Jump to content

2016ல் எனது கணிப்பின்படி பல கருமங்கள் நடைபெற்றுள்ளன – சம்பந்தன்


Recommended Posts

2016ல் எனது கணிப்பின்படி பல கருமங்கள் நடைபெற்றுள்ளன – சம்பந்தன்

 

DSC_0210.jpg

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கும்வரை ஒற்றுமையுடன் உறுதியாக உழைப்போம் என தமிழ் எதிர்க்கட்சித் தலைவரும் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்றைய தினம் எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இடம்பெற்ற தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தின் பின் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இன்றைய ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் திருப்திகரமான முறையில் நடைபெற்றதாகவும் அனைவரும் தமது கருத்துக்களை சுதந்திரமாக வெளியிட்டதாகவும் அவற்றிளை உள்வாங்கி அதனடிப்படையில் செயல்படுவோம் எனவும் அவர் தெரிவித்தார்.
DSC_0217.jpg

மேலும்  2016ஆம் ஆண்டில் தீர்வு கிடைக்குமென சம்பந்தன் தெரிவித்திருந்தமை தொடர்பில் ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த சம்பந்தன்  பாராளுமன்றத்தின் மற்றும் ஜனாதிபதியின் முடிவுகளின் அடிப்படையிலேயே தான் அக்கருத்துக்களை முன்வைத்ததாகவும் எனினும் 2016ல் தனது கணிப்பின்படி பல கருமங்கள் நடைபெற்றுள்ளன எனவும் அவர் தெரிவித்தார்.

முக்கியமாக பாராளுமன்றம் அரசியலமைப்பு சபையாக மாற்றப்பட்டமை ,  புதிய அரசியலமைப்புக்கான யோசனைகளை முன்வைப்பதற்கு அனைத்து கட்சிகளினதும் உறுப்பினர்களை உள்ளடக்கிய வழிகாட்டல் குழு நியமிக்கப்பட்டமை உள்ளிட்ட விடயங்களை அவர் சுட்டிக்காட்டினார்.

http://globaltamilnews.net/archives/12915

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்காலபோவான் இவரை குடுகுடுப்பைக்காரன் ( யோதிட காரர்) என்று சொன்னது சரியாகத்தானிருக்கிறது, ஆனால் இவரொரு மோசமான சாத்திரியார் , இவர் சொல்லுறதற்கு எதிராகத்தான் எல்லாம்நடக்கிறது.

Link to comment
Share on other sites

நியா­ய­மற்ற தீர்­வொன்றை ஒரு­போதும் ஏற்­க­மாட்டோம் சமஷ்­டியே இறுதித் தீர்வு என்­கிறார் தலைவர் சம்­பந்தன்

 

ஒற்­றை­யாட்சி நீக்கம், வட­கி­ழக்கு இணைப்பு குறித்து விட்­டுக்­கொ­டுக்க வேண்டாம் இந்­தி­யாவை உடன் அணு­கு­மாறும் பங்­கா­ளிக்­கட்­சிகள் வலி­யு­றுத்தல் 

(ஆர்.ராம்)

ஆட்­சி மாற்­றத்தின் பின்னர் சில முன்­னேற்­ற­க­ர­மான விட­யங்கள் நடை­பெற்­றுக்­கொண்­டி­ருக்­கின்­றன. முற்­போக்­கான விட­யங்­க­ளுக்கு நாம் ஆத­ர­வு­களை வழங்­கு­கின்றோம். தமிழ் மக்­க­ளுக்கு நியா­ய­மான தீர்­வொன்று வழங்­கப்­பட வேண்டும். 

ஒற்றை ஆட்­சிக்குள் ஒருபோதும் இறுதி தீர்வை வழங்க முடி­யாது. தமிழ் மக்­களின் பிரச்­சி­னைக்கு சமஷ்­டியே இறுதித் தீர்­வாகும் என எதிர்க்­கட்­சித்­த­லை­வரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் தெரி­வித்­துள்ளார்.  

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் ஒருங்­கி­ணைப்­புக்­குழுக் கூட்டம் நேற்று வெள்ளிக்­கி­ழமை கொழும்பில் உள்ள எதிர்க்­கட்­சித் த­லைவர் அலு­வ­ல­கத்தில் மாலை 4.30முதல் இரவு 8 மணி­வ­ரையில் நடை­பெற்­றது.  

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வரும் எதிர்க்­கட்­சித்­த­லை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் தலை­மையில் நடை­பெற்ற இக்­கூட்­டத்தில் இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்­சியின் தலை­வரும் யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மாவை.சோ.சேனா­தி­ராஜா, கூட்­ட­மைப்பின் ஊட­கப்­பேச்­சா­ளரும் யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எம்.ஏ.சுமந்­திரன், புளொட் அமைப்பின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான தரு­ம­லிங்கம் சித்­தார்த்தன், அவ்­வ­மைப்பின் மத்­திய குழு உறுப்­பினர் ஆர்.ராகவன்,

ஈ.பி.ஆர்.எல்.எப்.கட்­சியின் தலைவர் சுரேஸ்­பி­ரே­மச்­சந்­திரன், அக்­கட்­சியின் வன்னி மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சிவ­சக்தி ஆனந்தன், வட­மா­காண சபை உறுப்­பி­ன­ரான சர்­வேஸ்­வரன், கிழக்கு மாகாண சபை உறுப்­பி­ன­ரான இரா.துரை­ரட்ணம், ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்­க­ல­நாதன் தந்­தை­யாரின் மறை­வை­ய­டுத்து நடை­பெ­ற­வுள்ள கிரி­யை­களில் பங்­கேற்­க­வி­ருப்­பதால் அவ்­வ­மைப்பின் சார்பில் சட்­டத்­த­ரணி ஸ்ரீீகாந்தா, ஹென்றி மகேந்­திரன், வட­மா­காண சபை உறுப்­பினர் சிவா­ஜி­லிங்கம், கிழக்கு மகா­ண­சபை உறுப்­பினர் கேவிந்தன் கரு­ணா­கரம் ஆகியோர் பங்­கேற்­றனர்.

இந்­நி­லையில் கூட்டம் மௌன­வ­ணக்­கத்­துடன் ஆரம்­ப­மா­னது. அத­னை­ய­டுத்து எதிர்க்­கட்­சித்­த­லை­வரும் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன், பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சிவ­சக்தி ஆனந்தன் அண்­மையில் ஒருங்­கி­ணைப்புக் கூட்டம் கூட்­டப்­ப­ட­வேண்டும் என்ற வேண்­டு­கோளை விடுத்­தி­ருந்தார். அதற்கு அமை­வா­கவே இந்தக் கூட்டம் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது. ஆவர் கூட்டம் கூட்­டப்­ப­ட­வேண்டும் எனக் குறிப்­பிட்டு அனுப்­பிய கடி­தத்தில் சில விட­யங்­களை கூறி­யி­ருந்தார். அவை தொடர்­பாக கலந்­து­ரை­யா­டுவோம். கருத்­துக்­களை பகிர்ந்­து­கொள்வோம் என்றார். ஆத­னை­ய­டுத்து இடம்­பெற்ற கருத்து பகிர்­வு­களும் வாதப்­பி­ர­தி­வா­தங்­களும் வரு­மாறு,

சிவ­சக்தி ஆனந்தன் எம்.பி

இணைந்த வடக்கு கிழக்கில் சமஷ்டி முறை­யி­லான சுய­நிர்­ணய ஆட்­சியை உரு­வாக்கி தமிழ் மக்­களின் அபி­லா­ஷைகள் உரி­மைகள் ஆகி­ய­வற்றை பெற்­றுக்­கொ­டுப்போம் என 2013ஆம் ஆண்டு நடை­பெற்ற மாகாண சபை தேர்­த­லிலும், 2015ஆம் ஆண்டு நடை­பெற்ற பாரா­ளு­மன்ற தேர்­த­லிலும் விஞ்­ஞா­ப­னங்­களை மக்­க­ளி­டத்தில் வழங்கி அதற்கே ஆணை பெற்­றுள்ளோம்.

அவ்­வா­றி­ருக்­கையில் தற்­போது புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான பணிகள் இடம்­பெ­று­வ­தாக கூறப்­ப­டு­கின்­றது. ஆதில் என்ன நடக்­கின்­றது என்­பது தெரி­யாத நிலையில் மக்கள் மத்­தியில் பல சந்­தே­கங்­களும் விமர்­ச­னங்­களும் காணப்­ப­டு­கின்­றன. குறிப்­பாக ஒற்­றை­யாட்­சிக்குள் தீர்வை எட்­டப்­போ­கின்றோம். வடக்கு கிழக்கு இணைப்­பில்லை என்ற விட­யங்கள் அதிகம் பேசப்­ப­டு­கின்­றது. ஆகவே இந்த விட­யங்கள் தொடர்பில் நாம் மக்கள் எமக்கு வழங்­கிய ஆணையை மீற முடி­யாது.

சிங்­கள தலை­மைகள் ஒரு நிலைப்­பாட்டில் தான் இருக்­கின்­றன. சமஷ்­டியை ஏற்­க­மு­டி­யாது. ஒற்­றை­யாட்­சிக்குள் தான் தீர்வு போன்ற விட­யங்­களை விட்­டுக்­கொ­டுக்­காது இருக்­கின்­றன. அவ்­வா­றி­ருக்­கையில் நாம் மக்கள் வழங்­கிய ஆணை­யி­லி­ருந்து மாறி­யுள்ளோம் எனில் நடை­பெ­ற­வி­ருக்கும் உள்­ளு­ராட்சி தேர்­தலில் மாறி­யி­ருக்கும் எமது நிலைப்­பாட்டை வௌியிட்டு மீண்டும் மக்­க­ளி­டத்தில் ஆணை­கோ­ர­வேண்டும். அதற்கு அவர்கள் அங்­கீ­கா­ர­ம­ளிப்­பார்­க­ளாயின் நாம் அதன்­பி­ர­காரம் செல்ல முடியும் என்றார்.

சுரேஸ் பிரே­மச்­சந்­திரன்

சிவ­சக்தி ஆனந்தன் கூறும் விட­யத்­துடன் நான் முழு­மை­யாக இணங்­கு­கின்றேன். பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுமந்­திரன் வடக்கு கிழக்கு இணைப்பு தற்­போ­தைக்கு சாத்­தி­ய­மில்லை எனக்­கூ­று­கின்றார். ஒற்­றை­யாட்­சியை கைவிட முடி­யாது என ஜனா­தி­ப­தியும், பிர­த­மரும் வௌிப்­ப­டை­யா­கவே கூறு­கின்­றனர். அதே­நேரம் பௌத்த மத­கு­ரு­மாரும் ஒற்­றை­யாட்­சியை கைவிட முடி­யா­தென வலி­யு­றுத்­து­கின்­றனர்.

கடந்த காலங்­களில் சிங்­களத் தலை­வர்கள் எவ்­வாறு பெரும்­பான்மை மக்­களை வழி­ந­டத்­தி­னார்­களோ அவ்­வாறே தற்­போதும் வழி­ந­டத்­து­கின்­றார்கள். முகிந்த ராஜ­பக்ஷ எவ்­வாறு ஒற்றை ஆட்சி, வடக்கு கிழக்­கு­வி­ட­யங்­களில் இறுக்­க­மாக இருந்­தாரோ அதே­போன்று தான் தற்­போ­தை­ய­வர்­களும் இருக்­கின்­றார்கள்.

அவ்­வா­றி­ருக்­கையில் அவர்­க­ளி­டத்தில் எவ்­வாறு நியா­ய­மான தீர்­வொன்றை எதிர்­பார்க்­க­மு­டியும். ஆகவே அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கத்தின் பொது ஒற்­றை­யா­டசி முறை என்­பது முழு­மை­யாக நீக்­கப்­ப­ட­வேண்டும். சமஷ்டி முறை­மை­யி­லான ஆட்சி என்­பது குறிப்­பி­டப்­பட்டு வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பில் உறு­தி­யாக தெரி­விக்­கப்­ப­ட­வேண்டும்.

அதே­நேரம் மிக முக்­கி­ய­மாக இறைமை தொடர்­பான விட­யத்தை கவ­னத்தில் கொள்ள வேண்­டி­யுள்­ளது. ஒற்றை ஆட்­சிக்குள் அதி­கா­ரப்­ப­கிர்வு என்­பது சாத்­தி­ய­மா­காது. உண்­மை­யி­லேயே அதி­கா­ரப்­ப­ர­வ­லாக்கல் பற்றி பேசப்­ப­டு­கின்­றதா இல்லை அதி­கா­ரப்­ப­கிர்வு பற்றி பேசப்­ப­டு­கின்­றதா என்ற கேள்­விகள் எழுக்­கின்­றன. ஆகவே அவை தொடர்­பாக தௌிவு­ப­டுத்­தப்­பட வேண்டும்.

சுமந்­திரன் எம்.பி.

தற்­போது புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கு­ரிய செயற்­பா­டுகள் இடம்­பெற்று வரு­கின்­றன. கடந்த மாதம் வழி­ந­டத்தல் குழுவின் இடைக்­கால அறிக்கை வௌியி­டப்­ப­டு­வ­தாக இருந்­தது. இருப்­பினும் மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் கால அவ­காசக் கோரிக்­கையால் நாம் அதனை வௌியி­ட­மு­டி­யாது போனது. ஆவ்­வாறு வௌிப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்தால் இந்த வினாக்­க­ளுக்­கான விடைகள் கிடைக்­கப்­பெற்­றி­ருக்கும்.

தற்­போது வழி­ந­டத்தல் குழு­வா­னது தேர்தல் முறைமை, காணி, ஆட்­சி­மு­றைமை உள்­ளிட்ட ஆறு முக்­கி­ய­மான விட­யங்­களை தன்­ன­கத்தே வைத்­துள்­ளது. அடிப்­படை உரிமை, சட்டம் ஒழுங்கு, மத்­திக்கும் மகா­ணத்­திற்கும் இடை­யி­லான உறவு, பொது­நிதி உள்­ளிட்ட ஆறு விட­யங்கள் குறித்து உப­கு­ழுக்கள் நிய­மிக்­கப்­பட்டு அவற்றின் அறிக்­கைகள் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளன.

உப­கு­ழுக்­களின் அறிக்­கையில் கூறப்­பட்­டுள்ள விட­யங்கள் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் நிலைப்­பா­டுகள் உள்­ளிட்ட அனைத்து விட­யங்­க­ளையும் உள்­ள­டக்­கியே இடைக்­கால அறிக்கை தயா­ரிக்­கப்­பட்­டுள்­ளது. அதில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் சமஷ்டிக் கோரிக்­கையும் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளது.

அதே­போன்று ஏனைய தரப்­பி­னரின் கருத்­துக்­களும் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளன. ஆந்த அறிக்கை வௌியி­டப்­ப­டு­வ­தற்­காக வழி­ந­டத்தல் குழவின் அமர்வு இடம்­பெற்­ற­போது ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் இரண்டு உறுப்­பி­னர்கள் மீண்டும் கால அவ­கா­சத்தை கோரி­ய­மையால் எதிர்­வரும் 10ஆம் திக­தியும் அந்­த­அ­றிக்கை வௌியிட முடி­யாது போயுள்­ளது.

அதே­நேரம் ஒற்­றை­யாட்­சியை பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் எதிர்க்­கின்றார். எம்­மு­ட­னான சந்­திப்பின் போது அவர் அதனை பகி­ரங்­க­மா­கவே கூறி­யி­ருக்­கின்றார். ஆது அனைத்து பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கும் நன்கு தெரியும். ஒற்­றை­யாட்சி என்­பது சிங்­கள மொழியில் ஏகிய ரஜய எனவும், ஆங்­கில மொழியில் யுனிற்­றரி எனவும் பொருள் படு­கின்­றது.

உண்­மை­யி­லேயே சிங்­க­ளத்தில் ஏகிய ரஜய என்­பது ஒரு­மித்த அல்­லது ஐக்­கிய என்று தான் பொருள்­ப­டு­கின்­றது. ஆங்­கி­லத்தில் யுனிற்­றரி என்­பது தான் தமிழ் மொழியில் ஒற்­றை­யாட்சி என ஆட்சி முறையை குறிக்கும் சொல்­லாக இருந்து வரு­கின்­றது. ஆகவே சிங்க மொழியில் ஏகிய ரஜய என்ற சொற்­ப­தத்­துடன் அது ஆட்சி முறையைக் குறிக்கும் சொல் அல்ல என்ற அடிக்­கு­றிப்பை இட­வேண்டும் என்­பதே எமது நிலைப்­பா­டாகும்.

பெரும்­பான்மை மக்கள் ஏகிய ரஜய என்ற சொற்­ப­தத்தை நீக்க முற்­ப­டு­கை­யி­லேயே தான் அச்­சப்­ப­டு­கின்­றார்கள். நாடு பிள­வு­பட்­டு­விடும் என கோஷ­மெ­ழுப்­பு­கின்­றார்கள். ஆகவே நாம் அவ்­வா­றான அடிக்­கு­றிப்பை சிங்­க­மொ­ழியில் குறிப்­பிட வலி­யு­றுத்­தி­யுள்ளோம் என்றார்.

சுரேஷ்­பி­ரே­மச்­சந்­திரன்

நீங்கள் அவ்­வாறு சிங்­கள மொழி மூல­மான ஆவ­ணத்தில் அடிக்­கு­றிப்பை இட்­டாலும் குறித்த விடயம் தொடர்பில் எவ­ரா­வது நீதி­மன்­றத்தை நாடும் பட்­சத்தில் ஆங்­கி­ல­மொ­ழியில் குறிப்­பிட்ட விட­யத்­தையோ அல்­லது தமிழ் மொழியில் குறிப்­பிட்ட விட­யத்­தையோ நீதி­மன்ற வியாக்­கி­யா­னத்­துக்கோ அல்­லது பொருள்­கோ­ட­லுக்கோ உட்­ப­டுத்த மாட்­டார்கள்.

சிங்­கள மொழி மூல­மான விட­யத்­தையே பொருள்­கோ­ட­லின்­போதோ அல்­லது வியாக்­கி­யானம் அளிக்கும் போதோ கருத்­திற்­கொள்­வார்கள். எனவே ஒற்­றை­யாட்சி முறை என்­பது அர­சி­ய­ல­மைப்­பி­லி­ருந்து நீக்­கப்­ப­ட­வேண்டும். அதனை ஒரு­போதும் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. அவ்­வாறு ஏற்­று்­க­கொள்­வ­தாயின் மக்­களின் ஆணையை மீண்டும் பெற்­றுக்­கொள்ள வேண்டும். அதே­போன்று ஜனா­தி­ப­தியும், பிர­த­மரும் ஒற்­றை­யாட்சி் எனக் குறிப்­பிட முடி­யாது என பகி­ரங்­க­மாக அறி­விக்க வேண்டும்.

இவ்­வா­றி­ருக்­கையில் வடக்கு கிழக்கு இணைப்பு விடயம் தொடர்­பாக அவர்­களின் தௌிவான நிலைப்­பாட்­டையும் வௌிப்­ப­டுத்த வேண்­டி­யது அவ­சி­ய­மா­கின்­றது என்றார்.

சுமந்­திரன் எம்.பி.

வடக்கு கிழக்கு என்­பது அர­சாங்­கத்­துடன் பேசும் விடயம் அல்ல. வுடக்கு கிழக்கு இணைப்பு என்­பது புதிய அர­சி­ய­ல­மைப்பு இயற்­றப்­பட்­ட­வுடன் நடத்­தப்­படும் என நான் பொய்­கூ­ற­வில்லை. உட­ன­டி­யாக சாத்­தியம் இல்­லை­யென்றே கூறி­யுள்ளேன். அது தவ­றாக அர்த்­தப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது.

புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கப்­பட்­ட­வுடன் அவ்­வி­டயம் சாத்­தி­ய­மா­காது விட்­டாலும் கால­வோட்­டத்தில் முஸ்­லிம்­க­ளுக்கு வடக்கு கிழக்கு இணைப்பில் உள்ள சந்­தே­கங்கள் அச்­சங்கள் குறித்து பேச்­சு­வார்த்தை நடத்தி அதற்­கு­ரிய தீர்வை பெற்­றுக்­கொள்ள முடியும்.

முஸ்­லிம்கள் இணங்­காத பட்­சத்தில் வடக்கு கிழக்கு இணைப்பு சாத்­தி­ய­மற்­ற­தா­கி­விடும். ஆகவே அவர்­க­ளுடன் கலந்­து­ரை­யா­டல்கள் தொடர்ந்த வண்­ண­மி­ருக்­கின்­றன. புதிய அர­சி­ய­ல­மைப்பு வடக்கு கிழக்கு இணைப்­பிற்­கான ஒரு பதையை திறப்­ப­தாக அமையும் என்­பதே எனது கருத்­தாகும் என்றார்.

சித்­தார்த்தன் எம்.பி

உண்­மையில் நாம் தற்­போது எத­வுமே நடை­பெ­ற­வில்லை எனக் கூற­மு­டி­யாது. ஏதொ நடந்­து­கொண்­டி­ருக்­கின்­றது. ஆதற்­கான முடி­வு­வ­ரையில் நாங்கள் செல்ல வேண்­டி­யுள்­ளது. வெறு­மனே எது­வுமே நடக்­க­வில்லை என வார்த்தை வடி­வத்தில் கூறி­விட்டு அனைத்­தையும் முறித்­த­வர்­க­ளாக நாங்கள் இருக்க கூடாது. இந்த விட­யத்தில் சுமந்­தி­ரனின் கருத்­துக்­க­ளோடு நான் ஒத்­துப்­போ­கின்றேன்.

இருப்­பினும் வடக்கு கிழக்கு இணைப்பு என்­ப­தற்­கா­கவே மக்கள் எமக்கு ஆணையை வழங்­கி­யுள்­ளார்கள். ஆகவே அந்த விட­யத்தில் நாம் விட்­டுக்­கொ­டுப்புச் செய்ய முடி­யாது. அதற்­கு­ரிய நட­வ­டிக்­கை­களை நாம் விரைந்து எடுக்க வேண்­டி­யது அவ­சி­ய­மா­கின்­றது. அதில் விட்­டுக்­கொ­டுப்­புக்கள் செய்­வ­தா­னது மக்­களின் ஆணையை மீறு­கின்­ற­தாக மாறி­விடும் என்றார்.

ஹென்றி மகேந்­திரன்

தமிழ் மக்கள் வடக்கு கிழக்கு இணைப்­பிற்கே வாக்­க­ளித்­துள்­ளார்கள். ஆதி­லி­ருந்து நாம் வில­கி­நிற்­க­மு­டி­யாது. ஆவ்­வாறு விலகி நிற்­போ­க­மா­க­வி­ருந்தால் நாம் பல்­வேறு நெருக்­க­டி­களை எதிர்­கா­லத்தில் சந்­திக்க வேண்டி ஏற்­படும். எனவே நாம் வடக்கு கிழக்கு விட­யத்தை அதீத கரி­ச­னை­யுடன் பார்க்­க­வேண்­டி­யுள்­ளது என்றார்.

சட்­டத்­த­ரணி ஸ்ரீகாந்தா

வடக்கு கிழக்கு இணைக்­கப்­ப­ட­வேண்டும் என்­பது தான் தமிழ் மக்­களின் ஒட்­டு­மொத்­த­மான தீர்ப்­பாகும். ஆகவே அதற்­கு­ரிய ஆணை­யி­லி­ருந்து நாம் வில­கிச்­செல்ல முடி­யது என்றார்.

தலைவர் சம்­பந்தன்

வடக்கு கிழக்கு இணைப்பு குறித்து பேச்­சு­வர்த்தை நடத்­து­வ­தற்கு முஸ்­லிம்கள் அக்­கறை காட்­வில்லை. அவர்கள் அதில் அக்­கறை காட்­டா­மையின் கார­ணத்­தாலே அந்த விட­யத்தில் முடி­வொன்றை எடுப்­பதில் தாம­தங்கள் நில­வு­கின்­றன. அந்த கடி­ன­மான பய­ணத்தை நாம் தொடர்ந்தும் கவ­ன­மாக முன்­னெ­டுப்போம் என்றார்.

சுரேஸ்­பி­ரே­ம­சந்­திரன்

முஸ்­லிம்கள் வடக்கு கிழக்கு இணைப்பு விட­யத்தில் அக்­கறை செலுத்­த­வில்­லை­யென்றால் நாம் அதற்­கு­ரிய மாற்­றுத்­திட்டம் குறித்து கவனம் செலுத்த வேண்டும். கிழக்கில் அறு­பது சத­வீ­த­மான தமிழ் மக்கள் வாழ்­கின்­றனர். ஆகவே தமிழ் மக்கள் வாழும் பகு­தி­க­ளையும் வடக்கு மாகா­ண­ச­பையும் இணைப்­பது குறித்து நாம் அக்­கறை காட்ட வேண்டும்.

அவ்­வா­றான முயற்­சிகள் எடுக்­கின்ற போது நிச்­ச­ய­மாக முஸ்­லிம்கள் எம்­முடன் பேச்­சு­வார்த்தை நடத்­த­வேண்­டிய நிர்ப்­பந்­தத்­துக்குள் வரு­வார்கள். அதன்­போது நாம் அந்த விடயம் தொடர்­பாக அவர்­க­ளுடன் பேசி ஒரு முடி­வுக்கு வர­மு­டியும் என்றார்.

இந்­தி­யா­வுடன் பேசுங்கள்

தொடர்ந்த சுரேஸ்­பி­ரே­மச்­சந்­திரன், இந்­திய இலங்கை ஒப்­பந்­தத்தின் பிர­காரம் 13ஆவது திருத்­தச்­சட்டம் நடை­மு­றைக்கு வந்­தி­ருந்­தது. துற்­போது யுத்தம் நிறை­வ­டைந்த நிலையில் 13ஆவது திருத்­தச்­சட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்­த­வேண்­டி­யது அர­சாங்­கத்தின் கட­மை­யா­கின்­றது.

அதனை தனியே ஜனா­தி­ப­தி­யு­டனும், பிர­த­ம­ரு­டனும் பேசு­வதால் எவ்­வி­த­மான பயனும் கிட்­டப்­பே­வ­தில்லை. ஆகவே இந்­திய அர­சாங்­கத்­துடன் இவ்­வி­டயம் சம்­பந்­த­மாக பேச்­சு­வார்த்தை நடத்­த­வேண்டும். கூட்­ட­மைப்பின் தலைவர் கடந்த காலங்­களில் பல தட­வைகள் இந்­தியப் பிர­த­மரை உயர்­மட்ட அதி­கா­ரி­களை சந்­தித்­தி­ருந்தார்.

தமிழ் மக்­களின் பிரச்­சி­னைகள் தொடர்­பாக பேசி­யி­ருக்­கின்றார். ஆனால் எதிர்­கட்­சித்­த­லை­வ­ராக பத­வி­யேற்­றதன் பின்னர் எவ்­வி­த­மான பேச்­சுக்­க­ளையும் அவர் மேற்­கொள்­ள­தி­ருப்­ப­தற்­கான காரணம் என்ன? ஆகவே தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் உட்­பட 16 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் இந்­தி­யா­வுக்கு செல்ல வேண்டும். அந்த அர­சாங்­கத்­துடன் பேச்­சு­வார்த்தை நடத்­த­வேண்டும்.

இந்­திய அர­சாங்­கமும் அதன்­போது தான் எமது பிரச்­சி­னைகள் தொடர்பில் கூர்ந்து கவ­னிக்கும். தென்­னிந்­திய அர­சி­யல்­வா­தி­களும் கருத்­திற்­கொண்டு இவ்­வி­ட­யங்கள் குறித்து பேசு­வார்கள். இந்­திய ஊட­கங்­களும் இது தொடர்­பாக கவனம் செலுத்தும்.

வெறுனே இந்­திய உயர்ஸ்­தா­னி­க­ரா­லத்­து­டனும் இலங்கை அர­சாங்­கத்­து­டனும் பேசிக்­கொண்­டி­ருப்­பதால் எவ்­வி­த­மான பயனும் ஏற்­ப­டப்­போ­வ­தில்லை. ஆர­சி­ய­ல­மைப்புச் சபை­யிலோ வழி­ந­டத்தல் குழு­விலோ இந்த விட­யங்­களை பேசி உடன்­பா­டு­களை எட்­டவே முடி­யாது. ஆவ்­வாறு பேசு­வ­தாக இருந்தால் அன்றே நாம் மகிந்த ராஜ­ப­க்ஷவின் பாரர்­ளு­மன்ற தெரி­வுக்­கு­ழு­விற்குள் சென்­றி­ருக்க முடியும். அது சாத்­தி­ய­மில்லை என்­பதே யார்த்தம். ஆகவே இந்­தி­யா­வுக்கு அனை­வரும் சென்று பேச்­சு­வார்த்தை நடத்­த­வேண்டும். அதன்­போது சர்­வ­தே­சமும் இந்த விடயம் தொடர்பில் கூடிய அக்­கறை செலுத்தும். என்றார்.

மாவை.சோ.சேனா­தி­ராஜா எம்.பி

நாங்கள் ஜனா­தி­பதி, பிர­த­ம­ருடன் இவ்­வி­ட­யங்கள் தொடர்­பாக பேச்­சு­வார்த்­தைகள் நடத்­தி­யுள்ளோம். சர்­வ­தே­சத்­து­டனும் பேச்­சு­வார்த்­தை­களை நடத்­து­கின்றோம். ஆகவே பேச்­சு­வார்த்­தை­களை நடத்­த­வில்லை எனக் கூறு­வது தவ­றாகும்.

அதே­நே­ரத்தில் ஐக்­கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவைக் கூட்­டத்தில் அர­சாங்­க­திற்கு கால­அ­வ­காசம் வழங்­கப்­படும் என சுமந்­திரன் எம்.பி கூறி­யி­ருக்­கின்றார். ஆதனை தவ­றாக அர்த்­தப்­ப­டுத்­து­கின்­றார்கள். ஆர­சாங்­கத்­திற்கு கால அவ­காசம் வழங்­கு­வதில் எனக்கும் உடன்­பாடு கிடை­யாது. ஆனால் எமது விட­யங்­களை முன்­னெ­டுத்தால் நாம் கால அவ­காசம் தொடர்பில் சிந்­திப்போம். இ்ல்லையென்றால் அதனை நிரா­க­ரிப்போம் என்ற தொனி­யி­லேயே அவர் கூறி­யி­ருக்­கின்றார். ஆகவே அந்த நேரத்தில் நாம் அது தொடர்­பாக ஆராய்வோம் என்றார்.

இரா.சம்­பந்தன் எம்.பி

கடந்த 70ஆண்­டு­க­ளாக அகிம்­சா­வாதி தலை­வர்­க­ளாலும், ஆயதம் ஏந்­திய தலை­வர்­க­ளாலும் எத­னையும் சாதிக்க முடி­யாது போயுள்­ளது. தற்­போது பாரா­ளு­மன்றம் அர­சி­ய­ல­மைப்புச் சபை­யாக மாற்­றப்­பட்டு சில கரு­மங்கள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றது

இரண்டு பிர­தான கட்­சி­களும் ஒன்­றி­ணைந்து ஆட்­சி­ய­மைத்­துள்­ளன. இவ்­வ­ரா­றன சந்­தர்ப்பம் இதற்கு முன்னர் கிட்­ட­வில்லை. ஆகவே கிடைத்­துள்ள சந்­தர்ப்­பத்தை நாம் தட்­டிக்­க­ழிக்க முடி­யாது. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மீது எமக்கு நம்­பிக்கை உள்­ளது.

முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரி­காவின் காலத்தில் அவர் ஊடா­கவே சில தீர்­வுக்­கான கரு­மங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்­ட­தாக சந்­தி­ரிகா அம்­மையார் என்­னி­டத்தில் கூறி­யி­ருக்­கின்றார். ஜனா­தி­பதி ஒரு இன­வாதி அல்ல. ஆவர் ஒரு இடது சாரித்­த­லைவர். ஆதெ­போன்று தான் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் ஒரு இன­வாதி அல்ல. ஆவரும் ஒரு முதிர்ச்சி பெற்ற அர­சி­யல்­வாதி.  

ஆகவே நாம் தற்­போது முன்­னெ­டுக்கும் கரு­மங்­களை குழப்­பி­ய­வர்­க­ளாக இல்­லாது ஒற்­று­மை­யாக இறு­தி­வ­ரையில் முயற்­றி­களை எடுப்போம். தமிழ் மக்­களின் அபி­லா­ஷை­களை நிறைவு செய்­யாத எந்­த­வொரு தீர்­வையும் நாம் தொட்டுப் பார்க்க கூட முடி­யாது. ஏற்­றுக்­கொள்­ளவும் மாட்டோம். அதே­நேரம் ஒற்­றை­யாட்­சி­யையும் ஏற்­க­மு­டி­யாது. வடக்கு, கிழக்கு மீள் இணைப்பில் முஸ்­லிம்­களின் நிலைப்­பாடும் ஒரு முக்­கிய இடத்தில் உள்­ளது. ஆனால், முஸ்­லிம்­களோ வடக்கு, கிழக்கு மீள் இணைப்பில் அக்­கறை காட்­ட­வில்லை என்­ப­துடன் இதற்­கான பேச்­சுக்­க­ளிலும் ஆர்வம் இன்­றியே உள்­ளனர்.

இருப்­பினும், இதற்குப் பல வழி­வ­கைகள் உண்டு. மாற்றுத் திட்­டங்­களும் உண்டு. அவை தொடர்­பிலும் ஆரா­யலாம். தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு சார்பில் அர­சாங்­கத்­துடன் நாம் அனை­வரும் இணைந்த பேசலாம் என்றார்.

ஆர்.ராகவன்

அதே­நேரம் எதிர்­வரும் உள்­ளு­ராட்சி தேர்­தலில் தமி­ழ­ர­சுக்­கட்சி தனித்து போட்­டி­யி­டு­வ­தற்­கு­ரிய முயற்­சி­களை எடுத்­து­வ­ரு­கின்­றது. குறிப்­பாக வலி.வடக்கு, வலி.தெற்கு பகு­தி­களில் முன்னாள் உறுப்­பி­னர்கள் இதற்­கு­ரிய நட­வ­டிக்­கை­களை எடுத்து வரு­கின்­றார்கள். தமி­ழ­ர­சு்­க­கட்சி அவ்­வாறு தனித்தா போட்­டி­யி­டப்­போ­கின்­றது எனக் கேள்­வி­யெ­ழுப்­பினார்.

தலைவர் சம்­பந்தன்

மாவை. சோனா­தி­ராஜா இதற்கு பதி­ல­ளிப்பார் என்றார்.

மாவை.சேனா­தி­ராஜா எம்.பி.

இல்லை அது தவ­றா­னது. அவ்­வா­றான எந்த முயற்­சி­களும் இடம்­பெ­ற­வி்ல்லை. நூம் கூட்­ட­மைப்­பா­கவே செயற்­ப­டுவோம் என்றார்.

சட்­டத்­த­ரணி ஸ்ரீகாந்தா

எந்­தக்­கட்­சி­யா­க­வி­ருந்­தாலும் கூட்­ட­மைப்­பி­லி­ருந்து வில­கிச்­சென்று தனித்து போட்­டி­யி­டு­மா­கி­வி­ருந்தால் நிச்­சயம் மக்­களால் நிரா­க­ரிக்­கப்­படும் எனச் சுட்­டிக்­காட்­டினார். இவ்­வா­றான விட­யங்­க­ளுடன் ஒருங்­கி­ணைப்புக் குழக்­கூட்டம் நிறைவடைந்தது. நாளை ஞாயிற்றுக்கிழமை புதிய அரசியலமைப்பு தொடர்பாக ஆராயும் முழு நாள் பாராளுமன்றக் குழுக் கூட்டம் எதிர்கட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. 

இதேவேளை கூட்டம் நிறைவடைந்த பின்னர் எதிர்கட்சித்தலைவரும் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் ஊடகவியலாளர்களிடத்தில் கருத்து வௌியிடுகையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், அரசியல் தீர்வு சம்பந்தமாக எமது பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் தங்களுடைய கருத்துக்களைக் கூறியுள்ளனர். கருத்துக்கள் பரிமாறப்பட்டன. ஔிவு மறைவு இல்லாமல் பகிரங்கமாகத் தமது கருத்துக்களை அவர்கள் தெரிவித்தார்கள்.  

நாங்கள் எல்லோரும் தொடர்ந்து ஒற்றுமையாக உறுதியாக எமது மக்களுக்கு ஏற்ற அரசியல்தீர்வை அடைவதற்குத் தொடர்ந்து உழைப்போம். எங்கள் முயற்சி தொடரும். எல்லோருடைய கருத்துக்களையும் நாங்கள் உள்வாங்கி இருக்கின்றோம். அந்த அடிப்படையில் நாங்கள் செயற்படுவோம். ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் திருப்திகரமாக நடந்தது. திருப்திகரமாக முடிவடைந்தது.   

2016ஆம் ஆண்டில் அரசியல் தீர்வு கிடைக்கும் என்று ஒரு கணிப்பின் அடிப்படையில் நான் தெரிவித்திருந்தேன். ஜனாதிபதியின் முடிவின் அடிப்படையிலும், நாடாளுமன்ற முடிவின் அடிப்படையிலும் நான் இந்தக் கணிப்பைக் கூறியிருந்தேன். என்னுடைய கணிப்பின் அடிப்படையில் அரசியல் தீர்வு விடயம் தொடர்பில் 2016ஆம் ஆண்டில் பல கருமங்கள் நடைபெற்றுள்ளன. ஒன்றும் நடைபெறவில்லை என்று நாங்கள் கூற முடியாது. 

பாராளுமன்றம் அரசியலமைப்புச் சபையாக மாற்றப்பட்டது. புதிய அரசியலமைப்புக்கான யோசனைகளை முன்வைப்பதற்கான அனைத்துக் கட்சிகளின் உறுப்பினர்களையும் உள்ளடக்கிய வழிகாட்டல் குழு நியமிக்கப்பட்டது. அது செயற்பட்டு வருகின்றது. இந்தக் குழுவுக்கு உதவுவதற்காக 6 உப குழுக்கள் நியமிக்கப்பட்டன. அந்தக் குழுவினர் தங்களுடைய அறிக்கைகளைச் சமர்ப்பித்துள்ளனர்.

அடுத்த வாரம் பாராளுமன்றில் இது தொடர்பான விவாதங்கள் நடைபெறவுள்ளன. ஆகவே, அரசியல் தீர்வு விடயம் சம்பந்தமாக பல கருமங்கள் 2016ஆம் ஆண்டிலிருந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கும் வரை நாங்கள் ஒற்றுமையாக உறுதியாக செயற்படுவோம் என்றார். 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-01-07#page-1

Link to comment
Share on other sites

கொழும்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம்

 

 

கொழும்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம்
 

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் கொழும்பில் தற்போது நடைபெற்று வருகின்றது.

இந்த ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் கொழும்பு – 07 இல் அமைந்துள்ள எதிர்க்கட்சி அலுவலகத்தில் நடைபெறுகின்றது.

இதில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நான்கு கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர்.

 

 

http://newsfirst.lk/tamil/2017/01/கொழும்பில்-தமிழ்-தேசியக-2/

Link to comment
Share on other sites

தமிழ் மக்களுக்கு எதிரான அரசியல் தீர்வை ஏற்கக் கூடாது - தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு குழுவில் கோரிக்கை

 
 

ஒற்றையாட்சி முறையை ஏற்க முடியாது. சமஸ்டி முறையே வேண்டும். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் இணைப்பு முக்கியம் என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு குழு தலைவர்கள்
 

அத்துடன் தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்கள் குறித்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்துடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என்றும் இந்தக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டிருக்கின்றது.

புதிய அரசியலமைப்பில் ஓர் அரசியல் தீர்வு காணப்படும் என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நம்பிக்கையோடு கருத்து வெளியிட்டு வருகின்றார்.

ஆனால், தமிழ் மக்களின் அபிலாசைகளுக்கு முரணான வகையில் அரசியல் தீர்வு தொடர்பாக, அரசு தரப்பில் இருந்து பல்வேறு கருத்துக்கள் வெளியாகி வருகின்றன.

இதனால் அரசாங்கத்தின் மீதும், அரசியல் தீர்வுக்கான முயற்சிகள் மீதும் சந்தேகங்கள் எழுந்திருக்கின்றன.

இது குறித்து இந்தக் கூட்டத்தில் ஆராயப்பட்டபோதே, கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனிடம் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

 

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம்  

அரசியல் தீர்வில் முக்கியமாக இடம்பெற வேண்டிய தமிழ் மக்களின் அபிலாசைகள் குறித்து அரசிடம் மாறுபட்ட நிலைப்பாடு காணப்படுவதால், புதிய அரசியலமைப்பு உருவாக்குவதற்கான வழிகாட்டல் குழுவில் இருந்து கூட்டமைப்பு விலக வேண்டும் என்று ஈபிஆர்எல்எவ் கட்சியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய சுரேஸ் பிரேமச்சந்திரன் வலியுறுத்தியிருந்தார்.

ஆயினும், அத்தகைய நடவடிக்கை இன்றைய சூழலில் பொருத்தமற்றதாக இருக்கும் என்று தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் முஸ்லிம் மக்களிடமிருந்து, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் இணைப்பிற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருப்பதனால், மாகாண இணைப்பு விடயம் கடினமாக இருக்கின்றது என்பதும் இந்தக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

ஆயினும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட வேண்டும் என்ற தமிழ் மக்களின் ஆவலை, அரசியல் தீர்வில் புறந்தள்ளிவிட முடியாது என்பதும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அரசியல் தீர்வுக்கான முயற்சியில் சில நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. தொடர்ந்து அதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படும். தமிழ் மக்கள் விரும்பாத தீர்வை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்று கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூறியுள்ளார்.

http://www.bbc.com/tamil/sri-lanka-38540878

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, நவீனன் said:

2016ல் எனது கணிப்பின்படி பல கருமங்கள் நடைபெற்றுள்ளன – சம்பந்தன்

கருமமா அல்லது கறுமமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

tw_blush:tw_blush:

15823090_397782107230829_786117718449309

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2017 இலும் குடுகுடுப்பை கிலுக்கனுமில்ல. tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, நவீனன் said:

 

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு குழு தலைவர்கள்

 

கூட்டமைப்பின் அமைதி வணக்க வாசகம் என்ன?

யாருக்காவது தெரியுமா??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு குழு தலைவர்கள்

21 hours ago, விசுகு said:

கூட்டமைப்பின் அமைதி வணக்க வாசகம் என்ன?

யாருக்காவது தெரியுமா??

நட்டமரம் மாதிரி நடுவிலை நிக்கிறவருக்கு தெரிஞ்சுருக்கு போலை கிடக்கு...:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு குழு தலைவர்கள்

நட்டமரம் மாதிரி நடுவிலை நிக்கிறவருக்கு தெரிஞ்சுருக்கு போலை கிடக்கு...:grin:

வவுனியாவில் கப்பம் என்ற பேரில் மக்களை போட்டு தள்ளி வளர்ந்த மரம் 
தன் வேரையும் உறிஞ்சியது என்ன என்பதையும் மரம் அறியும்!

On 1/6/2017 at 0:33 PM, நவீனன் said:

2016ல் எனது கணிப்பின்படி பல கருமங்கள் நடைபெற்றுள்ளன – சம்பந்தன்

 

 

ஜெயலலிதா ............. கருணாநிதி 
இந்த வரிசையில் ........ வாழ்க்கை சுழற்சியில்.
ஏதும் நடக்கும் என்றுதான் .... எனது கணிப்பும் சொல்லுது.  

Link to comment
Share on other sites

On ‎06‎.‎01‎.‎2017 at 7:33 PM, நவீனன் said:

2016ல் எனது கணிப்பின்படி பல கருமங்கள் நடைபெற்றுள்ளன – சம்பந்தன்

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கும்வரை ஒற்றுமையுடன் உறுதியாக உழைப்போம் என தமிழ் எதிர்க்கட்சித் தலைவரும் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

தீர்வைப் பெற்றுத்தராது நான் இறந்துவிட்டாலும்.... :(

'இன்னொரு கருவில் பிறந்து வந்தேனும் தீர்வு கிடைக்கச் செய்வேன்'. இது உறுதி:100_pray:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லிம்களை சாட்டாக வைத்து ஒன்றுமே செய்யாத அரசாங்கத்துக்கு பாராட்டுப் பத்திரம் வழங்கப்பட்டுள்ளது.சித்தார்த்தன் சம்பந்தருக்கு நோகாமல் பேசியிருக்கிறார்.சுமத்திரன் தமிழ்மக்களுக்கான தீர்வுக்கு அவர்கள்  பூரண சம்மதம் அரசியலமைப்பில் எழுதப்படும் வார்த்தைகளில்தான் பிரச்சினை உள்ளது என்கிறார். மாவை சேனாதிராசா வழக்கம் போல குழப்பகரமாகப் பேசியிருக்கிறார். ஒன்றமே புரிய வில்லை.அட இந்தக் கருமத்துக்காகவா? ஸ்கொட்லான்ட் சமஸ்டி பற்றி படிக்கப் போனீர்கள்?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 இப்படியே மகிந்த தடுக்கிறார்.முஸ்லிம்கள் தடுக்கிறாரர்கள் என்று சொல்லிக் கொண்டே அவங்கள் இழுத்தடிச்சுக் கொண்டே இருப்பார்கள்.நாங்கள் குடுகுடுப்பையைக் கிலிக்கிக்கோண்டு நல்லாட்சி அரசாங்கத்தில் நல்ல காலம் பிறக்குது.நல்ல காலம் பிறக்குது என்று கணிப்புச் சொல்லிக் கொண்டு இருக்க வேண்டியதுதான்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
    • 28 MAR, 2024 | 12:07 PM சிறுவர்களின் ஆபாசக் காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றுவது தொடர்பான முறைப்பாடுகளைப் வழங்குவதற்கு  புதிய முறைமையொன்றை  இன்று வியாழக்கிழமை (28) அறிமுகப்படுத்தவுள்ளதாகத்  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் இணையத்தளத்தினூடாக இன்று முதல் இது தொடர்பான முறைப்பாடுகளைப் பதிவு செய்ய  சந்தர்ப்பம் வழங்கப்படும் என அதன் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.   இதன் மூலம் பெறப்படும்  முறைப்பாடுகள்  நேரடியாக இங்கிலாந்தில் உள்ள "Internet Watch Foundation" க்பகு தெரிவிக்கப்படுவதுடன் அதனுடன் தொடர்புடைய ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது.    மேலும், இந்த முறைப்பாடுகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் யார் என்பதைக் கண்டறிந்து, சர்வதேச  பொலிஸார் மூலமாகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.    கடந்த காலங்களில் சிறுவர்களின் ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்கள் இணையத்தில் வெளியானமை தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது .   ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில் முறைப்பாடு வழங்க புதிய வழிமுறை | Virakesari.lk
    • அதிஉயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிப்பு யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் வடக்கு மாகாண ஆளுநர் தெரிவிப்பு.  (புதியவன்) அதி உயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் 21 வழிபாட்டுத் தலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவற்றுள் 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிக்கப்படவிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கூறியதாக அரச தலைவர் ஊடகப்பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது.  இவ்வாறாக கட்டுவன், வசாவிளான் மற்றும் பலாலி ஆகிய பகுதிகளில் காணப்படும் ஆலயங்களே வழிபாட்டு நடவடிக்கைகளுக்காக விடுவிக்கப்படவுள்ளன. அரச தலைவர் ஊடகப்பிரிவின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், இணைத் தலைவர்களான வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் தலைமையில் இன்று நடைபெற்றது. இதன்போது கடந்த கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், புதிய பிரேரணைகளும் சமர்பிக்கப்பட்டன. இதன்போது உரையாற்றிய வடக்கு மாகாண ஆளுநர், சுமார் 30 வருடங்களுக்கு மேலாக எவ்வித வழிபாடுகளையும் நிகழ்த்தாத குறித்த ஆலயங்களுக்கு முதலில் மக்கள் செல்ல வேண்டும் எனவும், இவர்களுக்கான போக்குவரத்து வசதிகளை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் இராணுவத்துடன் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவித்தார். மக்கள் அங்கு செல்லும் போது ஊடகவியலாளர்களுக்கும் அனுமதி வழங்கப்பட வேண்டும் என இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த விடயம் தொடர்பில் பாதுகாப்பு தரப்பினருடன் கலந்துரையாடி பரிசீலிக்கப்படும் என மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவர்கள் தெரிவித்தார்கள். இதேவேளை, 1985 ஆம் ஆண்டுக்கு பின்னர் வனவள மற்றும் வனஜீவராசிகள் பணிமனையின் கீழ் கையகப்படுத்தப்பட்ட காணிகளை விடுவிக்குமாறு துறைசார் அமைச்சரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் ஏப்ரல் மாதத்துக்குள் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் ஆளுநர் தெரிவித்தார்.  இதேவேளை, வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் விவசாய நவீனமயமாக்கல் செயற்பாடு தொடர்பில் மாகாண சபைக்கு அறிவிக்க வேண்டும் என குறித்த செயற்றிட்டத்தின் பிரதிப் பணிப்பாளருக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்தார்.  அத்துடன் விதை உருளைக் கிழங்கில் பக்றீரியா தொற்று ஏற்பட்டமை தொடர்பான முழுமையான அறிக்கையை சமர்பிக்குமாறு மாகாண விவசாய அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தினார். அத்துடன் யுக்திய சிறப்புச் சுற்றிவளைப்பின் ஊடாக கைது செய்யப்படும் நபர்களுக்கான புனர்வாழ்வு செயற்பாடுகளை மாத்திரம் மேற்கொள்ளாது, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் முழு வலையமைப்பையும் கண்டுபிடிக்க வேண்டும் என பொலிஸாருக்கு ஆளுநர் தெரிவித்தார்.  மேலும் பொதுமக்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்துக்குள் பொலிஸ் காவலரன் ஒன்றை அமைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது. குறித்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான, சி.சிறிதரன், செ.கஜேந்திரன், யாழ்ப்பாண மாவட்ட பதில் செயலாளர் ம.பிரதீபன், வடக்கு மாகாண சபைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பணிமனைத் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், பொலிஸார், முப்படையினர், சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.  இதன்போது, பொதுமக்களின் காணியில் கட்டப்பட்டுள்ள யாழ்.தையிட்டி விகாரை இடித்து அகற்றப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், செ.கஜேந்திரன் குறிப்பிட்டிருந்தனர்.(ஏ) அதிஉயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிப்பு (newuthayan.com)
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.