Jump to content

தென் ஆப்பிரிக்க அணியை விட்டுச் செல்கிறார் கைல் அபாட்


Recommended Posts

தென் ஆப்பிரிக்க அணியை விட்டுச் செல்கிறார் கைல் அபாட்

 

 
கைல் அபாட். | கெட்டி இமேஜஸ்.
கைல் அபாட். | கெட்டி இமேஜஸ்.
 
 

தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் கைல் அபாட் தென் ஆப்பிரிக்க அணியை விடுத்து இங்கிலாந்து கவுண்டி ஹாம்ப்ஷயர் அணிக்கு விளையாட முடிவெடுத்துக் கிளம்புகிறார்.

கைல் அபாட்டுடன் இது குறித்து கிரிக்கெட் தென் ஆப்பிரிக்கா வாரியம் மேற்கொண்ட பேச்சு வார்த்தை முயற்சிகள் தோல்வியடைந்தன, தென் ஆப்பிரிக்காவுக்கு தொடர்ந்து விளையாடுமாறும் தென் ஆப்பிரிக்காவை விட்டுச் செல்ல வேண்டாம் என்றும் அபாட்டை கிரிக்கெட் வாரியத்தினால் சமாதானப்படுத்த முடியவில்லை. எனவே தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்துடனான கைல் அபாட்டின் ஒப்பந்தம் உடனடியாக முடிவுக்கு வருகிறது.

இலங்கைக்கு எதிராக இவர் ஆடும் 2-வது டெஸ்ட் போட்டிதான் கைல் அபாட்டின் சர்வதேச கிரிக்கெட் கடைசி போட்டியாக இருக்க வாய்ப்புள்ளது. இவர் இங்கிலாந்துக்கு ஆடுவதற்கு இன்னும் காலம் ஆகலாம் என்று தெரிகிறது. இவருடன் ரைலி ரூசோவ்வும் ஹாம்ப்ஷயர் செல்கிறார்.

கைல் அபாட் இது குறித்து கூறும்போது, “கடினமான முடிவுதான், ஆனால் சரியான முடிவு என்றே கருதுகிறேன். சில இரவுகள் சரியான முடிவுதான் எடுக்கிறேனா என்ற கேள்வியுடன் தூங்கச் சென்றேன். ஆனால் காலையில் எழுந்திருக்கும் போது ஹாம்ப்ஷயர் செல்வது சரியான முடிவுதான் என்ற தெளிவு பிறந்தது.

கடந்த சில மாதங்களில் நான் அணியிலிருந்து நீக்கப்படுவேன் என்ற உணர்வு ஏற்படாத நாளே இல்லை எனலாம். நான் தென் ஆப்பிரிக்க கிரிகெட்டுக்கு அர்ப்பணிப்புடன் இல்லையெனில் இந்த முடிவை நீண்ட காலம் முன்பே எடுத்திருப்பேன்.

பிப்ரவரி வந்தால் சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகமாகி 4 ஆண்டுகள் ஆகிவிடும். தென் ஆப்பிரிக்காவுக்கு நான் எந்த மட்டத்தில் ஆடினாலும் அங்கு இட ஒதுக்கீடு முறை இருந்தே வந்தது, இன்னும் இருந்து வருகிறது. ஆனால் இதனை நான் என் வெளியேற்றத்துக்கான காரணமாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. இனியும் மாட்டேன். நானும் பில்களுக்கு பணம் செலுத்த வேண்டும், நானும் மளிகை சாமான்கள் வாங்கியாக வேண்டும்” என்றார்.

தென் ஆப்பிரிக்க கேப்டன் டுபிளெசிஸ் கூறும்போது, “இந்த வழியில் நாங்கள் இப்படி நடப்பதை ஒருபோதும் விரும்பியதில்லை. இதனை நாங்கள் எதிர்பார்க்கவில்லை, எங்கள் கட்டுப்பாட்டை விட்டு விஷயங்கள் வெகுதூரம் சென்று விட்டன. நாங்கள் அனைவரும் கைல் அபாட்டிடம் பேசி அவர் மனதை மாற்ற முயற்சி செய்தோம் ஆனால் அவர் ஏற்கெனவே ஒரு முடிவுக்கு வந்திருந்தார். என்ன... கைல் ஓரிரு விக்கெட்டுகளை வீழ்த்தி தனது கடைசி டெஸ்ட் போட்டியை முடித்திருந்தால் மகிழ்ச்சியடைந்திருப்போம்.

வாய்ப்பு, பணம், மாற்றம் என்று பல விஷயங்கள் இதில் உள்ளன. ஆனால் கைல் இதில் எதனை நாடுகிறார் என்று எனக்குத் தெரியவில்லை. அவர் பாதுகாப்பு கேட்கிறார், பாதுகாப்பு வேண்டும் என்று நினைக்கிறார். தென் ஆப்பிரிக்காவுக்கு அவர் ஆட வேண்டும் என்றே நான் விரும்பினேன், ஆனால் அவரது முடிவை மதிக்கிறேன், ஆனால் ஏற்றுக் கொள்ளவில்லை” இவ்வாறு வருத்தமாகக் கூறினார் டுபிளெசிஸ்

http://tamil.thehindu.com/sports/தென்-ஆப்பிரிக்க-அணியை-விட்டுச்-செல்கிறார்-கைல்-அபாட்/article9461542.ece?homepage=true

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்படி சொல்ல முடியாது….. இந்த மிசைல்தான் எமது கண்ணுக்கோ, ரேடாருக்கோ புலப்படாதே? ஆகவே அதை ஈரான் பாவிக்கவில்லை என எப்படி கூற முடியும்?
    • பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக 1700 ரூபாவை வழங்குமாறு வலியுறுத்தி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டம் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக இன்று முற்பகல் இடம்பெற்றது. கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக முற்பகல் 11 மணிக்கு இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பமானது. இந்த ஆர்ப்பாட்டத்தில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் சக்திவேல் உள்ளிட்ட கட்சியின் ஆதரவாளர்கள் பங்கேற்றனர். மலையகப் பகுதிகளிலிருந்து தோட்டத்தொழிலாளர்கள் கொழும்பிற்கு வரவழைக்கப்பட்டிருந்தனர். https://thinakkural.lk/article/299640
    • Published By: NANTHINI   19 APR, 2024 | 01:12 PM   1974 கச்சதீவு தொடர்பில் இலங்கையிலும் இந்தியாவிலும் பல்வேறு பேச்சுக்கள் இடம்பெற்றுவருகின்றன. கச்சதீவு யாருக்கு சொந்தமானது என்பது பற்றிய பல்வேறு விதமான கருத்துக்கள் இன்றைய நவீன உலகில் குறிப்பாக சமூக ஊடகங்களில் வைரலாக (trending) காணப்படுகிறது. கச்சதீவு வைரலாவதற்கு (trending) பல காரணங்கள் பலராலும் கூறப்படுகின்றன. ஆனால், வரலாற்றை மீட்டுப் பார்க்கும்போது “கச்சதீவு இலங்கைக்குச் சொந்தமானது! 45 வருடகாலத் தகராறு தீர்ந்துவிட்டது!!” என்ற தலையங்கத்துடன் 1974ஆம் ஆண்டு ஜூன் மாதம் 29ஆம் திகதி வெளியான வீரகேசரி பத்திரிகையின் முதல் பக்கத்தில் இவ்வாறு உள்ளது. https://www.virakesari.lk/article/181449
    • எப்படியோ இனி நீங்கள் யாழுக்கு வர ஒரு வருசம் எடுக்கும்…. நீங்கள் இப்படி எழுதியதை எல்லாரும் மறந்து விட்டிருப்பார்கள் என்ற தைரியத்தில் உருட்டவில்லைத்தானே? ஒன்றின் பெயர் மிர்சேல் ஒபாமா என நினைக்கிறேன். ஏனையவற்றின் பெயர்கள் என்னவாம்? அம்பானிக்கும் தெரியாதாம்
    • மைக் சின்னத்துக்கான லைற் எரியவில்லை? புதிய தலைமுறை காணொளி.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.