Jump to content

தமிழகத்தில் விறுவிறு... சுப்ரீம் கோர்ட் சுறுசுறு... தொட்டுவிடும் தூரத்தில் வருகிறது தீர்ப்பு தேதி


Recommended Posts

தமிழகத்தில் விறுவிறு... சுப்ரீம் கோர்ட் சுறுசுறு... தொட்டுவிடும் தூரத்தில் வருகிறது தீர்ப்பு தேதி

 

தமிழகத்தில் அரசியல் நிகழ்வுகள் வேகமாக மாறியபடி உள்ள நிலையில், தலைமை நீதிபதி மாற்றம், நீதிபதி விரைவில் ஓய்வு என, டில்லி யில் சுப்ரீம் கோர்ட்டும் சுறுசுறுப்பாவதால், சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு நெருங்கு கிறது என்ற பேச்சு அடிபடுகிறது.

 

Tamil_News_large_168641320170109002229_318_219.jpg

பெங்களூர் சிறப்பு கோர்ட்டில், 18 ஆண்டுகளாக நடந்த சொத்துக் குவிப்பு வழக்கில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா மற்றும் இளவரசி, சுதாகரன் ஆகிய நான்கு பேருக்கும் தண்டனை வழங்கப்பட்டது.

நீதிபதி குன்கா அளித்த தீர்ப்பால், முதல்வர் பதவியை இழந்து சிறைக்கு சென்றார் ஜெய லலிதா. ஆனால், நான்கு பேரும் அளித்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த கர்நாடகா ஐகோர்ட் தனி நீதிபதி குமாரசாமி, நான்கு பேரையும் விடுதலை செய்தார்.

அந்த தீர்ப்பு, அரசியல் அரங்கில் பெரும் சர்ச்சையை கிளப்பியது. ஜெயலலிதா உள் ளிட்ட நான்கு பேரின் விடுதலையை எதிர்த்து, கர்நாடக அரசும், தி.மு.க., பொதுச் செயலர் அன்பழகனும், மேல்முறையீடு செய்தனர். இவ்வழக்கை விசாரித்த, நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ் மற்றும் அமித்வா ராய் ஆகியோர், தீர்ப்பை ஒத்திவைத்து உள்ளனர். தீர்ப்பு வெளி யிடப்படுவது குறித்த காலக்கெடு எதுவும் அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில், ஜெயலலிதா திடீரென உடல் நலம் குன்றி மருத்துவமனையில்

சேர்க்கப்பட்ட போது, சொத்துக் குவிப்பு வழக்கில் எதிர்மறையான தகவல் டில்லியிலிருந்து வந்த அதிர்ச்சி யால் அவர் மயக்கமடைந்ததாக வதந்தி கிளம்பியது.

பின், ஜெயலலிதாவின் மருத்துவமனை காட்சிகள் நாள்தோறும் அரங்கேறி, தமிழக அரசியல் அரங்கை வேறு திசை திருப்பவே, சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு குறித்த எதிர்பார்ப்பே மங்கியது. நெருக்கடி யான அரசியல் சூழ்நிலையில், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வெளியிடுமா என்ற சந்தேகங்களும் கிளம்பின.

யாரும் எதிர்பாராத வகையில் ஜெயலலிதா மரணமடைய, சூழ்நிலை இன்னும் குழப்பமானது. பா.ஜ., - எம்.பி.,யும், இவ்வழக்கின் காரண கர்த்தா வுமான சுப்பிரமணியன் சாமி, 'ஜனவரியில் தீர்ப்பு வரப் போகிறது' எனக் கூறி, பரபரப்பை அதிகப்படுத் தினார். இவையாவும் சசிகலா, அ.தி.மு.க., பொதுச் செயலராவதற்கு முன் நடந்தவை.

வழக்கு முடிந்ததும், மூன்று அல்லது நான்கு மாதங்களில் தீர்ப்பை எதிர்பார்க்கலாம் என, பலரும் நம்பினர். தற்போது, ஆறு மாதங்களுக்கு மேலாகி விட்டது. தலைமை நீதிபதியாக இருந்த, டி.எஸ். தாக்குர் ஓய்வு பெற்று, ஜே.எஸ்.கெஹர் பதவி யேற்றுள்ளார்.

இதையொட்டிய அலுவல்கள் முடிந்துள்ளதால், சுப்ரீம் கோர்ட்டின் பார்வை, சொத்துக் குவிப்பு வழக்கு மீது படலாம் என தெரிகிறது. இதுகுறித்த செய்தி, சுப்ரீம் கோர்ட் வட்டாரங்களில் சில நாட்களாக தீவிரமடைந்து வருகிறது.

ஜெயலலிதாவின் மறைவு, தீர்ப்பில் தாக்கத்தை ஏற்படுத்துமா, அரசியல்செல்வாக்கு மிக்க தலைவர் இப்போது இல்லாத நிலையில், மீதமுள்ளவர்கள் மீதான கோர்ட் டின் பார்வை எப்படி இருக்கும் என்பன போன்ற கேள்விகள், அரசியல் அரங்கில் வட்டமடிக்க வும் தவறவில்லை.

இந்நிலையில், இரு நீதிபதிகளில் ஒருவரான, பினாகி சந்திரகோஷ், மே 27ல் ஓய்வு பெற வுள்ளார். ஆனால், சனிக்கிழமையான மே 6 முதல், சுப்ரீம் கோர்ட்டுக்கு கோடை விடுமுறை

 

துவங்கவுள்ளதால், அவரது கடைசி அலுவல், மே 5ல் நிறைவுபெறும். வழக்கை விசாரித்த நீதிபதி என்பதால் பினாகி சந்திரகோஷ் பணி ஓய்வு பெறுவதற்கு முன், எப்போது வேண்டு மானாலும் தீர்ப்பும் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

இந்த விஷயங்களை மையமாக வைத்து, சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்புக்கான தேதி, வெகு துாரத்தில் இல்லையென, தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 

மூன்று விஷயங்கள்


* கர்நாடக அரசின் வாதங்கள் ஏற்கப்பட்டால், குன்காவின் தீர்ப்பு உறுதி செய்யப்படலாம் அல்லது புதிய தண்டனை விபரங்கள் அறிவிக் கப்படலாம்; அது சசிகலாவின் அரசியல் வாழ்க்கையை பாதிக்கும்

* நான்கு பேரது வாதங்கள் ஏற்கப்பட்டால், குன்காவின் தீர்ப்பு ரத்தாகி விடுதலையாவர்; இதை எதிர்த்து, கர்நாடக அரசு மறுசீராய்வு வழக்கை தொடுக்கலாம்

* மீண்டும் கர்நாடகா ஐகோர்ட்டுக்கே வழக்கு திருப்ப அனுப்பப்படலாம்; கணக்கு பிழைகளை சரி செய்ய உத்தரவிடலாம். ஆனால், 'இதற்கு வாய்ப்பே இல்லை' என, நீதிபதி அமித்தவ் ராய் விசாரணையின் போது கூறியதை கவனத்தில் கொள்ள வேண்டும். - நமது டில்லி நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1686413

 

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • ஆழ்ந்த அஞ்சலிகள். மத்திய கல்லூரியில் என் அப்பாவுக்கு சீனியர். எதிர் என ஆரம்பித்து இவரை பற்றி ஒரு அசகாய சூரனை போல கதைத்து கொண்டே இருப்பார் அப்பா. அதே போலத்தான் கந்தப்பு சொன்ன அதிபர் ஸ்மித்தை பற்றியும்.   
    • யார் சொன்னார் சீமான் மட்டும் தங்கம் என? சீமான் இன்னும் ஆட்சி செய்யவில்லையே? அவரவர் தாம் விரும்பும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை விரும்புகின்றனர். விஜய் கட்சி ஆரம்பிக்க முதலே நீங்கள் சீமான் எதிர்ப்பாளர் தானே? அது சரி விஜய் அரசியல் கட்சியின் கொள்கை என்ன? 🤣
    • ஓம் கருணாநிதி கூட ஒரு முறை சொன்னார் “நெல்லை எனக்கு எல்லை, குமரி எனக்குத் தொல்லை” என. எப்போதும் ஏனைய தமிழ் நாட்டு தொகுதி முடிவுக்கு மாறாக போக அதிக வாய்ப்பு உள்ள தொகுதி கன்யாகுமரி. தவிர பொன்னாருக்கு தனிப்பட்ட செல்வாக்கும் உண்டு. ஆனால் வாலி சொல்லும் காரணங்களும் பலமானவையே. கடும் போட்டி இருக்கும் என நினைக்கிறேன். மாற்று உண்மையான மாற்றாக இருக்க வேண்டும்.  உங்களை போலவே மேலே உள்ள காரணங்களுக்காக நான் விஜையின் அரசியல் வரவை வரவேற்கிறேன்.
    • அப்படியாயின் மாற்று ஆட்சி ஒன்று வரட்டும். அது பாஜகாவை விட நாம் தமிழர் கட்சியாக இப்போதைக்கு இருக்கட்டும். அதை தமிழ்நாட்டு மக்கள்பரீட்சித்து பார்க்கட்டும். சரி இல்லையேல் அடுத்த நான்கு வருடத்தில் ஆட்சியை மாற்றட்டும். சந்ததி சந்ததியாக மற்ற கட்சிகளின் குறைபாடுகளை எதிர்வு கூறியே மீண்டும் மீண்டும் விட்ட தொட்ட பிழைகளை தொடராமல்....
    • எழுதுங்கள்…எதோ நான் பானுமதி, விஜி, பாத்திமாவோடு டீலில் இருந்தமாரி போகுது கதை🤣. நான் எப்போதும் சீமானை என்ன சொல்வேன்? சின்ன கருணாநிதி….. சின்ன கருணாநிதியே இவ்வளவு கேலவலமானவர் என எழுதும் எனக்கு பெரிய கருணாநிதி, எம்ஜிஆர், ஸ்டாலின், ஜெ., சசி, உதய் எல்லாரும் அதை ஒத்த கள்ளர்கள் என்பது தெரியாமலா இருக்கும். உங்களையும் சகாக்களையும் போல சீமான் மட்டும் தங்கம், ஏனையோர் பித்தளை என பசப்புபவன் நான் இல்லை. இவர்கள் எல்லாரும் ஒரே குட்டையில் நாறிய மட்டைகள் என்பது நான் 1ம் நாளில் இருந்து எழுதி வருவதே. பிகு நல்ல சுவாரசியமாக படத்தோடு எழுதுங்கள். சும்மா “சரோஜா தேவி” பலான கதைகள் போல தெறிக்க விடுங்கள்🤣.  ஆவலோடு காத்திருக்கிறேன்🤣 ஆருக்கு தெரியும். ஆம் என்கிறனர் விஜி. இல்லை என்கிறார் அண்ணன். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.