Jump to content

"தீபா ஆதரவு அணி" : சென்னைக்கு முதல் இடம் !


Recommended Posts

"தீபா ஆதரவு அணி" : சென்னைக்கு முதல் இடம் !

தீபா

மிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், அவர் வகித்து வந்த முதல்வர் பதவி ஓ.பி.எஸ் கைக்குப் போனது நிரந்தரப் பொதுச் செயலாளர் பதவி,  பொதுச் செயலாளர் பதவியாகச் சுருங்கி சசிகலா கைக்குப் போனது. அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா  இருந்தபோது, அவரைப் பார்க்க பலமுறை முயன்று வாசலிலேயே தடுக்கப்பட்டவர் தீபா.  உள்ளே போனவர்களும் ஜெயலலிதாவைப் பார்க்க அனுமதிக்கப் படவில்லை என்பது வேறு. 

ஜெயலலிதாவின் உடன்பிறந்த சகோதரர் ஜெயராமனின் மகளான தீபாவுக்கு  அப்போலோவில் மட்டுமல்ல, ஜெயலலிதாவின் உடல் வைக்கப்பட்டிருந்த ராஜாஜி ஹாலிலும் நுழைய அனுமதி கிடைக்கவில்லை. டிசம்பர்  29-ந்தேதி நடந்த அ.தி.மு.க பொதுக்குழுவில் சசிகலா அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளராக நியமிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டார். கடந்த ஆண்டு டிசம்பர் - 31-ம் தேதி காலை அ.தி.மு.க தலைமைக் கழகத்தில்  பொதுச் செயலாளராகப்  பொறுப்பேற்றுக் கொண்டார்.

கட்சியின் பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்ட டிசம்பர்- 29,  கட்சி அலுவலகத்தில்  பொறுப்பேற்றுக் கொண்ட டிசம்பர் -31 ஆகிய இரு நாட்களிலும் தலைமைக்கழகத்தில் எதிர்பார்த்த அளவில் கூட்டம் இல்லை. அதே வேளையில் கட்சியிலோ, ஆட்சி அதிகாரத்திலோ இல்லாத தீபாவின் வீட்டுக்கு அ.தி.மு.க தொண்டர்கள் தேடி வந்து ஆறுதல் சொல்கின்றனர்.  பொதுச் செயலாளர் பதவியைப் பிடித்த சசிகலா அடுத்து முதல்வர் ஆகலாம் என்ற முடிவில் இருந்தாராம். ஆனால், தீபாவுக்கான வரவேற்பைப் பார்த்து  சசிகலா தரப்பினர், முதல்வர் பதவிக்கான காலம் இதுவல்ல, எதிர்ப்புகள் பெருகி வரும் நேரம்' என்று  கருதுகின்றார்களாம். கட்சியில் சசிகலா பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட அறிவிப்பு டிசம்பர் 29-ம் தேதி வெளியானது முதல் சென்னை தி.நகர், சிவஞானம் தெருவிலுள்ள தீபா வீட்டுக்கு தொண்டர்கள் திரள ஆரம்பித்து விட்டனர். தீபா வீடு களை கட்டிப் போனது.

முதல் இரண்டுநாட்கள் வரையில் தேடிவந்த சொற்ப ஆட்களிடம் தீபாவே பேசி அனுப்பி வைத்தார். "எனக்குத் தெரியும்... உங்களின் உணர்வுகளை நான் புரிந்து கொள்ளாமல் இல்லை. கொஞ்சம் பொறுங்கள்" என்று சொல்லியே  வந்தவர்களை வழியனுப்பி வைத்தார். நாளுக்கு நாள் கூட்டம் அதிகமாகிக் கொண்டே போனதால், தேடி வருகிறவர்களின் பெயர், செல்போன் நம்பர்களை அங்குள்ள  'என்ட்ரி' புத்தகத்தில் எழுதி வாங்க தீபாவின் உதவியாளர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.அ.தி.மு.க-வினரில் சிலர் சசிகலாவின் படங்களை புரொபைல் படங்களாக வைத்துக்  கொண்டது போல தீபாவின் படங்களையும் சிலர்  புரொபைல் படமாக செல்போன்களில் வைக்கத் தொடங்கியுள்ளனர். அந்தவகையில் தீபாவுக்கு தமிழ்நாடு முழுவதிலும் அ.தி.மு.க-வினரின் ஆதரவு கூட ஆரம்பித்துள்ளது.

தீபாதீபாவுக்கு உண்மையிலேயே எதனால்  கட்சியினர்  ஆதரவு கூடி வருகிறது என்று விசாரித்தோம். "சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் தென் மாவட்டங்களில் நெல்லை, விருதுநகர், தூத்துக்குடி  ஆகிய இடங்களில், தீபாவுக்கு ஆதரவு கணிசமாக கூடியுள்ளது. தலைநகர் சென்னையில், பகுதிச் செயலாளர்கள்,  அணிச் செயலாளர்கள் மற்றும் முன்னாள் மாவட்டச் செயலாளர்கள் என்று பொறுப்பில் இருக்கும் நிர்வாகிகள்  25 பேரும் முன்னாள் நிர்வாகிகள் 15 பேரும்  தீபாவை சந்திக்க 'டேட்' கேட்டுள்ளனர். உள்ளாட்சி மன்றப் பிரதிநிதிகளில் முன்னாள் மேயரில் தொடங்கி கவுன்சிலர்கள் வரையில் ஒவ்வொரு மாவட்டமாக போனில் தொடர்பு கொண்டு பேசி  தங்களைத் தாங்களே ஒருங்கிணைத்துக் கொண்டு வருகின்றனர். தலைவர் எம்.ஜி.ஆர் கட்சி தொடங்கியபோது இருந்த எழுச்சியை இப்போது மீண்டும் பார்க்கமுடிகிறது. ராமாவரம் கார்டனில் இருந்து போயஸ் கார்டனுக்கு மாறிய எங்கள் கட்சி  இப்போது தி.நகருக்கு மாறிப் போய் இருக்கிறது அவ்வளவுதான் !

தீபா வசிக்கும் தி.நகர் சிவஞானம் தெருவில் உளவுப் போலீசார் சாதாரணமாகச் சுற்றி வருகிறார்கள். அங்கே தினமும் வந்து செல்லும் சிலரிடம் பேசினேன்.

"இப்போதைக்கு எங்கள் கட்சியின் எதிர்காலம் பிரகாசமாய் இருக்கிறது. தீபாம்மாவின் அரசியல் பிரவேசமும் சிறப்பாக இருக்கிறது" என்கின்றனர்  தீபா வீட்டு முன் கூடும் அ.தி.மு.க-வினர். "ஒரு இடத்திலாவது 'தீபாம்மா' போஸ்டர் கிழிக்கப் பட்டிருக்கிறதா என்று பாருங்கள் எல்லா இடங்களிலும் கிழிபடும் போஸ்டர்கள் சசிகலா போஸ்டர்களே. தமிழ்நாட்டுக்கு யாராவது முதலமைச்சராக வரட்டும், போகட்டும். இப்போது அவர்களின் பக்கம் அதிகாரமும் சக்தியும் இருக்கலாம். ஆனால் தலைவரும், புரட்சித் தலைவி அம்மாவும் வளர்த்துக் கொடுத்த கட்சி இருப்பது எங்களிடம் தான். அதைத்தான் எங்களின் தீபாம்மா மூலம் மேலும் வளர்க்கப் போகிறோம் "  என்றனர் சிலர். அடுத்து வரும்  நாட்களில் இன்னும் கூடுதல் தகவல்கள் வெளிவரும் என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது ...

ஜனவரி 1 அல்லது 2 ஆகிய இரண்டு தேதிகளில் ஒன்றில் சசிகலா முதல்வராக முடிசூட்டப் படுகிறார் என்று சொல்லிக் கொண்டு இருந்த அ.தி.மு.க. வட்டாரங்கள் அதன் பின்னர் இது பற்றிப் பேசுவதைக் கணிசமாக குறைத்திருப்பதைப் பார்க்கலாம்.

http://www.vikatan.com/news/tamilnadu/77193-chennai-leads-in-the-support-for-deepa-deepavssasikala.art

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.