Jump to content

ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தால் பிரியாணிக்கும் தடை விதிக்கவேண்டும் -கமல்ஹாசன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தால் பிரியாணிக்கும் தடை விதிக்கவேண்டும் -கமல்ஹாசன்

ஆண்டுதோறும் நடைபெறும் இந்தியா டுடே கருத்தரங்கம் சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று தொடங்கியது. இதில் பேசிய நடிகர் கமல்ஹாசன், ஜல்லிக்கட்டு போட்டிக்கு மிகப்பெரிய ரசிகன் நான். இப்போட்டியை வெறுப்பவர்கள் பிரியாணியையும் வெறுக்கவேண்டும் என்று கூறினார். 
 
மேலும், ஜல்லிக்கட்டு போட்டியை ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் காளை போட்டிகளுடன் தொடர்புபடுத்தி குழம்பக்கூடாது. ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் காளை போட்டிகளில் அவைகள் காயப்படுத்தப்படுகிறது, அவை உயிரிழக்கவும் நேரிடுகிறது, ஆனால் தமிழகத்தில் காளைகள் தெய்வமாக கருதப்படுகிறது, குடும்பத்தில் ஒருவராக காளைகள் வளர்க்கப்படுகிறது. 
 
ஜல்லிக்கட்டு போட்டிகளில் காளைகள் பணியவைக்கப்படுகிறதே தவிர அவை காயப்படுத்தப்படுவது கிடையாது. காளைகள் கொம்புகள் உடைப்பு, பிற இடங்களில் காயம் ஏற்படுத்துவது போன்ற எந்தஒரு காயமும் ஏற்படுத்தப்படுவது கிடையாது என்றார் கமல்ஹாசன்.

http://www.nakkheeran.in/

Link to comment
Share on other sites

கமலஹாசனிடம் இருந்து தளம்பல் இல்லாத அபூர்வமான கருத்து ஒன்று வெளிவந்துள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, போல் said:

கமலஹாசனிடம் இருந்து தளம்பல் இல்லாத அபூர்வமான கருத்து ஒன்று வெளிவந்துள்ளது.

ஜல்லிக்கட்டு தடையிலும்  தமிழினத்திற்கான ஒரு அடக்குமுறை ஆழமாக பதிந்துள்ளது.

ஒருசில நக்கல் நமசிவாயங்கள் தமிழ்நாட்டின் தைத்திருநாள் விடுமுறை நீக்கத்தை வைத்து.....சிங்களவனை தூக்கி கதைக்கினம்...சிலோனிலை தைத்திருநாள் விடுமுறை நாளாம்....மகிந்த தைப்பொங்கல் பொங்கினவராம்.....மைத்திரியும் பொங்கினவராம்....பொங்குவாராம்.
இதை விட ஈழத்தமிழனுக்கு இன்னும் என்னடா வேணும் எண்டு கேக்காத குறையாய்....ஒரு சில......
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

ஜல்லிக்கட்டு தடையிலும்  தமிழினத்திற்கான ஒரு அடக்குமுறை ஆழமாக பதிந்துள்ளது.

ஒருசில நக்கல் நமசிவாயங்கள் தமிழ்நாட்டின் தைத்திருநாள் விடுமுறை நீக்கத்தை வைத்து.....சிங்களவனை தூக்கி கதைக்கினம்...சிலோனிலை தைத்திருநாள் விடுமுறை நாளாம்....மகிந்த தைப்பொங்கல் பொங்கினவராம்.....மைத்திரியும் பொங்கினவராம்....பொங்குவாராம்.
இதை விட ஈழத்தமிழனுக்கு இன்னும் என்னடா வேணும் எண்டு கேக்காத குறையாய்....ஒரு சில......
 

 எங்கை பூந்து..... கிடாய் வெட்டலாம் என்று, பாத்துக் கொண்டு இருக்கிறார்கள். :grin:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.