Jump to content

10 சிக்சர்களுடன் 41 பந்துகளில் 94 ரன்கள் விளாசல்: கோரி ஆண்டர்சன் சரவெடியில் நியூஸிலாந்து வெற்றி


Recommended Posts

10 சிக்சர்களுடன் 41 பந்துகளில் 94 ரன்கள் விளாசல்: கோரி ஆண்டர்சன் சரவெடியில் நியூஸிலாந்து வெற்றி

 

 
பந்தை சிக்சருக்கு தூக்கி அடிக்கும் கோரி ஆண்டர்சன். | படம். ஏ.எப்.பி.
பந்தை சிக்சருக்கு தூக்கி அடிக்கும் கோரி ஆண்டர்சன். | படம். ஏ.எப்.பி.

நியூஸிலாந்தின் மவுண்ட் மாங்கனுயில் நடைபெற்ற 3-வது, கடைசி டி20 போட்டியிலும் வங்கதேசத்தை வீழ்த்திய நியூஸிலாந்து ஒருநாள் தொடரை 3-0 என்று கைப்பற்றியது போலவே டி20 தொடரிலும் 3-0 என்று வெற்றி பெற்றது.

முதலில் பேட் செய்த நியூஸிலாந்து 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 194 ரன்களை எடுத்தது. கோரி ஆண்டர்சன் ஒருநாள் போட்டிகளில் 2014-ல் 36 பந்துகளில் சதம் அடித்தார், இன்று அதிவேகே டி20 சதத்திற்கான சாதனையையும் சொந்தமாக்கிக் கொண்டிருப்பார், ஆனால் 20 ஓவர்களுக்குள் அதைச் செய்ய முடியவில்லை. காரணம் 20-வது ஓவர் தொடங்கும் போது 79 ரன்களில் இருந்த ஆண்டர்சன் மேலும் 2 சிக்சர்களுடன் 15 ரன்களையே எடுக்க முடிந்தது.

இதனால் 41 பந்துகளில் 2 பவுண்டரிகள் 10 சிக்சர்களுடன் 94 ரன்கள் எடுத்து டி20 போட்டிகளில் அதிக சிக்சர்களுக்கான நியூஸிலாந்து சாதனை நிகழ்த்தினார் கோரி ஆண்டர்சன். முன்னதாக கேப்டன் கேன் வில்லியம்சன் 57 பந்துகளில் 6 பவுண்டரி 1 சிக்சருடன் 60 ரன்கள் எடுத்தார்.

195 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய வங்கதேசம் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 167 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. சவுமியா சர்க்கார் அதிகபட்சமாக 42 ரன்களையும் ஷாகிப் அல் ஹசன் 41 ரன்களையும் எடுத்தனர். இதன் மூலம் தோல்வி அடைந்து வங்கதேசம் டி20 தொடரிலும் முற்றொழிப்பு செய்யப்பட்டது.

டாஸ் வென்று வங்கதேசம் முதலில் நியூஸிலாந்தை பேட் செய்ய அழைத்ததில் தவறில்லை, காரணம் 6.1 ஓவர்களில் நியூஸிலாந்து 41/3 என்று திணறியது. முன்னதாக ரூபல் ஹுசைன், ஜேம்ஸ் நீஷம், அதிரடி மன்ரோ ஆகியோரை 5 பந்து இடைவெளியில் பெவிலியன் அனுப்பினார்.

வில்லியம்சன் ஷபிள் செய்து ஆடினார், மைதானத்தின் மேற்கூரைக்கு ஒரு சிக்சரையும் 14-வது ஓவரில் ஸ்கொயர்லெக்கில் பவுண்டரியும் அடிக்க 14-வது ஓவரில் ஸ்கோர் 100 ரன்களைக் கடந்தது. இங்கிருந்து ஆண்டர்சன் காட்டடி தர்பாரைத் தொடங்கினார். மஷ்ரபே மோர்டசா சிக்க 4 பந்துகளில் 17 ரன்கள். சவுமியா சர்க்கார் ஓவரில் அடுத்தடுத்து 3 சிக்சர்கள். இதில்தான் 27 பந்துகளில் அரைசதம் கடந்தார். இன்னொரு சிக்ஸர் மிகவும் வெறித்தனமான அடி, பந்து தாய்லாந்து உணவு ஸ்டாலில் போய் விழுந்தது. டஸ்கின் அகமதுவை தனது 9-வது சிக்சருக்காக தூக்கி அடித்த கோரி ஆண்டர்சன் அதிக சிக்சர்களுக்கான நியூஸிலாந்து சாதனையை நிகழ்த்தினார்.

அதாவது 2010-ல் ஆஸ்திரேலியாவை பிரெண்டன் மெக்கல்லம் புரட்டி எடுத்த போது 8 சிக்சர்களை அடித்ததே சாதனையாக இருந்தது. கடைசி பந்தையும் லாங் ஆனுக்கு சிக்சராக விரட்டி ஹீரோவாக நடந்து சென்றார் கோரி ஆண்டர்சன். கடைசி 6 ஓவர்களில் 90க்கும் அதிகமான ரன்களுடன் நியூஸி. 194 ரன்களுடன் முடித்தது.

வங்கதேசம் தரப்பில் ஷாகிப் அல் ஹசன் விக்கெட் எடுக்காவிட்டாலும் 4 ஓவர்களி 22 ரன்கள் என்று சிக்கனம் காட்டினார். ரூபெல் ஹுசைன் 31 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் எடுத்தார்.

தொடர்ந்து ஆடிய வங்கதேசம் தமிம் இக்பால் (14), சவுமியா சர்க்கார் (42) மூலம் 4.4 ஓவர்களில் 44 பிறகு 6 ஓவர்களில் 69/ என்று அருமையான தொடக்கத்தை வங்கதேசம் தொடர்ந்து இன்றும் வீணடித்தது. சவுமியா சர்க்கார், இஷ் சோதி பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்தார். சபீரை வில்லியம்சன் பவுல்டு செய்தார். மஹமுதுல்லாவுக்கு இஷ் சோதி வீசிய கூக்ளி அருமையானது. அதாவது ஆஃப் ஸ்டம்புக்கு வெளியேர் பிட்ச் ஆகி லெக் ஸ்டம்பைத் தாக்கியது.

ஷாகிப், நுருல் இணைந்து பவுண்டரிகள் சிலதை அடித்தாலும் வெற்றி பெறுவதற்கு அருகில் வங்கதேசம் வர முடியவில்லை. 167-ல் முடிந்தது. நியூசிலாந்து தரப்பில் இஷ் சோதி, டிரெண்ட் போல்ட் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். சாண்ட்னர், கேன் வில்லியம்சன் தலா 1 விக்கெட்டைக் கைப்பற்றினர்.

தொடரை 3-0 என்று இழந்து வங்கதேசம் நியூஸிலாந்து தொடரில் முற்றிலும் ஒழிக்கப்பட்ட அணியாக நாடு திரும்புகிறது. ஆட்ட நாயகன் கோரி ஆண்டர்சன்.

http://tamil.thehindu.com/sports/10-சிக்சர்களுடன்-41-பந்துகளில்-94-ரன்கள்-விளாசல்-கோரி-ஆண்டர்சன்-சரவெடியில்-நியூஸிலாந்து-வெற்றி/article9466541.ece?homepage=true

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதன் வீடியோ சுருக்கம் கிடைக்குமோ நவீனன்....! tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, suvy said:

அதன் வீடியோ சுருக்கம் கிடைக்குமோ நவீனன்....! tw_blush:

எனக்கும்

Link to comment
Share on other sites

36 minutes ago, suvy said:

அதன் வீடியோ சுருக்கம் கிடைக்குமோ நவீனன்....! tw_blush:

 

30 minutes ago, சுவைப்பிரியன் said:

எனக்கும்

 

எவ்வளவு நேரம் இந்த வீடியோ இருக்கும் என்று சொல்ல முடியாது..

https://www.tvnz.co.nz/one-news/sport/cricket/happened-corey-anderson-spinners-secure-series-clean-sweep-new-zealand

இந்த லிங்கில் போய் பாருங்கள் தாய்லாந்து சாப்பாடு கடையில் ஒரு சிக்ஸ் போய் விழுகுது...tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா.... பறவைகள் எல்லாம் சிறகு தப்பியது சிவபிரான் புண்ணியம் என்று பறக்குது....!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • பாஜகவோட கூட்டணிவைச்ச வாசனுக்கும் தினகரனுக்கும் மட்டும் அவர் கேட்ட சின்னத்தைக் கொடுத்தது என்ன மாதிரியான தேர்ததல் விதிமுறை?பாஜக இந்த முறை 3 வது இடம் பிடிக்கணும் அதுக்காககத்தான் இந்த குழறுபடிகள்.ஆனால் அது நடக்காது. தேர்தலிலே நிற்காத கமலுக்கு டோர்ச்லைற் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.
    • இந்திய‌ அள‌வில் ஏவிம் மிசினுக்கு எதிர்ப்பு கூடுதே அண்ணா அது எத‌ற்காக‌.................ப‌ல‌ர் ஊட‌க‌ங்ளில் நேர‌டியா சொல்லுகின‌ம் ஏவிம் மிசினில் குள‌று ப‌டி செய்ய‌லாம் என்று ஏன் அவ‌ர்க‌ள் மீது தேர்த‌ல் ஆனைய‌ம் வ‌ழ‌க்கு போட‌ வில்லை................இப்ப‌டி கேட்க்க‌ ப‌ல‌ இருக்கு...............யாழிலே வ‌ய‌தில் மூத்த‌வ‌ர்க‌ள் எழுதி விட்டின‌ம் இந்தியாவில் தேர்த‌ல் என்ப‌து க‌ண்துடைப்பு நாட‌க‌ம் என்று அப்ப‌ புரிய‌ வில்லை இப்ப புரியுது...............இப்ப இருக்கும் தேர்த‌ல் ஆனைய‌ம் கிடையாது மோடியின் ஆனைய‌ம்..............ப‌ல‌ருக்கு ப‌ல‌ ச‌ந்தேக‌ம் வ‌ந்து விட்ட‌து த‌மிழ் நாட்டு தேர்த‌ல் ஆனைய‌ம் மேல்..........................
    • வைகோ தனது மகனை அரசியிலில் முன்னிறுத்துவதற்காக நீண்டகாலம் வைகோவிற்கு விசுவாசமாக இருந்த கணேசமூர்த்த்திக்கு  தேர்தலில் இடங் கொடுக்கவில்லை.. திமுக ஒரு இடம்தான் கொடுக்குமென்றால் அதிமுகவுடன் கூட்டணி அமைந்திருந்தால் அவர்கள் கட்டாயம் 2 இடம் கொடுத்திருப்பார்கள்.கூட்டணிமாறுவது வைகோவுக்கு புதிதில்லை.வைகோவைக் திமுகவில் இருந்து வெளியேற்றியதற்காக எத்தனையோ போர் தீக்குளித்தார்கள். வாரிசு அரசியலை எதிர்த்து கட்சி தொடங்கியவர் அதே வாரிசு அரசியலைக் கையில் எடுத்தது மட்டுமல்ல யாரை எதிர்த்து கட்சி தொடங்கினாரோ அவரின் காலடியில் கிடக்கிறார். கணேசகமூர்த்தியின் சாவுக்கு வைகோவே பொறுப்பு.
    • தமிழ் தேசியத்தை தனது கட்சியின் கொள்கையாக கொண்டுள்ள சீமான் பிள்ளைகளை தமிழ்வழி கல்வியில் சேர்க்காதது தவறான முன்னுதாரணம்.. படிப்பது தேவாரம் இடிப்பது சிவன் கோவில் என்று வாழும் திராவிடகட்சிகளுக்கும் தனக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பதை தனது சில அண்மைக்கால நடவடிக்கைகள் மூலம் சீமான் வெளிப்படித்தி வருகிறார்.. அவரை நம்பி பின்தொடரும் பல லட்சம் இளைஞர்கள் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக நாம் தமிழர் இருக்கும் என்று வந்தவர்கள்.. இலட்சிய பிடிப்புள்ளவர்கள்.. இப்படியான செயல்களை அவர்களை வெறுப்பேற்றும்.. நமக்கெதுக்கு வம்பு.. நம்மூர் அரசியலே நாறிக்கிடக்கு.. தமிழக உறவுகள் தம் அரசியலை பார்த்துக்கொள்வார்கள்..
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.