போட்டி தேர்தல் வரைக்கும் சென்றதும் அதில் ஒரு வேட்பாளராக சுமந்திரன் முன்னிலைப்பட்டதற்குமுரிய அடிப்படை நடவடிக்கைத் தொடர்புகள் பற்றி சற்றே சிந்திக்கவேண்டியுள்ளது. சுமந்திரனின் ஆதரவுத் தளத்தில் உள்ள தமிழரசுக் கட்சிக்காரர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர், மாகாண சபை உறுப்பினர் மற்றும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் பதவிகளை வழங்குவதாயின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற சாம்பார் வாளியில் இருந்து தமிழரசுக் கட்சி என்ற கரண்டியை வெளியே எடுக்கவேண்டிய தேவை சுமந்திரனுக்கு பல ஆண்டுத் திட்டமிடலில் இருந்திருக்கின்றது என்ற விடயம் புலப்படுகின்றது.   ஆக மென்வலு என்பதற்குரிய வரைவிலக்கணத்தினை வினயமாக பாவித்து காரியமாற்றப்பட்டிருந்தால் தழிழர் தரப்பின் அரசியல் இன்னும் ஒரு படி முன்னகர்ந்து இருக்க வேண்டும். இங்கே மாறாக தமிழர் அரசியல் சுக்குநூறாகக் காணப்படுகின்றது. தமிழர் தரப்பின் எதிர்காலம் தொடர்பில் தெளிவான எந்தவொரு நடைமுறை அரசியல் நோக்கமும் தமிழ் தரப்பில் உள்ள அரசியல் கட்சிகளிடம் இல்லை. இவற்றுக்கு அப்பால் குறைந்தபட்சம் தமிழர்தரப்பு ஒற்றுமைகூட இல்லை. இருந்த ஒற்றுமையையும் சீர்குலைத்த சிறப்பு சுமந்திரனை மட்டுமே சார்ந்ததாக கடந்தகால செயற்பாடுகள் காண்பிக்கின்றன. மேலும், மென்வலுற்கு கிடைத்த பிரதியுபகாரமாக அமைச்சரவை அந்தஸ்துக்கு ஒப்பான வசதி வாய்ப்புக்களுடன் நல்லாட்சிக் காலத்தில் சுமந்திரன் நாடாளுமன்ற உறுப்பினராக வலம்வந்தார். உணர்வுமிக்க வாக்காளர்களுக்கு தனது செயற்பாடுகள் மீது நியாயம் கற்பிக்க கையாண்ட கவச வாய்க்கியமே மென்வலுவாக அர்த்தம்கொள்ளப்பட்டுள்ளது. மக்களது அங்கீகாரத்தில் அதிகாரத்தில் இருக்கும் அத்தனை அரசியல்வாதிகளும் எண்ணவேண்டும் தங்களது செயற்பாடுகளுக்குரிய அங்கீகாரம் பொதுவாக்காளர்ப் பெருமக்கள் போட்ட பிச்சையே அன்றி தங்கள் தங்களுக்குரிய ஆளுமைகள், ஆற்றல்கள் மற்றும் திறன்களால் கிடைக்கப்பெற்றவைகள் அல்ல என்றும், அலரி மாளிகையில் பருகும் ஒருகோப்பை விசேட அதிதிகளுக்கான தேனீர் கூட உங்களுக்கு உரியவைகள் அல்ல அது மக்களது ஆணைக்கு உரியவைகள் என்பதை தெளிவாக உணரவேண்டும். அலரி மாளிகையில் அதிகூடிய விசேட அதிதிகளுக்குரிய தேனீர் பருகிய முதல்நிலைத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் என்றால் இன்றுவரையான காலப்பகுதியில் சுமந்திரன் மட்டுமே முன்னிலை வகிக்கின்றார். தாங்கள் செய்ய வேண்டிய கருமம் என்ன என்பதை குறைந்தபட்சம் அறியாத அல்லது பின்பற்றாத அரசியல் தலைமைகள் தமிழ் மக்களது உரிமை மற்றும் வாழ்வியல் மேலும் மேலும் சிக்கல்ப்பட கோடரிக் காம்புகளாக வலம் வருவார்களே அன்றி மீட்டார்கள் இல்லை என்ற வாதத்தினை மீணடும் உறுதிசெய்து செல்கின்றது சுமந்திரனின் மென்வலு பிரயோகம். உட்கட்சி ஜனநாயகம் என்ற பதம் தமிழரசுக் கட்சிக்குள் யாப்பிற்கு புறநீங்கலாகவும், எழுபது வருடங்களுக்கு மேற்பட்ட கால ஓட்டத்தில் இருக்காத ஒரு தத்துவமாகவும் 2024 தழிழரசுக்கட்சித் தலைவர் தெரிவிற்கான போட்டியில் இருந்து சுமந்திரன் வெளியிட்டுவரும் ஒரு நாகரீகக் கருத்தாக அமைந்திருக்கின்றது. உட்கட்சியின் தீர்மானங்கள் ஒவ்வொன்றும் ஜனநாயகப் பண்பில் எட்டப்பட்டவைகள் ஆக இருப்பின் அவை மிக மிக சிறப்பானது. தலைவர் பதவிக்காக சுமந்திரன் உட்கட்சி ஜனநாயகத்தின் உச்சப்பட்ச நம்பிக்கையில் போட்டியிட்டிருந்தார். சுமந்திரன் நிழல்த் தலைவராக தமிழரசுக் கட்சியில் செயற்பட்ட காலத்தில் நடைபெற்ற உட்கட்சி சம்பவங்கள் சிலவற்றை பட்டியலிட்டு பார்க்கையில், 01.தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகளுக்குள் ஏனைய கட்சிகளுக்கு வழங்கிய செயன்முறைப் பெறுமானம். 02.தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து கட்சிகள் வெளியேறியமை மற்றும் உள்வாங்கப்பட்டமை. 03.போர்க்குற்ற சர்வதேச விசாரணை முடிந்து விட்டது, 04.விக்னேஸ்வரன் முதலமைச்சராக இருந்த காலப்பகுதியில் ஏற்பட்ட முரண்பாடு. 06.மாவை சேனாதிராசாவுக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உரிமை மறுத்து கலையரசனுக்கு வழங்கியது. 07.சம்பந்தரது முதுமை காரணமாக பதவிவிலக அவரில் அக்கறை கொண்டு இரஞ்சியது. உதாரணத்திற்கு இது போன்ற சில பிரபலமான உட்கட்சிச் செயற்பாடுகளில் உட்கட்சி ஜனநாயகம் அறிந்து செயற்பட்ட தருணங்களை வாக்காளர்கள் உண்மையை உண்மையாக சிந்திக்க வேண்டும் என கேட்டுக்கொண்டு, சுமந்திரன் மீண்டும் உட்கட்சியின் ஜனநாயகத்தினை அறிவதற்காக தமிழரசுக் கட்சியின் தலைமைக்கு போட்டியிட்டாரம். இன்று கட்சி வழக்குவரை முன்னேறியிருக்கின்றது. ஜனநாயகம் என்றால் என்ன? என்பதற்கு சுமந்திரன் ஒரு நேர்காணலில் வழங்கிய ஒரு உவமானக் கதையுடன், ஒரு குடும்பத்தில் மூன்று பெண்பிள்ளைகளும் ஒரு ஆண்பிள்ளையும் இருக்கின்றார்கள். இவர்களது விடுமுறைக்கு வெளியே செல்ல குடும்பமாக திட்டமிடும் சந்தர்ப்பத்தில் ஆண்பிள்ளை ஒரு சாகசம் போன்றதொரு சுற்றுலாவை விரும்புகின்றார், பெண்பிள்ளைகள் மூவரும் இவ்வகையைத் தவிர்த்து ஒருமித்த குரலில் வேறு ஒரு விடயத்தினை தெரிவு செய்வார்கள். இவ்வாறான சந்தர்ப்பத்தில் ஜனநாயக தீர்மானமாக பெண்பிள்ளைகளின் தெரிவுதான் அமையும் என்ற கருத்துப்பட ஒரு அழகான கதையைக் கூறியிருந்தார். இன்று உட்கட்சி விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கின்றது. இச் சந்தர்ப்பத்தில் ஏழுபேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்திருக்கின்றார்கள். இதில் சுமந்திரனை தவிர ஏனைய அறுவரும் ஒத்த நிலைப்பாட்டில் நீதிமன்றத்திற்கு தங்களது நிலைப்பாட்டினை அறிவித்திருக்கின்றார்கள். அதன்பால் வழக்கு முடிவுறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மாறாக மறு முனையில் சுமந்திரன் ஏனைய அறுவரது நிலைப்பாட்டுடனும் பொருந்தாது தான் மாத்திரம் வழக்கினை தொடர இருப்பதாக தெரிவித்திருப்பதாக அறிய முடிகின்றது. சுமந்திரன் தலைவர் தெரிவில் கூறிய உட்கட்சி ஜனநாயகம், சுமந்திரன் கூறிய உவமானக் கதை ஆகியவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது சுமந்திரனது இந்த தீர்மானம் மென்வலுப்பிரயோகமா? அல்லது உட்கட்சி ஜனநாயகமா? எந்த வகுதிக்குள் அடங்கும் என தலையைப் பிய்த்துக்கொள்ளவேண்டியுள்ளது. ஈற்றில் ஒன்றுமட்டும் தெளிவாகின்றது தன் தன் வசதிக்காக பல பல தத்துவங்களை பேசுபவர்கள் தவறிழைப்பவர்கள் என்பதை நிறுவுவதில் சுமந்திரனும் தவறவில்லை என்பதுடன், இவ்வழக்கு வென்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே, வழக்கு தோற்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே ஆகும். எதிர்வரும் தேர்தல் மிகவும் சவாலானது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்து மனோகணேசன் தமிழரசுக் கட்சியில் தேர்தலில் தோன்றினால் எப்படியோ அதையும் தாண்டியதொரு நிலையிலேயே சுமந்திரனும் தேர்தலில் தோற்றவேண்டியிருக்கும். அடுத்த தேர்தலில் சுமந்திரன் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தினை தவிர்த்து மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்டு வெல்வாராக இருப்பின் தமிழரசுக் கட்சிக்குள் மென்வலுவும் உட்கட்சி ஜனநாயகமும் உயிர்ப்புடன் உள்ளது என்பதை நிறுவிக்காட்டமுடியும்.   பொறுப்பு துறப்பு! இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Independent Writer அவரால் எழுதப்பட்டு, 28 March, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. https://tamilwin.com/article/sumandran-politics-and-internal-party-democracy-1711577764
    • abaan மனிசி ஏன் இவ்வளவு பிடிவாதம் பிடிக்குது இலங்கையின் பெண்கள் கொஞ்சம் உசாரான ஆட்கள் தான் .
    • 28 MAR, 2024 | 09:36 PM   யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவர் ஶ்ரீ சாய் முரளி எஸ்  யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்.சி.பி விக்ரமசிங்கவை யாழ்ப்பாணப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் சந்தித்தார்.  அதன் போது இடம்பெற்ற கலந்துரையாடலில், யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத் தளபதி, இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவை நினைவு கூர்ந்தார், இரு நாடுகளுக்கும் இடையில் மிக உயர்ந்த அளவிலான ஒத்துழைப்பைப் பேணுவதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார். அதனை தொடர்ந்து, யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவருக்கு யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி சிறப்பு நினைவுச் சின்னத்தை வழங்கியதுடன், யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவரின் விஜயத்தின் அடையாளமாக விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் பாராட்டு குறிப்புக்களை எழுதினார். யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக பிரிகேடியர் பொதுப் பணி பிரிகேடியர் கே.ஜே.என்.எம்.பீ.கே. நவரத்ன யாழ். பாதுகாப்பு படை தலைமையக பொதுப் பணிநிலை அதிகாரி  உளவியல் செயற்பாடு மற்றும் யாழ்ப்பாண இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் ஆகியோர் சந்திப்பில் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/179913
    • நான் எங்கை இருந்தாலும் ஒன்லைனில் யூரோ மில்லியன் வாங்குவேன்.. மாத ஆரம்பத்திலேயே 4 கிழமைக்கும் சேத்து வாங்கிடுவன்.. 40/50 க்குள் ஒரு தொகை செல்வாகும் மாதம்.. ஒரே நம்பரை வெட்டிக்கொண்டு வாறன்.. விழாதெண்டு தெரியும்.. அப்பிடி விழுந்தாலும் எழும்பி நடக்கேலா பல்லுப்போன காலத்திலைதான் விழும்.. அதுக்கு பிறகு விழுந்தா என்ன விட்டா என்ன..  உங்கள் பகிர்வுக்கு நன்றி.. நல்ல எழுத்து நடையா இருக்கு.. யாராப்பா நீங்கள்..? முந்தி எங்களோட சுய ஆக்கங்களில எழுதுப்பட்ட ஆள் போல கிடக்கு.. 🤔
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.