Jump to content

கள்ளந்திரி


Recommended Posts

 

கள்ளந்திரி

சிறுகதை: நர்சிம், ஓவியங்கள்: ஸ்யாம்

 

p78a.jpg

“ச்சே... ப்ச்ச்ச்... ச்சே...”

மிகுந்த கோபமும் ஆற்றாமையும் அழுகையும் கலந்து இப்படிச் சொல்லிக்கொண்டே இருந்தார் மூர்த்தி அண்ணன்.

நமக்கு நேரடியாக பேரிடியே விழுந்தாலும் பிரச்னை இல்லைபோலும். பிறரிடம் சென்று, `உன் அப்பா இறந்துவிட்டார்’ எனச் சொல்லிய பிறகு அவர்களை எதிர்கொள்வதுதான், அந்தக் கணத்தில் வாழ்வின் இதுவரையிலான உச்சபட்ச சவால் எனத் தோன்றியது எனக்கு.

அணைத்துவைத்திருந்த கைபேசியை எடுத்தவர், அதை உயிர்ப்பிக்கும்போதே அழைப்பு வந்தது.

எதிர்முனையில் அவரின் அம்மா. அழுகைச் சத்தம் ஸ்பீக்கரில் போடாமலே வெளியில் கேட்டது. ஒன்றும் பேசாமல், போனை கட் செய்தவர், நான் கண் இமைத்து அசந்த  ஒரு நொடியில், அதைச் சடாரென சுவர் மீது    எறிந்தார். சுக்குநூறாக உடைந்து விழுந்தது அந்த விலை உயர்ந்த கைபேசி. உடைந்த துண்டுகளையும் பாட்டரியையும் அள்ளிக்கொண்டு, அவரின் தோளைத் தொட்டு, அங்கு இருந்து நகர்த்தினேன். எதற்கோ கட்டுப்பட்டவர்போல என்னோடு நடந்துவந்து வண்டியில் ஏறிக்கொண்டார்.

அவர் தன்னியல்பாக  மீண்டும் மீண்டும் `ப்ச்’ கொட்டிக்கொண்டே இருந்தார்.

“ப்ச்... இன்னும் ஒரு வருஷம் இருந்துருக்கலாமேடா... ரமேஷ் பய கல்யாணம் வரைக்கும். அந்தப் புள்ள என்னடா பாவம் பண்ணான், அவர் காலையே சுத்திக்கிட்டு இருப்பான்டா, இப்படிப் படக்குனு போய்ட்டாரு... ச்ச.”

மூர்த்தி அண்ணனை எப்படி சமாதானம் சொல்லித் தேற்றுவது என உண்மையிலேயே தெரியவில்லை. அமைதியாக காரை ஓட்டிக்கொண்டிருந்தேன்.

அங்கு தெருவில், `கல்யாண சாவு’ எனத் தடபுடலாக ஏற்பாடுகள் நடந்துகொண்டிருக்கின்றன. 85 வயது வரை வாழ்வாங்கு வாழ்ந்து, இறந்தவர்.

அவருடைய 80-வது வயது நிறைவை விசேஷமாகக் கொண்டாட முடிவெடுத்த மூர்த்தி அண்ணன், பந்தல் போடச் சொல்லி ஏற்பாடு செய்ததும், பந்தலுக்கான மூங்கில் கம்புகளை ஊன்றும்போதே ஆட்கள் கூடிவிட்டார்கள்... மூர்த்தி அப்பா இறந்துவிட்டாரோ என. பதறிப்போய் முதலில் வாழைமரத்தைக் கட்டினார் மூர்த்தி அண்ணன்.

``விடப்பா திருஷ்டி கழிஞ்சதுனு வெச்சுக்க...’' எனத் தேற்றினார்கள் மூர்த்தி அண்ணனை.

நான் சற்றே குறைத்து மதிப்பிட்டுவிட்டு, மூர்த்தி அண்ணனிடம் பட்டெனச் சொல்லிவிட்டேன். ஆனால், அவர் அதை எதிர்கொண்டவிதம் எனக்குள் பயத்தை ஏற்படுத்தத் தொடங்கிவிட்டது. எங்கே இவருக்கு ஏதாவது ஆகிவிடுமோ எனப் பதறிப்போனேன்.

“ச்ச... நான் காலையில வேலைக்குக் கிளம்பி வர்றவரைக்கும் நல்லாத்தானடா இருந்தாரு? ஏன்டா ரகு, ஏதாவது சொல்றா... கீழ ஏதும் விழுந்துதொலச்சாரா?”

பதில் சொல்லி ஒன்றும் ஆகப்போவது இல்லை என்பதால், அமைதியாகவே இருந்தேன். அதுவும் நம்மை விட ஆறேழு வயது மூத்தவரைச் சமாதானம்செய்வதாக எந்த வார்த்தைகளை உபயோகித்திட முடியும்? சம்பிரதாய வார்த்தைகளைவிடவும் மெளனம்தான் இழவு வீட்டாரை எதிர்கொள்ள சரியான வழி என்பதாகப்பட்டது.

தெருவில் மூர்த்தி அண்ணன் என்றாலே, எங்களுக்கு எல்லாம் ஒருவித பரவசம் கலந்த பயம்.

நாங்கள் சிறுவர்களாக இருக்கும்போது, எந்நேரமும் அவர் வீட்டு மொட்டைமாடியில் நடந்து நடந்து படித்துக்கொண்டே இருப்பார்.

பெரிய பெரிய மீசை தாடிவைத்த அண்ணன்கள் எங்கிருந்தோ அவரைத் தேடிவருவதும், காலையில் கல்லூரி, மாலையாகிவிட்டால் கபடி விளையாடப் போவதும் என தெருவில் எப்போதும் பிஸியாக இருப்பார்.

நாங்கள் தெருவில் ஒன் பிச் கிரிக்கெட் ஆடிக் கொண்டிருப்போம். எவ்வளவு அவசரமாகச் சென்றாலும், எங்களைக் கடக்கும்போது ஒரு நிமிடம் நின்று, மட்டையைப் பிடுங்கி, ஒரு ஓவர் ஆடிவிட்டுத்தான் செல்வார்.

விடுமுறை மதிய நேரங்களில் நாங்கள் மெதுவாக எட்டிப்பார்ப்போம். மூர்த்தி அண்ணன் தலை தெரிந்தால், ஆமை சட்டென தன் தலையை ஓட்டுக்குள் இழுத்துக்கொள்வதுபோல் மீண்டும் வீட்டுக்குள் ஓடிவிடுவோம். அரை மணி நேரம் பந்து போடச் சொல்வார். கூடவே கணக்கு, அறிவியல் எனக் கேள்விகள் கேட்பார்.

எதிர்வீட்டு மாலதி அக்காவுக்காகத் தான் எங்களைவைத்து அத்தனை அக்கப்போர்கள் செய்தார் என்பதை, அவரின் கல்யாணச் செய்தியைக் கேட்ட அன்றுதான் தெரிந்துகொண்டோம்.
அது கிட்டத்தட்ட தெருவின் முதல் காதல் திருமணம்.

“எல்லாம் சரிடா, ஒனக்கு லவ் பண்ண, பக்கத்து வீடு, சைடு வீடு எல்லாம் கிடைக்கலையா? எதிர்த்த வீட்டுல பொண்ணை எடுத்தா, நாளைக்கு ஏதாவது சாவுன்னா, சம்பந்தி வீட்ல இருந்து எப்படிடா சாப்பாடு எடுத்து வருவாங்க? இல்ல அங்க ஏதாவதுன்னா, நாம எப்படி என்னத்தைச் செய்ய முடியும்? முட்டாப்பய. பொடலங்கா காதல்...”

மூர்த்தி அண்ணனின் அப்பா விட்ட சவுண்டு இன்றுபோல் இன்னமும் கேட்கிறது. எவ்வளவு தீர்க்கமாக யோசிக்க முடிகிறது அவரால்? ஆனாலும் கல்யாணத்தைத் தடபுடலாகத்தான் நடத்தினார்.

அருகில் விசும்பிக்கொண்டிருக்கும் மூர்த்தி அண்ணனின் அழுகையையும் மீறி, இறந்து போய்விட்ட பெரியவரின் நினைவு என்னை முழுவதும் ஆக்கிரமிக்கத் தொடங்கியது.

வர் எப்போதும் ஏகாந்த நிலையிலேயே இருப்பார். இரண்டு கைகளும் காற்றில் மிதக்க, கட்டை விரலும் ஆள்காட்டி விரலும் மூக்குப்பொடியைப் பற்றியிருக்க, மற்ற விரல்கள் விரிந்து, அபிநயம் பிடிப்பதுபோல் இருக்கும்.

`அதீத அன்பு இட்டுச்செல்வது முட்டுச் சந்துக்குத்தான்’ என்பான் கோனார் தெரு முத்து. போலவே அதீத அறிவு இட்டுச் செல்வது பைத்திய நிலைக்குத்தான் என்பதை என் கணக்கு வாத்தியாரும் மூர்த்தி அண்ணனின் அப்பாவும் நிரூபித்திருந்தார்கள்.

புத்தாண்டு காலண்டரை அவரிடம் கொடுத்தால் தீர்ந்தது கதை. பச்சை, சிவப்பு, மஞ்சள்... என கலர் கலர் ஸ்கெட்ச் பேனாக்களால் தேதி, கிழமை என அடித்துக் கிறுக்கித் தள்ளி விடுவார். ஆம்... கிறுக்கல் என்றே தோன்றும். ஆனால் கையில் எடுத்துப் பார்த்தால் மிரட்சி ஏற்படும். பத்து, இருபது, முப்பது என அடுத்த ஐம்பது ஆண்டுகளுக்கான காலண்டரைத் துல்லியமாகக் கணக்கிட்டு எழுதியிருப்பார். டெக்னாலஜி துணைகொண்டு, கோடு டேட் போட்டுப் பார்த்தால், கிழமை அப்படியே பொருந்திப்போகும்.

நாம் சரிபார்த்ததைப் பார்த்தார் என்றால், கண்களைச் சிமிட்டி, முதுகில் ஒரு தட்டுத் தட்டி, `அதெல்லாம் பெர்ஃபெக்ட்டா இருக்கும்டா, அமாவாசை, பௌர்ணமிதான் கணக்கு’ -சொல்லிக் கொண்டே போய்விடுவார். மூக்குப்பொடி கிளப்பும் கிளர்ச்சியையும் தாண்டி, அதிசயத்தில் நமக்கு வாய் பிளக்கும்.

போலவே மதுரையின் எந்த இடத்தைப் பற்றி பேச்சுவந்தாலும், `கள்ளந்திரில இருந்து பதினைஞ்சு கிலோமீட்டர் இருக்கும்’ என சம்பந்தம் இல்லாமல் எங்கோ அழகர்கோயிலுக்கு அருகில் இருக்கும் `கள்ளந்திரி’ என்ற கிராமத்தைவைத்தே அடையாளம் சொல்வார்.

விளையாடும்போது, தப்பித்தவறி பந்து அவர் அமர்ந்திருக்கும் பால்கனி பக்கம் போய்விட்டால், நாங்கள் பந்தை எடுக்கப் போகாமல் அன்றைய ஆட்டத்தை முடித்துக்கொண்டுவிடுவோம்.
மூர்த்தி அண்ணன் கட்டுமஸ்தான கபடி ஆட்டக்காரர், போலிஸில் இருந்து அனைவரையும் எதிர் கேள்விகேட்கும் அன்றைய ‘ஆங்கிரி யங் மேன்’. அவரே அப்பா என்றால், பம்முவதைப் பார்த்திருக்கிறோம்.

`அவர்கிட்ட போய் ஏன்டா ஏழரையைக் கூட்றீங்க?’ எனும் மூர்த்தி அண்ணன் கேள்விக்கு எங்களிடம் பதில் இருந்ததே இல்லை. ஆனால், பிற்பாடு கொஞ்சம் விவரம் தெரிய ஆரம்பித்த பருவத்தில், அவர் சொல்லும் கதைகளைக் கேட்கும் ஆவலில் அவரைத் தேடிப் போவோம்.

அவரைச் சுற்றிலும் ஓர் அமானுஷ்யம் சூழ்ந்திருப்பதுபோலவே இருக்கும் எனக்கு. அவரின் ஆங்கில அறிவு, சங்கீத ஆலாபனை, பொடிபோடும் நளினம், சோதிடம் பார்க்கும் திறன்... என எல்லாவற்றையும் தாண்டி அவரிடம் ஏதோ ஒரு புலப்படாத சக்தி இருப்பதாகவே தோன்றும். பேசிக்கொண்டிருக்கும்போது சடாரெனக் குரல் உயர்த்திக் கட்டளை இடுவார். பயம் கவ்வும்.

ஒருமுறை மூர்த்தி அண்ணனின் நண்பர், தமக்கு வெளிநாட்டில் வேலை கிடைத்திருப்ப தாகவும், எதிர்காலம் குறித்துச் சொல்லும்படியும் கேட்டு தன் ஜாதகத்தை மூர்த்தி அண்ணன் அப்பாவிடம் கொடுத்ததும், ஒரே நொடியில் அதைத் திருப்பிக் கொடுத்துவிட்டு,“எப்ப போற?”

“அடுத்த வாரங்கய்யா.”

“அதெல்லாம் போக முடியாதப்பா, உனக்கு இங்க முக்கியமான வேலை இருக்கு.”

“இ...ல்லங்கய்யா, இது நல்ல வேலை.”

சடாரெனக் குரல் உயர்ந்தது.

“நல்ல வேலை பெருசா, முக்கியமான வேலை பெருசாடா முட்டாப்பயலே... கடமைடா, கடமை இருக்கு உனக்கு.”

அவ்வளவுதான். அதற்கு மேல் ஏதும் சொல்லாமல் பொடியைப் போட்டு, கையை உதறி எழுந்துபோய்விட்டார்.

அவர் சொன்னதுபோலவே அந்த நண்பரின் தந்தை அந்த வாரத்துக்குள் இறந்துபோக, மூர்த்தி அண்ணனே லேசாக அதிர்ந்தார்... தன் தந்தையின் தீர்க்கம் பார்த்து.

ஒருநாள் இரவு 9 மணி இருக்கும். சாப்பிட்டு விட்டு காலார நடக்கலாம் என தெருவுக்குள் நுழைந்தபோது, கணீரெனக் குரல் கேட்டது...

“டேய்ய்... மூர்த்தி. இங்க வா.”

அவருக்கு எல்லோருமே மூர்த்திதான்.

p78b.jpg

மாடிப்படியின் கீழே, சுவரில் சாய்ந்து, வளைந்து, அமர்ந்து, கால் மேல் கால் போட்டு அதை முடிச்சுபோல் ஆக்கி மொத்தமாக ஆட்டிக் கொண்டே என்னைப் பார்த்து தலையசைத்தார்.
போனேன்.

புருவம் உயர்த்தி, எதிரே அமரச் சொன்னார்.

அமர்ந்தேன்.

ஒன்றும் பேசாமல் தலையை ஆட்டிக்கொண்டே இருந்தார். கையில் பொடி, விரல்களில் ஆலாபனை.

மெள்ளக் குரல் எழுந்தது அவரிடம் இருந்து.

“அநேகமா அது தொள்ளாயிரத்து எழுவதாக இருக்கும். அழகர்கோயில். எனக்கு மேலூர்ல டியூட்டி. முடிச்சிட்டு ஒரு எட்டு மலை ஏறி தீர்த்தத்தொட்டித் தண்ணியில ஒரு குளியலைப் போட்டு வரலாம்னு போனேன். எங்கு இருந்துதான் அந்தச் சுனையில அப்படி தண்ணி ஊருதோ, குடிச்சா தேன் மாதிரி இருக்கும். மேலப்பட்டா ஜில்ல்லுனு ஐஸ்கட்டி மாதிரி...”

“இப்பவும் அப்படித்தான் இருக்கு.”

“இன்னும் ஆயிரம் வருஷமானாலும் அப்படித்தான்டா இருக்கும். அந்த மலை அப்படி; அந்தச் சுனை அப்படி.”

“ம்ம்...”

நான் இடையே குறுக்கிட்டது அவருக்குக் கோபமோ அல்லது நினைவோடையில் தடங்களோ, மீண்டும், கண்களை மூடி தலையை ஆட்டிக்கொண்டிருந்தார். பிறகு, மெள்ள ஆரம்பித்தார்...

“குளியல்னா குளியல் அப்படி ஒரு குளியல். உடம்பு அப்படியே பூஞ்சை பிடிச்சு லேசான மாதிரி, ஆளைக் கிறக்கிருச்சு. தண்ணித்தொட்டிக்கு மேல ஏறி மரத்தடியில கொஞ்ச நேரம் படுத்துட்டுக் கிளம்பலாம்னு படுத்தா... உடம்பை யாரோ போட்டு அமுக்கு அமுக்குனு அமுக்குறாங்க. எந்திரிக்கவே முடியலை. நானும் எதிர்த்து எந்திரிக்கிறேன். ஒண்ணும் முடியலை. நல்லா கடும்பாறையைக் கட்டித் தூக்கின மாதிரி வெயிட். அட உடம்பைத்தான அமுக்கிறான், கண்ணுக்கு என்னா வந்துச்சுனு திறந்து பார்த்தா, இருட்டுன்னா இருட்டு, மசி இருட்டு. வண்டி மையைத் தடவின மாதிரி மலையையே காங்கல.”

என்னால் அந்த இருட்டையும் அழகர்மலையையும் உணர முடிந்தது.

“இப்பத்தான முக்குக்கு முக்கு லைட். அப்பல்லாம் ஒரு மண்ணும் கெடையாது. சரி தீப்பந்தம் கீப்பந்தம், ஊஹும் மருந்துக்குக்கூட பொட்டு வெளிச்சத்தைக் காணோம். மெள்ள எந்திருச்சு இறங்குறேன், ஒரு நிமிஷம்தான், என்ன நடந்தது ஏது நடந்ததுனு தெரியாது... கீழே வந்துட்டேன். முதுகுல ஏதோ ஜிவ்வ்வ்வுனு ஏறுது. கிடுகிடுனு நடக்கிறேன். வீதி `ஆ’னு பொளந்துகிடக்கு. திரும்பிப் பார்த்தா அழகர்கோயில் மலை, அந்த இருட்டுலயும் கழுவிவிட்ட மாதிரி தெரியுது. அறுவது எழுவது அடி குதிரையில கறுப்புச் சிலையா அழகர் அம்பாரமா எந்திருச்சு நிக்கிறாரு. கண்ணைக் கசக்கிப் பார்த்தேன்... உருவம் அசையுது.”

“அட அதெல்லாம் சு...” என்று சொல்ல யத்தனித்தவனை அவரின் கணீர் குரல் அடக்கி ஒடுக்கி அரளவைத்துவிட்டது.

“என்னடா அதெல்லாம் சும்மா... தெரியுமோ உனக்கு? சொல்லிக்கிட்டு இருக்கேன், கேட்பியா...”

அவரே அழகர்போல் கண்களை உருட்டினார். பம்மலாக அமர்ந்திருந்தேன்.

“சரி, ஏதோ நடக்கப்போகுது, அமாவாசை னாலே ரேகை திரும்புமா இல்லையானு யோசிச்சுக்கிட்டே திரும்பிப் பார்க்காம நடக்கி றேன். அமாவாசை பௌர்ணமினா கொஞ்சம் உஷாரா இருக்கணும்டா மூர்த்தி, என்ன?”

“ம்ம்...”

“ நடந்தவன் அப்படியே வண்டி மாடு எதுவும் வந்தா ஏறி, ஊர் வந்துரலாம்னு ஓட்டமும் நடையுமா நடக்கிறேன். கள்ளந்திரினு நினைக் கிறேன். `சரி... கள்ளந்திரி வந்துருச்சு அப்படியே போயிரலாம்னு பார்த்தா, ரோட்டோரத்துல ஒரு சின்னக் கோயில். கால் வின்னு வின்னுன்னு தெறிக்குது. சரி செத்தவடம் உட்கார்லாம்னு உட்கார்ந்தேன். அதான் நான் பண்ணின தப்பு.”

அமைதியாக அமர்ந்திருந்தேன்.

“ராத்திரி வேளையில ரோட்டுக் கோயில்கள்ல எவனும் இருக்க மாட்டான். நான் உட்கார்ந் திருக்கேன். எனக்கு எதுத்தாப்புல அம்மன். கல்லுன்னா கல்லு... நல்ல கருங்கல் சிலை. வழுவழுனு கல்லை சீய்ச்சிருக்கான். அப்படியே பார்க்கிறேன். நல்ல அம்சமா இருக்கு. ஒரு நிமிஷம் அதை சாமியாப் பார்க்கலை. பொம்பள சிலை. அப்படித்தான் இருந்தது வளைவும் நெளிவும். பார்த்துக்கிட்டே இருக்கேன். வாழ்க்கையில எந்தத் தப்பு வேணும்னாலும் செய் மூர்த்தி. ஆனா, அர்த்த ராத்திரியில தனியா சிலையை மட்டும் உத்துப் பார்க்காத.”

பயமாக இருந்தது... அவர் உலுக்கிச் சொல்லியது.

“சிலை கால் தனியா, மார் தனியா, கை தனியா, வயிறு தனியா, தொட தனியானு பார்த்துக்கிட்டே இருக்கேன். கால் பாதம் பார்த்தா, அஞ்சு விரலும் அம்சமா வடிச்சிருக்கான். கால் நகம் மொதக் கொண்டு. அப்படியே ரசிச்சு ரசிச்சு தொடையையும் வயித்தையும் மாரையும் பார்த்து நிமிர்ந்தனோ இல்லையோ... சிலையோட மூடின கண்ணு படக்குனு திறந்துச்சே பார்க்கணும். நகத்தைவெச்சு என் நெஞ்சுல பிராண்டின மாதிரி எரியுது. ஓட்டம்னா ஓட்டம், அப்படி ஒரு ஓட்டம்... ஓடினேன்.”

நானே பயந்து ஓடுவதுபோல் இருந்தது.

சட்டென நிறுத்தி, “சரி எங்கயோ போய்க்கிட்டு இருந்தியே... போ” என எழுந்து உள்ளே போய்விட்டார்.

நான் அங்கு இருந்து நான்கு வீடுகள் தள்ளியிருக்கும் என் வீட்டுக்குப் போகப் பயந்து, சற்று நேரம் அங்கேயே நின்றிருந்தேன். ஒருவர் என்னைக் கடக்க, அவர் கூடவே நடந்து என் வீட்டுக்குள் ஓடியவன்தான், மறுநாளும் வெளியே வரவில்லை.

“என்னடா என்னத்தையோ காணாததைக் கண்டு அரண்டுபோனவன் மாதிரி இருக்க”-அப்பா கேட்க, நான் மூர்த்தி அண்ணனின் அப்பா சொன்னதை ஒரு வழியாகச் சொன்னதும், “அட இன்னமுமா அவரு கள்ளந்திரியை மறக்காம இருக்காரு? அதெல்லாம் பெரிய கதை நீ போயி படிக்கிற வேலையைப் பாரு” என்ற வார்த்தைகள் பட்டெனப் பனி விழுந்த கண்ணாடியைத் துடைத்ததுபோல் ஆக்கியது மனதை.

காரை நிறுத்தும் முன்னரே மூர்த்தி அண்ணன் இறங்கி ஓடினார். வீட்டின் நடுவே கிடத்திவைக்கப்பட்டிருந்த தன் தந்தையின் உடலைப் பார்த்தவர் சரேலெனச் சுழன்று விழுந்தார். அவரது மகன் எங்கிருந்தோ சோடாவை வாங்கிக்கொண்டு ஓடிவந்தான்.

பெரியவர், கோவிந்தன், மூர்த்தியப்பா, சோதிடர் தாத்தா என்ற எதுவும் அல்லாமல், “பொணத்த நகர்த்திவைங்க” என்றானார்.

பெண்களை வெளியேறச் சொல்லிவிட்டு குடம்குடமாக நீர் எடுத்துவந்து, பிணத்தைக் குளிப்பாட்டினார்கள்.

ஈரமும் இன்னமும் ஏதோவும் சேர்ந்து வாடையாகப் பிசைந்தது.

நீரை ஊற்றி நிர்வாணமாக்கினார்கள்.

அவர் நெஞ்சில் நான்கு விரல் நகங்கள் பதிந்த தடம், ஆழமான கோடாக இருந்ததைக் கண்ட நொடியில், அவர் முகத்தை நிமிர்ந்து பார்த்தேன். பயமாக இருந்தது. மெள்ள எழுந்து வாசலுக்கு வந்துவிட்டேன்.

எல்லாம் முடிந்து, மறுநாள் அவரது அஸ்தியைக் கரைக்க வேண்டும் என்பதால், நான் காரை ஓட்ட மூர்த்தி அண்ணன், அவரது மகன் மூவரும் திருபுவனத்துக்குக் கிளம்பினோம்.

போகும் வழி எங்கும் மூர்த்தி அண்ணன் தன் தந்தை எப்படி எல்லாம் வளர்த்தார் என்பதையும், தன் மகனின் திருமணம் வரை இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்பதையும் சொல்லிச் சொல்லி அழுதார். அஸ்தி சொம்பைக் கீழே வைக்கவில்லை.

“எவ்வளவு செஞ்சிருப்பாரு கோயிலுக்கு.

எம் பையன் கல்யாணம் வரைக்கும் விட்டு வைக்காத அந்தச் சாமி எல்லாம் ஒரு சாமியா, இனி கோயிலாவது, குளமாவது?”- மூர்த்தி அண்ணன் புலம்பல் இறுதியில் தீர்மானமாக முடிந்தது
திருபுவனம்... ஈமக்காரியங்கள் செய்யும் இடத்தை அடைந்து ஓரமாக வண்டியை நிறுத்தினேன்.

கரை புரண்டோடிய வைகை ஆற்றில் சாம்பலைக் கரைப்பார்களாம். ஆனால், இப்போது வெறும் மணல் திட்டுகளாகத் தென்பட்டது.

காசை வாங்கிக்கொண்டு கூடவந்த ஒருவர், ஓர் ஈரப்பதமான இடத்தைத் தேர்வுசெய்து, மணலைத் தோண்ட, நீர் ஊற்றெடுத்துக் கசியத் தொடங்கியது. அதில் சாம்பலைக் கரைக்க வேண்டும்.
மூர்த்தி அண்ணன் சொம்பை கையில் வைத்து அழுதார். அவர் மகன் ரமேஷ் தன் தந்தை அழுவதைக் கண்டு, லேசாக விசும்பினான். பள்ளம் தோண்டிய ஆள், “ம்ம்... ஆகட்டும் கொடுங்க” என்றார்.

மூர்த்தி அண்ணன் சொன்னதுபோல் இன்னும் ஓரிரண்டு வருடங்கள் அவர் உயிரோடு இருந்திருக்கலாம் எனத் தோன்றியது. அவர் முகமும் அவர் நெஞ்சில் இருந்த நகக் கீறலும் நினைவில் நிழலாடியது.

நன்கு அழுது முடித்ததனாலோ என்னவோ மூர்த்தி அண்ணன் முகம், மழை அடித்து ஓய்ந்த தார்ச்சாலைபோல் பளீரென இருந்தது.

p78c.jpg

காரில் ஏறிக்கொண்டே சொன்னார்.

“ச்ச... கேட்டுக்கிட்டே இருந்தாரு. வேலை இருக்குனு தட்டிக்கழிச்சுக்கிட்டே இருந்தேன், நானே அவரைக் கள்ளந்திரிக்குக் கூட்டிப் போயிருக்கணும். பாவம் நேத்து தனியா எதுவுல போயிட்டு வந்தாரோ, எங்க விழுந்தாரோ?”

ஒரு நொடி அந்த அம்மன் சிலையின் கண்கள் என் கண்ணெதிரே படக்கெனத் திறந்து மூடின!

http://www.vikatan.com/anandavikatan

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு கதை.... பல பழைய நினைவுகளைக் கிளறுது....!  :unsure:  tw_blush: 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நேற்று தமிழ் மாநில காங்கிரஸ் (தமாக) வாசன் பிரச்சாராம் செய்யும் போது, 'உங்கள் வாக்குகளை மறக்காமல் கை சின்னத்திற்கு.....' என்று ஆரம்பித்து விட்டார். பழைய நினைவுகள் ஆக்கும். பின்னர் கூட நின்றவர்கள் அவரை உஷார் ஆக்கியவுடன், கொஞ்சம் சுதாகரித்து, 'கையை எடுங்கப்பா, கையை எடுங்கப்பா, சைக்கிள் சின்னத்திற்கு வாக்களியுங்கள்....' என்ற மாதிரி சமாளித்துவிட்டார். மக்களுக்கு முன்னர் இவர்கள் குழம்பி விடுவார்கள் போல கிடக்குதே.....😀
    • பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான்! Published By: DIGITAL DESK 3  28 MAR, 2024 | 04:19 PM   பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வலியுறுத்திவரும் பின்புலத்தில் நேற்று புதன்கிழமை தொழிலாளர் அமைச்சின் ஊடாக பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை கிழக்கு மாகாண ஆளுநரும் இதொகாவின்  தலைவருமான செந்தில் தொண்டமான் கடுமையாக நிராகரித்துள்ளார்.  கூட்டு ஒப்பந்தத்தில் அங்கம் வகிக்கும் ஏனைய பங்காளிகளும் அதே நிலைப்பாட்டை எடுத்தனர்.   "தொழில் அமைச்சில் இடம்பெற்ற இந்த பேச்சுவார்த்தையில் RPC நிறுவனம் முன்மொழிந்த புதிய திட்டமானது தொழிலாளர்களை விட RPC நிறுவனத்திற்கு அதிக பயன் தரும் ஊக்கத் திட்டமாக  மட்டுமே அமையும்.  தொழிலார்களுக்கு நாம் ஊக்க தொகையை கோரவில்லை மாறாக சம்பள  உயர்வையே கோரினோம்." என இதன்போது செந்தில் தொண்டமான் சுட்டிக்காட்டினார்.  அத்துடன் சம்பள நிர்ணய சபையின் ஊடாக நியாயமான சம்பள உயர்வை எதிர்பார்க்கின்றோம் என அமைச்சர்  மனுஷ நாணயக்காரவுக்கும்  செந்தில்  தொண்டமான் எடுத்துரைத்தார்.  இதேவேளை அமைச்சர் மனுஷ நாணயக்கார, தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வைப் பெற்றுத்தர  தொடர்ச்சியான முயற்சிகளுக்கு பாராட்டுகளையும் தெரிவித்தார்.  தோட்ட தொழிலாளர்களுக்கு 1700ரூபா சம்பள உயர்வை வழங்க வேண்டுமென்று  அரசாங்கம் எடுத்திருந்த தீர்மானத்தின் பிரகாரம் தொடர்ச்சியான கலந்துரையாடைகள் இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/179910  
    • வட்டுக்கோட்டை இளைஞர் கொலை: DVR-ஐ பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு உத்தரவு வட்டுக்கோட்டை இளைஞர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் இறுதியாக கைது செய்யப்பட்ட மூவரின் தொலைபேசி அறிக்கையை பெற்றுக்கொள்வதற்காக பொலிஸார் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தனர். குறித்த அறிக்கையை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார். வட்டுக்கோட்டை இளைஞர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், கடந்த 24 ஆம் திகதி மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட 9 சந்தேகநபர்களும் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது, 8, 9 ஆம் சந்தேகநபர்களை அடையாள அணிவகுப்பிற்கு உடபடுத்துமாறு பொலிஸார் மன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர். இதன் பிரகாரம், எதிர்வரும் 4 ஆம் திகதி அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். பொன்னாலை கடற்படை காவலரணுக்கு அருகில் பொருத்தப்பட்டிருந்த CCTV கெமராவின் DVR-ஐ பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு பொலிஸார் மன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர். பொலிஸாரின் விண்ணப்பத்தை ஏற்ற நீதவான் அதனை இரசாயன பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார். வட்டுக்கோட்டை இளைஞர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பிலான வழக்கு எதிர்வரும் 4 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/297478
    • கெஹெலிய உள்ளிட்ட 7 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு! தரமற்ற மருந்து கொள்வனவு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 7 பேர் எதிர்வரும் 8ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இன்று (28) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போது, கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 7 பேரை எதிர்வரும் 8ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த மற்றும் சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்கவும் இதில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/297480
    • பல்லைக் காட்டியது யார், வெள்ளைக் குடை பிடித்தது ஏன்? - தமிழ்நாடு தேர்தல் களத்தில் என்ன நடக்கிறது? பட மூலாதாரம்,X/UDHAY/ANI 28 மார்ச் 2024, 05:54 GMT தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைகளை கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் தொடங்கிவிட்ட நிலையில், திமுக அதிமுக இடையிலான புது மாதிரியான போட்டோ விவாதம் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. பிரச்சாரத்தின் முக்கிய அங்கமாக சமூக ஊடகங்கள் மாறியுள்ள நிலையில், களத்தில் நடைபெறும் பரப்புரைகள் சமூக வலைதளங்களிலும், எதிரொலிக்கின்றன. தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனது பிரச்சாரங்களில் போட்டோக்களை பயன்படுத்தி பரப்புரை செய்து வருகிறார். அதிமுகவும் பாஜகவும் ஒரே கூட்டணி என்பதை காட்ட, பிரதமர் மோதியும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பொது நிகழ்வுகளில், சந்திப்புகளில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை கையில் கொண்டு வந்து மக்கள் மத்தியில் எடுத்துக் காட்டி பரப்புரை செய்கிறார். இதற்கு பதிலடியாக எடப்பாடி பழனிசாமி தனது பரப்புரைக் கூட்டங்களில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினும் பிரதமர் மோதியும் அரசு நிகழ்வுகளில், விழாக்களில் அருகில் நின்று சிரித்து பேசிக் கொண்ட புகைப்படங்களை எடுத்துக் காட்டி, திமுகவும் பாஜகவும் கள்ளக் கூட்டணி கொண்டுள்ளனர் என்று சுட்டிக் காட்டுகிறார்.   பட மூலாதாரம்,X/UDHAY 'கல்லு பல்லு' என நீளும் விமர்சனம் அதே போன்று, உதயநிதி ஸ்டாலின், மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது என்பதை சுட்டிக் காட்டும் வகையில் கடந்த தேர்தலில், ஒற்றை செங்கலைக் காட்டி பரப்புரை செய்தார். இந்த முறையும் அதே போன்ற பரப்புரையை மேற்கொண்ட போது, “ஸ்கிரிப்டை மாத்து பா” என்று எடப்பாடி தனது பிரச்சாரத்தில் பதில் கொடுத்துள்ளார். “செங்கலை தூக்கிக் கொண்டு வித்தை காட்டுகிறாயா” என்று கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி, திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையில் அழுத்தம் கொடுத்திருந்தால் எய்ம்ஸ் கட்டுமானத்துக்கு உதவியாக இருந்திருக்கும் என்றார். இந்த விவாதங்கள் பிரச்சாரக் களத்தில் மட்டுமல்லாமல், சமூக ஊடகங்களில் இடம் பெற்றுள்ளன. “நானாவது எய்ம்ஸ் -ல் வைத்த கல்லை காட்டினேன். இவர் பல்லை காட்டுகிறார் பாருங்கள்” என எடப்பாடி மோதியுடன் எடப்பாடி பழனிசாமி சிரித்துக் கொண்டு நிற்கும் புகைப்படத்தைக் காட்டி உதயநிதி ஸ்டாலின் பேசியது சமூக ஊடகங்களில் கல்லு பல்லு என்ற புதிய ஹேஷ் டேக்கை உருவாக்கிவிட்டது. இரு தரப்பினரும் மாறி மாறி, கல்லு பல்லு என்று பல உதாரணங்களை எடுத்து விமர்சித்து கேலி செய்து வருகின்றனர்.   பட மூலாதாரம்,X/EPSTAMILNADU மேலும் உதயநிதி ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்த போது எடுத்த புகைப்படத்தை காட்டி, “இவர் சிரிச்சா தப்பு இல்ல, நான் சிரிச்சா தப்பா. சிரிச்சா என்ன தெரியுது, பல்லு தானே” என்று மீண்டும் இந்த விவகாரத்தை கையில் எடுத்தார் எடப்பாடி பழனிசாமி. அந்தப் புகைப்படம் கேலோ இந்தியா நிகழ்வுகள் குறித்து பேசும் போது எடுத்தது என்று பதிலளித்தப் உதயநிதி, எடப்பாடி பழனிசாமி சசிகலாவின் காலில் விழும் போட்டோவை காண்பித்து, “நான் இப்படி ஒருவர் காலில் விழும் புகைப்படத்தை காண்பித்தால் நான் அரசியலை விட்டு விலகிவிடுகிறேன்” என சவால் விடுத்துள்ளார்.   பட மூலாதாரம்,X/ANI பிரதமர் நரேந்திர மோதி சென்னை வந்த போது கருப்பு குடைக்கு பதிலாக வெள்ளை குடை பிடித்ததை விமர்சனம் செய்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நடிகர் வடிவேலுவின் 23ம் புலிகேசி திரைப்படத்தில், எதிரி நாட்டவர்கள் படை எடுத்து வரும் போது வெள்ளை கொடி எடுத்து செல்வார். அதே போல, கருப்பு குடை பிடித்தால் பிரதமருக்கு கோபம் வரும் என்பதால், அவர் சென்னை வரும் போது, வெள்ளை குடை பிடிக்கப்பட்டது. வெள்ளை குடை ஏந்தும் பொம்மை வேந்தர் என்று முதல்வரை மக்கள் சொல்கிறார்கள்” என்று கூறியிருந்தார்.   பட மூலாதாரம்,X/ANNAMALAI_K 'கோட்டா அரசியல்' - விமர்சனத்தில் சிக்கியுள்ள அண்ணாமலை அண்ணாமலை கோவையில் செய்தியாளர் சந்திப்பில் பேசும் போது,தன்னை எதிர்த்து போட்டியிடும் அதிமுக வேட்பாளரான சிங்கை ராமச்சந்திரன், சட்டமன்ற உறுப்பினராக இருந்த அவரது தந்தை கோவிந்தராசுவின் உதவியால் தான் உயர்படிப்பு படித்தார் என்றும் விமச்சித்திருந்தார். “2002ம் ஆண்டு எம் எல் ஏ கோட்டாவின் கீழ் கல்லூரியில் இடம் பெற்றவர் அவர், வாரிசு அரசியலில் வந்தவர் அவர். ஆனால் நான், எனது தந்தையுடன் கிராமத்திலிருந்து மூன்று பேருந்துகள் மாறி, தகரப்பெட்டியுடன் இந்த நகரத்துக்குள் நுழைந்தேன். கோட்டா அரசியலில் வரவில்லை நான்.” என்று அண்ணாமலை தெரிவித்திருந்தார். பட மூலாதாரம்,X/RAMAAIADMK இதற்கு பதிலளித்த சிங்கை ராமச்சந்திரன், “எனக்கு 11 வயது இருக்கும் போதே என் தந்தை இறந்துவிட்டார். நான் பெற்ற மதிப்பெண்கள் காரணமாகவே எனக்கு பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்தது. அவர்களுடைய மோதியின் குஜராத்-ல் உள்ள ஐஐஎம்-ல் மீண்டும் மதிப்பெண்கள் மூலமாகவே இடம் பெற்றிருந்தேன். அவருக்காவது தகரப்பெட்டியை உடன் தூக்கி வர அப்பா இருந்தார், ஆனால் எனக்கு அதுவும் இல்லை. இது போன்ற கஷ்டங்களை அனைவரும் தங்கள் வாழ்வில் சந்தித்திருப்பார்கள். எனவே நான் தான் துன்ப்பப்பட்டேன் என்று கூறிக் கொள்ள எதுவும் இல்லை” என்று பதில் கூறியிருந்தார். இதை அடுத்து கோட்டா அரசியல், இட ஒதுக்கீடு குறித்த விவாதம் சமூக ஊடகங்களில் பரப்பரப்பாக நடைபெற்று வருகின்றன. திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில், அண்ணாமலை தான் வளர்ந்து வந்த பாதையை மறந்துவிடக் கூடாது என்று கூறியுள்ளார். இதற்கிடையில், முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் விழுப்புரம் தொகுதியில் பேசும் போது அதிமுக போட்ட பிச்சை தான் தமிழகத்தில் பாஜகவுக்கு இருக்கும் நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் என்று காட்டமாக கூறியிருந்தார். தேனி தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் டிடிவி தினகரன், பாஜகவின் சாதனைகளை குறித்தோ அல்லது காங்கிரஸ் மீதுள்ள விமர்சனங்கள் குறித்து குறிப்பிட்டு எதையும் பேசுவதில்லை. தனது கட்சியிலிருந்து விலகிச் சென்றவர்களை மறைமுகமாக தாக்கிப் பேசும் அவருக்கு, பிரதான அரசியல் பிரச்னைகள் குறித்து பேசுவதை விட தனது குக்கர் சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே முக்கியத்துவம் பெறுகிறது.   பட மூலாதாரம்,X/DRARAMADOSS பாமக மாறி மாறி கூட்டணி வைத்துக் கொள்வதை விமர்சித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நீர் இருக்கும் இடத்தை தேடிச் செல்லும் வேடந்தாங்கல் பறவை போல் பா.ம.க.,வினர் தேவைக்கேற்ப சென்று விடுவர். பா.மக., கூட்டணி வைக்காத கட்சிகளே இல்லை” என்று கூறியிருந்தார். தருமபுரியில் வேட்பாளர் சௌம்யா அன்புமணியை அறிமுகம் செய்து பேசிய அன்புமணி ராமதாஸ் “நாங்கள் வேடந்தாங்கல் பறவை அல்ல, சரணாலயம்” என்று பதில் கூறியுள்ளார். “யார் வந்தாலும் பாதுகாப்பு கொடுப்போம். வெற்றி பெற செய்வோம். எங்களை நம்பி வருபவர்களை வாழ வைப்போம். யாருக்கும் துரோகம் செய்ய மாட்டோம்” என்று தெரிவித்திருந்தார். https://www.bbc.com/tamil/articles/cjkd7v517z2o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.