Jump to content

முதல்வர் பன்னீர்செல்வத்திற்கும், அ.தி.மு.க., பொதுச்செயலர் சசிகலாவிற்கும் இடையே, கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக, கோட்டை வட்டாரத்தில் தகவல் வெளியாகி உள்ளது.


Recommended Posts

முதல்வர் பன்னீர்செல்வத்திற்கும், அ.தி.மு.க., பொதுச்செயலர் சசிகலாவிற்கும் இடையே, கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக, கோட்டை வட்டாரத்தில் தகவல் வெளியாகி உள்ளது.

 

Tamil_News_large_168877120170111233431_318_219.jpg

ஜெயலலிதா இருந்த வரை, அவரது நம்பிக் கைக்குரியவராக, முதல்வர் பன்னீர்செல்வம் இருந்து வந்தார். ஜெயலலிதா, முதல்வர் பதவியில் இருந்து, விலக நேரிட்ட போது, பன்னீர்செல்வத்தை முதல்வராக்கினார்.அந்த ளவுக்கு இவர், ஜெயலலிதாவிடம் செல்வாக்கு பெற்றது, சசிகலா குடும்பத்தினருக்கு, அதிருப்தியை ஏற்படுத்தியது.

எனவே, பன்னீர்செல்வம் மீது, ஜெயலலிதா வைத்துள்ள நம்பிக்கையை குலைக்கும் வகை யில், பல்வேறு நடவடிக்கைகளை மேற் கொண்டனர். கடந்த, அ.தி.மு.க., ஆட்சி முடியும் நிலையில், பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் மீது, ஜெயலலிதா நடவடிக்கை எடுத்தார்.

சட்டசபை தேர்தலில், பன்னீர்செல்வத்திற்கு, 'சீட்' கிடைக்காது என, தகவல் பரவியது. ஆனால், அவருக்கு சீட் கொடுத்து, அவரை நிதி அமைச்சராக்கி, தனக்கு அடுத்த இடத்தை, ஜெயலலிதா வழங்கினார்.இதனால் அதிருப்தி அடைந்த சசிகலா குடும்பத்தினர், ஜெயலலிதா மறைந்ததும், எடப்பாடி பழனிச்சாமியை,

தற்காலிக முதல்வராக்க முடிவு செய்தனர். ஆனால், மத்திய அரசு கொடுத்த அழுத்தம் காரணமாக, மீண்டும் முதல்வராக, பன்னீர்செல்வமே தேர்வு செய்யப்பட்டார்.

ஜெயலலிதா மறைவுக்கு பின், சசிகலா தலைமை ஏற்கவும், அவரது விசுவாசியாகவும் மாற முன் வந்தார். பொதுச்செயலராக, சசிகலா ஆசைப்பட்ட தும், அந்தப் பதவிக்கு அவர் வர, பன்னீர்செல்வம் உறுதுணையாக இருந்தார். முதல்வர் என்பதையும் மறந்து, அவரது காலிலும் விழுந்தார்.

அதன்பிறகும், அவருக்கு சசிகலா உரிய மரியாதை வழங்கவில்லை. கட்சி நிர்வாகிகளை சந்திக்க, சசிகலா வந்தபோது, முதல்வர் மற்றும் அமைச்சர் கள், கூட்டம் நடந்த அரங்கிற்குள் அனுமதிக்கப்பட வில்லை. கூட்டம் முடிந்து, சசிகலா புறப்படும் வரை, கால் கடுக்க காத்திருந்தனர்.

இது, பன்னீர்செல்வத்திற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி யது. தொடர்ந்து, மீனவர் பிரச்னை தொடர்பாக, அவர் பிரதமருக்கு கடிதம் எழுத, பதிலுக்கு சசிகலாவும் கடிதம் எழுதினார். மேலும், தன் கடிதம் பத்திரிகை களுக்கு வெளியான பிறகே, பன்னீர்செல்வம் கடிதம் வெளியிடப்பட வேண்டும் என உத்தரவிட்டார்.

ஜல்லிக்கட்டு தொடர்பாக, 9ம் தேதி, முதல்வர் பன்னீர்செல்வம், பிரதமருக்கு கடிதம் எழுதினார்; நேற்று சசிகலா கடிதம் எழுதினார். அந்த கடிதத்தை தான், அ.தி.மு.க., - எம்.பி.,க்கள், டில்லியில் மத்திய அமைச்சரிடம் வழங்கினர். இது தொடர்பாக, பத்திரிகையாளரிடம் பேசிய,லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை, ஒரு முறை கூட, தமிழக அரசு என்ற வார்த்தையை பயன்படுத்தவில்லை. சசிகலா உத்தரவில் வந்ததாக மட்டும் தெரிவித்தார்.

ஒவ்வொரு செயலிலும், தன்னை அவமதிக்கும் வகையில், சசிகலா செயல்படுவது, முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதனால், இருவருக்கும் இடையே

 

கருத்து வேறுபாடு அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.
 

திறப்பு விழா இடமாற்றம் ஏன்?


முதல்வர் பன்னீர்செல்வம், இன்று, 25 துறை களின் சார்பில், வட மாவட்டங்களில் கட்டப் பட்டுள்ள கட்டடங்கள் மற்றும் புதிய தொழிற் சாலைகளை, 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம் திறந்து வைக்கிறார்.இந்நிகழ்ச்சி, சென்னை, எழும்பூர் குழந்தை நல மருத்துவ மனையில் நடைபெற உள்ளது. பொதுவாக திறப்பு விழா நிகழ்ச்சி, தலைமை செயலகத் தில், முதல்வர் அறையில் நடைபெறும். ஆனால், அந்த அறையை பன்னீர்செல்வம் பயன்படுத்த கூடாது என, சசிகலா உத்தர விட்டதால், விழா எழும்பூருக்கு மாற்றப் பட்டதாக, தகவல் வெளியானது.

அதை, கட்சி நிர்வாகிகள் மறுத்தனர். ஜெயலலிதா மறைந்து, 45 நாட்கள் நிறைவு பெறாததால், அவரது அறையை பயன்படுத்த வில்லை என தெரிவித்தனர். மேலும், இந்த மருத்துவமனையில் கட்டியுள்ள கட்டடத்தை யும், முதல்வர் திறந்து வைக்கிறார்; அதனால் தான் இந்த இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தனர். - நமது நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1688771

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.