Jump to content

டி.டி.வி.தினகரனுக்கு ரூ.28 கோடி அபராதம் உறுதியானது!


Recommended Posts

டி.டி.வி.தினகரனுக்கு ரூ.28 கோடி அபராதம் உறுதியானது!

ttv_dinakaran_1_15339.jpg

அன்னிய செலாவணி மோசடி வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவின் சகோதரி மகன் டி.டி.வி.தினகரனுக்கு அமலாக்கத்துறை விதித்த ரூ.28 கோடி அபராதத்தை சென்னை உயர் நீதிமன்றம் உறுதிப்படுத்தியது.

1991 முதல் 1995 வரை வெளிநாட்டில் பலகோடி ரூபாய் முதலீடு செய்ததாக டி.டி.வி.தினகரன் மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிந்து ரூ.28 கோடி அபராதம் விதித்தது. இதை எதிர்த்து, டி.டி.வி.தினகரன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இந்த மனுவை இன்று விசாரித்த உயர் நீதிமன்றம், டி.டி.வி.தினகரனுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தாெகையை உறுதி செய்ததோடு, அவரது மனுவை தள்ளுபடி செய்தது. மேலும், தினகரனை திவாலானவராக அறிவிக்க வேண்டும் எனக்கோரிய வழக்கு விசாரணையை வரும் 31-ம் தேதிக்கு உயர் நீதிமன்றம் தள்ளிவைத்தது.

http://www.vikatan.com/news/tamilnadu/77071-hc-dismissed-dinakarans--foreign-exchange-case.art

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Quote

ttv_dinakaran_1_15339.jpg

எனக்கு ஒரு சின்ன சந்தேகம் .. யாராவது தீர்த்து வைப்பீர்களா ..?சாதாரண குப்பன் சுப்பன்  குடும்ப வறுமை காரணமாக 10 ரூபாய் நாணயத்தை உருக்கி பாத்திர பண்டங்கள்  செய்தால் விழுந்தடித்து கொண்டு வந்து கைது முட்டிக்கு முட்டி லாடம் கட்டும்  காவல் துறை  நேர்மையாக வாதாடி  சிறை தண்டனை பெற்று தரும் அரசு தரப்பு லொயர்.. பணம் ஒன்றுதானே ? குப்பனுக்கு பாத்திரம்.. இந்த மாதிரியான பொருளாதர கிரிமினல்களுக்கு ரியல் எஸ்ரேட் .. ரிசாட்.. மேலும் பல

அது போகட்டும்
சாதாரண குப்பன் சுப்பனை இந்த மாதிரி குற்றசாட்டின் பேரில் கைது செய்தால் குறைந்த பட்சம் பொதுவெளியில் அழைத்து வரும் போது தனது முகத்தை கர்சீப்பால் போர்த்தி கொள்ளுகிறான் அல்லது கர்சீப் இல்லாத அளவு இருந்தான் என்றால் கூட தனது முகத்தை இரண்டு கைகளால் மறைத்து கொள்ளுகிறான். ஆனால் இந்த மாதிரி ஊழல் கச்சாடைகளை கைது செய்தால்  கொஞ்சம் கூட சூடு சொரணை இன்றி பல்லை இளிப்பதும்.  வெட்கமின்றி போலீஸ் வேனில் ஏறும் போது டாடா காட்டுவதும் தர்மம் வெல்லும் என்று மீடியாக்களிடம் ஊளை இடுவதும் எதை காட்டுகிறது . ரெல் மீ ?:rolleyes:

டிஸ்கி :

ஜட்ஜ் எசமான் இது அவரின்ட ஒரு நாள் கைசெலவுக்கன பொக்க்ற் மணி.!!:cool:

 

 

Link to comment
Share on other sites

தினகரனுக்கு ரூ.28 கோடி அபராதம் விதித்தது சரியே :
அன்னிய செலாவணி மோசடி வழக்கில் தீர்ப்பு
 
 
 

சென்னை: அ.தி.மு.க., பொதுச்செயலர் சசிகலாவின் சகோதரியின் மகனும், முன்னாள் எம்.பி.,யுமான, டி.டி.வி.தினகரனுக்கு, 28 கோடி ரூபாய் அபராதம் விதித்து, அன்னிய செலாவணி ஒழுங்குமுறை மேல்முறையீட்டு வாரியம் பிறப்பித்த உத்தரவை, சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது; வாரியத்தின் உத்தரவை எதிர்த்த, தினகரனின் மனுவை, உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

 

Tamil_News_large_168521320170106230002_318_219.jpg

ஜெயலலிதா மறைவுக்கு பின், அ.தி.மு.க.,வின் பொதுச்செயலராக, அவரது தோழி சசிகலா நியமிக்கப்பட்டார். சசிகலா சகோதரியின் மகன், தினகரன். 1999ல் நடந்த லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., சார்பில், பெரியகுளம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்;

2004ல் நடந்த தேர்தலில், தோல்வி அடைந்தார். பின், ராஜ்யசபாவுக்கு, அ.தி.மு.க., சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அ.தி.மு.க.,வில் பொருளாளர், ஜெயலலிதா பேரவை மாநிலச் செயலர் என, பொறுப்புகளை வகித்தார்.

தற்போது, சென்னை, ஆர்.கே.நகர் தொகுதியில், அவர் போட்டியிட உள்ளதாக, தகவல் வெளியாகி இருந்தது.'இந்திய ரூபாய் மதிப்பில், 36 கோடி ரூபாய் அளவுக்கு, அமெரிக்க டாலராக, 1.04 கோடியை, அங்கீகாரமில்லாத டீலர்களிடம் பெற்று, இங்கிலாந்தில், விர்ஜின் தீவில் துவங்கப்பட்ட, 'டிப்பர் இன்வெஸ்ட்மென்ட்ஸ்'

நிறுவனத்தின், பார்க்லேஸ் வங்கி கணக்கில், 'டிபாசிட்' செய்தார்; இதன் மூலம், அன்னிய செலாவணி ஒழுங்குமுறை சட்டத்தை மீறினார்' என, தினகரன் மீது, குற்றம் சாட்டப்பட்டது.

அபராதம் :


இதை விசாரித்த அமலாக்க பிரிவு,தினகரனிடம் விளக்கம் கேட்டு, 1996 ஜனவரியில், 'நோட்டீஸ்' அனுப்பியது. அதைத் தொடர்ந்து, டில்லியில் உள்ள அமலாக்கப் பிரிவு இயக்குனரகத் தின் சிறப்பு இயக்குனர், 31 கோடி ரூபாய் அபராதத்தை, தினகரனுக்கு விதித்தார். இதற்கான உத்தரவு, 1998 பிப்ரவரியில் பிறப்பிக்கப்பட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து, டில்லியில் உள்ள அன்னிய செலாவணி ஒழுங்குமுறை மேல்முறை யீட்டு வாரியத்தில், தினகரன் மேல்முறையீடு செய்தார். அபராதத் தொகையை, 28 கோடி ரூபாயாகக் குறைத்து, 45 நாட்களுக்குள் செலுத்தும் படி, 2,000 மே, 5ல், மேல்முறையீட்டு வாரியம் உத்தரவிட்டது.
வாரியத்தின் உத்தரவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், தினகரன் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த, தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி மகாதேவன் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு:

அன்னிய செலாவணி பாதுகாப்பு மற்றும் கடத்தல் தடுப்பு சட்டமான, 'காபிபோசா'வில், தினகரன் காவலில் வைக்கப்பட்டதை எதிர்த்து, உயர் நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனு மீதான விசாரணையின் போது, 'இந்திய குடிமகன் அல்ல' என, தினகரன் தரப்பில் கூறப்பட்டது;

ஆனால், அவர் தாக்கல் செய்த தேர்தல் வழக்கில், இந்திய குடிமகன் என கூறியுள்ளார். அன்னிய செலாவணி ஒழுங்கு முறை அதிகாரிகள் முன், 'வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்' எனக்

 

கூறியுள்ளார். இப்படி வெவ்வேறு நிலைப் பாட்டை, தினகரன் எடுத்துள்ளார். சட்டப்படி, இதை அனு மதிக்க முடியாது. தினகரன், இந்திய குடிமகன் தான் என்கிற அமலாக்கப் பிரிவினரின் உத்தரவில், குறுக்கிடத் தேவையில்லை.

மனு தள்ளுபடி :


ஆவணங்களை பரிசீலிக்கும் போது, தினகரனுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது தெரிகிறது. ஆவண சாட்சியங்கள் மற்றும் சாட்சிகளின் வாக்குமூலங்களில் இருந்து, தினகரன் குற்றம் புரிந்தது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

எனவே, அன்னிய செலாவணி ஒழுங்குமுறை மேல்முறையீட்டு வாரியத்தின் உத்தரவு, உறுதி செய்யப்படுகிறது. தினகரனின் மனு, தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு முதல் பெஞ்ச் உத்தரவிட்டு உள்ளது.
தினகரனுக்கு, அமலாக்கப் பிரிவு அனுப்பிய, திவால் நோட்டீசை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. இதை எதிர்த்து, அமலாக்கப் பிரிவு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை, ஜன., 31க்கு, முதல் பெஞ்ச் தள்ளி வைத்தது.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1685213

Link to comment
Share on other sites

தினகரன் தலையெழுத்தை மாற்றிய தீர்ப்பு!

 

ஜெயலலிதாவின் திடீர் மறைவுக்குப் பிறகான வெற்றிடத்தில், மீண்டும் வெளிச்சத்துக்கு வர மன்னார்குடி குடும்பத்தில் பலரும் முயற்சிக்கின்றனர். அந்தக் குடும்பத்திலிருந்து முதன்முதலில் அரசியலுக்கு வந்த டி.டி.வி.தினகரன் இதில் முக்கியமானவர். ‘சசிகலாவுக்குப் பதிலாக முதல்வர் பதவியில் அமரப்போகிறவர்’ என மன்னார்குடி குடும்பத்திலேயே சிலரால் முன்னிறுத்தப்பட்ட தினகரன் மீது சம்மட்டி அடியாக இறங்கியிருக்கிறது, சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு. ‘அந்நியச் செலாவணி மோசடி வழக்கில் தினகரனுக்கு அமலாக்கத் துறையினர் விதித்த 28 கோடி ரூபாய் அபராதத்தை உறுதி செய்து நீதிமன்றம் தீர்ப்பு தந்திருக்கிறது.

1991 - 96 காலகட்டத்தில் ஆட்சியில் இருந்த ஜெயலலிதா மீது, 96-ம் ஆண்டுக்குப் பிறகு ரக ரகமாக வழக்குகள் பாய்ந்தன. அப்போது ஜெயலலிதாவோடு ஒரே வீட்டில் வசித்த சசிகலா, அவரது உறவினர்களான இளவரசி, சுதாகரன், தினகரன், பாஸ்கரன் ஆகியோர் மீதும் பல வழக்குகள். கால வெள்ளத்தில் சில வழக்குகள் வலுவிழந்தன; ஆனால், சில வழக்குகள் மட்டும் நிரந்தரத் தலைவலியாக மாறின. சொத்துக் குவிப்பு வழக்கு, ஃபெரா சட்டத்தின் கீழ் டி.டி.வி.தினகரன் மீது போடப்பட்ட வழக்கு போன்றவை இதற்கு உதாரணம்.

p2.jpg

1991-96 காலகட்டத்தில் டி.டி.வி.தினகரன், பாஸ்கரன் ஆகியோர், ஜெயலலிதாவின் வெளிநாட்டுப் பணப்பரிமாற்றங்களைக் கவனித்துக்கொண்டனர். அவர்களால், ஜெ.ஜெ. டி.வி ஒப்பந்தம், வெளிநாடுகளில் முதலீடுகள் செய்தது, வெளிநாட்டில் வாழும் இந்தியர் மூலம் ஹவாலா பணம் கைமாறி வந்து இங்கு  சொத்துகள் வாங்கியது, வெளிநாட்டு கார்கள் வாங்கியது என பல வழக்குகள் பாய்ந்தன. அவற்றால் ஏற்பட்ட கெட்ட பெயர், ஜெயலலிதாவின் தலையில் வந்து விடிந்தது.

இப்படித் தொடரப்பட்ட வழக்குகளில், ஜெ.ஜெ. டி.வியோடு சேர்ந்து சசிகலா, பாஸ்கரன், திவாகரன் மீது தொடரப்பட்ட வழக்குகள் இன்னும் நிலுவையில் இருக்கின்றன. ஆனால், ஃபெரா சட்டத்தின் கீழ் தனித்தனியாக இவர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகளில் கடந்த மே மாதம் எழும்பூர் நீதிமன்றம் இவர்களை விடுதலை செய்தது. ஆனால், சசிகலாவின் அக்காள் வனிதாமணியின் மகன் டி.டி.வி.தினகரன் மட்டும் தப்பவில்லை.

தினகரன் ஒரு காலத்தில் கார்டனின் செல்லப்பிள்ளையாக இருந்தார். இவர் 1995-96-ம் ஆண்டுகளில் அங்கீகாரம் பெறாத முகவர் மூலம் ஒரு கோடியே 4 லட்சத்து 93 ஆயிரத்து 313 அமெரிக்க டாலரை பிரிட்டிஷ் வர்ஜின் தீவுகளில் இருக்கும் ‘டிப்பர் இன்வெஸ்ட்மென்ட்ஸ்’ எனும் நிறுவனத்தில் முதலீடு செய்தார். பார்க்லே வங்கி மூலமாக தினகரன் இந்த முதலீட்டைச் செய்தாா். இதுகுறித்து, அயல்நாடு பணப் பரிமாற்ற ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் அவர்மீது மத்திய அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்தது. இந்த விவகாரத்தில் தினகரன் சில விளக்கங்களைக் கொடுத்தார். அதை ஏற்றுக்கொண்டு, 62 லட்சத்து 61 ஆயிரத்து 313 மதிப்புள்ள அமெரிக்க டாலர் தொகையை மட்டும் கணக்கில் கொண்டு விசாரணை நடைபெற்றது.

இதில், தினகரன் மீதான குற்றச்சாட்டு நிரூபணமானது. இதையடுத்து, கடந்த 1998-ம் ஆண்டு, அவருக்கு 31 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. தினகரன், இதை எதிர்த்து ஃபெரா மேல்முறையீட்டு வாரியத்தில் மேல்முறையீடு செய்தார். இதை விசாரித்த மேல்முறையீட்டு வாரியம், அபராதத் தொகையை 28 கோடியாக குறைத்து 2000-ம் ஆண்டு மே மாதம் 5-ந் தேதி உத்தரவிட்டது. ஆனால், தினகரன் அதையும் செலுத்த மறுத்தார். இந்த நேரத்தில் மத்திய அமலாக்கத் துறை, தினகரனை திவாலானவர் என அறிவிக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. அது ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, 28 கோடி ரூபாய் அபராதத்தை செலுத்த மறுத்ததுடன், அதை ரத்து செய்யக்கோரி, தினகரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனுத்தாக்கல் செய்தார்.

16 ஆண்டுகள் கழித்து, இந்த மேல்முறையீட்டு மனுவில் சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் தீர்ப்பளித்துள்ளது.

‘தான் சிங்கப்பூர் குடியுரிமை பெற்றவர் என்பதால் இந்திய சட்டங்களால் என்னை தண்டிக்க முடியாது’ என தினகரன் வாதிட்டு இருந்தார். ஆனால், “தான் இந்தியக் குடிமகன் இல்லை; வெளிநாட்டில் வாழும் இந்தியர் என்று அவர் கூறியுள்ளதை ஏற்கமுடியாது. அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் ‘காஃபிபோசா’ சட்டத்தின் கீழ் மனுதாரர் மீது வழக்குப் பதிவுசெய்து, அவரைக் கைது செய்துள்ளனர். அந்த வழக்கு விசாரணையின்போதும் ‘தான் வெளிநாட்டில் வசிக்கிறேன்’ என்று கூறியவர், பெரியகுளம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டுள்ளார். அதில் தோல்வியடைந்தபோது, உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்குத் தாக்கல் செய்துள்ளார். அப்படிச் செய்தபோது, தான் இந்தியக் குடிமகன் என்று கூறியுள்ளார். இப்படி ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு நிலைப்பாட்டை எடுத்துள்ளார். எனவே, அமலாக்கப் பிரிவு  விசாரணையில் நீதிமன்றம் குறுக்கிட விரும்பவில்லை” என்று தீர்ப்பளித்தனர் நீதிபதிகள்.

‘ஃபெரா மேல்முறையீட்டு வாரியம் சாட்சியங்களை சரியாகப் பார்க்காமல், தன் அதிகார வரம்பை மீறி செயல்பட்டது’ என்பது தினகரனின் வாதம். ஆனால், ‘வலுவான ஆதாரங்களைப் பார்த்தே இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இன்னும் சொல்லப்போனால், தினகரன் 1994 ஜூலையில் சிங்கப்பூரில் நடந்த டிப்பர் இன்வெஸ்ட்மென்ட்ஸ் இயக்குநர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டதாகக் கூறியிருந்தார். உண்மையில் அந்த நேரத்தில் அவர் இந்தியாவில்தான் இருந்தார். இப்படி பல விஷயங்களை வைத்தே தீர்ப்பு தரப்பட்டுள்ளது’ என்கிறது தீர்ப்பு.

p2a.jpg

‘‘மனுதாரர் தனக்கு அமலாக்கப் பிரிவு விசாரணையின்போது சந்தர்ப்பம் அளிக்கவில்லை என்று கூறியுள்ளார். இது தவறானது. ஆவணங்களைப் பார்க்கும்போது அவருக்கு பல சந்தர்ப்பம் அளிக்கப்பட்டுள்ளது தெரிகிறது. இது தவிர காளன் என்ற அதிகாரி உள்நோக்கத்துடன் செயல்பட்டார் என்று மனுதாரர் ஒரு புகார் கூறியுள்ளார். காளன் என்ற இந்த அதிகாரி புலன் விசாரணை அதிகாரி. எனவே, இவருக்கும் ஃபெரா மேல்முறையீட்டு ஆணைய விசாரணைக்கும் தொடர்பு இல்லை. டிப்பர் கம்பெனிதான் வெளிநாட்டு வங்கியில் பணம் முதலீடு செய்தது என்று மனுதாரர் கூறியதை ஏற்க முடியாது. இந்த கம்பெனியை மனுதாரர்தான் நிர்வகித்துள்ளார். எனவே, அந்நியச் செலாவணி மோசடி செய்ததாக தினகரன் மீதுள்ள குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது” என்று தீர்ப்பளித்து, டி.டி.வி. தினகரன் தாக்கல் செய்த அப்பீல் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

இதுகுறித்து தினகரன் தரப்பில் பேசியபோது, ‘‘96 காலகட்டத்தில் அரசியல் பழிவாங்கலுக்காக போடப்பட்ட வழக்கு அது. அப்போது மாநிலத்தில் தி.மு.க அரசும், மத்தியில் நிதி அமைச்சராக ப.சிதம்பரமும் இருந்தனர். அவர்கள் எங்களைப் பழிவாங்க வேண்டுமென்று இப்படிப்பட்ட பொய்யான வழக்குகளைப் போட்டனர். தினகரன் இந்தியக் குடிமகன். ஆனால், வெளிநாட்டுக் குடியுரிமையும் அந்தக் காலகட்டத்தில் இருந்தது. அதைக் கருத்தில் கொண்டால், அந்தப் பரிமாற்றம் முறைகேடானது அல்ல. அதை உயர் நீதிமன்றம் கருத்தில் கொள்ளத் தவறிவிட்டது. அதனால், விரைவில் உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பாக மேல் முறையீடு செய்ய உள்ளோம்” என்றனர்.

சசிகலா குடும்பம் சந்திக்காத வழக்குகளா?

http://www.vikatan.com/juniorvikatan/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Posts

    • 2016 இல் போனபோது 1000 ரூபாய் கேட்டு போராடி கொண்டிருந்தனர். 1000 ரூபாய் ஆக்கிய கையோடு, அதன் பெறுமதி 300 ஆகிவிட்டது. இப்போ 1700…. பாவப்பட்ட சனங்கள். இதில் ஆட்சியில் அமைச்சராக இருக்கும் கட்சியே போராட்டம் நடத்தும் கண்துடைப்பு வேற.
    • கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த இளைஞர் பிணை கோருவதை எதிர்பார்க்கவில்லையாம்! 19 APR, 2024 | 05:05 PM   கனடாவின் ஒட்டாவாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட இளைஞர் பிணை கோருவதை எதிர்ப்பார்க்கவில்லை என அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். 19 வயதான  குறித்த இளைஞன் கடந்த மார்ச் மாத ஆரம்பத்தில் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் மீது ஆறு கொலைக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.    கல்விக்காக கனடா சென்றிருந்த அவர், அடுத்த வாரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன் அவர் மீதான வழக்கின் முதற்கட்ட விசாரணைக்கு நாட்கள் ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181473
    • எனது பதிலும் மனிதன் தான். ஆனால், விளக்கம் நாளாந்த வாழ்க்கையோடு. இதில், நடக்கும் என்பதற்கு நடை மட்டும் என கருது எடுக்காது, நடக்கும் (இயங்கும்) விலங்கு. காலை பொழுது : 4 கால் , உறங்கம், உறக்கத்தில் இருந்து எழுவது. மதியம் : நடை  அந்தி மயங்கி,  இயங்க விரும்புவது ... ஆணும், பெண்ணும் 3 'கால்களில்'  இயங்குவது. 
    • மக்களவைத் தேர்தல்: தமிழகத்தில் மதியம் 3 மணிவரை 51.41% வாக்குப்பதிவு 19 ஏப்ரல் 2024, 01:31 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது. தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7:00 மணிக்கு தொடங்கியுள்ளது. தமிழகத்தில் மதியம் 3:00 மணிவரை மொத்தம் சராசரியாக 51.41% வாக்குகள் பதிவாகிருக்கின்றன. தேர்தல் ஆணையத்தால் அனுமதிக்கப்பட்ட வாக்காளர்கள் தங்களது ஆவணங்களோடு, தங்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு சென்று மாலை 6 மணி வரை வாக்கு செலுத்தலாம். இந்தத் தேர்தலில் பொதுமக்களுடன், முக்கியத் தலைவர்களும் பிரபலங்களும் வாக்களித்து வருகிறார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை எஸ்.ஐ.டி கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடிக்கு தனது குடும்பத்தினருடன் நடந்தே சென்று வாக்கு செலுத்தினார். கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஊத்துப்பட்டி வாக்கு சாவடியில் அண்ணாமலை வாக்களித்தார். தென் சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவான்மியூர் பாரதி தாசன் தெருவில் உள்ள சென்னை மாநகராட்சிப் பள்ளியில், அதே பகுதியில் வசிக்கும் நடிகர் அஜித்குமார், தனது வாக்கை பதிவு செய்ய செய்தார். சேலம் சிலுவம்பாளையத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சிதம்பரத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப சிதம்பரம், சென்னை சாலிகிராமத்தில் பா.ஜ.க தென் சென்னை வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் வாக்களித்தனர். தருமபுரியில் பாமக வேட்பாளர் சௌம்யா அன்புமணியும், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸும் வாக்களித்தனர்.   தமிழகத்தில் 51.41% வாக்குப்பதிவு தமிழகத்தில் மதியம் 3:00 மணியின் வாக்குப்பதிவு நிலவரத்தை தேர்தல் ஆனையம் வெளியிட்டிருக்கிறது. தமிழகத்தில் மொத்தம் 51.41% வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. அதிகபட்சமாக தர்மபுரியில் 57.86% வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. அதைத்தொடர்ந்து இரண்டாமிடத்தில் 57.67% வாக்குகளுடன் நாமக்கல்லும், 57.34% வாக்குகளுடன் கள்ளக்குறிச்சியும் இருக்கின்றன. மாநிலத்திலேயே ஆகக்குறைவாக மத்திய சென்னை தொகுதியில் 41.47% வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. முன்னர் செய்தியாளர்களிடம் பேசியிருந்த தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, வெயில் அதிகமாக இருப்பதும் சென்னையில் குறைந்த அளவே வாக்குகள் பதிவானதற்கு காரணமாக இருக்கலாம் என்றார். அதற்காக வாக்குச்சாவடிகளில் பந்தல், இருக்கைகள் ஆகியவற்றை ஏற்பாடு செய்திருப்பதாகவும் தெரிவித்தார். படக்குறிப்பு,வெறிச்சோடிக் காணப்பட்ட பரந்தூர் வாக்குச்சாவடி தேர்தலைப் புறக்கணித்த தமிழக கிராமங்கள் பரந்தூர் கிராமம், காஞ்சிபுரம்: சென்னை விமான நிலையத்தின் விரிவாக்கப் பணிகளுக்காக விவசாய நிலங்களைக் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர். நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கையை எதிர்த்து 600 நாட்களுக்கும் மேலாக பரந்தூர் நடத்தும் போராட்டத்தின் ஒரு பகுதியாக தேர்தலைப் புறக்கணித்துள்ளதாக பரந்தூர் மக்கள் கூறுகின்றனர். மொத்தம் 1,375 வாக்குகள் உள்ள இந்தக் கிராமத்தின் மக்களை வாக்களிக்க வலியுறுத்தி வருவாய்த் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், ஆனால் கிராம மக்கள் யாரும் வாக்களிக்க போவதில்லை என்றும் அம்மக்கள் பிபிசி தமிழிடம் கூறினர். திருமங்கலம் தொகுதியில் 5 கிராமங்கள்: விருதுநகர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருமங்கலம் சட்டமன்ற தொகுதியில் 5 கிராம மக்கள் தேர்தலைப் புறக்கணித்து வருகின்றனர். அதிகாரிகள் அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தினர். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கள்ளிக்குடி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் கோழிக் கழிவு மூலம் உற்பத்தி செய்யப்படும் கெமிக்கல் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னம்பட்டி, ஓடைப்பட்டி, சோளம்பட்டி, பேக்குளம், உன்னிப்பட்டி ஆகிய கிராம பொதுமக்கள் ஒன்று சேர்ந்து நாடாளுமன்ற தேர்தலில் வாக்கு பதிவு முன்னிட்டு புறக்கணித்து வருகின்றனர். படக்குறிப்பு,தர்மபுரி மாவட்டம் ஜோதிஅள்ளி கிராமத்தில் உள்ள வாக்குசாவடி மையம் வெறிச்சோடி காணப்பட்டது ஜோதிஅள்ளி கிராமம், தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் ஜோதிஅள்ளி கிராமத்தில் ரயில்வே தரைப்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்காததால் நாடாளுமன்ற ஒட்டுமொத்த கிராம மக்களும் தேர்தலை புறக்கணித்திருக்கின்றனர். தர்மபுரி நாடாளுமன்ற தொகுதிம் பாலக்கோடு சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஜோதிஹள்ளி கிராமத்தில் நீண்ட நாட்களாக ரயில்வே தரைபாலம் அமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கையை முன்வைத்து வந்தனர். இதுவரை எந்த அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தவராததால் ஒட்டுமொத்த கிராம மக்களும் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்துள்ளனர். இக்கிராமத்தில் 1,436 வாக்குகள் உள்ளன. இதுவரை ஒருவாக்கு கூட பதிவாகவில்லை. பொட்டலூரணி, தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே உள்ள பொட்டலூரணி கிராம மக்கள் அப்பகுதியிலுள்ள மீன் கழிவு ஆலைகளை மூடக்கோரி தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். பொட்டலூரணி கிராமத்தில் ராணுவ வீரர்கள் மற்றும் காவல் துறையில் பணியாற்றுபவர்கள் அதிகம் வசிக்கின்றனர். இந்தக் கிராமத்தைச் சுற்றி மூன்று தனியார் மீன் கழிவு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த ஆலைகளில் இருந்து வெளியேறும் துர்நாற்றம் மற்றும் இரவு நேரங்களில் வெளியேறும் நச்சுப் புகை காரணமாக அந்த கிராமத்தில் உள்ள குழந்தைகள், நோயாளிகள், பொதுமக்கள் ஆகியோர் மூச்சுத் திணறல் மற்றும் பல்வேறு சுவாச கோளாறுகளால் பாதிக்கப்பட்டு வருவதாக அங்கு வசிக்கும் மக்கள் கூறுகின்றனர். இந்த மீன் கழிவு ஆலைகளை மாவட்ட நிர்வாகம் உடனடியாக மூட வலியுறுத்தி கடந்த மூன்று ஆண்டுகளாக பொட்டலூரணி கிராம மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் மாவட்ட நிர்வாகம் இதுவரை இந்த பிரச்சனைக்கு தீர்வு காண எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி கிராம மக்கள் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்து வீடுகள் மற்றும் பல்வேறு பகுதிகளில் கருப்பு கொடிகளை கட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தக் கிராமத்தில் மொத்தம் உள்ள 931 வாக்குகளில் இதுவரை 15 வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. படக்குறிப்பு,தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபடுள்ள வேங்கைவயல் கிராம மக்கள் வேங்கைவயல், புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலந்த குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாததை கண்டித்து கிராம மக்கள் வாக்களிக்க வராமல் தேர்தல் புறக்கணிப்பு செய்துள்ளனர். கடந்த 2022-ஆம் ஆண்டு டிசம்பர் 26-ஆம் தேதி ஒரு பிரிவினர் பயன்படுத்தும் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மனிதக் கழிவுகள் கலந்த விவகாரத்தில் ஓராண்டுக்கு மேலாகியும் இதுவரை சிபிசிஐடி போலீசாரால் குற்றவாளிகளை கண்டுபிடிக்கவில்லை. இது தொடர்பாக 139 நபர்களிடம் வாக்குமூலம் பெற்று அதில் 31 நபர்களிடம் டிஎன்ஏ ரத்த மாதிரி பரிசோதனையும் இரண்டு பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் செய்யப்பட்டது. டிஎன்ஏ மாதிரி பரிசோதனை ஒருவருக்கு கூட ஒத்து போகாததால் சிபிசி விசாரணை பின்னடைவை சந்தித்துள்ளது. குற்றவாளிகளை காவல்துறையினர் கண்டுபிடிக்காததை கண்டித்து தேர்தல் புறக்கணிப்பு செய்யப் போவதாக வேங்கை வயல் கிராம மக்கள் அறிவித்திருந்தனர். குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் வரை தேர்தலில் வாக்களிக்கப் போவதில்லை என்று அதிகாரிகளிடம் பொதுமக்கள் கூறியுள்ளனர். பொதுமக்களிடம் அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். பட மூலாதாரம்,UGC சென்னையில் வாக்களித்த திரைப்பிரபலங்கள் சென்னையில் உள்ள வாக்குச்சாவடிகளில் தமிழ் திரைப்படப் பிரபலங்கள் வாக்களித்து வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கைச் செலுத்தினார். அதேபோல் நடிகர் தனுஷ்-உம் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியிலுள்ள வாக்குச்சாவடியில் தனது வக்கைச் செலுத்தின்னார். தென் சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவான்மியூர் பாரதி தாசன் தெருவில் உள்ள சென்னை மாநகராட்சிப் பள்ளியில், அதே பகுதியில் வசிக்கும் நடிகர் அஜித்குமார், தனது வாக்கை பதிவு செய்ய செய்தார். முதல் நபராக வரிசையின் நின்று தனது வாக்கை அவர் பதிவு செய்தார். நடிகர் சிவகார்த்திகேயன் சென்னையில் தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார். அப்போது பேசிய அவர், “புல்லட்டை விட வலிமையானது வாக்கு, வாக்களித்தால் தான் பிரச்னைகளுக்கு குரல் கொடுக்க முடியும்,” என்றார். அனைவரும் வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். சென்னை விருகம்பாக்கத்தில் இயக்குநர் வெற்றிமாறன் வரிசையில் நின்று காலையிலேயே தனது வாக்கைச் செலுத்தினார். சென்னை தி.நகரில் நடிகர் பிரபு தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், "இன்று விடுமுறை என்று கருதி வீட்டில் இருக்க வேண்டாம். வாக்களிப்பது ஜனநாயக உரிமை. உங்கள் விருப்பப்படி அனைவரும் வாக்களியுங்கள்," என்றார். பட மூலாதாரம்,UGC உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழா இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் 96 கோடியே 88 லட்சத்து 21 ஆயிரத்து 926 பேர் வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 49,72,31,994 ஆண் வாக்காளர்களும், 47,15,41,888 பெண் வாக்காளர்களும், 48,044 மூன்றாம் பாலின வாக்காளர்களும் உள்ளனர். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மொத்தமாக 6.23 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 3.06 கோடி ஆண்கள், 3.17 கோடி பெண்கள் மற்றும் 8,467 மூன்றாம் பாலினத்தவர்கள் அடங்குவர். தமிழ்நாட்டில் ஆண்களைவிட பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகம். மேலும் தமிழ்நாட்டில், நூறு வயதை எட்டிய 8,765 வாக்காளர்கள் உள்ளனர். 18-19 வயதுக்கு உட்பட்ட, முதல்முறை வாக்காளர்களின் எண்ணிக்கை 10.92 லட்சம். இதே இந்தியா முழுவதும் 100 வயதைக் கடந்தவர்களின் எண்ணிக்கை 2,38,791. 18-19 வயதுக்குட்பட்ட முதல் முறை வாக்காளர்களின் எண்ணிக்கை 1,84,81,610 ஆகும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டவர்கள் மட்டுமே தேர்தலில் வாக்களிக்க முடியும். யாரெல்லாம் வாக்கு செலுத்தலாம்? இந்திய தேர்தல் தேர்தல் ஆணையத்தால் வாக்காளர் என அங்கீகரிக்கப்பட்டு வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ளவர்கள் வாக்கு செலுத்த முடியும். ஆனால், அதற்கு அந்த நபர் குறிப்பிட்ட தொகுதிக்குள் வரையறுக்கப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருக்க வேண்டும். இதுவரை வாக்காளர் பட்டியலில் இடம்பெறாதவர்கள் வாக்கு செலுத்த முடியாது. அதே போல் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் சிறைவாசிகள் வாக்கு செலுத்த முடியாது.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உங்கள் வாக்குச்சாவடி மற்றும் வாக்காளர் பட்டியல் உள்ளிட்ட விவரங்களை அறிந்துக் கொள்ள தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. உங்கள் வாக்குச்சாவடியை அறிவது எப்படி? உங்களுடைய பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருக்கிறதா என்பதை அறிய அதற்காக தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள இணையதளத்திற்கு ( https://electoralsearch.eci.gov.in/ ) சென்று உங்களது விவரங்களை உள்ளிட்டு தேடிப் பார்க்கலாம். அதே தளத்தில் உங்களது வாக்குச்சாவடி குறித்த விவரங்களும் இடம்பெற்றிருக்கும். மேலும், voters.eci.gov.in என்ற இணையதளத்திலும் இந்த விவரங்களை தெரிந்துகொள்ளலாம். இதற்கு உங்களுடைய வாக்காளர் எண் தெரிந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் 1950 என்ற எண்ணை அழைத்தோ அல்லது ECI என்று டைப் செய்து, ஓர் இடைவெளி விட்டு, உங்களின் EPIC எண்ணைப் (வாக்காளர் எண்) பதிவிட்டு குறுஞ்செய்தி அனுப்பியோ விவரங்களை தெரிந்துக் கொள்ளலாம். பொதுவாக வாக்குச் சாவடிகள் உங்களது வீட்டிலிருந்து சுமார் 2 கி.மீ. தூரத்திற்குள் இருக்கும் வகையில் தான் அமைக்கப்பட்டிருக்கும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தேர்தல் ஆணையத்தின் இணையதளம் வாயிலாக உங்கள் தொகுதியின் வேட்பாளர் யார் என்பதை தெரிந்துக் கொள்ளலாம். உங்கள் தொகுதி வேட்பாளர்களைப் பற்றி தெரிந்துகொள்வது எப்படி? தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் இதற்காக வழங்கப்பட்டுள்ள பக்கத்திற்கு (https://affidavit.eci.gov.in/CandidateCustomFilter) சென்று, எந்த மாநிலத்தில் எந்தத் தொகுதி எனத் தேர்வுசெய்தால், அந்தத் தொகுதியில் போட்டியிட அனுமதிக்கப்பட்ட வேட்பாளர்கள், அவர்களது சொத்து விவரங்கள் ஆகியவற்றைத் தெரிந்துகொள்ளலாம். வாக்குச் சாவடியிலும் வேட்பாளர்களின் பட்டியல் மற்றும் அவர்களது சின்னங்கள் ஒட்டப்பட்டிருக்கும். வாக்குச்சாவடிக்கு என்னென்ன எடுத்து செல்ல வேண்டும்? ஒவ்வொரு வாக்காளருக்கும் அவரது தொகுதியின் அடிப்படையில் அவர்களது பகுதியிலேயே வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருக்கும். அந்த வாக்காளர் அவருக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடியில் தான் வாக்கு செலுத்த முடியும். அப்படி வாக்கு செலுத்த போகும்போது, தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டைகளில் ஏதாவது ஒன்றை எடுத்துச் செல்ல வேண்டும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,வாக்குச்சாவடிக்கு செல்லும்போது அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டைகளை எடுத்து செல்ல வேண்டும். தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள அடையாள அட்டைகள் என்னென்ன? வாக்காளர் அடையாள அட்டை ஆதார் அட்டை பான் அட்டை மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை வங்கி அல்லது தபால் நிலையத்தில் அளிக்கப்படும் புகைப்படத்துடன் கூடிய வங்கிக் கணக்குப் புத்தகம் தொழிலாளர் நல அமைச்சகம் வழங்கியுள்ள உடல்நலக் காப்பீட்டு அட்டை ஓட்டுநர் உரிமம் பாஸ்போர்ட் புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய அட்டை மகாத்மா காந்தி 100 நாள் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்திற்கான அட்டை மக்கள் பிரதிநிதிகளுக்கு வழங்கப்படும் அடையாள அட்டை   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,வாக்களிக்கும் இயந்திரத்தில் விரும்பும் வேட்பாளர் அல்லது சின்னத்திற்கு எதிரில் உள்ள பொத்தானை அழுத்த வேண்டும். வாக்குச் சாவடியில் என்ன நடக்கும்? வாக்காளர்கள் வாக்குப்பதிவுக்கு அனுமதிக்கப்பட்ட நேரத்திற்குள் வாக்குச்சாவடிக்குச் செல்ல வேண்டும். அங்குள்ள அதிகாரி ஒருவர், வாக்காளர் பட்டியலில் உள்ள உங்கள் பெயரையும் உங்கள் அடையாள அட்டையையும் சரிபார்த்து, சத்தமாக அதனை அறிவிப்பார். அதற்குப் பிறகு மற்றொரு தேர்தல் அலுவலர் உங்களது இடது கை ஆள்காட்டி விரலில் அழியாத மையை வைத்து, ஒரு ஸ்லிப்பை அளிப்பார். பின்னர் படிவம் 17 இல் கையெழுத்திட வேண்டும். இதற்கு அடுத்த அதிகாரியிடம் நம்மிடம் உள்ள ஸ்லிப்பை கொடுத்தால், அவர் நம்மை வாக்களிக்கும் இயந்திரத்தில் வாக்களிக்க அனுமதிப்பார். வாக்களிக்கும் இயந்திரத்தில் விரும்பும் வேட்பாளர் அல்லது சின்னத்திற்கு எதிரில் உள்ள பொத்தானை அழுத்த வேண்டும். பீப் என்ற ஒலி ஏற்பட்டால், உங்கள் வாக்கு பதிவாகிவிட்டதாக அர்த்தம். அருகில் உள்ள VVPAT (வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை) எந்திரத்தில் நீங்கள் யாருக்கு வாக்களித்தீர்களோ அவர்களது பெயர், சின்னம் ஆகியவை ஒரு காகிதத்தில் அச்சிடப்பட்டு 7 விநாடிகளுக்குத் தெரியும். இத்துடன் வாக்களிப்பது நிறைவடையும். பீப் சத்தம் வராவிட்டாலோ, விவிபாட் இயந்திரத்தில் எதுவும் தெரியாவிட்டாலோ, தேர்தல் அலுவலரை அணுக வேண்டும். உங்கள் வாக்கை வேறு யாரோ செலுத்தி விட்டால் என்ன செய்வது? உங்கள் வாக்கை வேறு யாரோ செலுத்திவிட்டதாக நீங்கள் கண்டறிந்தால் நீங்கள் பதற்ற படவோ, திரும்பி வந்து விடவோ வேண்டாம். அங்கேயே உங்களது வாக்கை நீங்களே பதிவு செய்ய முடியும். அதற்கு வாக்குச் சாவடியின் தலைமை அதிகாரியிடம் புகார் அளித்து, அதற்கென உள்ள கோரிப் பெறப்பட்ட வாக்குச் சீட்டுகளில் (Tendered Ballot Paper) வாக்களிக்கலாம். இது தனியாக ஒரு உறையில் வைக்கப்படும்.   பட மூலாதாரம்,DIPR படக்குறிப்பு,தமிழ்நாட்டில் மொத்தமாக 68,000 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்திருக்கிறார். தேர்தல் ஆணையத்தின் ஏற்பாடுகள் என்ன? தமிழ்நாட்டில் இன்று தொடங்கியுள்ள வாக்குபதிவில், 3.32 லட்சம் தேர்தல் அலுவலர்களும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினரும் தேர்தல் பணிக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்திருக்கிறார். மேலும் தமிழ்நாட்டில் மொத்தமாக 68,000 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் 8,050 வாக்குச் சாவடிகள் பதற்றமானவையாகவும், 181 வாக்குச் சாவடிகள் மிகப் பதற்றமானவையாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளன. இங்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் சான்றிதழ் வைத்துள்ள மாற்றுத் திறனாளிகள் வாக்குச் சாவடிக்கு வருவதற்கு மாநில அரசின் பேருந்துகளைப் பயன்படுத்தினால், கட்டணம் செலுத்தத் தேவையில்லை. தேவைப்பட்டால், 1950 என்ற எண்ணை அழுத்தி, வாகன வசதிகளையும் ஏற்பாடு செய்துகொள்ளலாம். மேலும் அவர்களுக்கு வாக்குச் சாவடிகளில் முன்னுரிமை அளிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,50000த்திற்கு அதிகமான பணம் எடுத்து செல்ல வாக்குப்பதிவு முடியும் வரை கட்டுப்பாடுகள் உண்டு. பணம் எடுத்து செல்வதற்கான கட்டுப்பாடுகள் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் முடியும் வரை உரிய ஆவணங்கள் இல்லாமல் 50,000த்திற்கும் மேல் பணம் எடுத்து செல்லக்கூடாது என்ற கட்டுப்பாடு உள்ளது. இந்நிலையில் இன்று வாக்குப் பதிவு நிறைவடையும் வரை அதே விதி நீடிக்கும். ஆனால், உரிய ஆவணங்கள் இருந்தால், அந்தப் பணத்தையோ, பொருட்களையோ பறிமுதல் செய்ய வேண்டாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகள் இந்தியா முழுவதும் 18வது மக்களவைத் தேர்தல் இன்று (ஏப்ரல் 19) தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இந்த ஒட்டுமொத்த தேர்தல்களுக்கான முடிவுகள் ஜூன் 4 2024 அன்று வெளியிடப்படும். https://www.bbc.com/tamil/articles/cd13q41gzl7o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.