Jump to content

உடை, கம்மல் முதல் நாற்காலி வரை கொஞ்சம் கொஞ்சமாக ஜெயலலிதாவாக மாறிவரும் சசிகலா!


Recommended Posts

உடை, கம்மல் முதல் நாற்காலி வரை கொஞ்சம் கொஞ்சமாக ஜெயலலிதாவாக மாறிவரும் சசிகலா!

sasikala_new13_13494.jpg

ரசியல் தலைவர்கள் தங்களுக்கென தனிஅடையாளம் இருக்க வேண்டும் என்று விருப்பம் கொண்டவர்கள்.  அரசியல் தலைவர்கள் எதேனும் ஒரு விஷயத்தில் ஒருவரிடம் இருந்து இன்னொருவர் மாறுபட்டு இருப்பார்கள். அதிலும் பெண் அரசியல் தலைவர்கள் என்றால், கண்டிப்பாக குறிப்பிடும்படியான தனித்துவம் இருந்தே தீரும். அதுபோல அ.தி.மு.க பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கும் சசிகலா தனக்கென ஒரு அடையாளத்தை கொண்டு வர முயற்சிக்கிறார். ஆனால், அந்த மாற்றங்கள் அனைத்தும் மறைந்த முதல்வர்  ஜெயலலிதாவைப் பின்பற்றுவதுபோலத் தோன்றுகிறது. அப்படி அவரைப்போலவே சசிகலா பின்பற்றும் மாற்றங்கள் என்னவென்று தெரிந்து கொள்வோம்.

உடை:

பொதுச் செயலாளர் பதவிக்கு அ.தி.மு.க பொதுக்குழு உறுப்பினர்களால் நியமிக்கப்பட்டவர் சசிகலா. பொதுச்செயலாளர் ஆவதற்கு முதல்நாள் வரை சாதாரணமான உடையில் காணப்பட்டார். பொதுச்செயலாளர் ஆனபிறகு கழுத்து மூடப்பட்ட , கை முட்டி நீள ரவிக்கையும் அணிய ஆரம்பித்தார். ஏப்போதும் டல்லான கலர் புடவைகளை மட்டுமே அணிந்து வந்தவர், அன்றிலிருந்து பளீர் நிறங்களைக் கொண்ட உடைகளை அதிகம் உடுத்துகின்றார்.  புடவைக்குப் பொருத்தமான  நிறங்களில் ரவிக்கையும் அணிகிறார். ஜெயலலிதாவும் பெரும்பாலும் இதே தோற்றத்தில்தான் இருப்பார். உடைகளில் இருக்கும் வித்தியாசம் ஒன்றுதான். அவர் புடவை முந்தானையை தோள்களை மூடியபடி இருப்பார். சசிகலா இன்னும் அவ்வாறு மாறவில்லை.

தோடு (கம்மல்):

ஜெயலலிதா, சின்னதாக வைரத்தோடு மட்டுமே அணிந்திருந்தார். அதேபோல, இப்போது சசிகலாவும் அதே மாதிரி தோடு அணியத் தொடங்கியுள்ளார். 

சசிகலா

வாட்ச்:

பெரும்பாலும் இரு கைகளிலும் வளையல் அணியும் பழக்கம் உள்ளவர் சசிகலா. சில சமயங்களில் புடவை நிறத்துக்குத் தகுந்தாற் போல வாட்ச் அணியும் பழக்கமும் கொண்டவர். வாட்ச்-சின் பட்டை மிகவும் சின்னதாக இருக்கும். பொதுச்செயலாளர்  ஆனதும், ஜெயலலிதாவை போலவே கருப்பு பட்டை உடைய வாட்சை கட்டுகின்றார். அது போல  வாட்சின் டையலும் பெரியதாக இருக்கிறது. 

வைர மோதிரம்:

பொதுச்செயலாளர் பதவி ஏற்க அ.தி.மு.க அலுவலகத்துக்கு டிசம்பர் 31-ம் தேதி வந்தார் சசிகலா. அன்று எப்போதும் இல்லாத அளவுக்கு வைர மோதிரம் அணிந்திருந்தார். மிக எளிமையாக இருந்தவர், திடீரென்று அன்று ஆடம்பரத்தை வெளிகாட்டத் தொடங்கினார்.

தலை முடி:

எப்போதும் சசிகலா தலைமுடியை பின்னலாகப் போட்டிருப்பார். பொதுச்செயலாளர் பதவியேற்றபிறகு தன்னுடைய தலைமுடியை வலை போட்டு மூடியிருந்தார். இதுவும் ஜெயலலிதாவின் ஸ்டைல் தான்.

பொட்டு:

ஜெயலலிதா ஐயங்கார் வழக்கப்படி நெற்றியில் நாமம் போட்டிருப்பார். அதையும் தவறவிடாமல் சசிகலா பின்பற்றிக் கொண்டிருக்கிறார். வட்டமாக ஒரு பொட்டு வைத்து அதன் மேல் நாமம் போட்டுத்தான் இப்போதெல்லாம் சசிகலா அலுவலத்துக்கு வந்து கொண்டிருக்கிறார்.

11_13141.jpg

கார்:

ஜெயலலிதா பயன்படுத்திய TN09BE 6167 என்ற எண் கொண்ட லேண்ட் க்ரூஸர் காரில்தான் சசிகலா பயணிக்கிறார். அவரது பாதுகாப்புக்கு  நான்கு கார்கள் உடன் வருகின்றன. காரின் முன்பக்கம் ஜெயலலிதா உட்காரும் இடத்தில் இப்போது சசிகலா உட்காருகின்றார். 

நாற்காலி:

சசிகலா அ.தி.மு.க அலுவலகம் வருவதற்கு முன்னரே ஜெயலலிதா பயன்படுத்திய நாற்காலிகள் வந்து இறங்கின. அதில் இரண்டு நாற்காலிகள் அலுவலகத்தின் கீழ் தளத்திலும், மற்ற இரண்டு நாற்காலிகள் மேல் தளத்திலும் போடப்பட்டிருக்கின்றன. அந்த நாற்காலிகளில் ஒன்றில்தான் சசிகலா உட்கார்ந்தார். அதில் உட்கார்ந்து தான் கையெழுத்திட்டார். 

உச்சி முதல் உள்ளங்கால் வரை ஜெயலலிதாவை பின்பற்றுகின்றார் சசிகலா.ஜெயலலிதாவை பார்ப்பதுபோல உள்ளது என ஒரு தரப்பு மக்கள் சொன்னாலும், 'ஜெயலலிதா எப்போதும் ஜெயலலிதாவாக மட்டுமே இருக்கமுடியும்' என்று ஜெ.,வின் விசுவாசத் தொண்டர்கள் சொல்கிறார்கள், சந்திரமுகி படத்தில் ரஜினி, 

“கங்கா சந்திரமுகியா நின்னா

கங்கா சந்திரமுகியா நடந்தா

கங்கா முழு சந்திர முகியா மாறினா” என்று சொல்வது போல, சசிகலா ஜெயலலிதாவாக மாற , முயற்சிப்பது வெளிப்படையாகத் தெரியத்தான் செய்கிறது. வெளிதோற்றத்தில் ஜெயலலிதாவை பின்பற்றலாம். ஆனால், அவரின் தைரியம், கம்பீரம், ஆளுமையில் அவரை பின்பற்றுவாரா என்பது கேள்விக் குறியாகவே இருக்கிறது. 

http://www.vikatan.com/news/tamilnadu/77079-is-sasikala-copying-jayalalithaa.art

Link to comment
Share on other sites

chinnamma-sasikala-memes-img.JPG

:D:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, இசைக்கலைஞன் said:

chinnamma-sasikala-memes-img.JPG

:D:

சரவணன் : பார் .. பார் முழுசா அம்மாவாக மாறி நிற்கும் சசிகலாவை பார்..!!
நடராஜன்: என்ன கொடுமை சரவணன்..!!


டிஸ்கி :

கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி
தானும் அதுவாகப் பாவித்துத் - தானும் தன்
பொல்லாச் சிறகைவிரித்(து) ஆடினால் போலுமே
கல்லாதான் கற்ற கவி

 

 

 

 

 

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 1)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.    CSK, KKR, RR,LSG 2)    முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.       #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4  புள்ளிகள் ) RR     #2 - ?  (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் ) KKR     #3 - ?  (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) LSG     #4 - ?  (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி ) CSK 3)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) PSK 4)   மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத்  Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team RR 5)    மே 22, புதன் 19:30அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team LSG 6)   மே 24 வெள்ளி 19:30  சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator LSG 7)    மே 26, ஞாயிறு இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5  புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 RR 8 ) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி   CSK 9)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) RCB 10)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறானபெயருக்கு -2 புள்ளிகள் Riyan Parag  11)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 12)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Mustafizur Rahman 13)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) CSK 14)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் ) Virat Kholi 15)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RCB 16)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jasprit Bumrah 17)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 18)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Virat Kohli 19)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) CSK 20)    இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) DC ——— @ஈழப்பிரியன் அண்ணா, @கிருபன் ஜி @பையன்26 அன்புக்காக🙏. டெம்பிளேட்டுக்கு நன்றி @வாதவூரான்
    • "இருபது இருபத்திநாலு ஒரு பெண்ணாகி"     "இருபது இருபத்திநாலு ஒரு பெண்ணாகி தனக்கு தானே நிகரென கூக்குரலிட்டு இருபது இருபத்திமூன்றை எட்டி உதைத்து தன்னை அழகியென எமக்கு காட்டுகிறாள் !"   "அருகே வந்து எம்மை ஆரத்தழுவி தன் இதழால் முத்தம் பகிர்ந்து கருத்த வானில் புத்தாண்டு தொடக்கத்தில் தலை காட்டும் விண்மீண் தானாம் !"   "சற்றும் சலிப்புத்தரா அழகிய கண்ணுடனும் பெருத்த மார்புடனும் நீண்ட கழுத்துடனும் அற்புத ஒளிவீசும் தளிர் மேனியுடனும் . பெட்டி பாம்பாக்கி கண்டவரையும் மயக்குகிறாள் !"   "ஏற்றம் கொண்ட அழகிய பிட்டத்துடனும் பெரிய பட்டை சுற்றிய இடையுடனும் நெற்றி பொட்டும் குளிர் கன்னத்துடனும் பெண்டு வந்து போதை அள்ளிவீசுகிறாள் !"   "தன்தழுவலில் எம் இதயத்தை கவர்ந்து இருபது இருபத்திமூன்றை குறை கூறி பொன்னாய் வாழ்வை மீட்டு தருவேனென்று இறுமாப்புடன் எமக்கு சத்தியம் செய்கிறாள் !"   "என்றென்றும் பெருமையுடன் நிலைத்து வாழ இன்பம் பொங்கி ஒற்றுமை ஓங்க தன் நலமற்ற தலைவர்கள் தந்து இருளை நீக்கி ஒளியைத் தருவாளாம் !"   "மானிடர் செழிக்க மலரும் ஆண்டே நம்பிக்கை விதைத்து பேதம் ஒழித்து பனி விலத்தி துணிவு தந்து எம்மை காத்து அருள் புரியாயோ !"   "கூனிக் குறுகி நொடிந்த தமிழனுக்கு தும்பையும் கயிறாக்கி பிடித்து எழும்ப இனி ஒருதெம்பு அள்ளிக் கொடுவென எம் உறவுகளுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் !"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]             
    • 17. MI என்று எழுதி  விடுங்கோ.  நன்றி 
    • வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் ச‌கோ🙏🥰..............................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.