Jump to content

ஐரோப்பா கண்டத்தில் நிலவும் கடுங்குளிரால் 20க்கும் மேற்பட்டோர் பலி


Recommended Posts

ஐரோப்பா கண்டத்தில் நிலவும் கடுங்குளிரால் 20க்கும் மேற்பட்டோர் பலி

 

ஐரோப்பா கண்டம் முழுவதும் நிலவுகின்ற கடுமையான குளிரால் கடந்த இரண்டு நாட்களில் இருபதுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக ஐரோப்பிய நாடுகளின் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

 
  ஐரோப்பா கண்டம் முழுவதும் கடுங்குளிர்

உயிரிழந்தவர்களில் பலர் அகதிகள் மற்றும் வசிப்பிடம் இல்லாதவர்கள்.

வெள்ளிக்கிழமையன்று, ரஷியாவின் சில பகுதிகளில் 120 ஆண்டுகளில் இல்லாத மிக குளிரான பழம் பெரும் கிறித்துமஸ் நாளை மக்கள் கொண்டாடினர்.

மாஸ்கோவில் இரவு நேரங்களில் வெப்பநிலை மைனஸ் முப்பது டிகிரி செல்ஷியஸாக குறைந்துள்ளது.

போலாந்தின் வெப்பநிலை மைனஸ் பதிநான்காக குறைந்ததையடுத்து அங்கு 10 பேர் உயிரிழந்தனர்.

இத்தாலியில் தென் கிழக்கு மற்றும் மத்திய பிராந்தியங்களில் சூழப்பட்டுள்ள கடுமையான பனிப்போர்வையால் 7 பேர் பலியாகியுள்ளனர்.

இதுவரை மிக குளிரான குளிர்கால இரவை சந்தித்துள்ள செக் தலைநகர் ப்ராக்கில், மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

http://www.bbc.com/tamil/global-38546286?ocid=socialflow_facebook

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று..... இங்கு, -14 பாகை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, தமிழ் சிறி said:

நேற்று..... இங்கு, -14 பாகை.

-14 எல்லாம் ஒரு குளிரா ?
எமக்கு -20 எல்லாம் சாதாரணம் 
மாசி மதம் முடியத்தான் உங்கள் செல்ஷியஸில் எமக்கு ஸிரோவிட்கு 
மேலே வரும். 

என்ன இது சாதாரணம் என்பதால் எம்மிடம் அதட்கான முன் ஏற்பாடுகளும் 
கைவசம் இருக்கும். உங்களிடம் குளிருக்கு உகந்த ஜாக்க்கெட் கூட இருக்காது 
என்று நினைக்கிறேன்.

லண்டனில் கழிவு தண்ணீர் வெளியாகத்தானே போகிறது 
முதல் முதலில் பார்த்த போது எனக்கு வியப்பாக இருந்தது.
இங்கு என்றால் ஐஸ் ஆகி நின்றுவிடும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, Maruthankerny said:

-14 எல்லாம் ஒரு குளிரா ?
எமக்கு -20 எல்லாம் சாதாரணம் 
மாசி மதம் முடியத்தான் உங்கள் செல்ஷியஸில் எமக்கு ஸிரோவிட்கு 
மேலே வரும். 

என்ன இது சாதாரணம் என்பதால் எம்மிடம் அதட்கான முன் ஏற்பாடுகளும் 
கைவசம் இருக்கும். உங்களிடம் குளிருக்கு உகந்த ஜாக்க்கெட் கூட இருக்காது 
என்று நினைக்கிறேன்.

லண்டனில் கழிவு தண்ணீர் வெளியாகத்தானே போகிறது 
முதல் முதலில் பார்த்த போது எனக்கு வியப்பாக இருந்தது.
இங்கு என்றால் ஐஸ் ஆகி நின்றுவிடும். 

-14 பாகை அளவில்.... குளிர் காலத்துக்கு இரண்டு மூன்று முறை தான் இங்கு வரும். 
அதுகும்... மாசி மாதத்தில் மட்டுமே வருவது, இம்முறை தை  மாதத்தில், வந்து விட்டது.
சென்ற 5 வருடங்களை விட... இந்த முறை குளிரும், பனிப் பொழிவும் இங்கு  அதிகமாக உள்ளது.   
இங்கு..... குளிருக்கு, தண்ணீர் அடைப்பதை கேள்விப் படவில்லை.
சிலவேளைகளில் குளிர் அதிகமாக இருக்கும் போது, வீதியில் உள்ள  கழிவு வாய்க்கால் நீர் ஓடும் குழாய்களில் இருந்து,   நீர் ஆவியாக மேலே செல்வதை காணக்  கூடியதாக இருப்பதை பார்த்தால், அந்த வாய்க்கால்கள், உறைநிலைக்கு மேற்படட வெப்பத்தில்... இருக்கலாம் என நினைக்கின்றேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாடா போட்டு தாக்குது குளிர்.அடுத்த வின்ரருக்காவது ஊருக்கு போற பாக்கியம் கிடைக்கும் என்று நம்புறன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐரோப்பா முழுவதும் கடுமையான குளிர் நிலவுவது உண்மையே, அதுக்காக அநியாயத்துக்கும் அதைப் பெரிசாக்கக்கூடாது.

கடந்த பத்து வருடத்துக்கு முன்பு நான் வாழும் தேசத்தின் தலைநகரிலிருந்து கிட்டத்தட்ட ஆயிரத்து இருநூறு கிலோமீட்டர்கள் பூமி உருண்டையின் மேல் பாகத்தில் (ஆர்டிக்வட்டகை) ஆறு வருடங்கள் வாழ்ந்திருக்கிறேன் அங்கு குளிர் மைனஸ் 42 பாகை செல்சியஸையும் தொட்டிருக்கு. ஆனால் வீடுகள் எல்லாம் பக்காவாகத் திட்டமிட்டுக்கட்டியவை பெரிசாக்குளிரை உணரமுடியாது. வெளியில்போனால்தான் பிரச்சனை ஆனால் போயாகவேண்டும். இல்லையேல் பிழைப்புக்கு என்ன வழி. இப்போ இரண்டு நாதளுக்குமுன்பு தலைநகரில் மைனஸ் இருபதைத் தொட்டது தொடர்ந்து வேலை. வயசாகிப்போட்டுது கஸ்டம்தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Maruthankerny said:


இங்கு என்றால் ஐஸ் ஆகி நின்றுவிடும். 

 
 
 

கவனம் மருதர்...

சரியான குளிரான இடத்தில இருக்கிறியள்.

என்ன அவசரம் எண்டாலும் வெளியால நம்பர் ஒன்னு அடிக்க எண்டு காரில் இருந்து இறங்கிடாதீங்கோ.

சர்... எண்டு போகேக்கையே... ஐஸாக போயிடும்.... பிறகு.... உடைச்சுத்தான்.... விடணும்...

உந்த  -14 பாகைல விஷயம் தெரியாம தமிழ் சிறியர் சரியான பிரச்சனைப் பட்டுப் போனார் எண்டால் பாருங்கோவன். :grin: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 8.1.2017 at 2:01 PM, Maruthankerny said:

-14 எல்லாம் ஒரு குளிரா ?
எமக்கு -20 எல்லாம் சாதாரணம் 
மாசி மதம் முடியத்தான் உங்கள் செல்ஷியஸில் எமக்கு ஸிரோவிட்கு 
மேலே வரும். 

என்ன இது சாதாரணம் என்பதால் எம்மிடம் அதட்கான முன் ஏற்பாடுகளும் 
கைவசம் இருக்கும். உங்களிடம் குளிருக்கு உகந்த ஜாக்க்கெட் கூட இருக்காது 
என்று நினைக்கிறேன்.

லண்டனில் கழிவு தண்ணீர் வெளியாகத்தானே போகிறது 
முதல் முதலில் பார்த்த போது எனக்கு வியப்பாக இருந்தது.
இங்கு என்றால் ஐஸ் ஆகி நின்றுவிடும். 

கனடாவிலையும் கழிவுதண்ணி இறுகிறேல்லையாம்.....
அமெரிக்கா உலகத்துக்கு பெரிசாய் தெரிஞ்சாலும் ஒருசில ரெக்னிக்கிலை இன்னும் பின்னுக்குத்தான் நிக்குதெண்டு ஜேர்மன்காரர் சொல்லுவினம். :)

On 8.1.2017 at 2:26 PM, தமிழ் சிறி said:


இங்கு..... குளிருக்கு, தண்ணீர் அடைப்பதை கேள்விப் படவில்லை.
சிலவேளைகளில் குளிர் அதிகமாக இருக்கும் போது, வீதியில் உள்ள  கழிவு வாய்க்கால் நீர் ஓடும் குழாய்களில் இருந்து,   நீர் ஆவியாக மேலே செல்வதை காணக்  கூடியதாக இருப்பதை பார்த்தால், அந்த வாய்க்கால்கள், உறைநிலைக்கு மேற்படட வெப்பத்தில்... இருக்கலாம் என நினைக்கின்றேன். 

சிறித்தம்பி! தண்ணி பைப்புகள் இறுகிற விளையாட்டெல்லாம் இஞ்சை 40,50 வருசத்துக்கு முதல் நடந்திருக்குதாம். இப்ப கொஞ்சம் கொஞ்சமாய் முன்னேறிட்டாங்கள்......அதை விட கனடா அமெரிக்கா குளிரோடை எங்களை ஒப்பிட்டு பாக்கவும் ஏலாது எண்டு நினைக்கிறன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

கனடாவிலையும் கழிவுதண்ணி இறுகிறேல்லையாம்.....
அமெரிக்கா உலகத்துக்கு பெரிசாய் தெரிஞ்சாலும் ஒருசில ரெக்னிக்கிலை இன்னும் பின்னுக்குத்தான் நிக்குதெண்டு ஜேர்மன்காரர் சொல்லுவினம். :)

சிறித்தம்பி! தண்ணி பைப்புகள் இறுகிற விளையாட்டெல்லாம் இஞ்சை 40,50 வருசத்துக்கு முதல் நடந்திருக்குதாம். இப்ப கொஞ்சம் கொஞ்சமாய் முன்னேறிட்டாங்கள்......அதை விட கனடா அமெரிக்கா குளிரோடை எங்களை ஒப்பிட்டு பாக்கவும் ஏலாது எண்டு நினைக்கிறன்.

கழிவு தண்ணி இங்கேயும் இறுகுவதில்லை 
காரணம் நிலத்திற்கு கீளால்தான் பைப்புகள் செல்கினறன 

லண்டனில் சமையலறையில் நீங்கள் கழுவினால் 
வெளியில் தண்ணீர் வருவதை காணலாம் 

அப்படி கனடா அமெரிக்காவில் இருந்தால் ஐஸ்தான் இருக்கும். 
அமெரிக்காவிலும் மேலேதான் குளிர் .... கீழ் பகுதி 
புளோரிட்டா பகுதிகள் எப்போதும் சமர் போலத்தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பின்லாந்தில், வீடுகளுக்கான வெப்பமூட்டிகளுக்கு நிலத்துக்கடியில் பலமீற்றர் தூரம் துளையுட்டு அத்துளையினூடே தண்ணீரை அனுப்பி அதை சூடான தண்ணீராகத் திரும்பப்பெறுவதானல் குறந்த செலவிலான வெப்பத்தைப் பெறக்கூடியதாக இருக்கின்றது ஆனால் இம்முறை அனைத்து வீடுகளுக்கும் இல்லை, தவிர நிலத்தடிக்கழிவுவாய்கால் ஓரளவு ஆழமான பகுதிகளில் தாள்க்கப்பட்டிருப்பதால் பூமியினது வெப்பம் அங்கு அதிகமானதால் கழிவுநீர் உறைவதில்லை, சில இடங்களில் பராமரிப்புக்கான இறங்குகுழாய்கள் சரிவரப்பராரிக்கப்படாமையாலும், பெரிய மரங்களது வேர்கள் நீரைத்தேடி கழிவுநீர்க்குழாயைநோக்கி வருவதால் ஏற்படும் அடைப்புகளும் ஏற்பட வாய்ப்பிருக்கு. தவிர நாட்டின் மேற்பகுதியில் நிலத்தின் மேல்மட்டத்தில் காணப்படும் கழிவுநீர்க்குழாய்களுக்குள் முன்சாரம்மூலம் ஓரளவு வெப்பத்தை உண்டுபண்ணக்கூடிய மிந்தடைகளை நிர்மானிப்பதன்மூலம் நீர் உறைவதைத் தடுக்கிறார்கள்.

இவைபற்றி ஓரளவு எனக்குத் தெரியக்காரணம் இத்துறையில் நான் சில காலம் வேலை பார்த்திரிக்கிறேன், 

அதுக்காக இந்தியாவில் மனிதக்கழிவு வாய்க்காலுக்குள் இறங்கி ஏறுவதுபோல் கற்பனை செய்யவேண்டாம். 

Link to comment
Share on other sites

ஐரோப்பா மற்றும் ஐக்கிய இராச்சியத்தில் கடும் குளிருக்கு அறுபது பேர் பலி

 

ஐரோப்பா மற்றும் ஐக்கிய இராச்சியத்தில் நிலவி வரும் கடுமையான பனிப் பொழிவினால் இதுவரை அறுபது பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களுள், வீடற்றோர் மற்றும் வயோதிபர்களின் எண்ணிக்கையே அதிகமாகக் காணப்படுகிறது.

4_Winter_Dead.jpg

இந்த நிலையையடுத்து வீடற்றோர் பாடசாலைகளில் ஆரம்பிக்கப்பட்டுள்ள தற்காலிக முகாம்களுக்குச் செல்லுமாறு கேட்கப்பட்டுள்ளனர்.

கடந்த வாரம் போலந்தில் மட்டும் இருபது பேர் பனிக்கு இரையாகியுள்ளனர். அங்கு நிலவிவரும் கடுமையான காலநிலையால் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.

மேலும் பனிக்காலத்தில் சுற்றுச்சூழல் மாசடைவதைத் தவிர்க்கும் முகமாக வோர்ஸோ நகரில் இலவச போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதனால் வாகனப் பயன்பாடு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சேர்பியாவில் வறிய நிலையில் வாழும் 88 வயதுத் தந்தையும் அவரது 66 வயது மகனும் கடும் குளிரினால் உயிரிழந்துள்ளனர். 

http://www.virakesari.lk/article/15346

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சென்ற வருடமும் இந்த வருடமும் வழமையாக சினோ  கொட்டும் இடங்களில் கொட்டாமால்   இடம் பெயர்ந்து கொட்டுகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையிலும் சீரற்ற காலநிலைதான் கடும் பனிக்காற்று பாடசாலை கூட காலை 8.30 மணிக்கு ஆரம்பிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது  திருவெம்பா போகலாம் என்று எழும்பினால்  உடம்பு தவில் அடிக்குது  இந்த குளிருக்கே இப்படியென்றால் உங்கள் நிலை   ஐயோ  எப்படித்தான் வாழ்கிறீர்கள்  tw_cold_sweat:

Link to comment
Share on other sites

உறைபனியில் அகதிகளின் அவலம்

கிரேக்கத்தில் வழக்கத்தைவிட அதிகமான திடீர் குளிர் ஏற்பட்டுள்ளது.

அதனால், ஆயிரக்கணக்கான அகதிகள் இருபது டிகிரி ஷெல்ஷியஸுக்கும் குறைவான கடுங்குளிரில் நடுங்கிக்கொண்டிருக்கிறார்கள்.

அறுபதாயிரம் அகதிகள் முகாம்களில் தங்கியுள்ளனர்.

அவர்களில் பத்தாயிரம் பேர் குளிர் தாங்க முடியாத கூடாரங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

 

பனி மிதக்கும் நதி

ஹங்கேரியின் பூடாபெஸ்டிலுள்ள டான்யூப் நதியில் உறைபனி மிதக்கிறது.

ஐரோப்பாவின் பல பகுதிகளில் நிலவும் கடுங்குளிரால் ஒட்டுமொத்த டான்யூப் நதியே உறைபனியாகத் தோன்றுகிறது.

ஹங்கேரி உள்ளிட்ட ஐரோப்பாவின் பல நாடுகள் உறைபனியால் போர்த்தப்பட்டு, உறைய வைக்கும் குளிரில் நடுங்கிக்கொண்டிருக்கின்றன

Link to comment
Share on other sites

லண்டனில் கடும் பனிப்பொழிவு - ஹீத்ரோ விமான நிலையத்தில் விமான சேவைகள் ரத்து

கடும் பனிப்பொழிவு காரணமாக லண்டன் நகரின் ஹீத்ரோ விமான நிலையத்தில் 12-க்கும் அதிகமான விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

 
 
லண்டனில் கடும் பனிப்பொழிவு - ஹீத்ரோ விமான நிலையத்தில் விமான சேவைகள் ரத்து
 
லண்டன்:

கடந்த சில தினங்களாக லண்டன் நகர் முழுவதும் கடுமையான பனிப் பொழிவு நிலவி வருகிறது. பனிப் பொழிவுடன் பலத்த காற்றும் வீசுகிறது.

இந்நிலையில், கடும் பனிப்பொழிவு காரணமாக லண்டன் நகரின் ஹீத்ரோ விமான நிலையத்தில் 12-க்கும் அதிகமான விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. சில சேவைகள் தாமதமாக ஆரம்பிக்கப்பட்டதாகவும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஜெனீவா, மான்செஸ்டர், பிளாங்பர்ட் ஆகிய நரங்களுக்கு செல்லும் முக்கிய விமானங்களில் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஐரோப்பாவில் மிகவும் பரபரப்பாக இயங்கும் விமான நிலையங்களில் ஒன்று ஹீத்ரோ விமான நிலையம். ஹீத்ரோ விமான நிலையத்தில் நேற்று திட்டமிடப்பட்ட 1,350 விமானங்களின் சேவைகளில் 80 சேவைகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக ரத்து செய்யப்பட்டது.

இது தொடர்பாக ஹீத்ரோ விமான நிலையம் தனது டுவிட்டர் பக்கத்தில், “மோசமான வானிலை காரணமாக விமான சேவைகளின் திட்டமிடலில் மாற்றங்கள் செய்யப்படலாம். பயணிகள் தங்களது பயண விவரங்களை முன் கூட்டியே அறிந்து கொள்ள வேண்டும்” என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
28986452-F96D-4389-9666-767B8BAC68D5_L_s

சனிக்கிழமை வரை இந்த பனிப் பொழிவு இருக்கும் என்று அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஹீத்ரோ விமான நிலையம் மட்டுமன்றி ஐரோப்பாவின் ஏனைய விமான நிலையங்களும் பனிப்பொழிவால் பாதிக்கப்பட்டுள்ளன. 

http://www.maalaimalar.com/News/TopNews/2017/01/12225931/1061859/Heathrow-Airport-cancels-flights-amid-snow-forecasts.vpf

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.