Jump to content

10 வயது பத்திரிகையாளரைப் பார்த்து நடுங்கும் இஸ்ரேல்... ஏன்?


Recommended Posts

10 வயது பத்திரிகையாளரைப் பார்த்து நடுங்கும் இஸ்ரேல்... ஏன்?

போர்

'போரும், போராட்டமும் இறுதியில் அநாதைகள் ஆக்குவது என்னவோ குழந்தைகளைத்தான்' என்பார்கள். ஆனால், பல யுகங்களாகத் தொடரும் இஸ்ரேல்-பாலஸ்தீனியப் போர், பத்து வயதாகும் ஜன்னா ஜிகாதை ஊடகவியலாளராக்கி இருக்கிறது. உலகின் மிகச்சிறிய பத்திரிகையாளர் ஜன்னாவாகத்தான் இருக்க முடியும். பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நிகழ்த்திவரும் தொடர் தாக்குதல்களை உலகத்துக்கு, தான் எடுக்கும் காணொளிகள் வழியாக வெளிச்சம் போட்டுக்காட்டுகிறாள் ஜன்னா. இஸ்ரேலியர்கள் ஆக்கிரமித்துள்ள பாலஸ்தீனப் பகுதியான நபி சலேதான் ஜன்னா ஜிகாத் இருப்பிடம். இத்தனைக்கும் அவளது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் யாரும் பத்திரிகையாளர்கள் கிடையாது. பிறகு அவளுக்குள் எப்படி இப்படியொரு ஆர்வம் எழுந்தது?

11899778_895753540511569_681546156124040

"இஸ்ரேலியத் தாக்குதல்கள் பற்றி ஊடகவியலாளர்கள் தொடர்ந்து எழுதி வந்தாலும், அவர்கள் எப்போதும் உண்மையை எழுதுவதில்லை" என்கிறாள் ஜன்னா. அவளது உறவுமுறைத் தங்கை ஒருத்தியும், அவளது மாமாவும் இஸ்ரேல் தாக்குதலில் பலியானது, ஜன்னாவை மிகவும் பாதித்தது. இருவருமே எரிவாயு குண்டு வெடித்தும், துப்பாக்கியால் சுடப்பட்டும் பலியானார்கள். அதுவரை பட்டாம்பூச்சிகளை மட்டுமே தன் அம்மாவின் ஐ-போன் வழியாகப் படம் பிடித்துவந்த ஜின்னா, தனது பகுதியில் இஸ்ரேலியர்களுக்கு எதிராக நிகழும் போராட்டம், தங்களுடைய மக்கள் மீது நிகழ்த்தப்படும் தாக்குதல்கள், கைது, தனி மனிதத் தாக்குதல், பெண்கள் மீதான வன்முறைத் தாக்குதல் என ஒவ்வொன்றாக வீடியோ பதிவு செய்யத் தொடங்கினாள். அவளது உறவினர் ஒருவர் பத்திரிகை புகைப்படக்காரராக இருப்பதும் ஒருவகையில் அவளுக்கு வழிகாட்டியாக இருந்திருக்கிறது. தற்போது, இஸ்ரேல் ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்டுள்ள ஜோர்டான், ஜெருசலேம் ஆகிய பகுதிகளுக்கு தன் தாயுடன் படையெடுக்கிறாள் ஜன்னா. அவரது ஐ.போன்தான் இவளது ஆயுதம். ’கேமராதான் என் துப்பாக்கி’ என்கிறாள் ஜன்னா. சிறுமி என்பதால் அவளால் அப்படியென்ன செய்து விடமுடியும்? என்று நினைத்து அவளது கேமராவை இஸ்ரேலியர்கள் பறிப்பதில்லை. சில நேரங்களில் இவள் கேமிராவுடன் நெருங்கினால் வேகமாக அந்த இடத்தைவிட்டு நகருகின்றனர் இஸ்ரேலியர்கள். உருவத்தைக் கண்டு யாரையும் எடைபோட்டு விடக்கூடாது என்பதுதான் ஜன்னாவின் விஷயத்தில் எவ்வளவு நிதர்சனம்?

12923293_1006180476135541_51618113713622

ஜன்னா தன்னைச் சுற்றி நிகழ்வதைப் பற்றி, தனதுபோக்கில் உலகத்துக்கு தெரியப்படுத்துவது ஒருவகையில் தனக்கு மகிழ்ச்சி என்றாலும், மற்றொருபக்கம் இஸ்ரேல் இராணுவம் அவளை என்ன செய்யுமோ? என்கிற பயம் இருப்பதாகக் கூறுகிறார் ஜன்னாவின் தாய். ஜன்னாவின் முகநூல் பக்கத்தில், தான் கலந்துகொள்ளும் போராட்டம், இஸ்ரேல் இராணுவம் என எல்லாவற்றையும் அரேபிய மற்றும் ஆங்கில மொழியில் பகிர்கிறாள். ஜன்னாவின் புகைப்படக்கார உறவினர் கூறுகையில்,”இந்த வயதில் பிள்ளைகள் துப்பாக்கியும், ரத்தத்தையும் பார்ப்பதே தவறு என்கின்றன பல நாடுகள், துரதிர்ஷ்டவசமாக நாங்களும் எங்கள் பிள்ளைகளும் பிறந்ததே துப்பாக்கிகளின் சத்தத்துக்கு நடுவேதான். பிள்ளைகளுடன் விளையாடிக் கொண்டு பள்ளியில் படிக்க வேண்டிய வயதில், ஜன்னா கேமிராவுடன் சுற்றித் திரிவதை ஒருபக்கம் ஏற்றுக்கொள்ள முடியவில்லைதான். ஆனால் போர்சூழ்ந்த பூமியில், கண் முன்னே ஒருவர் துப்பாக்கியால் சுடப்படும்போது, உண்மைகளை மட்டுமே நாம் பேச வேண்டும் என பிள்ளைகளிடம் அறிவுறுத்தி விட்டு பொய்யாக எப்படி அமைதியைப் பற்றி எப்படிப் பேசமுடியும்? அவர்களுக்குத் தேவை அமைதி அல்ல, சுதந்திரம். பலருக்கு துப்பாக்கி வழியாகக் கிடைக்கிறது. ஜன்னாவுக்கு கேமரா வழியாக கிடைக்கிறது” என்கிறார்.

"நீ வளர்ந்ததும் என்னவாக ஆசைப்படுகிறாய்" என்று ஜன்னாவிடம் கேட்டால்,"பத்திரிகையாளராக ஆசைப்படுகிறேன்” என கண்கள் மினுமினுக்கக் கூறுகிறாள்.

ஜன்னா எனும் இந்தச் சிறு பட்டாம்பூச்சியின் கனவு நிறைவேறிடவேணும் அமைதிக்கென விடியட்டுமே இந்த பூமி!

http://www.vikatan.com/news/world/77326-janna-jihad-meet-palestines-10-year-old-journalist.art

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌ல‌ம் முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.