Jump to content

நாவற்குழியில் குடியேறிய சிங்கள குடும்பங்களுக்கு இவ்வாண்டு வீடமைப்புதிட்டம்


Recommended Posts

நாவற்குழியில் குடியேறிய சிங்கள குடும்பங்களுக்கு இவ்வாண்டு வீடமைப்புதிட்டம்
 
 
நாவற்குழியில் குடியேறிய சிங்கள குடும்பங்களுக்கு இவ்வாண்டு வீடமைப்புதிட்டம்
நாவற்குழியில் குடியேறியுள்ள சிங்கள மக்களுக்கு வீடமை ப்புத்திட்டம் அமைத்து கொடுக்கப்படவுள்ளதாக  தேசிய வீடமைப்பு அபி விருத்தி அதிகார சபையின் யாழ் மாவட்ட முகாமையாளர்  எம்.ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவி க்கையில் 
 
2016ம் ஆண்டு யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த 989 பேருக்கான வீட்டுக் கடன்களை யாழ் மாவட்ட தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை வழங்கியுள்ளது.இதன்படி ,ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா   3,50000 ரூபா வீதம்  வீட்டுத் திருத்த வேலைகளுக்காக வழங்கப்பட்டுள்ளது..இதற்காக 86.55 மில்லியன் ரூபா நிதி செலவிடப்பட்டுள்ளது...மேலும் 3000 குடும்பங்களுக்கு   குடும்பம் ஒன்றிற்கு 10 சீமெந்து பைகள் வீதம் வழங்கப்பட்டுள்ளது..இதற்காக 24.7 மில்லியன் ரூபாய் நிதி செலவிடப்பட்டுள்ளது.
 
அத்துடன்   2017ம் ஆண்டிற்கான மிகப்பெரிய திட்டமாக நாவற்குழி பிரதேசத்தில் 250 வீடுகளைக் கொண்ட மாதிரிக் கிராமம் ஒன்று அமைக்கப்படவுள்ளது..நாவற்குழி பிரதேசத்தில் குடியேறியுள்ள 200 தமிழ் குடும்பங்கள்,50 சிங்களக் குடும்பங்களுக்கான வீடுகளை,வீடொன்றிற்கு 5 இலட்சம் ரூபா செலவில் குறித்த மாதிரிக் கிராமத்தில்   அமைக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

http://www.onlineuthayan.com/news/22300

Link to comment
Share on other sites

யாழ்ப்பாணத்தில் பரம்பரை பரம்பரையாக இருந்த வீடுகளுக்கும் காணிகளுக்கும் தோட்டம் துரவுகளுக்கும் போக இன்னும் தடை எங்கிருந்தோ வந்தவங்களுக்கு வீடு .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவைக்கு ஏன் பொருத்து வீடு கொடுக்கப்படவில்லை? சம்திங் ரோங்

Link to comment
Share on other sites

2 hours ago, MEERA said:

இவைக்கு ஏன் பொருத்து வீடு கொடுக்கப்படவில்லை? சம்திங் ரோங்

அட போங்கப்பா பொருத்துவீடாவது கிடைக்குது கும்பிட்டு வேண்டிகொண்டு போற வழியை பாருங்கப்பு என்று அங்காலை திரியிலை அட்வெஸ் மழை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவருக்கு - தேசிய வீடமைப்பு அதிகார சபை - கல்வீடு

தமிழருக்கு - மீள் குடியேற்ற அமைச்சு - பொருத்து வீடு

5 minutes ago, TNT said:

அட போங்கப்பா பொருத்துவீடாவது கிடைக்குது கும்பிட்டு வேண்டிகொண்டு போற வழியை பாருங்கப்பு என்று அங்காலை திரியிலை அட்வெஸ் மழை. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆமா ஆமா.. விஜயனுக்கு முந்திய காலத்தில இருந்து நாவற்குழியில் சிங்களவர்கள் வாழ்ந்து வருகிறார்களில்ல. சும்மா வீட்டுத்திட்டம் கூடாது.. பொருத்து வீடும் கூடாது... இராணுவ வீட்டுத்திட்டமும் கூடாது.. நல்ல ஏசி வீட்டுத்திட்டம் போட்டுக் கொடுங்கப்பா. பெருமைக்குரிய பெரும்பான்மை மக்களுக்கு. 

அடுத்தவன் காணில.. அடாத்தா வந்து இருக்கிற சிங்களவனுக்கு இவ்வளவு நடப்பு. ம்ம்ம். :rolleyes:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.