Jump to content

பிரபல இந்தி நடிகர் ஒம் புரி காலமானார்


Recommended Posts

பிரபல இந்தி நடிகர் ஒம் புரி காலமானார்

 
ஓம்புரி | கோப்பு படம்
ஓம்புரி | கோப்பு படம்
 
 

இந்தி, ஆங்கிலம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பிரபலமான நடிகர் பத்மஸ்ரீ ஒம் புரி காலமானார். அவருக்கு வயது 66

இந்தியா, பாகிஸ்தான், பிரிட்டிஷ் மற்றும் ஹாலிவுட் படங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர் நடிகர் ஒம் புரி. இந்தியாவில் உருவான படங்கள் மட்டுமன்றி இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் தயாரான படங்களிலும் நடித்துள்ளார்.

வெள்ளிக்கிழமை (ஜனவரி 6) காலை ஏற்பட்ட திடீர் மாரடைப்பால காலமானார். அவருக்கு வயது 66. இவருடைய மறைவு இந்தி திரையுலக நட்சத்திரங்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூகவலைத்தளத்தில் அவருடைய மறைவு ஈடுசெய்ய முடியாதது என்று பலரும் தங்களுடைய இரங்கலைப் பதிவு செய்து வருகிறார்கள்.

வாழ்க்கைக் குறிப்பு

ஹரியாணா மாவட்டத்தில் பிறந்தவர் ஒம் புரி. 1976ம் ஆண்டு 'காஷிராம் கோட்வால்' என்ற மராத்தி படத்தின் மூலமாக திரையுலகுக்கு அறிமுகமானார். அம்ரீஷ் புரி, நஷ்ரூதின் ஷா, ஷாபனா ஆஸ்மி போன்ற நடிகர்களோடு திரைக்கலை படைப்புகளில் நடித்து பிரபலமானவர்.

1980 ஆண்டு வெளியான 'ஆக்ரோஷ்' படத்தின் தனது அபாரமான நடிப்பால் பல்வேறு விருதுகளை வென்றார். 1982ம் ஆண்டு உருவான 'காந்தி' படத்தில் சிறுகதாபாத்திரத்தில் நடித்தவர். உலகளவில் பிரிட்டிஷ் படங்களான 'My Son the Fanatic', 'East is East', 'The Parole officer' உள்ளிட்டவற்றில் நடித்து அறியப்பட்டவர். அப்படங்களைத் தொடர்ந்து 'City of Joy', 'The Ghost and the Darkness' போன்ற ஹாலிவுட் படங்களில் ஜாக் நிக்கேல்சன், வால் கில்மர், டாம் ஹாங்க்ஸ், ஜுலியா ரோபட்ஸ் உள்ளிட்ட நடிகர்களோடு நடித்துள்ளார்.

பல்வேறு இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார் ஒம் புரி, இந்தி படங்களில் அமிதாப் பச்சன், ஷாருக்கான், சல்மான் கான், அமீர் கான், அக்‌ஷய்குமார் போன்ற நடிகர்களோடு நடித்துள்ளார்.

கமல் இரங்கல்

தமிழ் திரையுலகில் கமலோடு 'ஹே ராம்' படத்தில் நடித்துள்ளார். மேலும், கமலுக்கு மிக நெருங்கிய நண்பராக வலம் வந்தவர் ஒம் புரி. அவருடைய மறைவு குறித்து கமல், "இத்தனை ஆண்டுகாலமும் ஓம் புரி எனது நண்பர் என்பதில் பெருமிதம் கொண்டிருந்தேன். அவர் மறைந்துவிட்டார் எனக் கூறும் துணிச்சல் எப்படி வந்தது. அவர் என்றும் நிலைத்திருப்பார் அவருடைய படைப்புகள் வாயிலாக" என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளத்தில் பல்வேறு திரையுலகினரும் ஒம்புரி மறைவு குறித்து தங்களுடைய ஆழ்ந்த இரங்கலை பதிவு செய்து வருகிறார்கள்.

http://tamil.thehindu.com/cinema/bollywood/பிரபல-இந்தி-நடிகர்-ஒம்-புரி-காலமானார்/article9462708.ece?homepage=true

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்.....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகத் திறமையான நடிகர். ஆத்மா சாந்தியடையட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர் பிரிரிஷ் படங்களிலும் நடித்துள்ளாரா ?

நேற்று ரேடியோவில் எதோ சொல்லிக்கொண்டு இருந்தார்கள் 
யாரோ இந்தியா பாலிவுட் நடிகர் இறந்துவிட்ட்தாக 

இவராகத்தான் இருக்க வேண்டும்.

அஞ்சலிகள் !

Link to comment
Share on other sites

5 hours ago, Maruthankerny said:

இவர் பிரிரிஷ் படங்களிலும் நடித்துள்ளாரா ?

நேற்று ரேடியோவில் எதோ சொல்லிக்கொண்டு இருந்தார்கள் 
யாரோ இந்தியா பாலிவுட் நடிகர் இறந்துவிட்ட்தாக 

இவராகத்தான் இருக்க வேண்டும்.

அஞ்சலிகள் !

 

On 6.1.2017 at 7:42 AM, நவீனன் said:

பிரபல இந்தி நடிகர் ஒம் புரி காலமானார்

 
ஓம்புரி | கோப்பு படம்
ஓம்புரி | கோப்பு படம்
 
 

இந்தி, ஆங்கிலம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பிரபலமான நடிகர் பத்மஸ்ரீ ஒம் புரி காலமானார். அவருக்கு வயது 66

இந்தியா, பாகிஸ்தான், பிரிட்டிஷ் மற்றும் ஹாலிவுட் படங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர் நடிகர் ஒம் புரி. இந்தியாவில் உருவான படங்கள் மட்டுமன்றி இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் தயாரான படங்களிலும் நடித்துள்ளார்.

வெள்ளிக்கிழமை (ஜனவரி 6) காலை ஏற்பட்ட திடீர் மாரடைப்பால காலமானார். அவருக்கு வயது 66. இவருடைய மறைவு இந்தி திரையுலக நட்சத்திரங்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூகவலைத்தளத்தில் அவருடைய மறைவு ஈடுசெய்ய முடியாதது என்று பலரும் தங்களுடைய இரங்கலைப் பதிவு செய்து வருகிறார்கள்.

வாழ்க்கைக் குறிப்பு

ஹரியாணா மாவட்டத்தில் பிறந்தவர் ஒம் புரி. 1976ம் ஆண்டு 'காஷிராம் கோட்வால்' என்ற மராத்தி படத்தின் மூலமாக திரையுலகுக்கு அறிமுகமானார். அம்ரீஷ் புரி, நஷ்ரூதின் ஷா, ஷாபனா ஆஸ்மி போன்ற நடிகர்களோடு திரைக்கலை படைப்புகளில் நடித்து பிரபலமானவர்.

1980 ஆண்டு வெளியான 'ஆக்ரோஷ்' படத்தின் தனது அபாரமான நடிப்பால் பல்வேறு விருதுகளை வென்றார். 1982ம் ஆண்டு உருவான 'காந்தி' படத்தில் சிறுகதாபாத்திரத்தில் நடித்தவர். உலகளவில் பிரிட்டிஷ் படங்களான 'My Son the Fanatic', 'East is East', 'The Parole officer' உள்ளிட்டவற்றில் நடித்து அறியப்பட்டவர். அப்படங்களைத் தொடர்ந்து 'City of Joy', 'The Ghost and the Darkness' போன்ற ஹாலிவுட் படங்களில் ஜாக் நிக்கேல்சன், வால் கில்மர், டாம் ஹாங்க்ஸ், ஜுலியா ரோபட்ஸ் உள்ளிட்ட நடிகர்களோடு நடித்துள்ளார்.

பல்வேறு இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார் ஒம் புரி, இந்தி படங்களில் அமிதாப் பச்சன், ஷாருக்கான், சல்மான் கான், அமீர் கான், அக்‌ஷய்குமார் போன்ற நடிகர்களோடு நடித்துள்ளார்.

கமல் இரங்கல்

தமிழ் திரையுலகில் கமலோடு 'ஹே ராம்' படத்தில் நடித்துள்ளார். மேலும், கமலுக்கு மிக நெருங்கிய நண்பராக வலம் வந்தவர் ஒம் புரி. அவருடைய மறைவு குறித்து கமல், "இத்தனை ஆண்டுகாலமும் ஓம் புரி எனது நண்பர் என்பதில் பெருமிதம் கொண்டிருந்தேன். அவர் மறைந்துவிட்டார் எனக் கூறும் துணிச்சல் எப்படி வந்தது. அவர் என்றும் நிலைத்திருப்பார் அவருடைய படைப்புகள் வாயிலாக" என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளத்தில் பல்வேறு திரையுலகினரும் ஒம்புரி மறைவு குறித்து தங்களுடைய ஆழ்ந்த இரங்கலை பதிவு செய்து வருகிறார்கள்.

http://tamil.thehindu.com/cinema/bollywood/பிரபல-இந்தி-நடிகர்-ஒம்-புரி-காலமானார்/article9462708.ece?homepage=true

 

Link to comment
Share on other sites

ஓம்பூரி பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை! #RIPOmpuri

ஓம் பூரி மறைந்தார்

முதுமை வந்தாலே மரணமும் கைகோர்த்துவிடுவது இயற்கை.  இந்திய சினிமாவிற்கு சொந்தமான கலைஞரும், நடிப்பில் உச்சம் தொட்டவருமான நடிகர் ஓம்பூரி இன்று மரணித்திருப்பது நிச்சயம் உணர்வுகளின் வலி. நேற்று வரை படப்பிடிப்பில் இருந்தவர், இன்று நம்முடன் இல்லை. சினிமாவின் மீது தீராக் காதல் கொண்ட ஓம்பூரியை மாரடைப்பு அமைதியாக்கியிருக்கிறது. ஒரு காலத்தில் இந்தி திரையுலகில் ஜாம்பவனாக இருந்த இவருக்கு ஒட்டுமொத்த இந்திய திரையுலகமே கண்ணீரில் அஞ்சலியை சமர்ப்பித்துவருகிறது.

தமிழுக்கு அதிகம் பரிச்சயம் இல்லாவிட்டாலும் நிச்சயம் தெரிந்துகொள்ளவேண்டிய நடிகர்களில் ஒருவர். ஓம் பிரகாஷ் பூரி என்னும் கலைஞர் பாலிவுட், மராத்தி, இந்திய பிறமொழிகள், பிரிட்டன் மற்றும் ஹாலிவுட் படங்கள் வரையிலும் பரிச்சயமானவர். இந்திய திரையுலகில் வைரங்களாக மிளிரும் சிறந்த நடிகர்களில் மிகமுக்கியமானவர். கலை, பாரம்பரியம், கலாச்சாரம் சார்ந்த படங்களில் உச்ச  நடிப்பில் மிரளவைக்கும் வகையில் கலையின் மீது அர்பணிப்பு கொண்டவர். 

அக்டோபர் 18ல் 1950-ல் ஹரியானா மாநிலத்தில் அம்பாலா என்னும் இடத்தில் பிறந்தவர் ஓம் பிரகாஷ் பூரி. சாதனையாளர்களின் கடந்த காலங்கள் நிச்சயம் வலியால் நிறைந்திருக்கும் என்பதற்கு இவரும் ஒரு சான்று. வீட்டில் ஏழ்மை. ஏழு வயதில் பள்ளிக்குச் செல்லாமல் உணவுகளை பரிமாறும் தாபாவில் வேலை செய்யவேண்டிய கட்டாயம். பெரும்பாலும் ரயில் பாதைகளில் கொட்டிக்கிடக்கும் நிலக்கரிகளை அள்ளிச்சென்று வீட்டில் கிடக்கும் ஏழ்மையை சரிபடுத்தியவர். தட்டுத்தடுமாறி பள்ளிப்படிப்பையும் முடித்து, ‘பிலிம் & டெலிவிஷன் இன்ஸ்டிடியூட்டில்’ பட்டப்படிப்பையும் முடித்தார்.

22வது வயதில் மராத்தி மொழியில் தன்னுடைய முதல்  படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்தார். மராத்திய எழுத்தாளர் விஜய் டெண்டுல்கர் கதையை மையமாக வைத்து வெளியான Ghashiram Kotwal என்ற படம் தான் ஓம் பூரியின் முதல் சினிமா விலாசம். 

ஓம் பூரி

ஒரு பக்கம் படங்களில் நடித்து வந்தாலும், இதற்கு நடுவே தேசிய நாடகப்பள்ளியில் சேர்ந்து நடிப்பை முழுமையாக கற்றுத்தேர்ந்தார். அந்த நேரத்தில் இவருக்கும் நஸ்ருதீன் ஷாவுக்குமான நட்பும் தொடங்கியது. நடிகர் அனு கபூரின் சகோதரியான சீமா கபூரை 1991ல் திருமணம் செய்துகொண்டார். அந்த இல்வாழ்க்கை எட்டு மாதங்கள் கூட தாக்குப்பிடிக்கவில்லை. அதன்பிறகு 1993ல் நந்திதாவை திருமணம் செய்துகொண்டார். அவருடனும் 2013ல் விவாகரத்தானது குறிப்பிடத்தக்கது. அவை எதுவும் சினிமாவை எந்த அளவிலும் பாதிக்கவில்லை.

இவர் நாயகனாக, குணச்சித்திர வேடங்கள் என்று தொட்ட இடமெல்லாம் நடிப்பில் வெற்றியை மட்டுமே பரிசாக பெற்றார். 1982ல் இவர் நடித்த ஆரோகன் (Arohan) படத்திற்காக, சிறந்த நடிகருக்கான முதல் தேசிய விருதை பெற்றார். தொடர்ந்து அடுத்த வருடமும் Ardh Satya படத்திற்காக இரண்டாவது தேசிய விருதை சொந்தமாக்கினார்.  மலையாளம், பஞ்சாபி, தெலுங்கு, கன்னடம் என்று இவர் நடித்த படங்களில் லிஸ்ட் எகிறும்.

ஆக்ரோஷ் ( Aakrosh) ஆர்த்சத்யா ( Ardh Satya) தமஸ் (Tamas) அஸ்தா ( Aastha), மிர்ச் மசாலா ( Mirch Masala) உள்ளிட்ட படங்களில் இவரின் வித்தியாசமான கதாபாத்திரங்களுக்காக பெரிதும் பேசப்பட்டார். விமர்சனரீதியிலும் பெரும் பாராட்டுகளையும் பல விருதுகளையும் பெற்றார். அதுமட்டுமின்றி சாச்சி 420 (Chachi 420), ஹிரபெத்ரி ( Hera Pheri), மலமால் வீக்லி ( Malamaal Weekly) உள்ளிட்ட படங்களில் காமெடியிலும் ஸ்கோர் செய்திருக்கிறார். குணச்சித்த கதாபாத்திரமோ, காமெடியோ எந்த ரோலுக்கும் கச்சிதமாக பொருந்துவார். அதுமட்டுமின்றி வயதிற்கு ஏற்ற ரோல்களை தேர்ந்தெடுத்து நடிப்பது இவரின் ஸ்பெஷல். 

1982ல் வெளியான காந்தி பயோபிக் படத்தில் இவரின் கேமியோ, பாலிவுட்டிலிருந்து ஹாலிவுட் வரை இவரை பிரபலப்படுத்தியது. அதற்கடுத்து பல ஹாலிவுட் மற்றும் பிரிட்டிஷ் படங்களிலும் தோன்ற ஆரம்பித்தார்.சிட்டி ஆஃப் ஜாய் (1992), வுல்ஃப் (1994), தி கோஸ்ட் அண்ட் தி டார்க்னஸ் (1996) என்று இவர் நடித்த படங்கள் அனைத்துமே சக்ஸஸ் பார்முளா தான். 

ஓம் பூரி

நல்ல நடிகன் மட்டுமில்லாமல் மனதில் பட்டதைப் பேசி அவ்வப்பொழுது சர்ச்சையிலும் சிக்கிக்கொள்வார். ஆனால் இவரின் கேள்விகளும் பதிலும் வழக்கத்திற்கு மாறாக இருப்பதால், மக்கள் சர்ச்சையாக எடுத்துக்கொள்கிறார்கள் என்று தான் சொல்லவேண்டும். எடுத்துக்காட்டாக, யூரி தாக்குதல் நேரத்தில் நடந்த டிவி விவாத நிகழ்ச்சியில், “வீரர்களை யார் ராணுவத்தில் சேரச் சொன்னது, ஆயுதங்களை அவர் கையில் யார் கொடுத்தது?” என்று கேட்க மக்களும் கொந்தளித்தனர். அதுபோல அன்னா ஹசாரே உண்ணாவர போராட்ட சமயத்தில், “அரசியல் தலைவர் என்ற ஒரே காரணத்திற்காக ஐஏஎஸ்., ஐபிஎஸ் அதிகாரிகள் சல்யூட் செய்வது வெட்கக்கேடு” என்று பொரிந்து தள்ளியவர். இதுபோல எந்தப் பிரச்னையென்றாலும் முதல் குரல் இவரிடமிருந்து நிச்சயம் ஒலிக்கும். 

தற்பொழுது இரண்டு கன்னடப்படங்கள், ஒரு பாகிஸ்தானி படங்களில் நடித்துக்கொண்டிருந்தார். இந்த சமயத்தில் இவரது மரணம் நிச்சயம் மிகப்பெரிய அதிர்ச்சி. 66 வயதிலேயே நம்மை விட்டு பிரிந்தாலும், நமக்கான நிறைய பொக்கிஷங்களையும் படிப்பினைகளையும் ஆரோக்கியமான நடிப்பினையும் விட்டுச்சென்றிருக்கிறார்.  “ஓம்பூரி மறையவில்லை... அவரது நடிப்பினால் நம்முடன் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்” என்ற கமல்ஹாசனின் ட்விட்டர் வரிகளை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். 

http://www.vikatan.com/cinema/tamil-cinema/news/77123-one-of-indias-most-celebrated-actor-ompuri-passed-away.art

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • வயதைப் பார்த்தால் வேலை செய்பவர்கள் போல தெரியலை.
    • @nunavilan என்ன‌ அண்ணா க‌ள‌த்தில் குதிக்கிற‌ ஜ‌டியா இல்லையா இன்னும் சில‌ ம‌ணி நேர‌ம் தான் இருக்கு🙏🥰...................................
    • @நீர்வேலியான், உங்கள் பதில்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன😀 வெற்றிபெற வாழ்த்துக்கள்😃 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.