Jump to content

Recommended Posts

வடமாகாண முதல்வரின் தாயக மக்களின் மேம்பாட்டை கருத்திற் கொண்டு பல்வேறு மட்டங்களில் சமூகம்சார் சந்திப்புகளை நிகழ்த்தவுள்ளார்.

தமிழ் வணிக சமூகத்துடனான சந்திப்பு:

புலம்பெயர்ந்த தமிழர் வாழும் நாடுகள் தோறும் தமிழர் வணிகத்துறைகளில் மேம்பட்ட வரகின்றனர். தன்னினத்துக்குள்ளான வணிகத்திலிருந்து விரிந்து நாடு சர்வதேசம் தழுவிய வணிகத்துறைகளில் தமிழர் முயற்சித்து வருகின்றனர். இவர்களில் கணிசமானோர் தாயகத்திலும் முதலீடு செய்யவும் தாயகத்தின்மேம்பாட்டுப் பணிகளுக்கு உதவவும் விரும்புகின்றனர்.

அவ்வாறான சமூகநலன் மீதும் அக்கறை கொண்ட தமிழ் வணிகர் பலரையும் முதல்வர் சந்திக்கவுள்ளார். தாயகம் தொடர்பில் வணிகர்களின் பங்களிப்பு எவ்வாறு அமைய வேண்டும் என்ற வினாவுக்கு விடையாக இச்சந்திப்பு அமையும்.

பெண்களுடனான சந்திப்பு:

நடைபெற்ற போரினால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் பெண்களே. சிறுமியராகவும் இளம் மனைவியராகவும் தாயாகவும் பெண்கள் படும் துன்பம் மிகப் பெரியது. அவர்களுடைய வாழ்வில் நிரந்தரமான மீட்சியைக் கொண்டுவரவேண்டும் என முதல்வர் விரும்புகிறார். பெண்கள் தொடர்பான பல்வேறு விடயங்களை ஆழமாகப் பேசுவதற்காக இச்சந்திப்பு ஏறபாடு செய்யப்பட்டுள்ளது. பெண்கள் அமைப்புக்களைச் சார்ந்தோரும் சமூகச் செயற்பாட்டாளர்களும் இதற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

இளையோர் சந்திப்பு

தமிழர் குடியேறிய நாடுகளில் அடுத்த தலைமுறையாக வலுவோடு வளர்ந்து வரகின்ற இளைளோரைச் சந்திப்பதுவும் முதலிவரின் இலக்குகளில் ஒன்றாக இருக்கின்றது. தாயக மக்கள் மீது இளையோர் கொள்ளும் தொடர்பு நீண்ட காலத்திற்குப் பயன் தரவல்லது என்பதால் முதல்வர் வரகையில் இயையோர் சந்திப்பு முக்கியத்துவம் பெறுகின்றது.

போரினால் பாதிக்கப்பட்ட இளைய சமூகம் தாயகத்தில் பல இன்னல்களைச் சந்தித்து வருகின்றது. கல்வியும் அடிப்படைவ hழ்வாதாரமும் இன்றி பல இளையோர் தம் வாழ்வைத் தொலைத்து வருகின்றனர். அவர்களை மேம்படுத்துவது தொடர்பாகப் பல விடயங்கள் இளையோர் சந்திப்பில் இடம் பெறும்.

சமூக அமைப்புக்களோடான சந்திப்பு

கனடாவில் தாயக ஊர் சார்ந்த சங்கங்கள் உட்படப் பல சமூக அமைப்புக்கள் உள்ளன. அவற்றின் பிரதி நிதிகளைச் சந்தித்துத் தாயக மேம்பாடு பற்றிப் பேசுவதற்கு இச்சந்திப்பு ஒழுங் செய்யப்பட்டுள்ளது.

சனவரி 08 ஞாயிற்றுக்கிழமை - முதல்வருடன் ஒரு மாலைப் பொழுது.

முதல்வர் அவர்களின் நேரடிக் கண்காணிப்பில் இயங்கும் உதவிப்பாலம் என்ற திட்டத்திற்கமைய தாயக மக்களுக்கு உதவும் நோக்கோடு நிதிசேர் நகழ்வாக இது அமைகிறது.

சனவரி 10 செவ்வாய்க் கிழமை - பிரம்டன் மாநகர சபையுடன் சந்திப்பு

எதிர்காலத்தில் தாயக மேம்பாடு சார்ந்த பல பணிகளைப் பிரம்டன் மாநகரசபையோடும் இணைந்து முன்னெடுக்கப்படக்கூடிய வாய்ப்புகள் தோன்றியுள்ளன. அதனை வலுப்படுத்தும் சந்திப்பாக இது அமையும்.

சனவரி 14 சனிக்கிழமை - இரட்டை நகர உடன்படிக்கை கைச்சாத்து

முதல்வர் வருகையில் முதன்மைபெற்ற நிகழ்வாக இது அமையும். மார்க்கம் மாநகரசபை மேயர அவர்களும் வடமாகாண முதல்வர் சி.வி. விக்கினேசுவரன் அவர்களும் இதில் கையெழுத்திடுவர்.

சனவரி 15 ஞாயிற்றுக்கிழமை - மார்க்கம் பொங்கல் விழா

மார்க்கம் மாநகரசபையின் அனுசரணையுடன் நடத்தப்படும் பொங்கல் விழாவில் முதல்வர் முதன்மை விருந்தினராகக் கலந்து கொள்கிறார்.

சனவரி 15 ஞாயிற்றுக்கிழமை - மாபெரும் பொதுக் கூட்டம்.

பல்லாயிரம் மக்கள் கூடும் பிரமாண்டமான அரங்கில் முதல்வரின் பேருரை இடம் பெறும்

http://www.canadamirror.com/canada/78043.html

Link to comment
Share on other sites

ஒன்ராறியோ பிரதமரைச் சந்தித்தார் வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன்

Kathleen Wynne, hosted C.V. Wigneswaran (1)

 

கனடாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நேற்று, ஒன்ராரியோ பிரதமர் கத்லீன் வைன் அம்மையாரைச் சந்தித்து இருதரப்பு பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

ஒன்ராறியோ பிரதமரின் குயீன்ஸ் பார்க் செயலகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

இந்தச் சந்திப்பு ஆக்கபூர்வமான ஒன்றாக இருந்தது என்று ஒன்ராறியோ பிரதமர் செயலகம் கூறியுள்ளது.

ஒன்ராறியோ மற்றும் வடக்கு  மாகாணங்களுக்கு இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கு விரும்புவதாக ஒன்ராறியோ பிரதமர் தெரிவித்துள்ளார்.

இந்தச் சந்திப்பு சுமார் ஒரு மணிநேரம் இடம்பெற்றது.

Kathleen Wynne, hosted C.V. Wigneswaran (1)Kathleen Wynne, hosted C.V. Wigneswaran (2)

http://www.puthinappalakai.net/2017/01/14/news/20653

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.