Jump to content

கள்ளந்திரி


Recommended Posts

 

கள்ளந்திரி

சிறுகதை: நர்சிம், ஓவியங்கள்: ஸ்யாம்

 

p78a.jpg

“ச்சே... ப்ச்ச்ச்... ச்சே...”

மிகுந்த கோபமும் ஆற்றாமையும் அழுகையும் கலந்து இப்படிச் சொல்லிக்கொண்டே இருந்தார் மூர்த்தி அண்ணன்.

நமக்கு நேரடியாக பேரிடியே விழுந்தாலும் பிரச்னை இல்லைபோலும். பிறரிடம் சென்று, `உன் அப்பா இறந்துவிட்டார்’ எனச் சொல்லிய பிறகு அவர்களை எதிர்கொள்வதுதான், அந்தக் கணத்தில் வாழ்வின் இதுவரையிலான உச்சபட்ச சவால் எனத் தோன்றியது எனக்கு.

அணைத்துவைத்திருந்த கைபேசியை எடுத்தவர், அதை உயிர்ப்பிக்கும்போதே அழைப்பு வந்தது.

எதிர்முனையில் அவரின் அம்மா. அழுகைச் சத்தம் ஸ்பீக்கரில் போடாமலே வெளியில் கேட்டது. ஒன்றும் பேசாமல், போனை கட் செய்தவர், நான் கண் இமைத்து அசந்த  ஒரு நொடியில், அதைச் சடாரென சுவர் மீது    எறிந்தார். சுக்குநூறாக உடைந்து விழுந்தது அந்த விலை உயர்ந்த கைபேசி. உடைந்த துண்டுகளையும் பாட்டரியையும் அள்ளிக்கொண்டு, அவரின் தோளைத் தொட்டு, அங்கு இருந்து நகர்த்தினேன். எதற்கோ கட்டுப்பட்டவர்போல என்னோடு நடந்துவந்து வண்டியில் ஏறிக்கொண்டார்.

அவர் தன்னியல்பாக  மீண்டும் மீண்டும் `ப்ச்’ கொட்டிக்கொண்டே இருந்தார்.

“ப்ச்... இன்னும் ஒரு வருஷம் இருந்துருக்கலாமேடா... ரமேஷ் பய கல்யாணம் வரைக்கும். அந்தப் புள்ள என்னடா பாவம் பண்ணான், அவர் காலையே சுத்திக்கிட்டு இருப்பான்டா, இப்படிப் படக்குனு போய்ட்டாரு... ச்ச.”

மூர்த்தி அண்ணனை எப்படி சமாதானம் சொல்லித் தேற்றுவது என உண்மையிலேயே தெரியவில்லை. அமைதியாக காரை ஓட்டிக்கொண்டிருந்தேன்.

அங்கு தெருவில், `கல்யாண சாவு’ எனத் தடபுடலாக ஏற்பாடுகள் நடந்துகொண்டிருக்கின்றன. 85 வயது வரை வாழ்வாங்கு வாழ்ந்து, இறந்தவர்.

அவருடைய 80-வது வயது நிறைவை விசேஷமாகக் கொண்டாட முடிவெடுத்த மூர்த்தி அண்ணன், பந்தல் போடச் சொல்லி ஏற்பாடு செய்ததும், பந்தலுக்கான மூங்கில் கம்புகளை ஊன்றும்போதே ஆட்கள் கூடிவிட்டார்கள்... மூர்த்தி அப்பா இறந்துவிட்டாரோ என. பதறிப்போய் முதலில் வாழைமரத்தைக் கட்டினார் மூர்த்தி அண்ணன்.

``விடப்பா திருஷ்டி கழிஞ்சதுனு வெச்சுக்க...’' எனத் தேற்றினார்கள் மூர்த்தி அண்ணனை.

நான் சற்றே குறைத்து மதிப்பிட்டுவிட்டு, மூர்த்தி அண்ணனிடம் பட்டெனச் சொல்லிவிட்டேன். ஆனால், அவர் அதை எதிர்கொண்டவிதம் எனக்குள் பயத்தை ஏற்படுத்தத் தொடங்கிவிட்டது. எங்கே இவருக்கு ஏதாவது ஆகிவிடுமோ எனப் பதறிப்போனேன்.

“ச்ச... நான் காலையில வேலைக்குக் கிளம்பி வர்றவரைக்கும் நல்லாத்தானடா இருந்தாரு? ஏன்டா ரகு, ஏதாவது சொல்றா... கீழ ஏதும் விழுந்துதொலச்சாரா?”

பதில் சொல்லி ஒன்றும் ஆகப்போவது இல்லை என்பதால், அமைதியாகவே இருந்தேன். அதுவும் நம்மை விட ஆறேழு வயது மூத்தவரைச் சமாதானம்செய்வதாக எந்த வார்த்தைகளை உபயோகித்திட முடியும்? சம்பிரதாய வார்த்தைகளைவிடவும் மெளனம்தான் இழவு வீட்டாரை எதிர்கொள்ள சரியான வழி என்பதாகப்பட்டது.

தெருவில் மூர்த்தி அண்ணன் என்றாலே, எங்களுக்கு எல்லாம் ஒருவித பரவசம் கலந்த பயம்.

நாங்கள் சிறுவர்களாக இருக்கும்போது, எந்நேரமும் அவர் வீட்டு மொட்டைமாடியில் நடந்து நடந்து படித்துக்கொண்டே இருப்பார்.

பெரிய பெரிய மீசை தாடிவைத்த அண்ணன்கள் எங்கிருந்தோ அவரைத் தேடிவருவதும், காலையில் கல்லூரி, மாலையாகிவிட்டால் கபடி விளையாடப் போவதும் என தெருவில் எப்போதும் பிஸியாக இருப்பார்.

நாங்கள் தெருவில் ஒன் பிச் கிரிக்கெட் ஆடிக் கொண்டிருப்போம். எவ்வளவு அவசரமாகச் சென்றாலும், எங்களைக் கடக்கும்போது ஒரு நிமிடம் நின்று, மட்டையைப் பிடுங்கி, ஒரு ஓவர் ஆடிவிட்டுத்தான் செல்வார்.

விடுமுறை மதிய நேரங்களில் நாங்கள் மெதுவாக எட்டிப்பார்ப்போம். மூர்த்தி அண்ணன் தலை தெரிந்தால், ஆமை சட்டென தன் தலையை ஓட்டுக்குள் இழுத்துக்கொள்வதுபோல் மீண்டும் வீட்டுக்குள் ஓடிவிடுவோம். அரை மணி நேரம் பந்து போடச் சொல்வார். கூடவே கணக்கு, அறிவியல் எனக் கேள்விகள் கேட்பார்.

எதிர்வீட்டு மாலதி அக்காவுக்காகத் தான் எங்களைவைத்து அத்தனை அக்கப்போர்கள் செய்தார் என்பதை, அவரின் கல்யாணச் செய்தியைக் கேட்ட அன்றுதான் தெரிந்துகொண்டோம்.
அது கிட்டத்தட்ட தெருவின் முதல் காதல் திருமணம்.

“எல்லாம் சரிடா, ஒனக்கு லவ் பண்ண, பக்கத்து வீடு, சைடு வீடு எல்லாம் கிடைக்கலையா? எதிர்த்த வீட்டுல பொண்ணை எடுத்தா, நாளைக்கு ஏதாவது சாவுன்னா, சம்பந்தி வீட்ல இருந்து எப்படிடா சாப்பாடு எடுத்து வருவாங்க? இல்ல அங்க ஏதாவதுன்னா, நாம எப்படி என்னத்தைச் செய்ய முடியும்? முட்டாப்பய. பொடலங்கா காதல்...”

மூர்த்தி அண்ணனின் அப்பா விட்ட சவுண்டு இன்றுபோல் இன்னமும் கேட்கிறது. எவ்வளவு தீர்க்கமாக யோசிக்க முடிகிறது அவரால்? ஆனாலும் கல்யாணத்தைத் தடபுடலாகத்தான் நடத்தினார்.

அருகில் விசும்பிக்கொண்டிருக்கும் மூர்த்தி அண்ணனின் அழுகையையும் மீறி, இறந்து போய்விட்ட பெரியவரின் நினைவு என்னை முழுவதும் ஆக்கிரமிக்கத் தொடங்கியது.

வர் எப்போதும் ஏகாந்த நிலையிலேயே இருப்பார். இரண்டு கைகளும் காற்றில் மிதக்க, கட்டை விரலும் ஆள்காட்டி விரலும் மூக்குப்பொடியைப் பற்றியிருக்க, மற்ற விரல்கள் விரிந்து, அபிநயம் பிடிப்பதுபோல் இருக்கும்.

`அதீத அன்பு இட்டுச்செல்வது முட்டுச் சந்துக்குத்தான்’ என்பான் கோனார் தெரு முத்து. போலவே அதீத அறிவு இட்டுச் செல்வது பைத்திய நிலைக்குத்தான் என்பதை என் கணக்கு வாத்தியாரும் மூர்த்தி அண்ணனின் அப்பாவும் நிரூபித்திருந்தார்கள்.

புத்தாண்டு காலண்டரை அவரிடம் கொடுத்தால் தீர்ந்தது கதை. பச்சை, சிவப்பு, மஞ்சள்... என கலர் கலர் ஸ்கெட்ச் பேனாக்களால் தேதி, கிழமை என அடித்துக் கிறுக்கித் தள்ளி விடுவார். ஆம்... கிறுக்கல் என்றே தோன்றும். ஆனால் கையில் எடுத்துப் பார்த்தால் மிரட்சி ஏற்படும். பத்து, இருபது, முப்பது என அடுத்த ஐம்பது ஆண்டுகளுக்கான காலண்டரைத் துல்லியமாகக் கணக்கிட்டு எழுதியிருப்பார். டெக்னாலஜி துணைகொண்டு, கோடு டேட் போட்டுப் பார்த்தால், கிழமை அப்படியே பொருந்திப்போகும்.

நாம் சரிபார்த்ததைப் பார்த்தார் என்றால், கண்களைச் சிமிட்டி, முதுகில் ஒரு தட்டுத் தட்டி, `அதெல்லாம் பெர்ஃபெக்ட்டா இருக்கும்டா, அமாவாசை, பௌர்ணமிதான் கணக்கு’ -சொல்லிக் கொண்டே போய்விடுவார். மூக்குப்பொடி கிளப்பும் கிளர்ச்சியையும் தாண்டி, அதிசயத்தில் நமக்கு வாய் பிளக்கும்.

போலவே மதுரையின் எந்த இடத்தைப் பற்றி பேச்சுவந்தாலும், `கள்ளந்திரில இருந்து பதினைஞ்சு கிலோமீட்டர் இருக்கும்’ என சம்பந்தம் இல்லாமல் எங்கோ அழகர்கோயிலுக்கு அருகில் இருக்கும் `கள்ளந்திரி’ என்ற கிராமத்தைவைத்தே அடையாளம் சொல்வார்.

விளையாடும்போது, தப்பித்தவறி பந்து அவர் அமர்ந்திருக்கும் பால்கனி பக்கம் போய்விட்டால், நாங்கள் பந்தை எடுக்கப் போகாமல் அன்றைய ஆட்டத்தை முடித்துக்கொண்டுவிடுவோம்.
மூர்த்தி அண்ணன் கட்டுமஸ்தான கபடி ஆட்டக்காரர், போலிஸில் இருந்து அனைவரையும் எதிர் கேள்விகேட்கும் அன்றைய ‘ஆங்கிரி யங் மேன்’. அவரே அப்பா என்றால், பம்முவதைப் பார்த்திருக்கிறோம்.

`அவர்கிட்ட போய் ஏன்டா ஏழரையைக் கூட்றீங்க?’ எனும் மூர்த்தி அண்ணன் கேள்விக்கு எங்களிடம் பதில் இருந்ததே இல்லை. ஆனால், பிற்பாடு கொஞ்சம் விவரம் தெரிய ஆரம்பித்த பருவத்தில், அவர் சொல்லும் கதைகளைக் கேட்கும் ஆவலில் அவரைத் தேடிப் போவோம்.

அவரைச் சுற்றிலும் ஓர் அமானுஷ்யம் சூழ்ந்திருப்பதுபோலவே இருக்கும் எனக்கு. அவரின் ஆங்கில அறிவு, சங்கீத ஆலாபனை, பொடிபோடும் நளினம், சோதிடம் பார்க்கும் திறன்... என எல்லாவற்றையும் தாண்டி அவரிடம் ஏதோ ஒரு புலப்படாத சக்தி இருப்பதாகவே தோன்றும். பேசிக்கொண்டிருக்கும்போது சடாரெனக் குரல் உயர்த்திக் கட்டளை இடுவார். பயம் கவ்வும்.

ஒருமுறை மூர்த்தி அண்ணனின் நண்பர், தமக்கு வெளிநாட்டில் வேலை கிடைத்திருப்ப தாகவும், எதிர்காலம் குறித்துச் சொல்லும்படியும் கேட்டு தன் ஜாதகத்தை மூர்த்தி அண்ணன் அப்பாவிடம் கொடுத்ததும், ஒரே நொடியில் அதைத் திருப்பிக் கொடுத்துவிட்டு,“எப்ப போற?”

“அடுத்த வாரங்கய்யா.”

“அதெல்லாம் போக முடியாதப்பா, உனக்கு இங்க முக்கியமான வேலை இருக்கு.”

“இ...ல்லங்கய்யா, இது நல்ல வேலை.”

சடாரெனக் குரல் உயர்ந்தது.

“நல்ல வேலை பெருசா, முக்கியமான வேலை பெருசாடா முட்டாப்பயலே... கடமைடா, கடமை இருக்கு உனக்கு.”

அவ்வளவுதான். அதற்கு மேல் ஏதும் சொல்லாமல் பொடியைப் போட்டு, கையை உதறி எழுந்துபோய்விட்டார்.

அவர் சொன்னதுபோலவே அந்த நண்பரின் தந்தை அந்த வாரத்துக்குள் இறந்துபோக, மூர்த்தி அண்ணனே லேசாக அதிர்ந்தார்... தன் தந்தையின் தீர்க்கம் பார்த்து.

ஒருநாள் இரவு 9 மணி இருக்கும். சாப்பிட்டு விட்டு காலார நடக்கலாம் என தெருவுக்குள் நுழைந்தபோது, கணீரெனக் குரல் கேட்டது...

“டேய்ய்... மூர்த்தி. இங்க வா.”

அவருக்கு எல்லோருமே மூர்த்திதான்.

p78b.jpg

மாடிப்படியின் கீழே, சுவரில் சாய்ந்து, வளைந்து, அமர்ந்து, கால் மேல் கால் போட்டு அதை முடிச்சுபோல் ஆக்கி மொத்தமாக ஆட்டிக் கொண்டே என்னைப் பார்த்து தலையசைத்தார்.
போனேன்.

புருவம் உயர்த்தி, எதிரே அமரச் சொன்னார்.

அமர்ந்தேன்.

ஒன்றும் பேசாமல் தலையை ஆட்டிக்கொண்டே இருந்தார். கையில் பொடி, விரல்களில் ஆலாபனை.

மெள்ளக் குரல் எழுந்தது அவரிடம் இருந்து.

“அநேகமா அது தொள்ளாயிரத்து எழுவதாக இருக்கும். அழகர்கோயில். எனக்கு மேலூர்ல டியூட்டி. முடிச்சிட்டு ஒரு எட்டு மலை ஏறி தீர்த்தத்தொட்டித் தண்ணியில ஒரு குளியலைப் போட்டு வரலாம்னு போனேன். எங்கு இருந்துதான் அந்தச் சுனையில அப்படி தண்ணி ஊருதோ, குடிச்சா தேன் மாதிரி இருக்கும். மேலப்பட்டா ஜில்ல்லுனு ஐஸ்கட்டி மாதிரி...”

“இப்பவும் அப்படித்தான் இருக்கு.”

“இன்னும் ஆயிரம் வருஷமானாலும் அப்படித்தான்டா இருக்கும். அந்த மலை அப்படி; அந்தச் சுனை அப்படி.”

“ம்ம்...”

நான் இடையே குறுக்கிட்டது அவருக்குக் கோபமோ அல்லது நினைவோடையில் தடங்களோ, மீண்டும், கண்களை மூடி தலையை ஆட்டிக்கொண்டிருந்தார். பிறகு, மெள்ள ஆரம்பித்தார்...

“குளியல்னா குளியல் அப்படி ஒரு குளியல். உடம்பு அப்படியே பூஞ்சை பிடிச்சு லேசான மாதிரி, ஆளைக் கிறக்கிருச்சு. தண்ணித்தொட்டிக்கு மேல ஏறி மரத்தடியில கொஞ்ச நேரம் படுத்துட்டுக் கிளம்பலாம்னு படுத்தா... உடம்பை யாரோ போட்டு அமுக்கு அமுக்குனு அமுக்குறாங்க. எந்திரிக்கவே முடியலை. நானும் எதிர்த்து எந்திரிக்கிறேன். ஒண்ணும் முடியலை. நல்லா கடும்பாறையைக் கட்டித் தூக்கின மாதிரி வெயிட். அட உடம்பைத்தான அமுக்கிறான், கண்ணுக்கு என்னா வந்துச்சுனு திறந்து பார்த்தா, இருட்டுன்னா இருட்டு, மசி இருட்டு. வண்டி மையைத் தடவின மாதிரி மலையையே காங்கல.”

என்னால் அந்த இருட்டையும் அழகர்மலையையும் உணர முடிந்தது.

“இப்பத்தான முக்குக்கு முக்கு லைட். அப்பல்லாம் ஒரு மண்ணும் கெடையாது. சரி தீப்பந்தம் கீப்பந்தம், ஊஹும் மருந்துக்குக்கூட பொட்டு வெளிச்சத்தைக் காணோம். மெள்ள எந்திருச்சு இறங்குறேன், ஒரு நிமிஷம்தான், என்ன நடந்தது ஏது நடந்ததுனு தெரியாது... கீழே வந்துட்டேன். முதுகுல ஏதோ ஜிவ்வ்வ்வுனு ஏறுது. கிடுகிடுனு நடக்கிறேன். வீதி `ஆ’னு பொளந்துகிடக்கு. திரும்பிப் பார்த்தா அழகர்கோயில் மலை, அந்த இருட்டுலயும் கழுவிவிட்ட மாதிரி தெரியுது. அறுவது எழுவது அடி குதிரையில கறுப்புச் சிலையா அழகர் அம்பாரமா எந்திருச்சு நிக்கிறாரு. கண்ணைக் கசக்கிப் பார்த்தேன்... உருவம் அசையுது.”

“அட அதெல்லாம் சு...” என்று சொல்ல யத்தனித்தவனை அவரின் கணீர் குரல் அடக்கி ஒடுக்கி அரளவைத்துவிட்டது.

“என்னடா அதெல்லாம் சும்மா... தெரியுமோ உனக்கு? சொல்லிக்கிட்டு இருக்கேன், கேட்பியா...”

அவரே அழகர்போல் கண்களை உருட்டினார். பம்மலாக அமர்ந்திருந்தேன்.

“சரி, ஏதோ நடக்கப்போகுது, அமாவாசை னாலே ரேகை திரும்புமா இல்லையானு யோசிச்சுக்கிட்டே திரும்பிப் பார்க்காம நடக்கி றேன். அமாவாசை பௌர்ணமினா கொஞ்சம் உஷாரா இருக்கணும்டா மூர்த்தி, என்ன?”

“ம்ம்...”

“ நடந்தவன் அப்படியே வண்டி மாடு எதுவும் வந்தா ஏறி, ஊர் வந்துரலாம்னு ஓட்டமும் நடையுமா நடக்கிறேன். கள்ளந்திரினு நினைக் கிறேன். `சரி... கள்ளந்திரி வந்துருச்சு அப்படியே போயிரலாம்னு பார்த்தா, ரோட்டோரத்துல ஒரு சின்னக் கோயில். கால் வின்னு வின்னுன்னு தெறிக்குது. சரி செத்தவடம் உட்கார்லாம்னு உட்கார்ந்தேன். அதான் நான் பண்ணின தப்பு.”

அமைதியாக அமர்ந்திருந்தேன்.

“ராத்திரி வேளையில ரோட்டுக் கோயில்கள்ல எவனும் இருக்க மாட்டான். நான் உட்கார்ந் திருக்கேன். எனக்கு எதுத்தாப்புல அம்மன். கல்லுன்னா கல்லு... நல்ல கருங்கல் சிலை. வழுவழுனு கல்லை சீய்ச்சிருக்கான். அப்படியே பார்க்கிறேன். நல்ல அம்சமா இருக்கு. ஒரு நிமிஷம் அதை சாமியாப் பார்க்கலை. பொம்பள சிலை. அப்படித்தான் இருந்தது வளைவும் நெளிவும். பார்த்துக்கிட்டே இருக்கேன். வாழ்க்கையில எந்தத் தப்பு வேணும்னாலும் செய் மூர்த்தி. ஆனா, அர்த்த ராத்திரியில தனியா சிலையை மட்டும் உத்துப் பார்க்காத.”

பயமாக இருந்தது... அவர் உலுக்கிச் சொல்லியது.

“சிலை கால் தனியா, மார் தனியா, கை தனியா, வயிறு தனியா, தொட தனியானு பார்த்துக்கிட்டே இருக்கேன். கால் பாதம் பார்த்தா, அஞ்சு விரலும் அம்சமா வடிச்சிருக்கான். கால் நகம் மொதக் கொண்டு. அப்படியே ரசிச்சு ரசிச்சு தொடையையும் வயித்தையும் மாரையும் பார்த்து நிமிர்ந்தனோ இல்லையோ... சிலையோட மூடின கண்ணு படக்குனு திறந்துச்சே பார்க்கணும். நகத்தைவெச்சு என் நெஞ்சுல பிராண்டின மாதிரி எரியுது. ஓட்டம்னா ஓட்டம், அப்படி ஒரு ஓட்டம்... ஓடினேன்.”

நானே பயந்து ஓடுவதுபோல் இருந்தது.

சட்டென நிறுத்தி, “சரி எங்கயோ போய்க்கிட்டு இருந்தியே... போ” என எழுந்து உள்ளே போய்விட்டார்.

நான் அங்கு இருந்து நான்கு வீடுகள் தள்ளியிருக்கும் என் வீட்டுக்குப் போகப் பயந்து, சற்று நேரம் அங்கேயே நின்றிருந்தேன். ஒருவர் என்னைக் கடக்க, அவர் கூடவே நடந்து என் வீட்டுக்குள் ஓடியவன்தான், மறுநாளும் வெளியே வரவில்லை.

“என்னடா என்னத்தையோ காணாததைக் கண்டு அரண்டுபோனவன் மாதிரி இருக்க”-அப்பா கேட்க, நான் மூர்த்தி அண்ணனின் அப்பா சொன்னதை ஒரு வழியாகச் சொன்னதும், “அட இன்னமுமா அவரு கள்ளந்திரியை மறக்காம இருக்காரு? அதெல்லாம் பெரிய கதை நீ போயி படிக்கிற வேலையைப் பாரு” என்ற வார்த்தைகள் பட்டெனப் பனி விழுந்த கண்ணாடியைத் துடைத்ததுபோல் ஆக்கியது மனதை.

காரை நிறுத்தும் முன்னரே மூர்த்தி அண்ணன் இறங்கி ஓடினார். வீட்டின் நடுவே கிடத்திவைக்கப்பட்டிருந்த தன் தந்தையின் உடலைப் பார்த்தவர் சரேலெனச் சுழன்று விழுந்தார். அவரது மகன் எங்கிருந்தோ சோடாவை வாங்கிக்கொண்டு ஓடிவந்தான்.

பெரியவர், கோவிந்தன், மூர்த்தியப்பா, சோதிடர் தாத்தா என்ற எதுவும் அல்லாமல், “பொணத்த நகர்த்திவைங்க” என்றானார்.

பெண்களை வெளியேறச் சொல்லிவிட்டு குடம்குடமாக நீர் எடுத்துவந்து, பிணத்தைக் குளிப்பாட்டினார்கள்.

ஈரமும் இன்னமும் ஏதோவும் சேர்ந்து வாடையாகப் பிசைந்தது.

நீரை ஊற்றி நிர்வாணமாக்கினார்கள்.

அவர் நெஞ்சில் நான்கு விரல் நகங்கள் பதிந்த தடம், ஆழமான கோடாக இருந்ததைக் கண்ட நொடியில், அவர் முகத்தை நிமிர்ந்து பார்த்தேன். பயமாக இருந்தது. மெள்ள எழுந்து வாசலுக்கு வந்துவிட்டேன்.

எல்லாம் முடிந்து, மறுநாள் அவரது அஸ்தியைக் கரைக்க வேண்டும் என்பதால், நான் காரை ஓட்ட மூர்த்தி அண்ணன், அவரது மகன் மூவரும் திருபுவனத்துக்குக் கிளம்பினோம்.

போகும் வழி எங்கும் மூர்த்தி அண்ணன் தன் தந்தை எப்படி எல்லாம் வளர்த்தார் என்பதையும், தன் மகனின் திருமணம் வரை இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்பதையும் சொல்லிச் சொல்லி அழுதார். அஸ்தி சொம்பைக் கீழே வைக்கவில்லை.

“எவ்வளவு செஞ்சிருப்பாரு கோயிலுக்கு.

எம் பையன் கல்யாணம் வரைக்கும் விட்டு வைக்காத அந்தச் சாமி எல்லாம் ஒரு சாமியா, இனி கோயிலாவது, குளமாவது?”- மூர்த்தி அண்ணன் புலம்பல் இறுதியில் தீர்மானமாக முடிந்தது
திருபுவனம்... ஈமக்காரியங்கள் செய்யும் இடத்தை அடைந்து ஓரமாக வண்டியை நிறுத்தினேன்.

கரை புரண்டோடிய வைகை ஆற்றில் சாம்பலைக் கரைப்பார்களாம். ஆனால், இப்போது வெறும் மணல் திட்டுகளாகத் தென்பட்டது.

காசை வாங்கிக்கொண்டு கூடவந்த ஒருவர், ஓர் ஈரப்பதமான இடத்தைத் தேர்வுசெய்து, மணலைத் தோண்ட, நீர் ஊற்றெடுத்துக் கசியத் தொடங்கியது. அதில் சாம்பலைக் கரைக்க வேண்டும்.
மூர்த்தி அண்ணன் சொம்பை கையில் வைத்து அழுதார். அவர் மகன் ரமேஷ் தன் தந்தை அழுவதைக் கண்டு, லேசாக விசும்பினான். பள்ளம் தோண்டிய ஆள், “ம்ம்... ஆகட்டும் கொடுங்க” என்றார்.

மூர்த்தி அண்ணன் சொன்னதுபோல் இன்னும் ஓரிரண்டு வருடங்கள் அவர் உயிரோடு இருந்திருக்கலாம் எனத் தோன்றியது. அவர் முகமும் அவர் நெஞ்சில் இருந்த நகக் கீறலும் நினைவில் நிழலாடியது.

நன்கு அழுது முடித்ததனாலோ என்னவோ மூர்த்தி அண்ணன் முகம், மழை அடித்து ஓய்ந்த தார்ச்சாலைபோல் பளீரென இருந்தது.

p78c.jpg

காரில் ஏறிக்கொண்டே சொன்னார்.

“ச்ச... கேட்டுக்கிட்டே இருந்தாரு. வேலை இருக்குனு தட்டிக்கழிச்சுக்கிட்டே இருந்தேன், நானே அவரைக் கள்ளந்திரிக்குக் கூட்டிப் போயிருக்கணும். பாவம் நேத்து தனியா எதுவுல போயிட்டு வந்தாரோ, எங்க விழுந்தாரோ?”

ஒரு நொடி அந்த அம்மன் சிலையின் கண்கள் என் கண்ணெதிரே படக்கெனத் திறந்து மூடின!

http://www.vikatan.com/anandavikatan

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு கதை.... பல பழைய நினைவுகளைக் கிளறுது....!  :unsure:  tw_blush: 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின் நிரந்தர விசா 18 APR, 2024 | 05:05 PM   பொன்டியின் வணிகவளாகத்தில் கத்திக்குத்திற்கு இலக்காகிய பாக்கிஸ்தானை சேர்ந்த பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு நிரந்தர விசாவை வழங்கவுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் பிரஜைக்கு அவுஸ்திரேலியா அவ்வாறான நிரந்தரவிசாவை வழங்கியுள்ள நிலையிலேயே அன்டனி அல்பெனிஸ்இதனை தெரிவித்துள்ளார். பொன்டி வணிகவளாக தாக்குதலின் போது துணிச்சலை வெளியிட்டவர்கள்அனைவரும் இருளின் மத்தியில் வெளிச்சமாக திகழ்ந்தவர்கள் என தெரிவித்துள்ள அன்டனி அல்பெனிஸ் அவர்கள் அவுஸ்திரேலியாவின் பாராட்டுகளை பெறவேண்டியவர்கள் என தெரிவித்துள்ளார். முகமட் டாஹாவிற்கு நிரந்தர வதிவிடத்தை அல்லது விசா நீடிப்பை வழங்குவது குறித்து  அரசாங்கம் சிந்திக்கும் என பிரதமர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181371
    • 🤣 ஒரு வேளை @பையன்26 கால இயந்திரத்தில் அடிக்கடி முன்னுக்கும் பின்னுக்கும் போய் வருவதால் கன்பியூஸ் ஆகி விட்டாரோ?
    • பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி செலுத்தினார் Published By: VISHNU    19 APR, 2024 | 06:46 PM   மறைந்த முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பிரதியமைச்சருமான பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இறுதி அஞ்சலி செலுத்தினார். வெள்ளிக்கிழமை (19) முற்பகல் அவரது பூதவுடல் வைக்கப்பட்டுள்ள மத்துகம யடதொலவத்தையில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்ற ஜனாதிபதி, பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதுடன், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பிரதேசவாசிகளுக்கு தனது அனுதாபத்தை தெரிவித்தார். இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த, ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாட்டாளர்கள் ஆகியோர் உடன் சென்றிருந்தனர். https://www.virakesari.lk/article/181481
    • இரான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஜோ பைடனின் பேச்சை மீறியதால் சிக்கலில் பெஞ்சமின் நெதன்யாகு பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஜெரெமி போவன் பதவி, பிபிசி சர்வதேச ஆசிரியர் 6 மணி நேரங்களுக்கு முன்னர் இரானின் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியிருப்பதாக இரு அமெரிக்க அதிகாரிகள் பிபிசியின் அமெரிக்க கூட்டு நிறுவனமான சிபிஎஸ் செய்தி தொலைக்காட்சியிடம் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து ஏராளமான விமானங்களை ரத்து செய்திருப்பதாக இரான் அரசு செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இஸ்ஃபஹான் பகுதியில் தாக்குதல் நடந்திருப்பதாக இரானிய ஊடகமான ஃபார்ஸ் தெரிவிக்கிறது. இஸ்ஃபஹான் பகுதி இரானின் அணுசக்தித் தளங்கள் மற்றும் ராணுவ விமான தளம் உள்ளது ஆகியவற்றின் இருப்பிடமாகும். சில நாட்கள் முன்பு, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பெரும் அழுத்தத்திற்கு ஆளாகியிருந்தார். கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி காஸாவில் உள்ள ‘உலக மத்திய சமையலறையில்’ (வேர்ல்ட் சென்ட்ரல் கிச்சன்) பணிபுரியும் ஏழு மனிதநேய உதவிப் பணியாளர்கள், இஸ்ரேலிய ராணுவத்தால் கொல்லப்பட்டனர். இந்நிகழ்வால் இஸ்ரேல் மீது அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அதிருப்தி அடைந்தார். மேலும், நட்பு நாடாக இருப்பினும் இஸ்ரேலின் நடவடிக்கைகள் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை பொறுமை இழக்கச் செய்தது. அதே நாளில், சிரியாவின் டமாஸ்கஸ் நகரில் உள்ள இரானிய தூதரக வளாகத்தை இஸ்ரேல் தாக்கியது. அந்தத் தாக்குதலில் ஒரு மூத்த ராணுவ ஜெனரல் மற்றும் ஆறு அதிகாரிகளுக்கு மேல் கொல்லப்பட்டனர். தூதரகங்கள் மீதான தாக்குதல்களைத் தடை செய்யும் சட்ட மரபுகள் செயல்பாட்டில் இருப்பினும், அதை மீறி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. ‘இரான் விதிகளை மீறி தூதரக கட்டடத்தை ராணுவ புறக்காவல் நிலையமாக மாற்றியதால்தான் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது’ என இஸ்ரேல் தரப்பில் ஏற்றுக்கொள்ள முடியாத காரணம் சொல்லப்பட்டது. அந்தத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இரான் உறுதிபூண்டது. அதற்கு முன்னரும் மூத்த ராணுவ தளபதிகள் மீதான தாக்குதல் நடத்தப்பட்டபோது ‘பதிலடி கொடுக்கப்படும்’ என்று வார்த்தைகளில் மட்டுமே இரான் தெரிவித்தது. ஆனால், அவை செயல்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.   அமெரிக்கா ஆவேசம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அமெரிக்கா தனக்கு வழங்கிய ஆயுதங்களைப் பயன்படுத்தி இஸ்ரேல் காஸாவில் பேரழிவுத் தாக்குதலை நிகழ்த்தியிருக்கிறது. அமெரிக்காவை தளமாகக் கொண்ட தொண்டு நிறுவனமான ‘வோர்ல்டு சென்ட்ரல் கிச்சனில்’ பணிபுரியும் குழுவை இஸ்ரேல் தாக்கியது. மனிதநேய உதவிப் பணியாளர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட சீற்றத்தால் இரானுக்கு வெளியே, டமாஸ்கஸ் மீது நடத்தப்பட்ட தாக்குதல் பெரிதாகக் கண்டு கொள்ளப்படவில்லை. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எழுதிய ஆவேசமான அறிக்கை ஒன்றை வெள்ளை மாளிகை வெளியிட்டது. அவர் ‘சீற்றம்டைந்தார், மனமுடைந்து விட்டார்’. இப்படி நடப்பது முதல்முறை அல்ல. உதவிப் பணியாளர்கள் மற்றும் பாலத்தீன குடிமக்களைப் பாதுகாக்க இஸ்ரேல் போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை, என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இஸ்ரேல் பிரதமருடன் ஒரு காட்டமான தொலைபேசி உரையாடலில், பைடன், பெரும் சலுகைகளைக் கோரினார். காஸாவுக்கு பெருமளவு மனிதாபிமான உதவிகள் கிடைக்க வேண்டும் என்றார். வடக்கு காஸாவில் உணவின்றிப் பட்டினியால் இறக்கும் குழந்தைகள் வசிக்கும் பகுதியில் இருந்து ஒரு மணிநேரத்திற்கும் குறைவான தூரத்தில் இஸ்ரேல் அதிகமான எல்லைக் கடப்புகளைத் திறக்க வேண்டும் என்றார். அஷ்டோதில் உள்ள கொள்கலன் துறைமுகத்தையும் திறக்க வேண்டும் என்று கோரியுள்ளார். இந்தச் சூழல் மாறும் என பிரதமர் நெதன்யாகு பைடனுக்கு உறுதியளித்தார். அது வெறும் சமாளிப்பு மட்டுமே.   இருபுறமும் அழுத்தத்தில் இருந்த நெதன்யாகு பட மூலாதாரம்,GETTY IMAGES வெள்ளை மாளிகையின் சீற்றத்தை எதிர்கொள்ளும் அதே வேளையில் நெதன்யாகு, மற்றொருபுறம் இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் தன்னை ஆதரித்து தனது கூட்டணியை அதிகாரத்தில் வைத்திருக்கும் தீவிர தேசியவாதிகளின் அழுத்தத்திற்கும் ஆளாகியுள்ளார். காஸாவில் மனிதாபிமான உதவிகள் கிடைப்பதை மட்டும் அவர்கள் எதிர்க்கவில்லை. காஸாவில் இந்தப் போர் யூதர்களை மீண்டும் குடியமர்த்துவதற்கான விலைமதிப்பற்ற வாய்ப்பை இஸ்ரேலுக்கு வழங்கியிருப்பதாக அவர்கள் திடமாக நம்புகிறார்கள். கடந்த 2005ஆம் ஆண்டில் இஸ்ரேலில் இருந்து ஒருதலைப்பட்சமாக அங்குள்ள யூதர்களின் குடியிருப்புகள் அரசால் காலி செய்யப்பட்டு இடித்துத் தள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது. கடந்த வார இறுதியில், அமெரிக்கா இஸ்ரேல் மீதான அழுத்தத்தை அதிகரித்தது. வியாழன் அன்று, அமெரிக்காவின் உயர்மட்ட மனித உரிமை அதிகாரியான சமந்தா பவர், “காஸாவின் சில பகுதிகளை பஞ்சம் பாதித்துள்ளது என்பதே உண்மை," என்றார். காஸாவை ஆறு மாதமாக இஸ்ரேல் முற்றுகையிட்டு வைத்திருந்தது, அப்பகுதியில் உலகிலேயே மிக மோசமான உணவு நெருக்கடி சூழலை உருவாக்கியது என்பது இஸ்ரேலின் ஆதரவு நாடுகளுக்கும் எதிரி நாடுகளுக்கும் தெளிவாகவே தெரிந்திருக்கும். மற்றொருபுறம், ஆயுதங்கள் வழங்கும் அமெரிக்கா அதைப் பயன்படுத்த இஸ்ரேலுக்கு நிபந்தனைகளை விதிக்கும் என்ற யூகமும் இருந்தது.   அமெரிக்காவின் மனநிலை பட மூலாதாரம்,UGC கடந்த சனிக்கிழமை (ஏப்ரல் 13) காலை, இஸ்ரேல் மீது இரான் தாக்குதல் நடத்துவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு, தி’ நியூயார்க் டைம்ஸ்’ ஊடகம் பெரும் சீற்றத்தை எதிரொலித்து ஒரு தலையங்கம் வெளியிட்டது. குறிப்பாக அமெரிக்க காங்கிரஸில் உள்ள ஜனநாயகக் கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் மத்தியில் இந்தச் சீற்றம் காணப்பட்டது. இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்குவதில் இடைநிறுத்தம் செய்யக் கோரியும் பெஞ்சமின் நெதன்யாகுவை தாக்கியும் அத்தலையங்கம் அமைந்திருந்தது. “இஸ்ரேலுக்கான ராணுவ உதவி நிபந்தனையற்றதாக இருக்கக்கூடாது,” என்ற தலைப்பின் கீழ், அப்பத்திரிகையின் ஆசிரியர் குழு, அமெரிக்கா உடனான ‘நம்பிக்கையின் பிணைப்பை’ உடைத்ததற்காக நெதன்யாகுவையும் அவரது அரசின் கீழ் செயல்படுபவர்களையும் கடுமையாகச் சாடியுள்ளது. “இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவளிப்பதும் நாட்டை தற்காத்துக் கொள்ள நினைப்பதும் சரிதான். ஆனால் அதற்காக அதிபர் பைடன் ‘நெதன்யாகு இரட்டை முகத்துடன் மேற்கொள்ளும் தந்திரமான அரசியல் விளையாட்டுகளை அனுமதிக்க வேண்டும்’ என்பது அர்த்தம் இல்லை,” என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.   இரானின் தாக்குதல், நெதன்யாகுவுக்கு கிடைத்த வாய்ப்பு படக்குறிப்பு,இஸ்ரேல் மீது இரான் ஏவிய ஏவுகணைகள் அதன்பின் இரான் இஸ்ரேல் மீது முதல் நேரடித் தாக்குதலை நடத்தியது. இது பிரதமர் நெதன்யாகுவுக்கு ஒரு வாய்ப்பை வழங்கியது. ஆனால், தற்போது அதற்கு பதிலடி கொடுக்க வேண்டாம் என்று அமெரிக்கா கூறியதை மீறி ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது இஸ்ரேல். ராணுவ ஒத்துழைப்பின் குறிப்பிடத்தக்க ஒருங்கிணைந்த செயல்பாடாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் பிற மேற்கத்திய நட்பு நாடுகள் இரானால் ஏவப்பட்ட 300க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளைச் சுட்டு வீழ்த்துவதற்கு இஸ்ரேலுக்கு உதவின. காஸாவில் நடக்கும் இஸ்ரேலின் தாக்குதல்களைக் கடுமையாக விமர்சித்தவர் ஜோர்டான் நாட்டின் மன்னர் அப்துல்லா. ஆனால் இஸ்ரேலுக்கு ஆபத்து வந்தபோது, ஜோர்டானின் விமானப்படை பாதுகாப்பு நடவடிக்கையில் இணைந்தது, இஸ்ரேலை நோக்கி வந்த ஏவுகணைகளை வீழ்த்தியது. இஸ்ரேலுக்கு வழங்கப்படும் ராணுவ உதவிக்கு நிபந்தனைகள் விதிக்கும் சூழல் மாறி ஒற்றுமையின் உறுதியான வெளிப்பாடு அப்போது பிரதிபலித்தது. இது பிரதமர் நெதன்யாகுவுக்கு ஒரு புதிய அரசியல் வாய்ப்பை வழங்கியுள்ளது. குறைந்தப்பட்சம் ஓரிரு நாட்களுக்கு தலைப்புச் செய்திகளில் காஸாவின் பெயர் அடிபடாது.   மேற்கத்திய நாடுகளின் நிலைப்பாடு என்ன? பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,இரானின் ஏவுகணைகளை இடைமறித்த இஸ்ரேலின் அயர்ன் டோம் அதேநேரம் பிரதமர் நெதன்யாகு மீதான அழுத்தம் அதிகரித்துவிட்டது. இஸ்ரேலின் அடுத்த நகர்வுகள் அந்த அழுத்தத்தை இரட்டிப்பாக்கும். அடுத்து என்ன நடக்க வேண்டும் என்பதை அதிபர் பைடன் மிகத் தெளிவாகக் கூறியிருக்கிறார். இரானின் தாக்குதலை முறியடித்த வெற்றியை மட்டும் இஸ்ரேல் எடுத்துக்கொள்ள வேண்டும், ‘ஆனால் திருப்பி அடிக்கக்கூடாது’ என்றார். இந்த நிலையில்தான் இரான் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேலுக்கு அமெரிக்கா வழங்கும் ஆதரவு என்பது ‘இரும்புக் கவசம்’ போன்றது என்பதை பைடன் மீண்டும் நினைவுபடுத்தினார். கடந்த அக்டோபர் 7ஆம் தேதி அன்று நடத்தப்பட்ட ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு அவரது நிலையான கொள்கை வெளிப்பட்டது. காஸாவில் பேரழிவையும் கொடிய விளைவுகளையும் ஏற்படுத்தப் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை இஸ்ரேலுக்கு அமெரிக்காதான் வழங்கியது என்ற போதிலும் அதிபர் பைடனும் அவரது நிர்வாகமும் மத்திய கிழக்கில் நடக்கும் போரை நிறுத்தக் கடுமையாக உழைத்துள்ளனர். அக்டோபரில் இருந்து ஆயுதங்கள் மற்றும் பிற நாடுகள் அளித்த ஆதரவையும் இஸ்ரேல் ஏற்றுக்கொண்டது. ஜோ பைடனின் எச்சரிக்கைகளையும் கோபத்தையும் புறக்கணித்து அவரின் அவநம்பிக்கைக்கு ஆளானது. இரானுக்கு எதிராகச் செயல்பட, இஸ்ரேலுக்கு முன்னெப்போதும் இல்லாத ராணுவ ஒத்துழைப்பை சில ஆதரவு நாடுகள் வழங்கின. இதன்மூலம் இஸ்ரேல் மீண்டும் ஒருமுறை ஜோ பைடனின் ‘பதிலடி கொடுக்க வேண்டாம்’ என்ற அறிவுரையைப் புறக்கணித்தது. ஜோ பைடனை போலவே பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் மற்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோங் ஆகியோர் இரான் தாக்குதலுக்கு எதிராகப் போர் விமானங்களை அனுப்பினர். இருவரும் இரானை கண்டித்தனர். மேலும் இஸ்ரேலிடம் பதில் தாக்குதல் செய்ய வேண்டாம் என்பதை வலியுறுத்தினர். அவர்கள் இஸ்ரேலில் நீண்ட கால நம்பிக்கைகள் மற்றும் செயல்பாடுகளுக்கு எதிராக யோசிக்கத் தொடங்கிவிட்டனர். இஸ்ரேல்-இரான் பகை இஸ்ரேல் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு சீற்றத்துடன் பதிலடி கொடுக்க வேண்டும் என்று இஸ்ரேல் ஆழமாக நம்புகிறது. மேலும், இரான் இஸ்ரேலின் மிகவும் ஆபத்தான எதிரி என்றும் யூத அரசை அழிப்பதில் இரான் குறியாக உள்ளது என்றும் பெஞ்சமின் நெதன்யாகு நம்புகிறார். அவரது ஆட்சியில் பலமுறை இந்த நம்பிக்கை வெளிப்படுத்தப்பட்டது. அதன் விளைவாக இஸ்ரேல் மக்கள் பலர் இதே கருத்தை முன்வைக்கின்றனர். கடந்த 1979இல் இரானில் நடந்த இஸ்லாமிய புரட்சிக்குப் பின்னர் இஸ்ரேலுடன் பல வருடப் பகை நீடித்தது. அதன் பிறகு இப்போது இரான் முதன்முறையாக இஸ்ரேல் மீது நேரடித் தாக்குதல் தொடுத்துள்ளது. நீண்ட காலமாக நடந்து கொண்டிருக்கும் மறைமுகப் போர் தற்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. தற்போதைய தாக்குதலைத் தொடங்குவதற்கு முன்னதாகவே, பதில் தாக்குதல் நடத்தப்படுமா என்பது கேள்வி அல்ல, எப்போது, எப்படி நடத்தப்படும் என்பதுதான் கேள்வி என்று இஸ்ரேல் கூறியது. தீவிரமான போர்ச்சூழல் உருவாகாமல், எப்படி பதில் தாக்குதல் நடத்துவது என்று இஸ்ரேலின் போர்க்குழு அமைச்சரவை விவாதித்து வந்தது. இரான் தீவரமான போர்ச்சூழலை விரும்பவில்லை என்று சொன்னாலும், அதற்கேற்ப பதிலளிக்கும். எந்தவொரு அனுமானமும் இன்றி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இரு தரப்பினரும் ஏற்கெனவே மற்றவரின் நோக்கங்களைத் தவறாக மதிப்பிட்டுள்ளனர் என்பதே நிதர்சனம். பெஞ்சமின் நெதன்யாகுவும் அவரது அரசாங்கமும் மீண்டும் ஒருமுறை இஸ்ரேலுக்கு ஆதரவாக நின்ற நாடுகளின் விருப்பங்களைப் புறக்கணிப்பதில் குறியாக உள்ளனர். இஸ்ரேலின் தீவிர தேசியவாதக் கூட்டாளிகள், இரான் மீது கொடூரத் தாக்குதல் நடத்தக் கோரினர். அவர்களில் ஒரு தரப்பினர் இஸ்ரேல் ‘வெறியுடன் செயல்பட வேண்டும்’ என்றனர்.   காஸாவில் தொடரும் மனிதாபிமானப் பேரழிவு படக்குறிப்பு,அமெரிக்காவின் உயர்மட்ட மனித உரிமை அதிகாரியான சமந்தா பவர், “காஸாவின் சில பகுதிகளை பஞ்சம் பாதித்துள்ளது என்பதே உண்மை," என்றார். இவையனைத்திற்கும் மத்தியில் காஸாவில் மனித உரிமை மீறல் மற்றும் பேரழிவு தொடர்கிறது. காஸா மீண்டும் சர்வதேச கவனம் பெறும். இஸ்ரேலின் ராணுவம் காஸாவில் இன்னமும் பொதுமக்களைக் கொன்று வருகிறது. மற்றொருபுறம் மேற்குக் கரையில் பாலத்தீனர்களுக்கும் யூத குடியேற்றவாசிகளுக்கும் இடையே மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. ஹெஸ்பொல்லாவுடன் இஸ்ரேலுக்கு மீண்டும் எல்லைப் போர் தீவிரமடையலாம். இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் இன்னும் கடுமையாக பதிலடி கொடுக்கப்படும் என இரான் உறுதியளித்துள்ளது. அதன் ஆயுதப் படைகளின் தலைமை அதிகாரியான ஹொசைன் பாகேரி, இஸ்ரேல் மீதான தாக்குதல் கட்டுப்பாடுகளுடன் நடத்தப்பட்டது, ஆனால் இஸ்ரேல் பதிலடி கொடுத்தால் ‘மிகப் பெரிய’ பதிலடியை திருப்பிக் கொடுப்போம் எனக் கூறியிருக்கிறார். இஸ்ரேல் இரான் மீது தாக்குதல் நடத்தினால் உதவ மாட்டோம் என அமெரிக்கா உறுதிபடத் தெரிவித்துள்ளது. ஆனால் இஸ்ரேலின் பாதுகாப்பிற்கான ‘இரும்புக் கவசமாகச்’ செயல்பட்ட ஜோ பைடன் அரசு இஸ்ரேலிய தாக்குதலுக்கு இரான் பதிலடி கொடுத்தால், ஆதரவாக நிற்காது என்பதை நம்புவது கடினம். இந்தச் சூழ்நிலை மத்திய கிழக்குப் பகுதியில் தீவிரமான போர்ச் சூழலையும் சர்வதேச நெருக்கடியையும் ஏற்படுத்தும். https://www.bbc.com/tamil/articles/cd19j8p3n4vo
    • Published By: RAJEEBAN    19 APR, 2024 | 05:53 PM   உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில்  சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் என  சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இன்னமும் நீதிக்காக காத்திருத்தல்  பொருளாதார சமூக கலாச்சார  பொருளாதார சட்ட கண்ணோட்டம் என்ற அறிக்கையை இன்று வெளியிட்டுள்ள  சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி இந்த அறிக்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த சர்வதேச விசாரணையை கோரியுள்ளது. சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி அமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது உயிர்த்த ஞாயிறு படுகொலைகளை இலங்கையில் யுத்தத்தின் பின்னர்  தேவாலயங்களையும்  ஹோட்டல்களையும் இலக்குவைத்து இடம்பெற்ற மிகவும் பயங்கரமான வெளிப்படையான  சம்பவம் என குறிப்பிடலாம். அதன் மூலம் ஏற்பட்ட பேரழிவை நாங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளோம். ஐந்து வருடங்களின் பின்னர் இன்னமும் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதி கிடைக்கவில்லை. இதன் காரணமாக  உயிர்த்த ஞாயிறுதாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களிற்கான  நீதியை நிலைநாட்டுவதற்கு அவசியமான சில பரிந்துரைகளை முன்வைக்கின்றோம். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அனைத்து  நீதிமன்ற வழக்குகளையும் துரிதப்படுத்தவேண்டும். சர்வதேச விசாரணைகளை மேற்கொண்டு  தாக்குதலிற்கு காரணமானவர்களிற்கு எதிராக வழக்குதாக்கல் செய்யவேண்டும்  குறிப்பாக சூத்திரதாரிகளிற்கு எதிராக . உயிர்த்த ஞாயிறுதாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்ட அனைவருக்கும் போதியளவு  இழப்பீடு துரிதமாக சென்றடைவதை உறுதி செய்யவேண்டும். உயர்நீதிமன்றம்  நஸ்டஈடுவழங்குமாறு உத்தரவிட்டவர்கள்  அந்த இழப்பீட்டை உடனடியாக வழங்குவதை உறுதி செய்யவேண்டும். உயிர்த்தஞாயிறுதாக்குதலில் நிலாந்த ஜெயவர்த்தனவின் தொடர்புகுறித்து  உரிய குற்றவியல் விசாரணையை முன்னெடுக்கவேண்டும். உயிர்த்த ஞாயிறு தொடர்பான அனைத்து அறிக்கைகளையும் பகிரங்கப்படுத்தவேண்டும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்  ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அனைத்து பரிந்துரைகளும் நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்யவேண்டும். இதேவேளை  உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று ஐந்து வருடங்களாகின்றன தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என தெரிவித்த சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி பிரிவின் சுரேன் பெரேரா இன்னமும் பொறுப்புக்கூறல் இடம்பெறவில்லை என குறிப்பிட்டார். உள்நாட்டு பொறிமுறைகள் தோல்வியடைந்துவிட்டதால் சர்வதேச பொறிமுறைகள் அவசியமாக உள்ளன என குறிப்பிட்ட அவர்  நீதியை பெற்றுக்கொள்வதற்காக சர்வதேச  பொறிமுறைகளை நாடும் நோக்கம் உள்ளதாகவும் குறிப்பிட்டார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதியை பெற்றுக்கொள்வதற்காக கலப்பு பொறிமுறை  ஒன்று உகந்ததாகயிருக்கும் எனவும் அவர் தெரிவித்தார். முக்கிய  சூத்திரதாரியை கண்டுபிடிப்பதற்கு  சர்வதேச அமைப்புகளின் உதவியை கோhரவேண்டும் எனவும் குறிப்பிட்ட அவர் தற்போதைய ஜனாதிபதி ஸ்கொட்லாண்ட் யார்டின் உதவி குறித்து குறிப்பிட்டுவந்துள்ளதை சுட்டிக்காட்டினார். https://www.virakesari.lk/article/181475
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.