Jump to content

அரேபியர்களைத் திகைக்கச் செய்திருக்கும் பாடல்


Recommended Posts

அரேபியர்களைத் திகைக்கச் செய்திருக்கும் பாடல்

 

 

ஆண்களையும் ஆணாதிக்கத்தையும் விமர்சிக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் அரேபியப் பாடல் காட்சியொன்று உலகளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

‘கவலைகள்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தக் காணொளி, பெண்களைக் கட்டுப்படுத்தும் சவுதி அரேபிய அரசின் சட்டங்கள் கேலிசெய்யும் வகையில் அமைந்துள்ளன.

சவுதியில் பெண்கள் கார் செலுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதைக் கேலி செய்யும் வகையில், பெண்கள் அடங்கிய கார் ஒன்றை சிறுவன் ஒருவன் செலுத்துவது, பொம்மைக் கார் ஒன்றை ஒரு பெண் செலுத்துவது, சக்கரங்கள் பொருத்திய காலணிகளைப் பெண்கள் அணிந்துகொண்டு வீதியில் சுற்றிவருவது போன்ற மேலும் பல காட்சிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

பெண்களை மனதளவில் நோயாளியாக மாற்றும் ஆண்கள் அழிந்து போக வேண்டும் என்பதான பாடல் வரிகள் சவுதி அரேபியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளன.

மேலும், முஸ்லிம்களுக்கும் பெண்களுக்கும் எதிரானவராகச் சித்திரிக்கப்படும் அமெரிக்க ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் டொனால்ட் ட்ரம்ப்பின் உருவப்படமும் இந்தப் பாடலில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்தப் பாடல் வெளியானதையடுத்து உலகளவில் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/15160

Link to comment
Share on other sites

சவுதியில் ஆணாதிக்கத்திற்கு எதிராகப் போராடும் பெண்கள்..! வைரல் வீடியோ

சவுதியில் ஆணாதிக்கத்திற்கு எதிராகக் குரல் கொடுக்கும் விதத்தில் ஒரு பாடல் இயற்றப்பட்டு, யு- டியூபில் பதிவேற்றப்பட்டுள்ளது. அந்தப் பாடல் இணையத்தைக் கலக்கி வருகிறது. 

சவுதி பாடல்

சவுதி அரேபியாவில் பெண்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் உள்ளன. அதனைத் தளர்த்த வேண்டுமென்று அடிக்கடி பெண்கள் கோரிக்கை வைப்பர். ஆனால், ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. ஆண்களுக்கு பெண்கள் சமம் என்பதை உணர்த்தும் விதத்தில் கவலைகள் (Hwages) என்ற தலைப்பில் பாடல் உருவாக்கப்பட்டு கடந்த டிசம்பர் மாதம்  யூ- டியூபில் பதிவேற்றப்பட்டது. சவுதியைச் சேர்ந்த 8ies  என்ற நிறுவனம் இந்த வீடியோவைத் தயாரித்துள்ளது. அட்டகாசமான இசையில் பெண் சுதந்திரத்தை வெளிப்படுத்தும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. சர்ச்சைக்குப் பெயர் போன இயக்குநர் மஜின் அல் ஈஷா இந்த வீடியோவை இயக்கியுள்ளார். 

சவுதியின் கிராமப்புறக் கூத்துப் பாடலைத் தழுவி இயற்றப்பட்டுள்ள இந்தப் பாடலின் ஒவ்வொரு வரியும், ஆண்களைக் கடுமையாக விமர்சிக்கிறது. மன்னராட்சி நடைபெறும் சவுதி அரேபியாவில் இருந்து இப்படி ஒரு பாடல் வெளிவந்திருப்பது, சர்வதேச அளவில் கவனம் ஈர்த்துள்ளது. கடந்த டிசம்பர் 23ம் தேதி பதிவேற்றப்பட்ட இந்தப் பாடலை இதுவரை 30 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். 

'ஆண்களிடமிருந்து கடவுளால் மட்டுமே எங்களைக் காப்பாற்ற முடியும்' ( If only God would rid us of men ) என பாடல் தொடங்குகிறது. அதில், சவுதி அரேபிய இஸ்லாமிய பெண்கள் கார் ஓட்டுகின்றனர்; கூடைப்பந்து விளையாடுகின்றனர்; ஸ்கேட்டிங் செல்கின்றனர்; ஸ்கூட்டர் ஓட்டுகின்றனர்; ஆனந்தமாக நடனம் ஆடுகின்றனர். இவை அனைத்தையும் பர்தா அணிந்தவாறே செய்கின்றனர். ஆனால், பர்தாவுக்குள்  நாகரிக உடை அணிந்திருக்கின்றனர். பாடலில் இரு அராபியர்கள், ஸ்கேட்டிங்  செய்யும் பெண்களைத் தடுக்க முயல்கின்றனர்.

சவுதியில் பெண்களுக்குக் கார் ஓட்ட அனுமதி இல்லை. டிரைவிங் லைசென்சும் பெற முடியாது. இந்த வீடியோவில் ஒரு சிறுவன் கார் ஓட்டுவான். ஆனால், பெண்களுக்கு அந்த உரிமை இல்லை என்பது போல காட்சி அமைக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பையும் விமர்சிக்கிறது இந்தப் பாடல். அவரை 'ஹவுஸ் ஆஃப் மேன்' தலைவர் என குறிப்பிடுகிறது.  ஹிலாரியை வீழ்த்தி டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க அதிபராகியிருப்பது, பெண்களுக்கு நல்லதல்ல என்றும் பாடல் சொல்கிறது.

ஒரு கட்டத்தில் அந்தப் பெண்களை கட்டுப்படுத்த முயன்றவர்களுடன் சேர்ந்து டொனால்ட் ட்ரம்பும் காரில் அமர்ந்து போவது போல காட்சி அமைக்கப்பட்டிருக்கிறது. 'ஆண்கள் என்ற ஒரு இனம் அழிந்து போனால், அதற்கு அவர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டிருப்பதே காரணமாக அமையும்' என்றும் அந்தப் பாடலில் ஒரு வரி இடம் பெற்றுள்ளது. ‛ஒவ்வொரு ஆணும் உள்ளுக்குள் ஒரு மிருகம்’ என்கிறது இன்னொரு வரி. 'நாங்கள் இப்படித்தான் வாழ ஆசைப்படுகிறோம்' என்கிறது மற்றொரு வரி. 

கடந்த ஆண்டு இதே அல் ஈஷா இயக்கிய 'பார்ப்ஸ் 'என்ற பாடலும் சர்ச்சையில் சிக்கியது. உள்ளுர் சட்ட திட்டங்களை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்பதுதான் அந்த பாடலின் நோக்கம். இந்தப் பாடல் சர்சைக்குள்ளாகியுள்ள நிலையில்தான், தற்போது மற்றொரு பாடல் வைரல் ஆகியுள்ளது. இதற்கு சர்வதேச அளவில் வரவேற்பு கிடைத்தாலும், எதிர்ப்புகளும் கிளம்பாமல் இல்லை. 

http://www.vikatan.com/news/world/77162-music-clip-sparks-debate-and-celebration-in-saudi-arabia.art

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.