Jump to content

செயலணியின் பரிந்துரையை அரசாங்கம் நிராகரித்துள்ளது!


Recommended Posts

நல்லிணக்க பொறிமுறை குறித்த செயலணியின் பரிந்துரையை அரசாங்கம் நிராகரித்துள்ளது என சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

படையினருக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட வேண்டும் என்ற பரிந்துரையை அரசாங்கம் நிராகரித்துள்ளது.

இந்த பரிந்துரையின் ஊடாக படையினருக்கு பாரிய அவமரியாதை ஏற்படுத்தப்பட்டுள்ளதாக சிரேஸ்ட கடற்படை அதிகாரியான ரியர் அட்மிரால் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

உலகின் எந்தவொரு நாட்டிலும் படையினருக்கு புனர்வழ்வு அளிக்கப்பட்டதில்லை என்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.

படையினருக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட வேண்டுமென்ற பரிந்துரையின் ஊடாக படைவீரர்கள் விசரர்கள் என்றே கருதுகின்றார்கள் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இராணுவத்திற்கு எதிராக பயங்கரமான சில பரிந்துரைகள் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

http://www.tamilwin.com/politics/01/131404?ref=home

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.