Jump to content

ஏமார்ந்து போன முதல் தலைவரின் நினைவு நேற்று! (09.01.17)


Recommended Posts

ஏமார்ந்து போன முதல் தலைவரின் நினைவு நேற்று! (09.01.17)

 

தமிழருக்கான தனி அரசியற் பாதையின் ஆரம்பப் புள்ளி அவரே . எஸ் எம் வரதராஜன் -நியூசீலாந்து :-

arunachalam-stamp.jpg
சிங்களத் தலைவர்களை நம்பி ஏமார்ந்து முதன் முதல் “ஏமார்ந்த தமிழ்த் தலைமை” என்ற சாதனையை நிலைநாட்டிய சேர் பொன்னம்பலம் அருணாசலத்தின் நினைவு நாள் நேற்றாகும்.

 

(பிறப்பு  செப்டம்பர் 141853 – ஜனவரி 91924, மறைவு  சனவரி 9, 1924 :அகவை 70))

இலங்கைக்குச் சுதந்திரம் கிடைப்பதில் முதன்மை வகித்த இவர் தமிழர் என்பதால் வழமைபோலவே முக்கியத்துவம் இல்லாமல் இருக்கிறார்.

தமிழருக்கு என்று ஒரு அரசியல் பாதை தேவை என்பதன் தொடக்கப்புள்ளி இவர்தான் என்பதை வரலாறு என்றும் சொல்லி நிற்கும்.

பொன்னம்பலம் அருணாசலம் யாழ்ப்பாணம் , மானிப்பாயைச் சேர்ந்த கேட் முதலியார் என அழைக்கப்பட்ட பொன்னம்பல முதலியாருக்கும் செல்லாச்சி அம்மையாருக்கும் (சேர் முத்து குமாரசுவாமியின் சகோதரி) மூன்றாவது மகனாக 1853 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 14 ஆம் திகதி பிறந்தார். குமாரசாமி முதலியார், சேர். பொன். இராமநாதன் ஆகியோர் இவரது சகோதரர்கள்.

கொழும்பு றோயல் கல்லூரியில் தனது கல்வியைத் தொடர்ந்தார். 1870 இல் இராணி புலமைப்பரிசிலையும் பெற்று, லண்டன் கேம்பிரிச் பல்கலைக்கழகத்தின் கிறைஸ்ட் கல்லூரியில் கலைமாணிப் பட்டம் பெற்றார். மேலுமொரு புலமைப்பரிசிலைப் பெற்று கணிதத்திலும் புராதன இலக்கியத்திலும் சிறந்த சித்திகளைப் பெற்றார்.

இவரது மனைவியின் பெயர்: சுவர்ணம் நமசிவாயம் எட்டு பிள்ளைகள்: பத்மநாபன், அருணாசலம் மகாதேவா, அருணாசலம் இராமநாதன் ஆகிய ஆண்பிள்ளைகள், மகேஸ்வரி செகராசசிங்கம், மனோன்மணி பத்மநாதன், பத்மாவதி பரராஜசிங்கம், சிவானந்தம் தம்பையா, சுந்தரி நடராஜா ஆகிய ஐந்து பெண்பிள்ளைகள். இவர்களில் பத்மநாபன், மகேஸ்வரி, மனோன்மணி, பத்மாவதி ஆகியோர் அருணாசலம் மறைவதற்கு முன்பே இறந்து விட்டனர்.

இவர்களில் பத்மவதி பரராஜசிங்கத்தின் புதல்வியான திருமதி லலிதாம்பிகை சுவாமிநாதனின் புதல்வரே திரு தேவமனோகரன் சுவாமிநாதன் (D.M Swaminathan) ஆவார்.

சேர் பொன்னம்மபலம் அருணாசலத்தின் பெயரை இலங்கை அரசியலில் சொல்வதற்கு ஒருவராக இலங்கை அரசியலில் இன்றும் இருக்கிறார் .

sir-ponarun-02.jpg

இந்தச் சிங்களத் தலைவர்களிடம் ஏமாந்து 1920 களில்  இல் தமது அரசியல் நடவ்டிக்கைகளைத் துறந்து தமிழகம் சென்ற அதே அருணாசலத்தின் பூட்டனார் D.M சுவாமிநாதன்) அதே சிங்களத் தலைமையுடன் இன்றும் இணைந்து தமது அரசியற் செயற்பாடுகளை ஆற்றிவருகின்றமையும் வரலாற்றில் குறிக்கத்தக்க ஒன்று .

ஆனால்,   அவர் அதனை வெளிப்படையாகச் சொல்லிக்கொண்டே செயலாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.

பொன் அருணாசலம் அவர்கள் 1875 முதல் அரச சேவையில் பல பதவிகள் வகித்தாலும் 1887 இல் ஆட்பதிவுத் திணைக்கள நாயகமாகப் பணியாற்றிய முதலாவது தமிழரும் ஆவார்.

இவர் 1901 இல் வெளியிட்ட இலங்கைக்கு குடிசன மதிப்பீடு வரலாற்றில் மிக முக்கியத்துவம் வாய்ந்த தலை சிறந்த ஆய்வு எனப்படும்.

Royal Asiatic Society இன் இலங்கைக் கிளையின் தலைவராக தெரிவு செய்யப்பட்ட முதலாவது இலங்கையர் இவர். சைவ பரிபாலன சபையின் தலைவராகப் பல பணிகளை ஆற்றினார்.

University of Ceylon என்பது உருவாக அந்தச் சிந்தனையை உருவாக்கிய முதல் நபர் அருணாசலம் அவர்களே.

அதே University of Ceylon ஐ University of Sri Lanka என்று மாற்றி அவருடைய இனத்தைச் சேர்ந்த மாணவர்களை உள்ளே அனுமதிப்பதில் சிங்களத் தலைமை தரப்படுத்தலைக் கொண்டுவந்த வேளையில் நல்ல காலமாக அன்னார் இம் மண்ணில் இல்லாதது அவர் பெற்ற பேறே .

தொழிலாளர்களின் மேம்பாட்டிற்காக 1915 ஜனவரி 29 ஆம் திகதி சமூகச் சேவை சங்கத்தினை உருவாக்கி அதன் தலைவராகவும் பணியாற்றினார்

1917 இல் இலங்கைத் தேசிய சபை (Ceylon National Association ) இனது அழைப்பில் அவர் ஆற்றிய மிக பிரசித்தி பெற்ற உரையான Our Political Needs இலங்கையின் சுதந்திர எழுச்சிக்கு அனைவரையும் உணர்ச்சி பெறச் செய்தது .

1919 டிசம்பர் 11 இல் அருணாசலத்தின் முயற்சியினால் இலங்கையின் முதலாவது தேசிய இயக்கமான இலங்கைத் தேசிய காங்கிரஸ் உருவாக்கப்பட்டது. அதன் முதலாவது தலைவராகவும் 1919 முதல் 1922 வரை பொன்னம்பலம் அருணாசலமே ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டார். தமிழர்களை தேசிய காங்கிரசுடன் இணைப்பதற்கான பேச்சுவார்த்தையில் இவரே நடுவராகத் தொழிற்பட்டார். எழுத்து வடிவில் ஒப்பந்தம் ஒன்றும் கைச்சாத்திடப்பட்டது.

1921 ஆம் ஆண்டு மானிங் அரசியல் சீர்திருத்தத்தின் அடிப்படையிலான தேர்தலில் கொழும்பு தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை சேர். ஜேம்ஸ் பீரிஸ்,சமரவிக்கிரம போன்ற சிங்கள தலைவர்கள் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் இலங்கைத் தேசிய காங்கிரசிலிருந்து வெளியேறினார்.

1921 ஆகஸ்டில் தமிழர் அடையாள அரசியலை நிலைநிறுத்தும் வகையில் தமிழர் மகாஜன சபையினை உருவாக்கினார். அதன் தலைமைப் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டார்.

தமிழருக்கான தனியான அரசியற் பாதையை தொடங்கிவிட்ட முதலாவது தலைவர் இவரே!.

இவருக்குப் பின்னர் வந்தவர்களில்  தலைவர் சி சுந்தரலிங்கம் சிங்களச் சட்டம் 1956 இல் கொண்டுவரப்பட்ட பொழுது ” தமிழ் மக்களே இனி ஒருபோதும் சிங்களத் தலைவர்களை நம்பாதீர்கள் .இவர்கள் எங்களுக்கு கழுத்தறுத்துவிட்டார்கள் வெகுவிரைவில் தமிழ் இலங்கை என்று ஒன்றை உருவாகும்! ” என்றார்.

எனினும்   1956 இல் தந்தை செல்வா பண் டாரநாயக்கவை நம்பி ஏமார்ந்தார்.

பின்னர் 1965 இல் டட்லி யுடன் செய்த ஒப்பந்தத்தை டட்லி செல்வாவுக்குச் சொல்லாமலே கிழித்தெறிந்தமை வரலாறாகும்.

 

1956 இல் மொழிச்சட்டத்தை எதிர்த்து தமிழர்களுக்கு உரிமை வழங்கப்படவேண்டும் என்ற சிங்கள இடதுசாரித் தலைவர்கள் கூட 1965 இல் டட்லி செல்வாவுடன் உடன்பாடு செய்கையில் டட்லியின் வயிற்றில் தோசையும் மசாலா வடையும் என்று பகிடி பண்ணினர் .

 

இதனை ஏன் இங்கு குறிப்பிடுகிறேன் என்றால்..மலையக மக்கள் மீது கண்ணீர் விடும் “இன்றய சிங்கள ” இட்துடசாரிகள் பற்றி மலையக மக்கள் ஒரு படத்தை எடுத்து வைப்பதற்காகவே.

 

1977 இல் ஜே ஆர் அரசு தமிழ்த்தரப்புடன் பேசிக் கொண்டுவந்த மாவட்ட சபைகள் முறையை மாவட்டசபைத் தேர்தலைக் குழப்பி இளையவர்கள் நடவடிக்கையை அழிப்பதிலேயே கவனத்தைச் செலுத்தி காலத்தைக் கடத்தினர்.

1987 இல் இந்திய அரசின் நடவடிக்கையால் ஏற்படுத்தப்பட்ட மாகாணசபைகளைக் கூட செயற்படுத்துவதற்கு பல மாதங்கள் எடுத்தன.

sAMPANTHA-FLAG.jpg

இத்தகைய அனுபவங்களின் பின்னர் தமிழ் மக்களின் தலைவர் சமபந்தன் எந்தவிதமான ஒப்பந்தமும் இன்றி சிங்களத் தலைமையை நம்பியுள்ளார். அந்த நம்பிக்கை மீது அவர் உறுதியாக உள்ளார்.

அவருக்கும் எதிர்காலத்தில் சேர் பொன்னம்பலம் அருணாசலம் அவர்களை போல அஞ்சல் முத்திரை ஒன்று வெளியிடப்படலாம். ஆனால் அவ்வேளையில் அஞ்சல் சேவை என்று ஒன்று இருக்குமோ என்ன?

http://globaltamilnews.net/archives/13219

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 🤣 இந்த நுளம்பு கூட்டத்தை அவர்கள் பாணியில் சில ஒபாமாக்கள், விஜி களை ஏவி எதிர்கொள்ளுவதுதான் புத்திசாலித்தனம். அல்லது நீர்யோக நகரம், கொஸ்டரீக்கா போன்றனவற்றையும் கையில் எடுக்கலாம். சீரியசாக எடுத்தால் எமக்கு மண்டை காய்ந்து விடும். ————— உண்மையில் ஓரளவுக்கு சாத்தியமான எடுகோள், பலூசிஸ்தான் போலான் கணவாய் வழி மேற்கே இருந்து ஈயுரேசியர், பேர்சியன்ஸும், வடக்கே கைபர் கணவாய் வழி வந்த மத்திய ஆசியர், மங்கோலியர், பிராமணரும் (வேதங்களை நம்பியோர்)….. சிந்து சமவெளியில் இருந்த திராவிட/தொன் தமிழ் நாகரீகத்தை பிரதியீடு செய்ய, திராவிட/தொல் தமிழர் விந்திய மலைக்கு தெற்கே ஒதுங்கினர். இங்கே திராவிடம் எனப்படுவது தொல் தமிழையே.  இன்று தென்னிந்தியாவில் காணப்படும் மக்களின், மொழிகளின், பண்பாடுகளின் தோற்றுவாய். அலர்ஜி உபாதைகள் இருப்போர் திராவிட என்பதற்கு பதில் தொந்தமிழ் என்றோ அல்லது X நாகரீகம் எனவோ அழைத்துக்கொள்ளலாம். ஆனால் X பெர்சியாவில் இருந்து வந்தது என்பது - சந்தேகமே இல்லாமல் - product of Costa Rica தான்🤣.
    • உலகின் முதன் முதல் வந்த நகைச்சுவை...  எம்பெருமான் முருகன், ஔவையார் பாட்டியிடம், சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?  என்று கேட்டது தான். 😂 காலத்ததால் முந்தியதும்.... இன்றும் சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கும் நகைச்சுவை இதுதான் என்று அடித்து சொல்வேன். 😁 🤣
    • ஏன் செய்தார்களெனத் தெரியவில்லை. ஹோபோகன் நகரம்  அனேகமாக நியூயோர்க்கில் வேலை செய்வோர் ஹட்சன் நதிக்கு இக்கரையில் வாழும் செல்வந்தமான நகரம். இவர்கள் அங்கேயே வசிப்பவர்களாக இருந்தால் பலசரக்குக் கடையில் களவெடுக்கும் அளவுக்கு வறுமையில் இருக்கும் வாய்ப்பில்லை. அல்லது, காசு கட்டிப் படிக்க வந்து, பணத்தட்டுப் பாட்டில் செய்து விட்டார்களோ தெரியவில்லை. இப்படியான இளையோர் நியூ ஜேர்சியில் இருக்கிறார்கள் என அறிந்திருக்கிறேன். இந்த குறிப்பிட்ட ஷொப்றைற் கடையின் self checkout மூலம் பலர் திருடியிருக்கிறார்கள். இதனாலேயே வீடியோ மூலம் கண்காணிப்பை அதிகரித்து இவர்கள் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள். 
    • இஸ்ரேல்- ஈரான், இவங்கட நொட்டல்கள் பழகி விட்டது, தாங்கிக் கொண்டு சாதாரணமாக வாழலாம். ஆனால், இந்த "கேப்பில்" புகுந்து "திராவிடர் பேர்சியாவின் பக்கமிருந்து மாடு மேய்த்த படியே வந்த ஊடுருவிகள்" என்று "போலி விஞ்ஞானக் கடா" வெட்டும் பேர்வழிகளின் நுளம்புக் கடி தாங்கவே முடியாமல் எரிச்சல் தருகிறது😅. யோசிக்கிறேன்: இவ்வளவு வெள்ளையும் சொள்ளையுமான பேர்சியனில் இருந்து கன்னங் கரேல் திராவிடன் எப்படி உருவாகியிருப்பார்கள்? சூரியக் குளியல்? 
    • பொது நடைமுறையை சொல்கிறேன். கனடாவுக்கும் பொருந்தும் என நினைக்கிறேன். படிக்க போகாவிடின், கல்லூரி உ.நா.அமைச்சுக்கு அறிவிக்கும். அதன்பின், இவர் இப்போதைய நிலையை கருத்தில் எடுத்து - மாணவர் வீசா மீளப்பெறப்படும். அன்று முதல் இவர் ஓவர் ஸ்டேயர்.  ஆனால் வழக்கு முடிந்து, தண்டனையும் முடியும் வரை முதலில் ரிமாண்டிலும், பின் சிறையிலும் வைத்திருப்பார்கள். தண்டனை காலம் முடிந்ததும் நாடுகடத்துவார்கள். விண்ணப்பித்தாலும் பிணை கிடைத்திராது. குழந்தைகள் உட்பட 6 கொலை! 7வதை ரிஸ்க் எடுக்க எந்த நீதிபதியும் தயாராக இருக்கமாட்டார்கள். வாய்பில்லை - ஒரு கிரிமினல் குற்றம் மூலம் வரும் தண்டனை காலம் - வதிவிடத்துக்கு கணக்கில் எடுத்து கொள்ளப்படாது. வதிவிடத்துக்கு கணக்கில் எடுக்க அந்த காலம் சட்டபூர்வமானதும், தொடர்சியானதாயும் இருக்க வேண்டும். சிறைவாச காலம் சட்டபூர்வமானதல்ல. அதேபோல் ஒரு குற்றத்துக்காக சிறை போனால் “தொடர்சி” சங்கிலியும் அந்த இடத்தில் அறுந்து விடும். வெளியே வந்த பின், நாடு கடத்தாமல் விட்டால், தாமதித்தால் - சூரியின் பரோட்டா கணக்கு போல், சட்டபூர்வ & தொடர்சியான காலம் மீள பூஜ்ஜியத்தில் இருந்து ஆரம்பிக்கும்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.