Jump to content

"திக்திக்"


Recommended Posts

gallerye_235523362_1685945.jpg

அ.தி.மு.க., பொதுச் செயலராக நியமிக்கப் பட்டுள்ள சசிகலாவிற்கு, தலைக்கு மேல் தொங்கும் கத்தியாக, சொத்து குவிப்பு வழக்கு உள்ளது. இவ்வழக்கின் தீர்ப்பு, தமிழக அரசியலில், அதிரடி மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதால், முதல்வர் பதவியேற்பை தள்ளிப் போட்டு, 'திக் திக்' மனநிலையில், சசிகலா தரப்பினர் காத்திருக்கின்றனர்.

 

Tamil_News_large_1685945_318_219.jpg

அதேபோல, ஜெயலலிதாவின் வாரிசாக உரு வெடுக்க தயாராக இருக்கும், அவரது மருமகள் தீபாவும், சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்புக்கு பின், களம், 'கிளியர்' ஆகும் என்பதால், பொறுத்திருக்கிறார்.

வருமானத்திற்கு அதிகமாக, 66 கோடி ரூபாய் அளவுக்கு, சொத்துக்கள் சேர்த்ததாக, ஜெ., மீது
கூட்டு சதி மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்தில், 1996ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. கூட்டு சதி மற்றும் சொத்து சேர்ப்புக்கு, உடந்தையாக இருந்ததாக, சசிகலா, இளவரசி, சுதாகரன்

ஆகியோர் மீதும், வழக்கு பதிவு செய்யப்பட்டது.
 

4 ஆண்டு சிறை


இந்த வழக்கை விசாரித்த, பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா, 2014 செப்டம்பரில், தீர்ப்பு வழங்கினார். ஜெ.,வுக்கு நான்கு ஆண்டு கள் சிறை, 100 கோடி ரூபாய் அபராதம்; சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு, நான்கு ஆண்டுகள் சிறை, தலா, 10 கோடி ரூபாய்அபராதம் விதிக்கப்பட்டது.

இதை எதிர்த்து, நான்கு பேரும், கர்நாடகா உயர் நீதிமன்றத்தில், மேல் முறையீடு செய்தனர். மேல் முறையீட்டு மனுவை விசாரித்த, நீதிபதி குமாரசாமி, நான்கு பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார்.இதை எதிர்த்து, கர்நாடக அரசு, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இம்மனுவை, நீதிபதிகள் பி.சி.கோஷ், அமித்வ ராய் ஆகியோர் விசாரித்தனர். அனைத்து தரப்பு விசாரணையும் முடிந்து, தேதி குறிப்பிடாமல், 2016 ஜூன் மாதம், தீர்ப்பை ஒத்திவைத்தனர்.

இந்நிலையில், டிச., 5ல், ஜெயலலிதா திடீர் மரணம் அடைந்தார். அதைத் தொடர்ந்து, அ.தி.மு.க.,வின் புதிய பொதுச்செயலராக, அவரது தோழி சசிகலா பொறுப்பேற்றுள்ளார்; முதல்வராகவும் முடிவு செய்துள்ளார். அதற்கு, சொத்து குவிப்பு வழக்குஇடையூறாக உள்ளது.

 

இதில், எந்த நேரத்திலும் தீர்ப்பு வெளியாகலாம் என்ற நிலை காணப்படுகிறது.

எனவே, முதல்வர் பதவியேற்பை தள்ளிப் போட்டு, தற்போது தீர்ப்புக்காக, சசிகலாவும், அவரது குடும்பத்தினரும் காத்து இருக்கின்றனர்.
 

ஆதரவு அதிகரிப்பு


இந்நிலையில், ஜெயலலிதாவின் மருமகள் தீபாவுக்கு, அ.தி.மு.க., வினரிடம் நாளுக்கு நாள் ஆதரவு அதிகரித்து வருகிறது. சென்னை, தி.நகரில் உள்ள அவரது வீட்டுக்கு, ஆதரவாளர் கள் தினமும் வந்த வண்ணம் உள்ளனர். அவர்களின் அழைப்பை ஏற்று, அரசியலுக்கு வர முடிவு செய்துள்ள தீபாவும், சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்புக்காக காத்திருக் கிறார். அந்த முடிவு, சசிகலாவுக்கு எதிராக வந்தால், அவரை ஆதரிக்கும் முன்னணி தலைவர்கள் பலர் அணி மாறக்கூடும் என்பதால், அரசியல் பிரவேசத்தை தள்ளிப்போட்டு, தீர்ப்புக்காக காத்திருப்பதாக தெரிகிறது.

அத்துடன், சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு, தமிழக அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தும் என்பதால், தி.மு.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் ஆவலோடு காத்திருக்கின்றன.

- நமது நிருபர் -

திக்

http://www.dinamalar.com/news_detail.asp?id=1685945

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.