Jump to content

பன்னீருக்கு எதிராக தம்பிதுரை பனிப்போர்: சசிகலா குடும்பம் 'ஷாக்'


Recommended Posts

பன்னீருக்கு எதிராக தம்பிதுரை பனிப்போர்:
சசிகலா குடும்பம் 'ஷாக்'
 
 
 

அ.தி.மு.க.,வில், முதல்வர் பன்னீர்செல்வத்திற் கும், லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரைக் கும் இடையே பனிப்போர் நிகழ்வது, சசிகலா குடும்பத்தினர் மற்றும் நிர்வாகிகளிடம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

Tamil_News_large_168579020170107233134_318_219.jpg

ஜெயலலிதா இருந்தவரை, அவரை எதிர்க்கும் துணிவு இல்லாததால், அனைவரும் அடக்கி வாசித்தனர். அனைத்து நிர்வாகிகளும், உளவுத் துறையினரால் கண்காணிக்கப்பட்டனர்.
நிர்வாகிகளில் யார் தவறு செய்தாலும், தயவு தாட்சண்யம் பார்க்காமல், ஜெயலலிதா
நடவடிக்கை எடுத்து வந்தார். இதன் காரணமாக, நிர்வாகிகள் பயத்துடன், ஜெ., கூறும் பணிகளை மட்டும் செய்து வந்தனர்.

எனினும், கட்சிக்குள், ஜெ.,வுக்கு அடுத்த இடம் யாருக்கு என்பதில், மூத்த நிர்வாகிகளிடம் புகைச்சல் இருந்து வந்தது. ஜெயலலிதா, இரண்டு முறை, முதல்வர் பதவியை இழக்க
நேர்ந்தபோது, அதில் தன் விசுவாசியான பன்னீர் செல்வத்தை அமர செய்தார். அவர் மீண்டும் முதல்வரானபோது, பன்னீர்செல்வத்திற்கு அமைச்சரவையில், இரண்டாமிடம் கொடுத்தார்.

இரண்டாம் இடம்: இது, கட்சியில் சிலருக்கு

பிடிக்கவில்லை. குறிப்பாக, கொங்கு மண்டல நிர்வாகிகள், இரண்டாம் இடத்தை பிடிக்க, மறைமுக மாக முயற்சிகள் மேற்கொண்டனர். இதை உணர்ந்த, ஜெ., கட்சியின் கொள்கை பரப்பு செயலரான தம்பி துரையை, டில்லி அரசியலை கவனிக்க அனுப்பினார்.

மாநிலத்தில், பன்னீர்செல்வத்திற்கு முக்கியத்துவம் தந்தது போல், டில்லியில் தம்பிதுரைக்கு முக்கியத் துவம் கிடைக்கச் செய்தார். அவருக்கு, லோக்சபா துணை சபாநாயகர் பதவி கிடைக்கச் செய்தார். எனினும், பன்னீர்செல்வத்திற்கு முக்கியத்துவம் அளிப்பதும், அவரை முதல்வர் பதவியில் அமர வைத்ததும், தம்பிதுரைக்கு பிடிக்கவில்லை.

சட்டசபை தேர்தலுக்கு முன், பன்னீர்செல்வம் மீது, ஒரு தரப்பினர் திடீர் குற்றச்சாட்டுகள் சுமத்தினர். இதன் காரணமாக, அவர் மீது, ஜெ., அதிருப்தி அடைந்தார். அவரது ஆதரவாளர்களின் பதவியை பறித்தார். சட்டசபை தேர்தலில், பன்னீர் செல்வத் திற்கு, 'சீட்' கிடைக்குமா என்ற நிலை ஏற்பட்டது. எதிர்ப்பையும் மீறி, பன்னீர் செல்வத் திற்கு, ஜெ., சீட் வழங்கினார். ஆட்சி அமைத்ததும், அவரை நிதி அமைச்சராக்கினார். மீண்டும், பன்னீர்செல்வம் கை ஓங்கத் துவங்கியது.

ஜெ., மறைந்ததும், முதல்வர் பதவியை பெற, கொங்கு மண்டல நிர்வாகிகள் முயற்சித்தனர்.அதை முறியடித்து, மூன்றாவது முறையாக, பன்னீர்செல்வம் முதல்வரானார்.
 

செல்வாக்கு


அப்போது, சசிகலா பொதுச்செயலராக விரும்புவ தாக தெரிவிக்க, அதற்கு பன்னீர்செல்வம் சம்மதம் தெரிவித்தார். ஜெ.,விடம் செல்வாக்குடன்

 

இருந்ததுபோல், சசியிடமும் பன்னீர்செல்வம் செல்வாக்கு பெற்று விடக் கூடாது என, தம்பிதுரை உட்பட சிலர் காய் நகர்த்தினர். எனவே, முதல்வர் பதவியில் இருக்கும் பன்னீர்செல்வத்திற்கு, நெருக்கடி கொடுக்க வேண்டும் என்பதற்காக, சசிகலா முதல்வர் பதவியை ஏற்க வேண்டும் என, தம்பிதுரை, லோக்சபா துணை சபாநாயகருக்கான லெட்டர்பேடில், அறிக்கை வெளியிட்டார்.

இந்த அறிக்கை, பன்னீர்செல்வத்திற்கு நெருக்கடி தருவதற்கு பதிலாக, சசிகலாவிற்கு
நெருக்கடியை தந்து விட்டது.

முதல்வர் பதவியை, உடனடியாக ஏற்க விரும்பிய சசிகலாவிற்கு, தம்பிதுரை அறிக்கை, பின்ன டைவை ஏற்படுத்தி உள்ளது. இவர்கள் மோத லால், தங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதால், சசிகலா குடும்பத்தினர் அதிருப்தி அடைந்துள்ளனர்.

- நமது நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1685790

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நாங்கள் மேலைத்தேச நாடுகளில் மத்தியதர வர்க்கம் ஆனால் இலங்கை போன்ற 3ஆம் உலக நாடுகளுக்கு சென்றால் உயர்தட்டு வர்க்கம், அங்கே விடுமுறைகாலத்தில் அங்கேயுள்ள மக்களால் பெறமுடியாத பொருள், சேவைகளை பெற்றுகொள்ளலாம், மேலும் வெளிநாட்டில் இருந்துவிட்டு இந்த மாதிரி 3ஆம் உலக நாடுகளில் குடியேறும்போது எமது பணத்தின் மூலம் பொருள்கள், சேவைகளை அதிகமாக பெற்று வசதியாக வாழலாம், இந்த சொந்த அனுபவம் ஒட்டு மொத்த இலங்கை மக்களின் நாளாந்த வாழ்வு பிரதிபலிக்குமா என்பது தெரியவில்லை.
    • கடலை போட்டவரிடம் பால் கேட்டிருக்கலாமே! எருமைப் பாலாவது கிடைத்திருக்கும்😜
    • பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் 29 MAR, 2024 | 02:32 PM   இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளான இன்றைய தினம் (29) பெரிய வெள்ளியாக உலகெங்கும் அனுஷ்டிக்கப்படுகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் இன்று பெரிய வெள்ளியை முன்னிட்டு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் திருச்சிலுவை பாதை நிகழ்வுகள் பக்திபூர்வமாக நடைபெற்றன. மனுக்குலத்தின் விடியலுக்காகவும் உலக மாந்தர்களின் மீட்புக்காகவும் அன்று கல்வாரியில் துன்பங்களை அனுபவித்து சிலுவைச் சாவினை ஏற்றுக்கொண்ட இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளின் வெள்ளியான இன்று மட்டக்களப்பில் உள்ள பல தேவாலயங்களில் சிலுவைப் பாதை நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.    தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயம்  மட்டக்களப்பு தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன. இந்த சிலுவைப் பாதை ஊர்வலம் குருக்கள்மடம் தூய அசீசியார் ஆலயத்தில் இருந்து செட்டியாளயம், மாங்காடு, தேற்றாத்தீவு ஆகிய ஊர்களின் பிரதான வீதியூடாக தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தை வந்தடைந்தது. புனித யூதாததேயு திருத்தலத்தின் அருட்தந்தையின் தலைமையில் நடைபெற்ற இந்த சிலுவைப் பாதை நிகழ்வில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். புளியந்தீவு புனித மரியாள் பேராலயம்  மட்டக்களப்பு மாவட்டத்துக்கான பிரதான சிலுவைப்பாதை நிகழ்வு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தின் பங்குத்தந்தை அருட்பணி ஜே.நிக்ஸன் அடிகளார் தலைமையில் நடைபெற்றது.  இந்த சிலுவைப் பாதை புனித மரியாள் பேராலயத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு, மத்திய வீதி வழியாக சென்று, வைத்தியசாலை வீதியை அடைந்து, மீண்டும் பேராலயத்தை  அடைந்தது.  இந்த சிலுவைப்பாதையில் அதிகளவிலான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பக்திபூர்வமாக சிலுவை சுமந்து வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினத்தை நினைவுகூரும் உயிர்த்த ஞாயிறு தேவாராதனை ஞாயிற்றுக்கிழமை (31) இடம்பெறவுள்ளது.  https://www.virakesari.lk/article/179968
    • அபிவிருத்தி லொத்தர் சபை அதன் 40 வருட வரலாற்றில் 2023 இல் அதிகூடிய இலாபத்தை பதிவு செய்துள்ளது. இதன்படி, அபிவிருத்தி லொத்தர் சபையானது 2022-2023 ஆம் ஆண்டில் 32% இலாபமீட்டி புதிய சாதனையை படைத்துள்ளது, இது 2022 இல் பெற்ற இலாபத்தின் இருமடங்காகும். இதன்டபடி, ஜனாதிபதி நிதியத்திற்கு அபிவிருத்தி லொத்தர் சபையினால் வழங்கப்பட்ட பங்களிப்பு கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது 13 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 3,622,506,725 ரூபா 03 பில்லியன் இலக்கை கடந்துள்ளது. அதே சமயம், அரசாங்கத்திற்கான பங்களிப்பை 6% உயர்த்தி 5,193,833,721 ரூபாவினை வழங்கியுள்ளது. அவிருத்தி லொத்தர் சபையின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அஜித் குணரத்ன நாரங்கல இது குறித்து கருத்து தெரிவிக்கையில், சவாலான காலப்பகுதியில் நாட்டின் பொருளாதாரத்தின் எதிர்மறையான விளைவுகளை குறைக்க அபிவிருத்தி லொத்தர் சபை கையாண்ட உத்திகளால் மிகக் குறுகிய காலத்தில் வருமான அதிகரிக்க வழி செய்துள்ளது. வழமையான லொத்தர் சீட்டுகள் மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விசேட சீட்டுகளுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையை அதிகரிக்க அபிவிருத்தி லொத்தர் சபை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்நாட்டு பயனாளிகளுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக லொத்தர் சீட்டுகளை அறிமுகப்படுத்தும் நடவடிக்கையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தலைவர் தெரிவித்தார். அபிவிருத்தி லொத்தர் சபையின் வருமானத்தில் 50% இந்த நாட்டில் கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக ஒதுக்கப்படுவதாகவும் அவர் அவர் மேலும் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/297543
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.