Jump to content

தீபாவுக்கு குவியும் ஆதரவு: அதிர்ச்சியில் சசி வட்டாரம்


Recommended Posts

தீபாவுக்கு குவியும் ஆதரவு:
அதிர்ச்சியில் சசி வட்டாரம்
 
 
 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள், தீபாவுக்கு, 60 சதவீத, அ.தி.மு.க., தொண்டர்களும், 50 சதவீத பெண்களும், தங்கள் ஆதரவை தெரிவித்துள்ள தாக, உளவுத்துறை அறிக்கை தாக்கல் செய்தது.

 

Tamil_News_large_168880320170112001048_318_219.jpg

இதனால், கதி கலங்கியுள்ள, சசி வட்டாரம், மாவட்டம் தோறும் சமாதான முயற்சியை தீவிரப்படுத்த, மாவட்ட செயலர்களுக்கு, அ.தி.மு.க., தலைமை உத்தரவு பிறப்பித்துள்ளது.சேலம், வேலுார், மதுரை, ஈரோடு, நெல்லை, துாத்துக்குடி உட்பட, தமிழகம் முழுவதும், தீபா பேரவை துவங்கி, உறுப்பினர் சேர்க்கை நடக்கிறது. 'வாட்ஸ் ஆப்' வழியாகவும், ஆதரவு பெருகுகிறது.

அ.தி.மு.க.,வில் பதவியில் உள்ளவர்கள், தலைமைக்கு கட்டுப்பட்டு செயல்படுவதாக தெரிவித்தபோதும், ரகசியமாக குழி பறிக்கும் வேலையையும் செய்து வருவதாக கூறப்படு கிறது. பல இடங்களில், தீபா பேரவைக்கு தேவையான நிதி மற்றும் ஆதரவை, மறைமுக மாக வழங்குவதாக, தகவல் பரவி வருகிறது.

இதுகுறித்து, சந்தேகம் எழுந்ததும், சசி வட்டாரத்திற்கு, நெருக்கமான தனியார் ஏஜென்சி ஒன்று, ஜன., 1 - 9 வரை, தமிழகத்தின் அனைத்து நகரங்களிலும் ரகசியமாக ஆய்வு நடத்தியது. அதை மோப்பம் பிடித்த உளவு துறையினர், தனியார் நிறுவனத்துடன் கைகோர்த்து, தங்கள் தரப்பிலான அறிக்கையை தாக்கல் செய்துள்ளனர்.

அதில், தமிழகத்தின், 12 மாநகராட்சிகளில், வார்டு வாரியாக, இரண்டாம் கட்ட நிர்வாகிகள் இணைந்து, ஆங்காங்கே தீபா பேரவையை உருவாக்கி வருகின்றனர். அவர்களுக்கு, 60

சதவீத அ.தி.மு.க., தொண்டர்கள் ஆதரவும், 50 சதவீத பெண்கள் ஆதரவும் கிடைத்துள்ளது. அதே போல், கட்சி நிர்வாக ரீதியாக பிரிக்கப் பட்டுள்ள, 54 மாவட்டங்களில், பல மாவட்ட முதல் கட்ட தலைவர்கள் கூட, தீபாவுக்கு மறைமுக ஆதரவு அளிக்கின்றனர்.

இந்நிலையில், ஜெயலலிதா இறந்து, ஒரு மாதம் கூட முடியாத நிலையில், பொதுச்செயலர் பதவியை சசிகலா ஏற்றதை பட்டாசுகள்வெடித்தும், இனிப்பு வழங்கியதும், பெண்கள் மத்தியில், கோபத்தை ஏற்படுத்தி உள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால், அதிர்ச்சி அடைந்த தலைமை, ஒவ்வொரு மாவட்டத்திலும், மாவட்ட செயலர்கள் மட்டுமின்றி, மாஜி நிர்வாகிகளை அழைத்து, தீபா ஆதரவாளர் களை வளைத்துபோட உத்தரவிட்டுள்ளது.

பல மாவட்ட செயலர்கள், தீபா ஆதரவாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, தோல்வியை சந்தித்துள்ள தால், மாவட்ட செயலர்களே அணி மாறுவது குறித்து, ஆலோசிப்பதாக, தகவல் வெளியாகி உள்ளது.

கட்சியை மீட்க...:

கரூர் மாவட்ட தீபா ஆதரவாளர்கள் ஆலோசனை கூட்டம், காமராஜபுரத்தில் நேற்று நடந்தது. 'எம்.ஜி.ஆரின், 100வது பிறந்த நாளை கொண்டாடு வது; அ.தி.மு.க.,வை, தீபா வழி நடத்த வேண்டும்' என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், முன்னாள் எம்.எல்.ஏ., சவுந்திரராஜன் பேசுகையில்,''ஜெயலலிதா மறைவுக்கு பின், கட்சி யின் தலைமை தகுதி இல்லாதவர்களிடம் சென்று விட்டது. இதை மீட்டெடுக்க வேண்டிய பொறுப்பு, ஒவ்வொரு தொண்டனுக்கும் உண்டு. அதற்கு, ஜெயலலிதாவின் உண்மையான வாரிசான, தீபா தலைமையை தொண்டர்கள் ஏற்கவேண்டும்,'' என்றார்.

ஈரோட்டில், புதிய கட்சியை தொடங்கிய, ஜெயலலிதாவின் விசுவாசிகளை சந்திப்பதற்காக, தீபா நேற்று நேரம் ஒதுக்கியிருந்தார். ஆனால், ஒரு நாள் முன்னதாக, நேற்று முன் தினம் இரவே, சந்தித்து,பத்திரமாக ஊருக்கு செல்ல அறிவுறுத்தி னார். தீபாவை நேரில் சந்தித்த, ஈரோட்டை சேர்ந்த பாரூக் என்பவர் கூறுகையில்,''ஒரு நாள்

 

முன்ன தாகவே, திடீரென அழைத்தார். உடனடியாக சென்று சந்தித்தோம். 15 நிமிடங் கள் கலந்துரையாடி னார். அரசியல் தாண்டி ஒவ்வொருவரின் குடும்பத்தை பற்றியும் விசாரித்தார்,'' என்றார்.

தீபா ஆதரவாளர்கள் விபரம் சசி குடும்பத்தினர் சேகரிப்பு

தீபாவிற்கு ஆதரவாக செயல்படும் நிர்வாகிகள் குறித்த விபரங்களை, சசிகலா குடும்பத்தினர் சேகரித்து வருகின்றனர்.ஜெ., அண்ணன் மகள் தீபா, அரசியலுக்கு வர வேண்டும் என, அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அனைத்து மாவட்டங்களிலும், தீபா பேரவை என்ற பெயரில், உறுப்பினர் சேர்க்கை நடந்து வருகிறது.

பல்வேறு மாவட்டங்களில், தீபா பேரவை ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படுகிறது. தீபா ஆதரவாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவது, சசிகலா குடும்பத்தினரிடையே, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.அதைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும், தீபாவிற்கு ஆதரவாக செயல்படும் கட்சி நிர்வாகிகள் யார் என்ற விபரத்தை, சசிகலா குடும்பத்தினர் சேகரித்து வருகின்றனர்.

இதை தீபா ஆதரவாளர்கள், தங்களது, 'வாட்ஸ் ஆப்' குழுவில் பகிர்ந்துள்ளனர். அதில், 'விரை வில், சசி குடும்பத்தினர் மிரட்டலில் ஈடுபடுவர்; யாரும் பயப்பட வேண்டாம்' என்று கூறியுள்ளனர்.

- நமது சிறப்பு நிருபர்

http://www.dinamalar.com/news_detail.asp?id=1688803

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.