Jump to content

எலிசபெத் மகாராணியைச் சுட முயன்ற அவரது அரண்மனைக் காவலருக்கு மன்னிப்பு


Recommended Posts

எலிசபெத் மகாராணியைச் சுட முயன்ற அவரது அரண்மனைக் காவலருக்கு மன்னிப்பு

 

இங்கிலாந்து மகாராணியாரை அவரது அரண்மனைக் காவலர் ஒருவரே தவறுதலாக துப்பாக்கியால் சுட முயன்ற சம்பவம் அம்பலமாகியுள்ளது. இச்சம்பவம் சில வருடங்களுக்கு முன் இடம்பெற்றதாகவும் கூறப்படுகிறது.

6_Queen_Elizabeth.jpg

தூக்கம் வராத இரவுகளில் இங்கிலாந்தின் எலிசபெத் மகாராணியார் தனது பக்கிங்ஹாம் அரண்மனைத் தோட்டத்தில் உலாவருவது வழக்கம். 

சில வருடங்களுக்கு முன் இதேபோன்ற ஒரு தூக்கம் வராத அதிகாலைப் பொழுதில் சுமார் 3 மணியளவில் எலிசபெத் மகாராணியார் தோட்டத்தில் நடந்து சென்றுள்ளார்.

இருளில் ஒரு உருவம் நடந்து செல்வதைக் கண்ட ஒரு அரண்மனைக் காவலர் ஒருவர் திடுக்கிட்டார். உடனே, தன்வசமிருந்த துப்பாக்கியை மகாராணியை நோக்கி நீட்டியபடி, “யார் அது?” என்று கேட்டார்.

அதற்கு பதில் சொல்லத் திரும்பியபோதே அது வேறு யாருமல்ல, மகாராணிதான் என்பதை அவர் உணர்ந்தார். உடனே மகாராணியிடம், “இன்னும் ஒரு நொடி தாமதித்திருந்தால் கூட உங்களைச் சுட்டிருப்பேன். என்னை தயவு செய்து மன்னியுங்கள்” என்று பணிந்து கேட்டார்.

இருந்தாலும், தவறு தன்னுடையது தான் என்பதைப் புரிந்துகொண்ட மகாராணி, “பரவாயில்லை. இனிமேல் இவ்வாறு உலா வருமுன் காவலர்களுக்குத் தகவல் சொல்லிவிடுகிறேன்” என்று கூறியிருக்கிறார்.

இச்சம்பவம் நடந்து சில வருடங்கள் ஆன போதும், சற்று முன்னரே இந்தச் செய்தியை லண்டன் பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டு மே மாதம், 41 வயது நபர் ஒருவர் அரண்மனையின் பாதுகாப்புச் சுவரில் ஏறிக் குதித்து உள்ளே நுழைந்தார். காவலர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டதும், “மகாராணி உள்ளே இருக்கிறாரா?” என்று சர்வசாதாரணமாகக் கேட்டிருந்தார்.

அதற்கு முன், 2013ஆம் ஆண்டு, இளவரசர் அண்ட்ரூவை தவறுதலாகச் சந்தேகித்த காவலர்கள் அவரைத் தடுத்து வைக்க முயன்று, பின்னர் அது இளவரசர் என்று தெரிந்ததும் அவரிடம் மன்னிப்புக் கேட்ட சம்பவமும் பக்கிங்ஹாம் அரண்மனையில் இடம்பெற்றுள்ளது.

http://www.virakesari.lk/article/15114

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.