Jump to content

கருத்துக்கணிப்பு - வடக்கில் பொருத்து வீடுகள் அமைப்பது தொடர்பாக உங்கள் கருத்து என்ன?


கருத்துக்கணிப்பு - வடக்கில் பொருத்து வீடுகள் அமைப்பது தொடர்பாக உங்கள் கருத்து என்ன?  

51 members have voted

You do not have permission to vote in this poll, or see the poll results. Please sign in or register to vote in this poll.

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ஜீவன் சிவா said:

ஏன் பொருத்து வீடுகள் எமக்கு வேண்டாம் என்று யாராவது ஒழுங்காக பதில் தாருங்கள். அதாவது கீழே குறிப்பிட்ட கேள்விகளுக்கு

  • வடக்கு கிழக்கு தட்ப வெப்ப சூழலுக்கு பொருத்தமற்றது என்பதாலும் ஏன்
  • வடக்கு கிழக்கு தட்ப வெப்ப சூழலில் வீட்டிலிருந்து வெளிவரும் கதிர்கள் ஆபத்தானவை என்பதாலும் எந்த கதிர்கள் 
  • கொண்டுள்ள பொருத்து சுவர்கள் பலமற்றவை என்பதாலும் ஏன்
  • மொத்தமாக உறுதியற்றவை என்பதாலும் ஏன்
  • இலகுவில் தீப்பற்றி எரியக் கூடியது என்பதாலும் ஏன்
  • மிகவும் குறைந்த ஆயுட்காலத்தைக் கொண்டவை என்பதாலும் ஏன்
  • பராமரிப்பு மிகவும் சிரமமானது என்பதாலும் ஏன்
  • ஏழை மக்களின் இயலாமையை வைத்து அவர்களின் உணர்வுகளுடன் விளையாடுவதாலும்  ஏன் 
  • அமைக்க செலவாகும் தொகையில் இரண்டு மிகவும் வசதியான, உறுதியான, நீண்ட ஆயுதக்காலம் உடைய, சுவாத்தியத்துக்கு உகந்த கல்வீடுகளை அமைக்க முடியும் என்பதாலும் எப்படி

இந்த பொருத்து வீடுகள் பற்றி எதிராக பேசும் ஒருவருமே ஏற்றுக்கொள்ளக்கூடிய விஞ்ஞான ரீதியிலான பதில்களை இதுவரை தரவில்லை. இது வெறும் அரசியல் + வாய்ச்சவடால் என்பது இப்போது நன்கு புரிகிறது. எனக்கு, எனது மக்களுக்கு ஒரு குடிசையாவது கிடைக்கணும் (மழை காற்று வெய்யிலில் இருந்து தப்ப). உங்கள் விதண்டாவாதங்களை உங்களுடனேயே வைத்திருங்கள்.

இங்கு ஆக்கபூர்வமான விஞ்ஞான ரீதியிலான பதில்களை நான் காணாதவரை - இங்கு எனக்கு வேலை இல்லை.

எனக்கு வேறு வேலை இருக்குது.  

மறுபடியும் கோடாலியை எகிரப்பண்ண நான் விரும்பவில்லை.
 

இரும்புகளால் கட்டப்படும்  பொருத்து வீடுகளினால் ஏற்படும் பாதிப்புக்கள் என்னவென்று தெரிந்தவர்கள் அதை எதிர்க்கின்றார்கள்.
அதன் பாதிப்புக்கள் என்னவென்று தெரியாத நீங்கள் இந்தத் திரிக்குள் கருத்து எழுதுவது தான் வியப்பாக இருக்கின்றது.
முதலில் உங்கள் அருகில் இருக்கும் பாடசாலையில் உயர்கல்வி கற்கும் ஒரு மாணவனிடம் இதைப்பற்றி விசாரியுங்கள்.
அதன் பின்னர் வந்து உங்கள் கருத்துக்களை முன்வையுங்கள்

Link to comment
Share on other sites

  • Replies 167
  • Created
  • Last Reply
14 minutes ago, வாத்தியார் said:

இரும்புகளால் கட்டப்படும்  பொருத்து வீடுகளினால் ஏற்படும் பாதிப்புக்கள் என்னவென்று தெரிந்தவர்கள் அதை எதிர்க்கின்றார்கள்.

நான் மொக்கு - நீங்களாவது கொஞ்சம் எனக்கு விளங்கப்படுத்தலாமே.

நிச்சயமாக புரிந்து கொள்ள்வேன்.

உங்களாலும் முடியவில்லை என்றால் பூவரசம் கட்டையும் வீண்தான்.

முதலில் உங்கள் அருகில் இருக்கும் பாடசாலையில் உயர்கல்வி கற்கும் ஒரு மாணவனிடம் இதைப்பற்றி விசாரியுங்கள்.
அதன் பின்னர் வந்து உங்கள் கருத்துக்களை முன்வையுங்கள்

மன்னிக்கவும் உங்களிடம் மேற்கூறிய கேள்வியை கேட்டதற்கு. 

Link to comment
Share on other sites

நான் வாசித்துத் தெரிந்து கொண்டதிலிருந்து -
- பொருத்து வீடுகள் விலை கூடியுது ஆனால் இலகுவாகக் கட்டக் கூடியது.
- வெயில் வெப்பத்தையோ குளிரையோ ஒலியையோ தாங்காது (இதற்கான மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டனவா என்று தெரிய வேண்டும்)
- வீட்டிற்குள் தீ ஏற்பட்டால் இலகுவாக இடிந்துவிடும்
- சரியான பராமரிப்பு இல்லையெனில் அதிக காலம் பாவிக்காது
- பராமரிப்பு இலகுவாக இருந்தாலும் திருத்த வேலைகள் செய்வது அல்லது பெருப்பித்தல் இலகுவானதல்ல

மேற்கூறியவைகள் பொதுவானவை. கட்டப்பட இருக்கும் வீடுகள் எவ்வாறு வடிவமமைக்கப் பட்டுள்ளன என்று விபரமாக ஆராய்ந்தால் மட்டுமே சரியான நன்மை தீமை பற்றி எழுதலாம்.

பிரான்சில் பொதுவாக இரும்பு வீடு அமைப்பதற்கு இலகுவாக அனுமதி தர மாட்டார்கள்.

முன்னர் சொன்னதுபோல் இத் திட்டத்தால் மக்கள் பயன் அடைவதை விட இத் திட்டத்தைக் கொண்டு வந்தவர்களே அதிக பயன் அடைவார்கள். அவர்களிடம் பேசி மாற்றீடான திட்டத்தைக் கொண்டு வர முடியுமானால் நல்லது.

Link to comment
Share on other sites

1 minute ago, இணையவன் said:

நான் வாசித்துத் தெரிந்து கொண்டதிலிருந்து -
- பொருத்து வீடுகள் விலை கூடியுது ஆனால் இலகுவாகக் கட்டக் கூடியது.
- வெயில் வெப்பத்தையோ குளிரையோ ஒலியையோ தாங்காது (இதற்கான மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டனவா என்று தெரிய வேண்டும்)
- வீட்டிற்குள் தீ ஏற்பட்டால் இலகுவாக இடிந்துவிடும்
- சரியான பராமரிப்பு இல்லையெனில் அதிக காலம் பாவிக்காது
- பராமரிப்பு இலகுவாக இருந்தாலும் திருத்த வேலைகள் செய்வது அல்லது பெருப்பித்தல் இலகுவானதல்ல

மேற்கூறியவைகள் பொதுவானவை. கட்டப்பட இருக்கும் வீடுகள் எவ்வாறு வடிவமமைக்கப் பட்டுள்ளன என்று விபரமாக ஆராய்ந்தால் மட்டுமே சரியான நன்மை தீமை பற்றி எழுதலாம்.

பிரான்சில் பொதுவாக இரும்பு வீடு அமைப்பதற்கு இலகுவாக அனுமதி தர மாட்டார்கள்.

முன்னர் சொன்னதுபோல் இத் திட்டத்தால் மக்கள் பயன் அடைவதை விட இத் திட்டத்தைக் கொண்டு வந்தவர்களே அதிக பயன் அடைவார்கள். அவர்களிடம் பேசி மாற்றீடான திட்டத்தைக் கொண்டு வர முடியுமானால் நல்லது.

உங்களுக்கு சில கிழமைகளுக்குள் பதில் தருகின்றேன்
ஊகத்தில் இல்லை 
விஞ்ஞான ரீதியாக + மக்களின் மனம் ரீதியாக

மக்களின் அவலங்களை படம் எடுக்க விரும்பாத என்னையும் உங்கள் அறியாமையால் அதற்குள் தள்ளுகிறீர்கள்

நல்லது நடந்தால் சரி.

Link to comment
Share on other sites

38 minutes ago, ஜீவன் சிவா said:

உங்களுக்கு சில கிழமைகளுக்குள் பதில் தருகின்றேன்
ஊகத்தில் இல்லை 
விஞ்ஞான ரீதியாக + மக்களின் மனம் ரீதியாக

மக்களின் அவலங்களை படம் எடுக்க விரும்பாத என்னையும் உங்கள் அறியாமையால் அதற்குள் தள்ளுகிறீர்கள்

நல்லது நடந்தால் சரி.

மக்கள் மக்கள் என்று மூச்சுக்க்கு முன்னூறு தடவை போலியாக பாசாங்கு செய்யும் நீங்கள் சுவாமிநாதனை சந்தித்து குறைந்த செலவில் அதிகளவு கல் வீடுகளை கட்ட செய்து அதிகளவான மக்களுக்கு பலன. கிட்டும படி செய்யலாம்.  மக்கள் மீது அதிக அக்கறை உள்ளவராக அடிக்கடி தங்களை காட்டிக்கொள்வதால் அதை செய்யலாம் என்றே கூறினேன். எப்படியும் உங்கள் பதில்   "நீங்கள் அதை செய்யலாமே"என்றும்  "வெளிநாட்டில் உல்லாசமாக வாழும் உங்களுக்கென்ன தெரியும்" என்பது போன்ற சில்லறைத்தனமாகவே இருக்கும்  என்பது எல்லோருக்கும் தெரியும். 

மற்றப்படி இங்கு கருத்து தெரிவிக்கும் யாழ்களத்தின் உறவுகள் மிக சாதாரண  மக்களே. அவர்ளின் கருத்துக்கள்  சுவாமிநாதன் போன்ற அதிகார பீடத்தில் அமர்ந்துள்ள நபர்கள மீது அதிக தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படியும் தனக்கு பயன் கிடைக்க கூடிய திட்டதைத் தான் செய்வார் ஆகவே இங்கு நேரத்தை செலவழித்து உங்கள் பிரச்சாரத்தை மேற்கொள்வது தேவையற்றது என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம். 

எனவே உங்கள் நேரத்தை இங்கு சாதாரண மக்களுடன. விரயமாக்காமல்,  தாயகத்தில் பொருத்து வீடுகளுக்கு எதிராக கருத்து தெரிவித்து வரும் மக்கள்  பிரதிநிதிகளுக்கும் பாராளுமன்ற உறுப்பிரனர்களுக்கும் *தங்களால் தொடரந்து மேற்கொள்ளப்பட்டு வரும்   பொருத்து வீட்டு ஆதரவு  campaign* செய்வது உங்களுக்கு பலனைக் கொடுக்கலாம். 

Link to comment
Share on other sites

1 minute ago, trinco said:

மக்கள் மக்கள் என்று மூச்சுக்க்கு முன்னூறு தடவை போலியாக பாசாங்கு செய்யும் நீங்கள் சுவாமிநாதனை சந்தித்து குறைந்த செலவில் அதிகளவு கல் வீடுகளை கட்ட செய்து அதிகளவான மக்களுக்கு பலன. கிட்டும படி செய்யலாம்.  மக்கள் மீது அதிக அக்கறை உள்ளவராக அடிக்கடி தங்களை காட்டிக்கொள்வதால் அதை செய்யலாம் என்றே கூறினேன். எப்படியும் உங்கள் பதில்   "நீங்கள் அதை செய்யலாமே"என்றும்  "வெளிநாட்டில் உல்லாசமாக வாழும் உங்களுக்கென்ன தெரியும்" என்பது போன்ற சில்லறைத்தனமாகவே இருக்கும்  என்பது எல்லோருக்கும் தெரியும். 

மற்றப்படி இங்கு கருத்து தெரிவிக்கும் யாழ்களத்தின் உறவுகள் மிக சாதாரண  மக்களே. அவர்ளின் கருத்துக்கள்  சுவாமிநாதன் போன்ற அதிகார பீடத்தில் அமர்ந்துள்ள நபர்கள மீது அதிக தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படியும் தனக்கு பயன் கிடைக்க கூடிய திட்டதைத் தான் செய்வார் ஆகவே இங்கு நேரத்தை செலவழித்து உங்கள் பிரச்சாரத்தை மேற்கொள்வது தேவையற்றது என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம். 

மறுபடியும் இன்னொரு பூவரசம் கட்டை.

Link to comment
Share on other sites

11 minutes ago, ஜீவன் சிவா said:

மறுபடியும் இன்னொரு பூவரசம் கட்டை.

தங்களால் இடைவிடாது தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் பொருத்து வீட்டு ஆதரவு campaign சிறப்புற அமைய எனது வாழ்த்துக்கள். தொடர்ந்து ஒரே technic பயன்படுத்தாமல் புதிய புதிய நுட்பங்களைப் பயன்படுத்தி உங்கள் campaign ஐ தொடருங்கள். Bravo!!!!!!!!!!!

Link to comment
Share on other sites

முதலில் ஒரு விடயத்தை புரிந்து கொள்ளுங்கள் - எனக்கு இந்த வீடுகளைப்பற்றி தெரியாது 
எனது மக்களுக்கு ஒரு இருப்பிடம் வேண்டுமென்றதே எனது கருத்து.

இங்கு கருத்தை பகிர்ந்த எவருக்குமே எதுவும் தெரியாது  என்ற எடு கோளில் இருந்து நான் புறப்படுகின்றேன். ஆனால் மறுபடியும் நொட்டை பிடிக்க ஆசைப்படும் விண்ணர்களுக்கு நான் பதில் அளிக்கமாட்டேன்.  அவர்களின் அறிவு அம்புட்டுத்தான் என்று விட்டு விடலாம். 

தமக்கு தெரியாது என்பதைக்கூட சிலர் அழகாக நாசூக்காக சொல்கிறார்கள் - தமிழின் பெருமை.

 

முதலில் கீழுள்ள கேள்வியை எடுப்போம்

வடக்கு கிழக்கு தட்ப வெப்ப சூழலுக்கு பொருத்தமற்றது என்பதாலும் - ஏன் 

யாராவது இது ஏன் எமது சூழலுக்கு பொருந்தும் என்று உங்கள் அறியாமையால் கேட்டால் - சிரித்துவிட்டு போய்விடுவேன் உங்கள் அறியாமையை எண்ணி.

 

இந்த வீடுகள் ஏன் எமது சூழலுக்கு பொருத்தமில்லை என்று யாராவது சொல்லுங்கள். அங்கிருந்து எனது தேடலை ஆரம்பிக்கின்றேன்.


 

9 minutes ago, trinco said:

தங்களால் இடைவிடாது தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் பொருத்து வீட்டு ஆதரவு campaign சிறப்புற அமைய எனது வாழ்த்துக்கள். தொடர்ந்து ஒரே technic பயன்படுத்தாமல் புதிய புதிய நுட்பங்களைப் பயன்படுத்தி உங்கள் campaign ஐ தொடருங்கள். Bravo!!!!!!!!!!!

ஏன் என்ற கேள்விக்கு பதில் தரமுடியாதது எல்லாம் 

மறுபடியும் இன்னொரு + இன்னொரு பூவரசம் கட்டை.

Link to comment
Share on other sites

இந்த பொருத்து வீடுகள் அனைத்தும்  கல் வீடுகளாக கட்டப்படும் போது உள்ளூர்  ஏழை மக்களுக்கு கிடைக்கும வேலை வாய்பபு அதன் மூல் அவர்களின் வாழ்ககைத்தரம் உயர்வடையும் வாய்பபு போன்ற சாதாரணவிடயங்களைக் கூட புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் மக்களைப் பற்றி கவலைப்படுவதாக முதலைக்கண்ணீர் வேறு.  

Link to comment
Share on other sites

3 minutes ago, trinco said:

இந்த பொருத்து வீடுகள் அனைத்தும்  கல் வீடுகளாக கட்டப்படும் போது உள்ளூர்  ஏழை மக்களுக்கு கிடைக்கும வேலை வாய்பபு அதன் மூல் அவர்களின் வாழ்ககைத்தரம் உயர்வடையும் வாய்பபு போன்ற சாதாரணவிடயங்களைக் கூட புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் மக்களைப் பற்றி கவலைப்படுவதாக முதலைக்கண்ணீர் வேறு.  

இந்த வீடுகளின் அமைப்பை பற்றி நான் ஏற்கனவே பொருளாதார ரீதியில் யாழில் எழுதியுள்ளேன் - வாசிச்சிட்டீங்கள் போல இருக்குது. 

முடிந்தால் இந்த கேள்விக்கு பதில் தாருங்கள் - எனது + மற்ற கள உறவினர்களின் தேடலுக்கு உதவியா இருக்கும்.

16 minutes ago, ஜீவன் சிவா said:

வடக்கு கிழக்கு தட்ப வெப்ப சூழலுக்கு பொருத்தமற்றது என்பதாலும் - ஏன் 

இல்லை - எனது நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை.
யாழில் நிறைய வாசிக்க இருக்கு.

Link to comment
Share on other sites

1 hour ago, ஜீவன் சிவா said:

வடக்கு கிழக்கு தட்ப வெப்ப சூழலுக்கு பொருத்தமற்றது என்பதாலும் - ஏன் 

 

உலோகம் வெப்பத்தை மிக இலகுவாக கடத்தும் என்பதால், பகல் வேளைகளில் வீட்டுக்குள் வெப்பம் மிக அதிகமாக காணப்படும். வெப்பத்தடுப்பு கொண்ட வீடு கட்டலாம் ஆனால் கட்டுமான செலவு மற்றும் பராமரிப்பு செலவு மிக அதிகம். எனவே இது வெப்ப வலைய பிரதேசங்களுக்கு பொருத்தம் இல்லாதது.

Link to comment
Share on other sites

6 minutes ago, Surveyor said:

உலோகம் வெப்பத்தை மிக இலகுவாக கடத்தும் என்பதால், பகல் வேளைகளில் வீட்டுக்குள் வெப்பம் மிக அதிகமாக காணப்படும். வெப்பத்தடுப்பு கொண்ட வீடு கட்டலாம் ஆனால் கட்டுமான செலவு மற்றும் பராமரிப்பு செலவு மிக அதிகம். எனவே இது வெப்ப வலைய பிரதேசங்களுக்கு பொருத்தம் இல்லாதது.

இங்கு உலோகம் மூலைகளில் பயன்படுத்தப்படுகின்றது. ஆனாலும் சீமெந்து தூண்களில் உள்ள உலோகத்தின் அளவை விட  இங்கு குறைவாக உள்ளது என்று நான் சந்தித்த சிலர் கூறுகின்றனர். அதைவிட சீமெந்தினால் உருவாகும் வெப்பத்தைவிட மிகவும் குறைவாகவே இங்கு உள்ளது என்றும் கூறுகின்றார்களே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, ஜீவன் சிவா said:

இங்கு உலோகம் மூலைகளில் பயன்படுத்தப்படுகின்றது. ஆனாலும் சீமெந்து தூண்களில் உள்ள உலோகத்தின் அளவை விட  இங்கு குறைவாக உள்ளது என்று நான் சந்தித்த சிலர் கூறுகின்றனர். அதைவிட சீமெந்தினால் உருவாகும் வெப்பத்தைவிட மிகவும் குறைவாகவே இங்கு உள்ளது என்றும் கூறுகின்றார்களே?

ஜீவன் ஒரு தகரத்தின் கீழ் நிற்பதற்கும் கொங்ரீட் பிளேட் இன் கீழ் நிற்பதற்கும் வெக்கை வித்தியாசம் தற்போது இல்லையா? மக்களின் உடல் நிலை உந்த வெக்கையை தாங்கும் நிலைக்கு வந்துவிட்டதா? முன்னர் நான் இருந்த காலத்தில் தகரத்தின் கீழ் சரியான வெக்கையாக இருக்கும். நீங்கள் தானே மக்களோடு மக்களாக இருக்கிறீர்கள்.

ஒரு கல்வீட்டின் உயரமும் உந்த பொருத்து வீட்டின் உயரமும் ஒன்றா? நான் அறிந்தவரை பொருத்து வீட்டின் உயரம் குறைவானது. 

 

(தயவுசெய்து ஓலைக்குடிசைகளிலும் தரகக்கொட்டில்களிலும் உள்ள மக்களுக்கு இது நல்லது தானே என்று காரணம் கூறாதீர்கள்)

Link to comment
Share on other sites

12 minutes ago, ஜீவன் சிவா said:

இங்கு உலோகம் மூலைகளில் பயன்படுத்தப்படுகின்றது. OK

ஆனாலும் சீமெந்து தூண்களில் உள்ள உலோகத்தின் அளவை விட  இங்கு குறைவாக உள்ளது என்று நான் சந்தித்த சிலர் கூறுகின்றனர்.

சீமெந்து தூணில் உள்ள உலோகம் சீமெந்துக்கு உள்ள இருப்பதால், சீமெந்து ஒரு வெப்ப தடுப்பு போல செயல்படும். அதை விட அந்த உலோகம் நேரடியாக சூழலுக்கு தொடர்பற்றது. எனவே அந்த உலோகத்தினால் அதிகளவான வெப்பத்தினை கடத்த முடியாது (வெப்ப கடத்துதல் என்பது உலோகத்தின் நிறையில் சம்பந்தப்பட்ட்தில்லை. அது சூழலுடன் நேரடி தொடர்பில் உள்ள உலோகத்தின் மேட்பரப்பளவில் தங்கியுள்ளது). ஆனால் இந்த பொருத்து வீட்டில், சுவர் சீமெந்து மற்றும் செங்கல் மூலம் கட்டப்படாமல், வேறு பொருட்கள் மூலம் (தகரம் மற்றும் அதற்கு ஈடான பொருட்கள் ) காட்டுவதால், சுவரின் அதிக மேட்பரப்பு காரணமாக, சீமெந்து மற்றும் செங்கல் சுவர்களை விட அதிகளவான வெப்பத்தினை வீட்டுக்குள் கடத்தும். எனவே சீமெந்து மற்றும் செங்கல் மூலம் கட்டப்படும் வீடுகளை விட இந்த பொருத்து வீட்டில் வீட்டின் உள்பகுதி மிகவும் வெப்பமாக இருக்கும்

அதைவிட சீமெந்தினால் உருவாகும் வெப்பத்தைவிட மிகவும் குறைவாகவே இங்கு உள்ளது என்றும் கூறுகின்றார்களே? 

வீடு கட்டிய புதிதில், சீமெந்தின் வெப்ப தாக்கம் இருக்கு. இதை ஒண்டும் செய்ய முடியாது. ஆனால் கொஞ்ச காலம் போக, சீமெந்தின் வெப்பம் படிப்படியாக்க குறைந்து விடும். ஆனால் பொருத்து வீட்டில், வீடு உள்ளவரை வீட்டுக்குள்ள வெப்பம் அதிகமாக இருக்கும். கரணம் பொருத்து வீடுச்சுவர் வெப்பத்தினை சூழலில் இருந்து வீட்டுக்குள் கடத்துவதால். சீமெந்து வீட்டில் இந்தப் கடத்தல் என்பது பொருத்து வீடுச்சுவருடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவு. 

 

Link to comment
Share on other sites

3 minutes ago, MEERA said:

ஜீவன் ஒரு தகரத்தின் கீழ் நிற்பதற்கும் கொங்ரீட் பிளேட் இன் கீழ் நிற்பதற்கும் வெக்கை வித்தியாசம் தற்போது இல்லையா? மக்களின் உடல் நிலை உந்த வெக்கையை தாங்கும் நிலைக்கு வந்துவிட்டதா? முன்னர் நான் இருந்த காலத்தில் தகரத்தின் கீழ் சரியான வெக்கையாக இருக்கும். நீங்கள் தானே மக்களோடு மக்களாக இருக்கிறீர்கள்.

இவர்கள் இப்போது வசிப்பது இங்கு

IMG_6866.jpg

உங்களது மனதில் இதுதான் உள்ளது என்று புரிகிறது
ஆனால் இப்போதெல்லாம் வேறுவகை மீரா
 

Bilderesultat for roofing sheet

இவை என்னவென்று நீங்களே தேடிப்பாருங்கள் மீரா
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஜீவன் சிவா said:

இவர்கள் இப்போது வசிப்பது இங்கு

IMG_6866.jpg

உங்களது மனதில் இதுதான் உள்ளது என்று புரிகிறது
ஆனால் இப்போதெல்லாம் வேறுவகை மீரா
 

Bilderesultat for roofing sheet

இவை என்னவென்று நீங்களே தேடிப்பாருங்கள் மீரா
 

நான் ஏற்கனவே எழுதியது உந்த படத்தை எத்தனை நாட்களுக்கு காட்டப்போகிறீர்கள்?

இந்த இணைப்பையும் பாருங்கள்

 

Link to comment
Share on other sites

9 minutes ago, ஜீவன் சிவா said:

Bilderesultat for roofing sheet

இவை என்னவென்று நீங்களே தேடிப்பாருங்கள் மீரா
 

வடிவம் மட்டுமே மாறியுள்ளது. But there are no changes on properties of this material.

tin is always tin.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் மீண்டும் மீண்டும் கூறுவது 

பொருத்து வீட்டை கல்வீடாக மாற்றுங்கள்.

Link to comment
Share on other sites

5 minutes ago, Surveyor said:

 

 

5 minutes ago, Surveyor said:

சீமெந்து தூணில் உள்ள உலோகம் சீமெந்துக்கு உள்ள இருப்பதால், சீமெந்து ஒரு வெப்ப தடுப்பு போல செயல்படும். அதை விட அந்த உலோகம் நேரடியாக சூழலுக்கு தொடர்பற்றது. எனவே அந்த உலோகத்தினால் அதிகளவான வெப்பத்தினை கடத்த முடியாது (வெப்ப கடத்துதல் என்பது உலோகத்தின் நிறையில் சம்பந்தப்பட்ட்தில்லை. அது சூழலுடன் நேரடி தொடர்பில் உள்ள உலோகத்தின் மேட்பரப்பளவில் தங்கியுள்ளது). ஆனால் இந்த பொருத்து வீட்டில், சுவர் சீமெந்து மற்றும் செங்கல் மூலம் கட்டப்படாமல், வேறு பொருட்கள் மூலம் (தகரம் மற்றும் அதற்கு ஈடான பொருட்கள் ) காட்டுவதால், சுவரின் அதிக மேட்பரப்பு காரணமாக, சீமெந்து மற்றும் செங்கல் சுவர்களை விட அதிகளவான வெப்பத்தினை வீட்டுக்குள் கடத்தும். எனவே சீமெந்து மற்றும் செங்கல் மூலம் கட்டப்படும் வீடுகளை விட இந்த பொருத்து வீட்டில் வீட்டின் உள்பகுதி மிகவும் வெப்பமாக இருக்கும்

 

6 minutes ago, Surveyor said:

வீடு கட்டிய புதிதில், சீமெந்தின் வெப்ப தாக்கம் இருக்கு. இதை ஒண்டும் செய்ய முடியாது. ஆனால் கொஞ்ச காலம் போக, சீமெந்தின் வெப்பம் படிப்படியாக்க குறைந்து விடும். ஆனால் பொருத்து வீட்டில், வீடு உள்ளவரை வீட்டுக்குள்ள வெப்பம் அதிகமாக இருக்கும். கரணம் பொருத்து வீடுச்சுவர் வெப்பத்தினை சூழலில் இருந்து வீட்டுக்குள் கடத்துவதால். சீமெந்து வீட்டில் இந்தப் கடத்தல் என்பது பொருத்து வீடுச்சுவருடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவு. 

ஒட்டுமொத்தமாய் சீமெந்து முழுவதுமாய் ஆக்கிரமிச்ச வீட்டை விட இந்த வீடுகள் ஒன்றும் அதிகமாய் வெப்பமாய் இருக்காது என்பது ஏனோ புரியாமலே- :grin:

Link to comment
Share on other sites

5 minutes ago, ஜீவன் சிவா said:

 

 

ஒட்டுமொத்தமாய் சீமெந்து முழுவதுமாய் ஆக்கிரமிச்ச வீட்டை விட இந்த வீடுகள் ஒன்றும் அதிகமாய் வெப்பமாய் இருக்காது என்பது ஏனோ புரியாமலே- :grin:

நான் எழுதியுள்ளது உங்களுக்கு விலங்காவிட்டால், ஒண்டும் செய்ய முடியாது 

Link to comment
Share on other sites

3 minutes ago, Surveyor said:

tin is always tin.

புரிந்தது அவ்வளவுதான் - நன்றி

எனக்கு புரிந்ததும் அதுதான்  - tin is always tin.

Link to comment
Share on other sites

17 minutes ago, ஜீவன் சிவா said:

 

 

ஒட்டுமொத்தமாய் சீமெந்து முழுவதுமாய் ஆக்கிரமிச்ச வீட்டை விட இந்த வீடுகள் ஒன்றும் அதிகமாய் வெப்பமாய் இருக்காது என்பது ஏனோ புரியாமலே- :grin:

எங்களுக்கும் பொருத்து வீடு போன்ற கட்டமைப்பை கொண்ட சைட் ஆஃபீசில வேலை செய்த அனுபவம் எல்லாம் நிறைய இருக்குது. சீமெந்து வீட்டுடன் ஒப்பிடும்போது, பொருத்து வீட்டில் வெப்பம் மிக அதிகம். அனுபவத்தில் கண்ட உண்மை.

நீங்கள் பிடித்த முயலுக்கு 3 கால் எண்டால், நாங்கள் ஒண்டும் செய்ய முடியாது.

Link to comment
Share on other sites

2 minutes ago, MEERA said:

IMG_4488.jpg

இந்த கூரையில் உள்ள தகரமோ என்ன கோதாரியோ முதலில் அதுக்கு வருவோம் - அது என்ன மீரா?

1 minute ago, Surveyor said:

நீங்கள் பிடித்த முயலுக்கு 3 கால் எண்டால், நாங்கள் ஒண்டும் செய்ய முடியாது.

தப்பு 

இல்லை நான் பிடித்த முயலுக்கு மூண்டரைக்கால் 
நன்றி வணக்கம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, ஜீவன் சிவா said:

 

Bilderesultat for roofing sheet

 

6 minutes ago, ஜீவன் சிவா said:

இந்த கூரையில் உள்ள தகரமோ என்ன கோதாரியோ முதலில் அதுக்கு வருவோம் - அது என்ன மீரா?

தப்பு 

இல்லை நான் பிடித்த முயலுக்கு மூண்டரைக்கால் 
நன்றி வணக்கம்.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.