Jump to content

ரஜினியை நம்பும் சசிகலா! கார்டனின் 'ஆல் இன் ஆல்'


Recommended Posts

ரஜினியை நம்பும் சசிகலா! கார்டனின் 'ஆல் இன் ஆல்'

rajini_women-_jaya_11174.jpg

கார்டனில் ஆதிக்கம் செலுத்துவதில் நாகர்கோவிலைச் சேர்ந்த ரஜினி என்ற பெண் முக்கியமானவர் என்று சொல்லத் தொடங்கி இருக்கின்றனர் கட்சியினர். அவரை முழுமையாக நம்பிய சசிகலா, சில அமைச்சர்களை ரகசியமாக கண்காணிக்கும் பொறுப்பை கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஜெயலலிதா, மறைந்து ஒரு மாதம் கடந்து விட்டது. அதற்குள் அ.தி.மு.க.வில் பல மாற்றங்கள். அ.தி.மு.க.வின் தலைமை ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் கையில் உள்ளது. அடுத்து சசிகலா, முதல்வராவார் என்ற எதிர்ப்பு நிலவுகிறது. ஜெயலலிதாவுக்கு உறுதுணையாக இருந்தவர் சசிகலா என்பது எல்லோருக்குத் தெரியும். தற்போது, சசிகலாவுக்கு உறுதுணையாக இருப்பவர்களில் முக்கியமானவராக நாகர்கோவிலைச் சேர்ந்த ஒரு பெண் கார்டனில் வலம் வருவதாக உள்விவரம் தெரிந்தவர்கள் சொல்கின்றனர்.

யார் அந்த நாகர்கோவில் பெண்?

ஜெயலலிதாவுக்கும், சசிகலாவுக்கும் இயற்கை மீதும், செடிகள் மீதும் அளவில்லாத பிரியம் உண்டு. இதனால், போயஸ் கார்டன் வீட்டிலேயே கார்டன் பராமரிக்கப்பட்டது. அதில் தினமும் ஜெயலலிதாவும், சசிகலாவும் நடைபயிற்சி மேற்கொள்வார்கள். அதுபோல சிறுதாவூர் பங்களாவுக்குச் செல்லும்போதும் அங்கேயும் நடைபயிற்சி மேற்கொள்வதுண்டு. அப்போது ஒருநாள், ஜெயலலிதா, ஒரு மலர் குறித்து சசிகலாவிடம் கேட்டுள்ளார். அந்த மலரின் அழகு ஜெயலலிதாவை வெகுவாக கவர்ந்தது. அந்த மலர் குறித்த விவரமும் சசிகலாவுக்கும் தெரியவில்லை. அடுத்து கார்டனில் உள்ள சிலரிடமும் அந்த கேள்வியை கேட்க அவர்களும் விழிபிதுங்கி உள்ளனர்.
 இதையடுத்து ஜெயலலிதாவின் மலர் குறித்த ஐயத்தை விளக்க உடனடியாக அங்கு அழைக்கப்பட்டவர் ரஜினி. இவர், நாகர்கோவில் தோவாளையைச் சேர்ந்தவர். வேளாண்மைத் துறையில் பட்டம் பெற்றவர் என்பதால் ஜெயலலிதாவின் மலர் சந்தேகத்தை ஆங்கிலத்திலேயே விளக்கியுள்ளார் ரஜினி. இதன்பிறகு ரஜினிக்கு, தோட்டங்களை மேற்பார்வையிடும் பொறுப்பு அங்கு வழங்கப்பட்டுள்ளது. இவரது கணவர் ரவீந்திரன், அ.தி.மு.க.வின் தொலைகாட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்தவர். இதனால் கார்டனுக்குள் எளிதில் ரஜினி நுழைந்து விட்டார்.

ஜெயலலிதாவுடன் நெருக்கம்

போயஸ் கார்டனுக்குள் சென்ற ரஜினி, ஜெயலலிதாவுக்குப் பிடித்தமான பூங்கொத்தை கொடுப்பது வழக்கம். அதுவே அவருக்கு ரஜினியைப் பிடித்து போய்விட்டது. ஜெயலலிதாவை விட சசிகலாவிடமும் ரஜினி, விசுவாசமாக இருந்துள்ளார். தற்போது ரஜினியின் செல்வாக்கு இப்போது அதிகரித்துள்ளது. சமீபத்தில் சசிகலாவை சந்தித்த அரசியல் தலைவர்கள், வி.வி.ஐ.பிக்கள், கட்சியினருக்கு வழியை ஏற்படுத்தியவர் ரஜினி. சசிகலா, ரஜினியை அதிகம் நம்பியதால் அவருக்கு இப்போது கார்டனில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாம். இதன்விளைவு, ரஜினியின் தயவைப் பெற கட்சியினர் பலரிடம் போட்டோ போட்டி நிலவுதாம். சமீபத்தில் நாஞ்சில் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும் சசிகலாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவர் கட்சியிலிருந்து விலகுவதாக அறிகுறிகள் ஏற்பட்டன. உடனடியாக அவரை  சந்தித்து சமரசப்படுத்தி கார்டனுக்கு அழைத்து வந்ததில் ரஜினிக்கு முக்கியப் பங்கு உள்ளது. மேலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனை கார்டனுக்கு அழைத்து வந்ததிலும் ரஜினியின் பங்கு இருக்கிறது.

கார்டன் டூ அரசியல்

சசிகலாவும், ரஜினியும் நீண்ட நேரம் பேசிக் கொள்வதாக கார்டன் வட்டார முக்கிய நிர்வாகிகள் சொல்கின்றனர். அதில் அரசியல் பேச்சும் இடம் பெறுகிறது. காலையில் ரவீந்திரன், காரில் ரஜினியை போயஸ் கார்டனுக்கு அழைத்து வருவாராம். மாலையில் அவரே ரஜினியை பிக்அப் செய்து கொள்வாராம். கார்டனில் இருந்தபடியே அரசியல் நிலவரங்களை கண்காணிக்கும் பொறுப்பும் ரஜினி வசம் கொடுக்கப்பட்டுள்ளதாம். கடந்த சட்டமன்ற தேர்தலில் ரஜினி, சிபாரிசு செய்த சிலருக்கு எம்.எல்.ஏ சீட்கள் கொடுக்கப்பட்டதாகவும் ஒரு தகவல் உள்ளது. ரஜினியின் கை ஓங்குவதை கார்டனில் உள்ள சிலர் விரும்பவில்லையாம். ரஜினி, சசிகலாவின் நட்பில் பிளவு ஏற்படுத்த முயற்சிகளும் நடக்கிறதாம்.

எம்.என்.நடராஜன்

ரஜினியை கார்டனிலிருந்தும், சசிகலாவிடமிருந்தும் பிரிக்க சில வியூகங்களை ஒரு தரப்பு செய்து வருகிறதாம். அதிலிருந்து ஒவ்வொரு முறையும் ரஜினி தரப்பு தப்பித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் ரஜினியின் மீது புகார் பட்டியலை மன்னார்குடி தரப்பு சசிகலாவிடம் சமீபத்தில் கொடுத்துள்ளதாம். அதில் பால் கலப்பட ஊழலில் ரஜினியின் தலையீடு இருப்பதாகவும் சொல்லப்பட்டுள்ளது. இருப்பினும் ரஜினி மீது முழுமையாக சசிகலா தரப்பு நம்பிக்கை வைத்துள்ளதால் எந்த குற்றச்சாட்டுக்களும் எடுபடவில்லை. வழக்கம் போல கார்டனுக்குள் காலையில் வந்து மாலையில் வீடு திரும்புகிறார் ரஜினி. தற்போது அ.தி.மு.க.விலிருந்து விலகுவதாக முடிவெடுத்த சில அமைச்சர்களையும், முக்கிய நிர்வாகிகளையும் ரகசியமாக கண்காணிக்கும் பொறுப்பு ரஜினியிடம் சசிகலா கொடுத்துள்ளாராம். அந்த அசைமெண்டில் பிஸியாக ரஜினி இருக்கிறாராம்.

http://www.vikatan.com/news/coverstory/77429-sasikala-pins-hopes-on-rajini.art

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்போ  நான் எப்படியும்  தப்பிவிடுவேன் லிஸ்டில் நம்மடை  (Chanel, Dior) சரக்கு இல்லை   வரும் 24 அன்று இலங்கைக்கு 2 மாத விஜயம் யாழ்கள உறவுகள் நின்றால் சந்திக்கலாம் 
    • வணக்கம் வாத்தியார்......! ஆண் : மீனம்மா மீனம்மா கண்கள் மீனம்மா தேனம்மா தேனம்மா நாணம் ஏனம்மா சுகமான புது ராகம் உருவாகும் வேளை நாணமோ இதமாக சுகம் காண துணை வேண்டாமோ ஓஓ பெண் : சிங்கம் ஒன்று நேரில் வந்து ராஜ நடை போடுதே தங்க மகன் தேரில் வந்தால் கோடி மின்னல் சூழுதே ஆண் : முத்தை அள்ளி வீசி இங்கு வித்தை செய்யும் பூங்கொடி தத்தி தத்தி தாவி வந்து கையில் என்னை ஏந்தடி பெண் : மோகம் கொண்ட மன்மதனும் பூக்கணைகள் போடவே காயம் பட்ட காளை நெஞ்சும் காமன் கணை மூடுதே ஆண் : மந்திரங்கள் காதில் சொல்லும் இந்திரனின் ஜாலமோ சந்திரர்கள் சூரியர்கள் போவதென்ன மாயமோ பெண் : இதமாக சுகம் காண துணை நீயும் இங்கு வேண்டுமே சுகமான புது ராகம் இனி கேட்கத்தான்…. ஆண் : இட்ட அடி நோகுமம்மா பூவை அள்ளி தூவுங்கள் மொட்டு உடல் வாடுமம்மா பட்டு மெத்தை போடுங்கள் பெண் : சங்கத்தமிழ் காளை இவன் பிள்ளை தமிழ் பேசுங்கள் சந்தனத்தை தான் துடைத்து நெஞ்சில் கொஞ்சம் பூசுங்கள் ஆண் : பூஞ்சரத்தில் ஊஞ்சல் கட்டி லாலி லல்லி கூறுங்கள் நெஞ்சமென்னும் மஞ்சமதில் நான் இணைய வாழ்த்துங்கள் பெண் : பள்ளியறை நேரமிது தள்ளி நின்று பாடுங்கள் சொல்லி தர தேவை இல்லை பூங்கதவை மூடுங்கள் பெண் : சுகமான புது ராகம் உருவாகும் வேளை நாணுமே இதமாக சுகம் காண துணை வேண்டாமோ ஓஓ .......! --- மீனம்மா மீனம்மா ---
    • ஆஹா....அற்புதம்......அற்புதம்......!  😂
    • பாகவலி நாட்டினிலே .....அநியாயம் இந்த ஆட்சியிலே இது அநியாயம்........!   😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.