Jump to content

ஐரோப்பா கண்டத்தில் நிலவும் கடுங்குளிரால் 20க்கும் மேற்பட்டோர் பலி


Recommended Posts

ஐரோப்பா கண்டத்தில் நிலவும் கடுங்குளிரால் 20க்கும் மேற்பட்டோர் பலி

 

ஐரோப்பா கண்டம் முழுவதும் நிலவுகின்ற கடுமையான குளிரால் கடந்த இரண்டு நாட்களில் இருபதுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக ஐரோப்பிய நாடுகளின் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

 
  ஐரோப்பா கண்டம் முழுவதும் கடுங்குளிர்

உயிரிழந்தவர்களில் பலர் அகதிகள் மற்றும் வசிப்பிடம் இல்லாதவர்கள்.

வெள்ளிக்கிழமையன்று, ரஷியாவின் சில பகுதிகளில் 120 ஆண்டுகளில் இல்லாத மிக குளிரான பழம் பெரும் கிறித்துமஸ் நாளை மக்கள் கொண்டாடினர்.

மாஸ்கோவில் இரவு நேரங்களில் வெப்பநிலை மைனஸ் முப்பது டிகிரி செல்ஷியஸாக குறைந்துள்ளது.

போலாந்தின் வெப்பநிலை மைனஸ் பதிநான்காக குறைந்ததையடுத்து அங்கு 10 பேர் உயிரிழந்தனர்.

இத்தாலியில் தென் கிழக்கு மற்றும் மத்திய பிராந்தியங்களில் சூழப்பட்டுள்ள கடுமையான பனிப்போர்வையால் 7 பேர் பலியாகியுள்ளனர்.

இதுவரை மிக குளிரான குளிர்கால இரவை சந்தித்துள்ள செக் தலைநகர் ப்ராக்கில், மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

http://www.bbc.com/tamil/global-38546286?ocid=socialflow_facebook

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று..... இங்கு, -14 பாகை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, தமிழ் சிறி said:

நேற்று..... இங்கு, -14 பாகை.

-14 எல்லாம் ஒரு குளிரா ?
எமக்கு -20 எல்லாம் சாதாரணம் 
மாசி மதம் முடியத்தான் உங்கள் செல்ஷியஸில் எமக்கு ஸிரோவிட்கு 
மேலே வரும். 

என்ன இது சாதாரணம் என்பதால் எம்மிடம் அதட்கான முன் ஏற்பாடுகளும் 
கைவசம் இருக்கும். உங்களிடம் குளிருக்கு உகந்த ஜாக்க்கெட் கூட இருக்காது 
என்று நினைக்கிறேன்.

லண்டனில் கழிவு தண்ணீர் வெளியாகத்தானே போகிறது 
முதல் முதலில் பார்த்த போது எனக்கு வியப்பாக இருந்தது.
இங்கு என்றால் ஐஸ் ஆகி நின்றுவிடும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, Maruthankerny said:

-14 எல்லாம் ஒரு குளிரா ?
எமக்கு -20 எல்லாம் சாதாரணம் 
மாசி மதம் முடியத்தான் உங்கள் செல்ஷியஸில் எமக்கு ஸிரோவிட்கு 
மேலே வரும். 

என்ன இது சாதாரணம் என்பதால் எம்மிடம் அதட்கான முன் ஏற்பாடுகளும் 
கைவசம் இருக்கும். உங்களிடம் குளிருக்கு உகந்த ஜாக்க்கெட் கூட இருக்காது 
என்று நினைக்கிறேன்.

லண்டனில் கழிவு தண்ணீர் வெளியாகத்தானே போகிறது 
முதல் முதலில் பார்த்த போது எனக்கு வியப்பாக இருந்தது.
இங்கு என்றால் ஐஸ் ஆகி நின்றுவிடும். 

-14 பாகை அளவில்.... குளிர் காலத்துக்கு இரண்டு மூன்று முறை தான் இங்கு வரும். 
அதுகும்... மாசி மாதத்தில் மட்டுமே வருவது, இம்முறை தை  மாதத்தில், வந்து விட்டது.
சென்ற 5 வருடங்களை விட... இந்த முறை குளிரும், பனிப் பொழிவும் இங்கு  அதிகமாக உள்ளது.   
இங்கு..... குளிருக்கு, தண்ணீர் அடைப்பதை கேள்விப் படவில்லை.
சிலவேளைகளில் குளிர் அதிகமாக இருக்கும் போது, வீதியில் உள்ள  கழிவு வாய்க்கால் நீர் ஓடும் குழாய்களில் இருந்து,   நீர் ஆவியாக மேலே செல்வதை காணக்  கூடியதாக இருப்பதை பார்த்தால், அந்த வாய்க்கால்கள், உறைநிலைக்கு மேற்படட வெப்பத்தில்... இருக்கலாம் என நினைக்கின்றேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாடா போட்டு தாக்குது குளிர்.அடுத்த வின்ரருக்காவது ஊருக்கு போற பாக்கியம் கிடைக்கும் என்று நம்புறன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐரோப்பா முழுவதும் கடுமையான குளிர் நிலவுவது உண்மையே, அதுக்காக அநியாயத்துக்கும் அதைப் பெரிசாக்கக்கூடாது.

கடந்த பத்து வருடத்துக்கு முன்பு நான் வாழும் தேசத்தின் தலைநகரிலிருந்து கிட்டத்தட்ட ஆயிரத்து இருநூறு கிலோமீட்டர்கள் பூமி உருண்டையின் மேல் பாகத்தில் (ஆர்டிக்வட்டகை) ஆறு வருடங்கள் வாழ்ந்திருக்கிறேன் அங்கு குளிர் மைனஸ் 42 பாகை செல்சியஸையும் தொட்டிருக்கு. ஆனால் வீடுகள் எல்லாம் பக்காவாகத் திட்டமிட்டுக்கட்டியவை பெரிசாக்குளிரை உணரமுடியாது. வெளியில்போனால்தான் பிரச்சனை ஆனால் போயாகவேண்டும். இல்லையேல் பிழைப்புக்கு என்ன வழி. இப்போ இரண்டு நாதளுக்குமுன்பு தலைநகரில் மைனஸ் இருபதைத் தொட்டது தொடர்ந்து வேலை. வயசாகிப்போட்டுது கஸ்டம்தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Maruthankerny said:


இங்கு என்றால் ஐஸ் ஆகி நின்றுவிடும். 

 
 
 

கவனம் மருதர்...

சரியான குளிரான இடத்தில இருக்கிறியள்.

என்ன அவசரம் எண்டாலும் வெளியால நம்பர் ஒன்னு அடிக்க எண்டு காரில் இருந்து இறங்கிடாதீங்கோ.

சர்... எண்டு போகேக்கையே... ஐஸாக போயிடும்.... பிறகு.... உடைச்சுத்தான்.... விடணும்...

உந்த  -14 பாகைல விஷயம் தெரியாம தமிழ் சிறியர் சரியான பிரச்சனைப் பட்டுப் போனார் எண்டால் பாருங்கோவன். :grin: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 8.1.2017 at 2:01 PM, Maruthankerny said:

-14 எல்லாம் ஒரு குளிரா ?
எமக்கு -20 எல்லாம் சாதாரணம் 
மாசி மதம் முடியத்தான் உங்கள் செல்ஷியஸில் எமக்கு ஸிரோவிட்கு 
மேலே வரும். 

என்ன இது சாதாரணம் என்பதால் எம்மிடம் அதட்கான முன் ஏற்பாடுகளும் 
கைவசம் இருக்கும். உங்களிடம் குளிருக்கு உகந்த ஜாக்க்கெட் கூட இருக்காது 
என்று நினைக்கிறேன்.

லண்டனில் கழிவு தண்ணீர் வெளியாகத்தானே போகிறது 
முதல் முதலில் பார்த்த போது எனக்கு வியப்பாக இருந்தது.
இங்கு என்றால் ஐஸ் ஆகி நின்றுவிடும். 

கனடாவிலையும் கழிவுதண்ணி இறுகிறேல்லையாம்.....
அமெரிக்கா உலகத்துக்கு பெரிசாய் தெரிஞ்சாலும் ஒருசில ரெக்னிக்கிலை இன்னும் பின்னுக்குத்தான் நிக்குதெண்டு ஜேர்மன்காரர் சொல்லுவினம். :)

On 8.1.2017 at 2:26 PM, தமிழ் சிறி said:


இங்கு..... குளிருக்கு, தண்ணீர் அடைப்பதை கேள்விப் படவில்லை.
சிலவேளைகளில் குளிர் அதிகமாக இருக்கும் போது, வீதியில் உள்ள  கழிவு வாய்க்கால் நீர் ஓடும் குழாய்களில் இருந்து,   நீர் ஆவியாக மேலே செல்வதை காணக்  கூடியதாக இருப்பதை பார்த்தால், அந்த வாய்க்கால்கள், உறைநிலைக்கு மேற்படட வெப்பத்தில்... இருக்கலாம் என நினைக்கின்றேன். 

சிறித்தம்பி! தண்ணி பைப்புகள் இறுகிற விளையாட்டெல்லாம் இஞ்சை 40,50 வருசத்துக்கு முதல் நடந்திருக்குதாம். இப்ப கொஞ்சம் கொஞ்சமாய் முன்னேறிட்டாங்கள்......அதை விட கனடா அமெரிக்கா குளிரோடை எங்களை ஒப்பிட்டு பாக்கவும் ஏலாது எண்டு நினைக்கிறன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

கனடாவிலையும் கழிவுதண்ணி இறுகிறேல்லையாம்.....
அமெரிக்கா உலகத்துக்கு பெரிசாய் தெரிஞ்சாலும் ஒருசில ரெக்னிக்கிலை இன்னும் பின்னுக்குத்தான் நிக்குதெண்டு ஜேர்மன்காரர் சொல்லுவினம். :)

சிறித்தம்பி! தண்ணி பைப்புகள் இறுகிற விளையாட்டெல்லாம் இஞ்சை 40,50 வருசத்துக்கு முதல் நடந்திருக்குதாம். இப்ப கொஞ்சம் கொஞ்சமாய் முன்னேறிட்டாங்கள்......அதை விட கனடா அமெரிக்கா குளிரோடை எங்களை ஒப்பிட்டு பாக்கவும் ஏலாது எண்டு நினைக்கிறன்.

கழிவு தண்ணி இங்கேயும் இறுகுவதில்லை 
காரணம் நிலத்திற்கு கீளால்தான் பைப்புகள் செல்கினறன 

லண்டனில் சமையலறையில் நீங்கள் கழுவினால் 
வெளியில் தண்ணீர் வருவதை காணலாம் 

அப்படி கனடா அமெரிக்காவில் இருந்தால் ஐஸ்தான் இருக்கும். 
அமெரிக்காவிலும் மேலேதான் குளிர் .... கீழ் பகுதி 
புளோரிட்டா பகுதிகள் எப்போதும் சமர் போலத்தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பின்லாந்தில், வீடுகளுக்கான வெப்பமூட்டிகளுக்கு நிலத்துக்கடியில் பலமீற்றர் தூரம் துளையுட்டு அத்துளையினூடே தண்ணீரை அனுப்பி அதை சூடான தண்ணீராகத் திரும்பப்பெறுவதானல் குறந்த செலவிலான வெப்பத்தைப் பெறக்கூடியதாக இருக்கின்றது ஆனால் இம்முறை அனைத்து வீடுகளுக்கும் இல்லை, தவிர நிலத்தடிக்கழிவுவாய்கால் ஓரளவு ஆழமான பகுதிகளில் தாள்க்கப்பட்டிருப்பதால் பூமியினது வெப்பம் அங்கு அதிகமானதால் கழிவுநீர் உறைவதில்லை, சில இடங்களில் பராமரிப்புக்கான இறங்குகுழாய்கள் சரிவரப்பராரிக்கப்படாமையாலும், பெரிய மரங்களது வேர்கள் நீரைத்தேடி கழிவுநீர்க்குழாயைநோக்கி வருவதால் ஏற்படும் அடைப்புகளும் ஏற்பட வாய்ப்பிருக்கு. தவிர நாட்டின் மேற்பகுதியில் நிலத்தின் மேல்மட்டத்தில் காணப்படும் கழிவுநீர்க்குழாய்களுக்குள் முன்சாரம்மூலம் ஓரளவு வெப்பத்தை உண்டுபண்ணக்கூடிய மிந்தடைகளை நிர்மானிப்பதன்மூலம் நீர் உறைவதைத் தடுக்கிறார்கள்.

இவைபற்றி ஓரளவு எனக்குத் தெரியக்காரணம் இத்துறையில் நான் சில காலம் வேலை பார்த்திரிக்கிறேன், 

அதுக்காக இந்தியாவில் மனிதக்கழிவு வாய்க்காலுக்குள் இறங்கி ஏறுவதுபோல் கற்பனை செய்யவேண்டாம். 

Link to comment
Share on other sites

ஐரோப்பா மற்றும் ஐக்கிய இராச்சியத்தில் கடும் குளிருக்கு அறுபது பேர் பலி

 

ஐரோப்பா மற்றும் ஐக்கிய இராச்சியத்தில் நிலவி வரும் கடுமையான பனிப் பொழிவினால் இதுவரை அறுபது பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களுள், வீடற்றோர் மற்றும் வயோதிபர்களின் எண்ணிக்கையே அதிகமாகக் காணப்படுகிறது.

4_Winter_Dead.jpg

இந்த நிலையையடுத்து வீடற்றோர் பாடசாலைகளில் ஆரம்பிக்கப்பட்டுள்ள தற்காலிக முகாம்களுக்குச் செல்லுமாறு கேட்கப்பட்டுள்ளனர்.

கடந்த வாரம் போலந்தில் மட்டும் இருபது பேர் பனிக்கு இரையாகியுள்ளனர். அங்கு நிலவிவரும் கடுமையான காலநிலையால் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.

மேலும் பனிக்காலத்தில் சுற்றுச்சூழல் மாசடைவதைத் தவிர்க்கும் முகமாக வோர்ஸோ நகரில் இலவச போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதனால் வாகனப் பயன்பாடு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சேர்பியாவில் வறிய நிலையில் வாழும் 88 வயதுத் தந்தையும் அவரது 66 வயது மகனும் கடும் குளிரினால் உயிரிழந்துள்ளனர். 

http://www.virakesari.lk/article/15346

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சென்ற வருடமும் இந்த வருடமும் வழமையாக சினோ  கொட்டும் இடங்களில் கொட்டாமால்   இடம் பெயர்ந்து கொட்டுகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையிலும் சீரற்ற காலநிலைதான் கடும் பனிக்காற்று பாடசாலை கூட காலை 8.30 மணிக்கு ஆரம்பிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது  திருவெம்பா போகலாம் என்று எழும்பினால்  உடம்பு தவில் அடிக்குது  இந்த குளிருக்கே இப்படியென்றால் உங்கள் நிலை   ஐயோ  எப்படித்தான் வாழ்கிறீர்கள்  tw_cold_sweat:

Link to comment
Share on other sites

உறைபனியில் அகதிகளின் அவலம்

கிரேக்கத்தில் வழக்கத்தைவிட அதிகமான திடீர் குளிர் ஏற்பட்டுள்ளது.

அதனால், ஆயிரக்கணக்கான அகதிகள் இருபது டிகிரி ஷெல்ஷியஸுக்கும் குறைவான கடுங்குளிரில் நடுங்கிக்கொண்டிருக்கிறார்கள்.

அறுபதாயிரம் அகதிகள் முகாம்களில் தங்கியுள்ளனர்.

அவர்களில் பத்தாயிரம் பேர் குளிர் தாங்க முடியாத கூடாரங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

 

பனி மிதக்கும் நதி

ஹங்கேரியின் பூடாபெஸ்டிலுள்ள டான்யூப் நதியில் உறைபனி மிதக்கிறது.

ஐரோப்பாவின் பல பகுதிகளில் நிலவும் கடுங்குளிரால் ஒட்டுமொத்த டான்யூப் நதியே உறைபனியாகத் தோன்றுகிறது.

ஹங்கேரி உள்ளிட்ட ஐரோப்பாவின் பல நாடுகள் உறைபனியால் போர்த்தப்பட்டு, உறைய வைக்கும் குளிரில் நடுங்கிக்கொண்டிருக்கின்றன

Link to comment
Share on other sites

லண்டனில் கடும் பனிப்பொழிவு - ஹீத்ரோ விமான நிலையத்தில் விமான சேவைகள் ரத்து

கடும் பனிப்பொழிவு காரணமாக லண்டன் நகரின் ஹீத்ரோ விமான நிலையத்தில் 12-க்கும் அதிகமான விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

 
 
லண்டனில் கடும் பனிப்பொழிவு - ஹீத்ரோ விமான நிலையத்தில் விமான சேவைகள் ரத்து
 
லண்டன்:

கடந்த சில தினங்களாக லண்டன் நகர் முழுவதும் கடுமையான பனிப் பொழிவு நிலவி வருகிறது. பனிப் பொழிவுடன் பலத்த காற்றும் வீசுகிறது.

இந்நிலையில், கடும் பனிப்பொழிவு காரணமாக லண்டன் நகரின் ஹீத்ரோ விமான நிலையத்தில் 12-க்கும் அதிகமான விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. சில சேவைகள் தாமதமாக ஆரம்பிக்கப்பட்டதாகவும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஜெனீவா, மான்செஸ்டர், பிளாங்பர்ட் ஆகிய நரங்களுக்கு செல்லும் முக்கிய விமானங்களில் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஐரோப்பாவில் மிகவும் பரபரப்பாக இயங்கும் விமான நிலையங்களில் ஒன்று ஹீத்ரோ விமான நிலையம். ஹீத்ரோ விமான நிலையத்தில் நேற்று திட்டமிடப்பட்ட 1,350 விமானங்களின் சேவைகளில் 80 சேவைகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக ரத்து செய்யப்பட்டது.

இது தொடர்பாக ஹீத்ரோ விமான நிலையம் தனது டுவிட்டர் பக்கத்தில், “மோசமான வானிலை காரணமாக விமான சேவைகளின் திட்டமிடலில் மாற்றங்கள் செய்யப்படலாம். பயணிகள் தங்களது பயண விவரங்களை முன் கூட்டியே அறிந்து கொள்ள வேண்டும்” என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
28986452-F96D-4389-9666-767B8BAC68D5_L_s

சனிக்கிழமை வரை இந்த பனிப் பொழிவு இருக்கும் என்று அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஹீத்ரோ விமான நிலையம் மட்டுமன்றி ஐரோப்பாவின் ஏனைய விமான நிலையங்களும் பனிப்பொழிவால் பாதிக்கப்பட்டுள்ளன. 

http://www.maalaimalar.com/News/TopNews/2017/01/12225931/1061859/Heathrow-Airport-cancels-flights-amid-snow-forecasts.vpf

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஏற்கனவே Necto உட்பட பல Elephant House பானங்கள் இங்கு U.K. தான் Diluting ( சரியான சொல்லா ???). Sugar Levy பிரச்சனையால் . https://www.gov.uk/guidance/check-if-your-drink-is-liable-for-the-soft-drinks-industry-levy#:~:text=You'll pay%3A,8g or more per 100ml
    • 26 APR, 2024 | 03:25 PM   உயிர்த்த ஞாயிறு குண்டுதாக்குதலில் ஈடுபட்ட ஜஹ்ரான்ஹாசிமை வளர்த்தவர் தேசிய புலனாய்வு பிரிவின் தலைவர் சுரேஸ் சாலே என ஐக்கியமக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராணுவதளபதியுமான சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். சுரேஸ் சாலே தற்போது தனக்கும்இந்த விடயத்திற்கும் தொடர்பில்லை என காண்பிக்க முயன்றாலும் அவர் இதிலிருந்து தப்ப முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நான் பதவியிலிருந்தவேளை அவரை அரச புலனாய்வு பிரிவிலிருந்து நீக்கினேன் ஜனாதிபதியான பின்னர் கோட்டாபய ராஜபக்ச அவரை மீண்டும் அந்த பதவிக்கு நியமித்தார் என  சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். சுரேஸ் சாலேயின் வலதுகரமான பொனிபேஸ் பெரேரா கிழக்கிற்கு பொறுப்பான இராணுவஅதிகாரியாக நியமிக்கப்பட்டார் எனவும் தெரிவித்துள்ள சரத் பொன்சேகா சுரேஸ் சாலே என்மீது அவறுதூறு தெரிவித்தால் நான் இந்த ஆவணத்தை சமூக ஊடகங்களில் வெளியிடுவேன் அது அவர் எப்படிப்பட்டவர் என்பதை வெளிப்படுத்தும் எனவும் குறிப்பிட்டுள்ளார் ஜஹ்ரான் ஹாசிமுடன் தொடர்பிலிருந்த இவ்வாறான நபர்களே கௌரவம் மிக்க வீரர்களாக சித்தரிக்கப்படுகின்றனர் எனவும் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/182029
    • 26 APR, 2024 | 01:25 PM   கிளிநொச்சி கண்டாவளை கல்லாறு பகுதியில் இயங்கிவரும் சட்டவிரோத குழு ஒன்றினால் பெண் தலைமைத்துவக் குடும்பம் உள்ளிட்ட இருவருக்கு வழங்கிய வாழ்வாதார மிளகாய் தோட்டம் ஒன்று நேற்றிரவு (25) அழிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு 10 மணிக்குப் பின்னர் இருவருக்குச் சொந்தமான ஒரு ஏக்கர் பரப்பளவு கொண்ட மிளகாய் தோட்டத்திற்குள் நுழைந்த குறித்த சட்டவிரோத குழுவினர் காய்க்கும் நிலையில் காணப்பட்ட மிளகாய்ச் செடிகளைப் பிடுங்கி எறிந்ததோடு, தூவல் முறை நீர் விநியோக குழாய்களை உடைத்து, வெட்டியும் சேதப்படுத்தியுள்ளனர்.   பெண் தலைமைத்துவக் குடும்பம் ஒன்றுக்கும் பிரிதொரு குடும்பம் ஒன்றுக்கும் நிறுவனம் ஒன்றினால் வழங்கப்பட்ட வாழ்வாதார உதவி திட்டத்தின் கீழ் பல இலட்சங்கள் செலவு செய்து மேற்கொள்ளப்பட்ட மிளகாய் பயிர்ச் செய்கையே குறித்த சட்டவிரோத குழுவினால் அழிக்கப்பட்டுள்ளது. குறித்த சட்டவிரோத குழுவில் கல்லாறு மற்றும் பிரமந்னாறு  கிராமங்களைச் சேர்ந்த சில இளைஞர்கள் காணப்படுவதாகவும், இந்தப் பிரதேசங்களில் இடம்பெறுகின்ற சட்டவிரோத மணல் அகழ்வு, திருட்டு,  வாள் வெட்டு, உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளில் இவர்கள் ஈட்டுப்பட்டு வருவதாகவும் பொது மக்கள் அச்சம் காரணமாக  இவர்களுக்கு எதிராக முறைப்பாடு செய்வதற்குக் கூட முன்வருவதில்லை என்றும், இருந்த போதிலும் குறித்த மிளகாய் தோட்ட உரிமையாளர்களில் ஒருவரின் மாடு களவாடப்பட்ட விடயத்தில் அவர் பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததன் காரணமாக பொலிஸாரால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்திய போது அவருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அக்குழுவைச் சேர்ந்த ஏனையவர்கள் ஒன்று சேர்ந்தே அவரின் மிளகாய் தோட்டத்தை அழித்துள்ளனர் எனப் பிரதேச பொது மக்கள் தெரிவித்துள்ளனர். இக் குழுவின் செயற்பாடுகள் தொடர்பில் ஒரு சிலரால் பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் செய்யப்பட்ட போதும் பொலீஸாரினால உரிய நடவடிக்கைகள் எவையும் மேற்கொள்ளவில்லை என்றும் பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/182011
    • விவிபேட்: 100% ஒப்புகைச் சீட்டுகளை சரிபார்க்கக் கோரிய மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி - தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES 26 ஏப்ரல் 2024, 05:17 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் விவிபேட் - VVPAT (Voter-Verified Paper Audit Trail) இயந்திரங்கள் மூலம் பெறப்பட்ட ஒப்புகைச் சீட்டுகளை 100% சரிபார்க்க வேண்டும் என்று பலதரப்புகளில் இருந்தும் தொடுக்கப்பட்ட வழக்குகளை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மீண்டும் வாக்குச் சீட்டுக்கு மாற வேண்டும் என்று கோரிய மனுவும் இத்துடன் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. எனினும் விவிபேட் இயந்திரங்களும் சீல் செய்யப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வேட்பாளர்கள் விரும்பும்பட்சத்தில், வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு வாக்குப் பதிவு இயந்திரங்களில் உள்ள மைக்ரோ கண்ட்ரோலர் புரோகிராம்களை பொறியாளர் குழுவால் பரிசோதிப்பதற்கு வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.   நீதிபதிகள் சொன்னது என்ன? இந்த வழக்கில் மூன்று கோரிக்கைகள் இருந்தன: காகித ஓட்டுமுறைக்கே திரும்புதல் 100% விவிபேட் ஒப்புகைச் சீட்டுகளை சரிபார்த்தல் ஒப்புகைச் சீட்டுகளை வாக்காளர்களிடம் கொடுத்து அதை மீண்டும் வாக்குப்பெட்டியில் போடச்செய்தல் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சஞ்ஜீவ் கன்னா மற்றும் திபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த அத்தனை மனுக்களையும் தள்ளுபடி செய்வதாகத் தீர்ப்பளித்திருக்கிறது. நடைமுறையில் இருக்கும் செயல்பாடு, தொழில்நுட்ப விஷயங்கள், தரவுகள் ஆகியவற்றைக் கலந்தாலோசித்த பிறகு இந்த முடிவை எட்டியிருப்பதாக நீதிபதி கன்னா கூறினார். இந்த வழக்கில் இரண்டு தீர்ப்புகள் உள்ளன, ஆனால் இரண்டும் ஒன்றோடொன்று ஒத்துப்போகின்றன என்றார் நீதிபதி கன்னா. தீர்ப்பளித்துப் பேசிய நீதிபதி கன்னா, வாக்கு இயந்திரங்களில் வேட்பாளர்களின் சின்னத்தைப் பதிவேற்றியவுடன் அந்தக் கருவியை சீல் செய்து வைத்து, 45 நாட்கள் வரை அவற்றைப் பாதுகாத்து வைத்திருக்கவும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். மேலும், வாக்குப்பதிவு இயந்திரங்களின் மைக்ரோகன்ட்ரோலர்களில் பதிவான 'மெமரியை' தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டபின், 2 மற்றும் 3-ஆம் எண்களில் உள்ள வேட்பாளர்களின் கோரிக்கைக்கிணங்க ஒரு பொறியாளர் குழு சரிபார்க்கலாம் என்றும் கூறினர். இந்தக் கோரிக்கை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு 7 நாட்களுக்குள் செயப்படவேண்டும். இந்தச் சரிபார்ப்புக்கான செலவீனத்தை கோரிக்கை விடுக்கும் வேட்பாளர் ஏற்க வேண்டும். ஒருவேளை வாக்குப்பதிவு இயந்திரம் பழுதடைந்திருந்தால், அந்தத் தொகை திருப்பித்தரப்படும், என்றார் நீதிபதி கன்னா. மேலும், "ஒரு அமைப்பின்மீது கண்மூடித்தனமாக அவநம்பிக்கை கொள்வது அடிப்படையற்ற சந்தேகங்க்களுக்கு இட்டுச்செல்லும்," என்றார் நீதிபதி தத்தா. பட மூலாதாரம்,GETTY IMAGES விவிபேட் இயந்திரம் எப்படி வேலை செய்கிறது? மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளரின் பெயருக்கு அருகே உள்ள பட்டனை வாக்காளர் அழுத்துகிறார். அவர் அழுத்தும் அதேநேரத்தில், வேட்பாளரின் பெயர், எண் மற்றும் சின்னம் அடங்கிய ஒப்புகைச் சீட்டு விவிபேட் இயந்திரத்தில் வாக்காளர்களுக்கு 7 வினாடிகள் தெரியும். அதன் பிறகு, சீட்டு தானாகவே துண்டிக்கப்பட்டு, ஒரு ‘பீப்’ ஒலியுடன் சீல் செய்யப்பட்ட பெட்டியில் சேகரிக்கப்படும். வாக்குப்பதிவின் போது ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டால், அது குறித்தும் தெரிவிக்கப்படும். நீங்கள் தீர்மானித்தபடி வாக்களித்தீர்களா என்பதைச் சரிபார்க்க வாக்காளருக்கு வாய்ப்பு கிடைக்கும். விவிபேட் இயந்திரம் ஒரு கண்ணாடி பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும். வாக்களித்த வாக்காளர் மட்டுமே சீட்டில் உள்ள விவரங்களைப் பார்க்க முடியும். விவிபேட் இயந்திரங்களைத் திறக்க தேர்தல் அதிகாரிகளுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. வாக்காளர்கள் விவிபேட் இயந்திரங்களை திறக்கவோ. அவற்றைத் தொடவோ முடியாது. ஒரு விவிபேட் இயந்திரத்தில் உள்ள ஒரு காகித ரோலில் 1,500 ஒப்புகைச் சீட்டுகளை அச்சிட முடியும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மீதான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள விவிபேட் ஒப்புகளைச் சீட்டுகள் சோதனை செய்யப்பட்டன. பட மூலாதாரம்,GETTY IMAGES EVM-இல் வாக்குகள் எப்படி எண்ணப்படுகின்றன? முதலில், தேர்தல் அதிகாரி மற்றும் அவருடன் பணிபுரியும் அதிகாரிகள் வாக்களிப்பின் ரகசியம் காக்க உறுதிமொழி எடுத்துக்கொள்கிறார்கள். அதன்பிறகு அனைத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முன்னிலையில் சரிபார்க்கப்படுகின்றன. இது நடக்கும்போது, அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் தங்கள் வாக்கு எண்ணும் முகவர்களுடன் வாக்கு எண்ணும் நிலையங்களில் இருக்க உரிமை உண்டு. இந்த முகவர்கள் வாக்கு எண்ணிக்கையை பார்க்கலாம். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன. அதன் பிறகுதான் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும். வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் குறிப்பிட்ட வரிசையில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை இயக்குவதன் மூலம் எண்ணப்படுகின்றன. அதன்பிறகு, பல்வேறு வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் எண்ணப்படுகின்றன. பின்னர் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான எண்கள் கூட்டப்படும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES விவிபேட் ஒப்புகைச் சீட்டுகள் சரிபார்ப்பு கடந்த 2019-ஆம் ஆண்டில், தேர்தல் ஆணையத்தின் கூற்றுப்படி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் எண்ணிக்கை முடிந்ததும், அவற்றின் மொத்த எண்ணிக்கை விவிபேட் ஒப்புகைச் சீட்டுகளுடன் சரிபார்க்கப்பட்டது. ஒவ்வொரு வாக்கு எண்ணும் கூடத்துக்கும் தனி விவிபேட் சாவடி உள்ளது. எண்ணிக்கையில் ஏதேனும் தவறு இருந்தாலோ, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டாலோ அதுபற்றி உடனடியாக தேர்தல் ஆணையத்துக்குத் தெரிவிக்க வேண்டியது தேர்தல் நடத்தும் அதிகாரியின் பொறுப்பு. இந்த அறிவிப்பு கிடைத்ததும், அந்த இடத்தில் வாக்கு எண்ணிக்கையைத் தொடரவோ, வாக்கு எண்ணிக்கையை ரத்து செய்யவோ அல்லது மறு வாக்குப்பதிவு நடத்தவோ தேர்தல் ஆணையம் உத்தரவிடலாம். வாக்கு எண்ணிக்கை பிரச்னையின்றி முடிந்து, தேர்தல் ஆணையத்தால் பிற உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படாவிட்டால், தேர்தல் நடத்தும் அலுவலர் முடிவை அறிவிக்கலாம். 2019-ஆம் ஆண்டு தேர்தலில் கூடுதல் இயந்திரங்கள் உட்பட 39.6 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் 17.4 லட்சம் விவிபேட் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. தேர்தல் ஆணையம் இந்த ஆண்டு சுவிதா என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது, அதில் வாக்குச்சாவடி முடிவுகளைப் பார்க்கலாம்.   பட மூலாதாரம்,ANI வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த சர்ச்சைகள் கடந்த 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, பல எதிர்க்கட்சிகள் வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு முன்பு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பு குறித்து கேள்வியெழுப்பின. விவிபேட் ஒப்புகைச் சீட்டுகளை 100% சரிபார்க்குமாறு எதிர்க்கட்சிகள் முதலில் உச்ச நீதிமன்றத்திடமும், பின்னர் தேர்தல் ஆணையத்திடமும் கேட்டிருந்தன. ஆனால் நீதிமன்றமும், தேர்தல் ஆணையமும் இந்தக் கோரிக்கையை நிராகரித்தன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பின்றி கொண்டு செல்லப்படுவதாக சில எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியிருந்தன. ஆனால் இந்தக் குற்றச்சாட்டை தேர்தல் ஆணையம் நிராகரித்து அதில் உண்மை இல்லை என்று கூறியிருந்தது. படக்குறிப்பு,முன்னாள் தேர்தல் ஆணையர் எஸ். ஒய். குரேஷி முன்னாள் தேர்தல் ஆணையர் கூறுவது என்ன? முன்னாள் தேர்தல் ஆணையர் எஸ். ஒய். குரேஷி இதுகுறித்து பிபிசி-க்கு அளித்த பேட்டியில், தேர்தலில் பொதுமக்களின் நம்பிக்கையை நிலைநிறுத்த அனைத்து வாக்குச்சாவடிகளிலும் விவிபேட் வசதி மற்றும் ஒப்புகைச் சீட்டுகளை எண்ணுதல் ஆகிய இரண்டு கோரிக்கைகளும் ஏற்கப்பட வேண்டும், என்றார். “ஓரிடத்தில் அதிக எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெற்ற முதல் இரண்டு வேட்பாளர்கள் வாக்குச் சாவடியில் மறு வாக்கு எண்ணிக்கை கோரினால், அதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும், இது முழுமையான மறு வாக்கு எண்ணிக்கைக்கான விருப்பத்தை வழங்கும்,” என்றார். தொழில்நுட்ப வல்லுநர்களும் குரேஷியின் இதே கருத்தைத் தெரிவிக்கின்றனர். வாக்குப்பதிவு இயந்திரம் பாதுகாப்பாக உள்ளதா என்பதைச் சரிபார்க்க விவிபேட் ஒரு தீர்வு என்று அவர்கள் கூறுகின்றனர். பிபிசி மராத்தியிடம் பேசிய புனேவைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர் மாதவ் தேஷ்பாண்டே, விவிபேட் இயந்திரத்தால் வாக்கு இயந்திரத்தின் கன்ட்ரோல் யூனிட்டுக்கு ஒரு செய்தியை அனுப்ப முடியும் என்றார். அதன்மூலம் அது ஒரு தனி ரசீதை அச்சிட முடிந்தால், அது பாதுகாப்பானதாகக் கருதப்படும், என்றார். “வாக்குப்பதிவுக்குப் பிறகும் விவிபேட் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரத்தின் கன்ட்ரோல் யூனிட் ஆகியவை ஒன்றோடொன்று இணைக்கப்பட்டு சரிபார்க்கப்பட வேண்டும்,” என்று அவர் கூறினார். https://www.bbc.com/tamil/articles/cxwvx23k0pxo
    • O/L பரீட்சையின் மீள் திருத்த பெறுபேறுகள் தொடர்பில் கல்வி அமைச்சரின் அறிவிப்பு கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சையின் மீள் திருத்த பெறுபேறுகள் விரைவில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார். பாரா ளுமன்றத்தில் இன்று கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்தார். இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சை மே மாதம் இரண்டாவது வாரத்தில் தொடங்கவுள்ளது. இந்த நிலையில் இதற்கு முன்னதாக கடந்த பரீட்சைக்கான அனைத்து மீள் திருத்த பெறுபேறுகளும் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளதாக கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். https://thinakkural.lk/article/300298
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.