Jump to content

ஜெயலலிதா மரணத்தில் விசாரணை: சசிகலாபுஷ்பா கோரிக்கைக்கு கிடைத்த பலன்!


Recommended Posts

ஜெயலலிதா மரணத்தில் விசாரணை: சசிகலாபுஷ்பா கோரிக்கைக்கு கிடைத்த பலன்!

Home ministry ordered Dopt in Jayalalithaa's demise

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம், தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக் கோரி மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம், சசிகலா புஷ்பாவிடம் மனு அளித்திருந்தார்.

இதுதொடர்பாக தனிப்பட்ட மற்றும் பயிற்சி துறை (department of personal and training) நடவடிக்கை எடுத்து, சசிகலாபுஷ்பாவுக்கு, தெரிவிக்க உள்துறை அமைச்சம் என்று உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த தகவல் தொடர்பாக சசிகலாபுஷ்பா அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார். 

15941564_10211995006336088_612692033_n_1

http://www.vikatan.com/news/india/77270-sasikalapushpas-petition-effect--home-ministry-ordered-dopt-to-take-action-in-jayalalithaas-demise.art

Link to comment
Share on other sites

'நீக்கப்பட்டவர்களால் அரங்கேறிய சதியா?!' - ஜெயலலிதா மரணத்தை விசாரிக்கும் சி.பி.ஐ

appollo600_12539.jpg

அ.தி.மு.க பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதா மரணம் தொடர்பாக, சசிகலா புஷ்பா கொடுத்த மனுவை சி.பி.ஐயின் நிர்வாக அமைப்புக்கு அனுப்பியிருக்கிறது மத்திய உள்துறை அமைச்சகம். ' ஜெயலலிதா மீண்டும் வந்துவிடக் கூடாது என்பதற்காக, திட்டமிட்டு நடத்தப்பட்ட சதியாகவே பார்க்கிறோம்' என்கிறார் சசிகலா புஷ்பா எம்.பி. 

மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சில நாட்களுக்கு முன்பு சந்தித்தார் அ.தி.மு.கவின் மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா. ' ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் உள்ளதால், மத்திய புலனாய்வு அமைப்பின் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்' எனக் குறிப்பிட்டிருந்தார். அடுத்ததாக, பா.ஜ.க தேசியத் தலைவர் அமித் ஷாவை சந்தித்து, தமிழக அரசியல் சூழல்கள் குறித்து விவாதித்தார். இந்த நடவடிக்கைகளை அச்சத்தோடு கவனித்து வந்தது கார்டன் வட்டாரம். தற்போது, சி.பி.ஐயின் நிர்வாக அமைப்பான பணியாளர் நலன் மற்றும் பயிற்சித் துறைக்கு சசிகலா புஷ்பாவின் மனுவை அனுப்பியிருக்கிறது உள்துறை அமைச்சகம். ' ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதற்கான அடிப்படை முகாந்திரம் இருந்தால், வழக்கை சி.பி.ஐ விசாரிக்கும்' என உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்ட நாளில், உயர் நீதிமன்ற நீதியரசர் தெரிவித்த கருத்துக்களும் தற்போது உள்துறையின் அதிரடிகளும் அ.தி.மு.க சீனியர்களை கவனிக்க வைத்துள்ளது. 

" பொதுச் செயலாளர் பதவிக்குப் போட்டியிடுவதற்காக விண்ணப்பம் வாங்கச் சென்ற, சசிகலா புஷ்பாவின் கணவர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டது. எந்தவிதத் தேர்தலும் இல்லாமல், பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்டார் சசிகலா. கழகத்தின் விதிகளைக் கடைபிடிக்காமல்தான் பதவிக்குக் கொண்டு வரப்பட்டார். எப்படி இருந்தாலும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பதில் சொல்ல வேண்டிய கடமை, சசிகலாவுக்கு இருக்கிறது. மருத்துவமனையில் இருந்த 75 நாட்களும், அவரைச் சுற்றி என்ன நடந்தது என்பதை தொண்டர்களுக்கும் பொதுமக்களுக்கும் தெரிவிக்க வேண்டிய கடமை, அவரைச் சுற்றியிருந்தவர்களுக்கு இருக்கிறது. அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும், இந்தக் கேள்விகளை எழுப்பியபோதும் சசிகலாவிடம் இருந்து எந்தப் பதிலும் வரவில்லை. எனவேதான், மத்திய உள்துறையின் கவனத்திற்குக் கொண்டு செல்ல வேண்டியதாகிவிட்டது" என விவரித்த சசிகலா புஷ்பாவின் ஆதரவாளர் ஒருவர், தொடர்ந்து நம்மிடம், " ஜெயலலிதா மரணம் தொடர்பாக, சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கும்போது சில ஆதாரங்களை வழங்க இருக்கிறார் சசிகலா புஷ்பா. முதலாவதாக, 2011-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஆறே மாதத்தில், சசிகலா மற்றும் அவருடைய உறவினர்களை கட்சியில் இருந்து நீக்கினார்.  'ஆட்சிக்கு எதிராக சதித் திட்டம் தீட்டப்பட்டது' எனக் கொந்தளித்தார் ஜெயலலிதா. அடுத்து வந்த நாட்களில் நடராஜன், திவாகரன் மீது வழக்குப் பதியப்பட்டது. அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் மூன்று மாத கால இடைவெளியில் மீண்டும் கார்டனுக்குள் சேர்த்துக் கொள்ளப்பட்டார் சசிகலா. ஆனால், 'அவருடைய உறவினர்கள் நீக்கம் தொடரும்' என அறிவித்தார். 

pushpa_letter_12129.jpg

அதன்பிறகு, கார்டனில் இருந்து கொண்டே, ஜெயலலிதாவுக்கு எதிராக படிப்படியான சதித் திட்டங்கள் தீட்டப்பட்டன. அதன் இறுதிக் கட்டமாகத்தான், உடல்நலக் குறைவு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ஜெயலலிதா. 'எப்படிப்பட்ட சூழலில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்' என்பதை இதுவரையில் சசிகலா தெரிவிக்கவில்லை. மருத்துவமனையில் இருந்த நாட்களில், அவரால் நீக்கப்பட்டவர்கள், மருத்துவமனைக்கு வந்து போய்க் கொண்டிருந்தனர். இறுதிவரையில், அவருடைய உடல்நிலை குறித்த சரியான தகவல் பொதுமக்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை. 'வெளிநாட்டிற்கு அழைத்துப் போய் சிகிச்சை அளிக்க வேண்டும்' என்ற கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது. குறிப்பாக, மருத்துவமனையில் ஜெயலலிதா இறப்பிற்கு முந்தைய இரண்டு நாட்களும் என்ன நடந்தது என்பதற்கு உறுதியான காரணங்கள் இல்லை. 'அவரைக் காப்பாற்ற முடியாமல் போனதற்கு மறைமுகக் காரணிகள் இருந்தாக', அப்போலோ அறிக்கை தெரியப்படுத்தியது. அது என்ன என்பதை மருத்துவமனை நிர்வாகம் தெளிவுபடுத்தவில்லை. சிகிச்சை விவரங்களை மறைத்த காரணத்திற்காக, அப்போலோ நிர்வாக இயக்குநர் பிரதாப் ரெட்டியையும் விசாரிக்க வேண்டும். ஜெயலலிதாவுக்குக் கொடுக்கப்பட்ட மருந்துகள்; இதயத் துடிப்பு முடக்கத்திற்கான காரணங்கள்; கடைசியாக அவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சை விவரங்கள் ஆகியவற்றை வெளிக் கொண்டு வர வேண்டும் என சிபி.ஐ அதிகாரிகளிடம் வலியுறுத்த இருக்கிறார் சசிகலா புஷ்பா. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் நடந்த விவரங்களை ஆவணமாகத் தொகுத்திருக்கிறார். சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணைக்கு அழைக்கும்போது, இந்த ஆதாரங்களை அவர் வழங்குவார்" என்றார் விரிவாக. 

" ஜெயலலிதா மரணத்தில் மர்மம் என நாள்தோறும் யாராவது ஒருவர் கிளம்பிக் கொண்டே இருக்கின்றனர். மருத்துவர் சிவக்குமார் மட்டும் அவருக்கு சிகிச்சை அளிக்கவில்லை. லண்டன் மருத்துவரின் சிகிச்சை தொடர்ந்தபோது, எய்ம்ஸ் மருத்துவர்களை அனுப்பி வைத்தார் பிரதமர் மோடி. அங்கு என்ன நடந்தது என்பதைப் பற்றி எய்ம்ஸ் மருத்துவர்கள், மத்திய அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளனர். நாங்கள் தவறு செய்தோம் என்றால், அப்போதே மருத்துவமனையில் இருந்து எங்களை அப்புறப்படுத்தியிருக்கலாமே? எங்கள் உறவினர்கள் யாரும் எம்.எல்.ஏ பதவியில்கூட இல்லை. எங்கள் உத்தரவுகளைப் பின்பற்றும் அளவுக்கு அதிகாரிகளும் அங்கு இல்லை. பிறகு நாங்கள் எப்படி தவறு செய்திருக்க முடியும்? மக்கள் மத்தியில் ஜெயலலிதா மரணம் குறித்த சர்ச்சையை நீட்டிக்கவே மத்திய அரசு விரும்புகிறது. எந்த விசாரணைக்கும் நாங்கள் தயார்" என்கின்றனர் மன்னார்குடி உறவுகள். 

http://www.vikatan.com/news/tamilnadu/77323-home-minister-ordered-to-take-action-on-jayalithaas-death.art

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என் தாயக பூமி என்பது சொறீலங்காவை அல்ல.. தமிழீழத்தை. என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். உங்கள் மகிழ்ச்சி நிலைக்க வேண்டும். 
    • Copy Cat அனிருத் க்கு ஒரு keyboard ம் ஒரு  laptop ம் வாய்த்ததுபோல தங்களைத் தாங்களே சிரித்திரன் சுந்தருக்கு ஈடாக கற்பனை செய்துகொள்ளும்  சிலருக்கு laptop  கிடைத்திருக்கிறது.  உயர உயரப் பறந்தாலும்  ஊர்க் குருவி பருந்தாகாது.   
    • போருக்குப் பின் இப்படியொரு வார்த்தையை முதன் முதலாக நீங்கள் குறிப்பிட்டதில் மகிழ்சி அடைகிறோம். 🙂
    • திருடர்கள். திருடர்களிடம் கப்பம் வாங்கியவர்களும் திருடர்கள் தான். அதற்காக தமிழ் மண்ணின் விசேட இயற்கை சொத்துக்களான... சந்தன மரங்களை அழித்ததை தவறில்லை என்று சாதிக்கப்படாது. அதேவேளை சந்தன மரங்கள் கண்டவர்களாலும் களவாடப்படும் நிலை அன்றில்லை... இன்றிருக்குது. அந்த வகையில்.. வீரப்பனின் காட்டிருப்பு.. காட்டு வளம் அதீத திருட்டில் இருந்து தப்பி இருந்தது என்பதும் யதார்த்தம் தான். 
    • ஐந்தாவது நாளாகவும் தொடரும் கல்முனை போராட்டம் : நிர்வாகம் எடுக்கப்போகும் முடிவு என்ன கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதன்படி, போராட்டத்தின் ஐந்தாவது நாளான இன்றும் (29) கவனயீர்ப்புப் போராட்டம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் முன்பு இடம்பெற்று வருகிறது. குறித்த பிரதேச செயலகத்தின் முன்பு கடந்த திங்கட்கிழமை (25) பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாகைகள் தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்றுகூடி போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். 30 வருட காலமாக அதன் தொடர்ச்சியாக 5வது நாளான இன்றும் பல்வேறு சுலோகங்களை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய 5ம் நாள் போராட்டத்தில் சேனைக்குடியிருப்பு விதாதா தையல் பயிற்சி நிலைய மாணவிகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாகச்செயற்பட்டு வந்த இந்த பிரதேச செயலகம் 1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து 1993ம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நிர்வாக அடக்குமுறை இருந்த போதிலும், ஒரு சில அரசியல்வாதிகள் தொடக்கம் உயரதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக பொதுமக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிர்வாக அடக்குமுறைகளைக் கண்டித்தும் திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாதெனவும் அரசாங்கம் இன்னும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் எனவும் மேலும் மக்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.   https://akkinikkunchu.com/?p=272438
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.