Jump to content

சதமடித்த விவசாயிகளின் மரணம்- என்ன செய்யப் போகிறது அரசு #StandWithFarmers


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சதமடித்த விவசாயிகளின் மரணம்- என்ன செய்யப் போகிறது அரசு #StandWithFarmers

PIL seeks State drought declaration

சென்னை: தமிழகத்தில் பருவ மழை பொய்துப்போனது. காவிரியில் தண்ணீர் வராத காரணத்தால் பயிர்கள் கருகிவிட்டன. வாடிய பயிர்களைக் கண்டு மனம் நொத்த விவசாயிகள் பலர் மாரடைப்பாலும், தற்கொலை செய்து கொண்டும் தங்களது உயிர்களை மாய்த்துக் கொண்டுள்ளனர். சமூக வலைத்தளங்களில் எதெதுக்கோ ஹேஸ்டேக் போட்டு டிரெண்ட் செய்யும் இளைய தலைமுறையினர், நெட்டிசன்கள் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கோரி #StandWithFarmers என்ற ஹேஸ்டேக் உடன் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். விவசாயிகளை பாதுகாக்கக் கோரி டுவிட்டரில் பதிவிடப்பட்டு வரும் #StandWithFarmers என்ற ஹேஸ்டேக்கானது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. இதில் விவசாயிக்கு ஆதரவான கருத்துக்களை கூறி தங்களது எண்ணங்களை வெளிப்படுத்தி வருகின்றனர். ஐடி ஊழியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டால் அது பரபரப்பு செய்தியாகிறது. அதுவே விவசாயியின் தற்கொலை கண்டு கொள்ளப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. இன்றைய தினம் காலை முதல் மாலை வரை விவசாயிகளின் பிரச்சினைகள், தற்கொலைகளை, பாதிப்புகளை மக்களுக்கு தெரிவிக்கிறது புதிய தலைமுறை தொலைக்காட்சி

விவசாயிகளின் வியர்வை

நாம் அன்றாடம் உண்ணும் அரிசி விவசாயிகளின் வியர்வையில் விளைவது என்று பதிவிட்டுள்ளார் ராம்குமார் என்ற வலைத்தளவாசி.

வேண்டும் ஒரு புரட்சி

விவசாயிகளின் தற்கொலையை தடுக்க ஒரு புரட்சி நடக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார் ஒருவர். ஆனால் அது எதுமாதிரியான புரட்சி என்று கூறவில்லை

பணத்தை சாப்பிட முடியாது

இயற்கையை அழிக்கிறோம்... ஆறுகளை பாழாக்குகிறோம். நிலத்தை விஷமாக்குகிறோம். இதனாலேயே மழை குறைந்து விவசாயம் அழிகிறது. பணத்தை சாப்பிட முடியாது என்று பதிவிட்டுள்ளார் ஒரு வலைஞர்.

வறண்டே கிடக்கிறது

கடந்த ஆண்டு வெள்ளம், இந்த ஆண்டு வறட்சி, தமிழக விவசாயிகளின் வயலும், வயிறும் வறண்டு கிடக்கிறது பதிவிட்டுள்ளார் ஒரு வலைஞர். விவசாயிகளின் தற்கொலையும், மரணங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழக அரசு என்ன செய்யப் போகிறது என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

நன்றி : தட்ஸ்தமிழ்

டிஸ்கி:

வர்தா புயலுக்கே பெரிய பாதிப்பெல்லாம் இல்லை காசு தர மிடியாது என்று சொல்லிபோட்டார் மோடி ஜி அதே போல உங்க உயிரெல்லாம் !@#$% அளவுக்கு மதிக்க இல்லை என்று சொல்லி போடுவாரோ ? அதை கூட பொறுத்து கொள்ளலாம்

இவ்வளவுக்கும் காரணமான ....அடித்தவனுக்கு ...காசு தரார் மோடி ! ஒருவேளை அதற்கான கூலியாக இருக்குமோ ?

Quote

கர்நாடகாவுக்கு ரூ.1782.44 கோடி வறட்சி நிவாரணம்!
நன்றி :விகடன்

தமிழ்நாட்டு எம்பி மார்களை நீங்க பார்த்தீங்களா ? அவங்க எங்க இருக்காங்க? என்ன செய்து கொண்டு இருக்காங்க ? என்கிற தகவல் உங்களுக்கு தெரியுமா ? ரெல் மீ.!.:rolleyes:

Link to comment
Share on other sites

தமிழ்நாட்டை தமிழன் ஆளுமட்டும் இது தொடர்கதைதான் இருக்கிறதுகளும் அல்லக்கை கூட்டம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விவசாயிகளின் இறப்பு, ஒரு நாட்டிற்கு நல்ல செய்தி அல்ல. உலகத்துக்கே விவசாயம் கற்றுக் கொடுத்த இனம், இப்படி அழியலாமா? நெஞ்சு பொறுக்குதில்லை.

Image may contain: one or more people and text

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5.1.2017 at 4:38 PM, TNT said:

தமிழ்நாட்டை தமிழன் ஆளுமட்டும் இது தொடர்கதைதான் இருக்கிறதுகளும் அல்லக்கை கூட்டம் 

பிளாஸ்ரிக் அரிசியும் செயற்கை முட்டையும் உண்டு அழிந்தே போகும் செந்தமிழ் நாடு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆற்று மணலை, தூர்   வாருகின்றோம்  என்று சொல்லி,
அதனை அளவுக்கதிகமாக அள்ளி... கேரளாவுக்கும், கர்நாடகத்துக்கும் விற்க அனுமதி கொடுத்த,
தமிழக அரசு... தான், இதற்கு, முழுப் பொறுப்பையும் ஏற்க  வேண்டும். 

அண்மையில்... ஒரு கட்டுரையில்,  சில இடங்களில்... ஆற்றுக்குள் 20 - 30 கிலோ மீற்றர் வரை  வீதி போட்டு,  
கனரக வாகனங்களை இறக்கி, மணலை கொள்ளை அடித்ததால்.... நிலத்தடி நீரும் வற்றி  விட்டதாக எழுதியதை வாசித்த  போது.... தமிழக  அரசியல் வாதிகளின் மீதுதான் கோபம் வந்தது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: Himmel, Berg, im Freien und Natur

விவசாயிகளின் இறப்பு, செய்தி அல்ல.
நாட்டின் அழிவின் தொடக்கம்...!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: text

நாளை கூகிளில் இருந்த  இடத்தை  தேட வேண்டும் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
    • அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்)      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.