Jump to content

‘எனக்காக சிலுவையை சுமப்பவர் 'சசிகலா'...!' யாரைக் குறிப்பிடுகிறார் நாஞ்சில் சம்பத்?


Recommended Posts

‘எனக்காக சிலுவையை சுமப்பவர் 'சசிகலா'...!' யாரைக் குறிப்பிடுகிறார் நாஞ்சில் சம்பத்?

a3_10062.jpg

“என்னுடைய அரசியல் நடவடிக்கைகளில் சசிகலா எந்த கருத்தும் சொன்னதில்லை. கூட்டத்துக்குப் போக வேண்டாம் என்றோ, அரசியலை விட்டு விலக சொல்லியோ ஒரு போதும் சொல்லவில்லை. கடந்த 8 மாதகாலமாக மேடையில் பேசுகிற வாய்ப்பு இல்லாமல்,  நான் வீட்டில் வெறுமனே இருந்த காலகட்டங்களில், தன்னுடைய நகைகளை அடகு வைத்து குடும்பத்தை காப்பாற்றியவர் சசிகலா. ஏசு சிலுவையை தூக்கி, தானே தோளில் போட்டுக் கொண்டதைப் போல, என்னுடைய சுமைகளை முற்றிலுமாக சுமந்து கொள்ளும் சுமைதாங்கி சசிகலா.” என உருக்கமாக பேசுகிறார் நாஞ்சில் சம்பத்.

'சசிகலாவுக்கு மட்டும்தான் பொதுச்செயலாளர் ஆவதற்கான தகுதி இருக்கிறது என்றால், அவரை பொதுச்செயலாளராக ஏற்றுக்கொள்வதற்கான எந்தத் தகுதியும் எனக்கு இல்லை' எனச்சொல்லி கடந்த இருதினங்களாக அரசியலில் பரபரப்பை கிளப்பி வந்த நாஞ்சில் சம்பத், திடீரென இப்படி அந்தர் பல்டி அடிக்கிறாரே என யோசிக்க வேண்டாம்.

தனக்கான சிலுவையை சுமப்பவர் என நாஞ்சில் சம்பத்  உருகுவது, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா அல்ல. அவரது அன்பு மனைவி சசிகலாவைப்பற்றி.

a1_10266.jpgதன் மனைவி சசிகலாவை பற்றி முதன்முதலாக விகடனுக்கு மனம் திறக்கிறார் நாஞ்சில் சம்பத். “1989 ஆகஸ்ட் 17-ம்தேதி எனக்கு அன்றைய முதல்வர் கலைஞர் தலைமையில் திருமணம் நடந்தது. ஆகஸ்ட் 29-ம் தேதியே நான் காரமடை பொதுக்கூட்டத்துக்குப் போய்விட்டேன். அதைத் தொடர்ந்து 2012 வரை தொடர்ந்து நான்கு நாட்கள் நான் வீட்டில் இருப்பது போன்ற வாய்ப்பு எனக்கு கிடைக்கவே இல்லை. என்னுடைய பருவகாலங்கள் அனைத்தையும் நான் கட்டிலில் செலவழிக்கவில்லை. மேடையில் செலவழித்தேன்.

அன்பும், ஆதரவும் உள்ள கணவனாக நான் இருந்திருக்கிறேன். ஆனால் நம்முடைய சமூக அமைப்பில் ஒரு பெண் எதிர்பார்க்கின்ற எதையும் என் மனைவிக்கு நிறைவாக செய்ய முடியவில்லை என்ற குற்ற மனப்பான்மை எனக்கு உண்டு. ஆனால் அவள் அதை பொருட்படுத்தியதே இல்லை. சேலம் மத்திய சிறைச்சாலைத் தவிர, தமிழகத்தில் இருக்கிற 7 மத்திய சிறைச்சாலைகளிலும் வாசம் செய்தவன் நான். தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டவன். சிறைச்சாலைக்குள் தாக்கப்பட்டவன். மேடையிலேயே வத்தலக்குண்டில், குளித்தளையில் தாக்கப்பட்டவன். நான் காயம் பட்டு வீட்டுக்குச் செல்லும் போது கண்ணீர் சிந்தி அழுதிருக்கிறாளே தவிர, இனிமேல் மேடைக்கு போகக்கூடாது என்று ஒரு போதும் சொன்னதில்லை. என்னை நன்கு புரிந்துகொண்டவள் சசிகலா.

என்னுடைய குழந்தைகள் என்னுடைய மகள் மதிவதினி, என் மகன் சரத்பாஸ்கர் அவர்கள் வளருவதை நான் நேரடியாக பார்த்து அனுபவிக்கவில்லை. என்னுடைய வயதான தாய் தந்தையின் இறுதிக்காலத்தில், அவர்களை அவள் பரிவோடு பார்த்துக் கொண்டது என்னை நெகிழ வைத்தது. என்னுடைய குடும்பத்தில் ஓரளவு வருவாய் ஈட்டுபவன் நான்தான். அதை என்னுடைய சகோதரர்களுக்கும், ரத்த சொந்தங்களுக்கும் பகிர்ந்து கொடுக்கிறபோது அவள் ஒருநாளும் தடுத்ததில்லை. என்னுடைய குணமும், இயல்பும் அறிந்து, என்னுடைய குடும்பத் தேரை அவள்தான் இன்னும் இழுத்துச் செல்கிறாள். ஒருநாள் கூட எனக்கு அதுவேண்டும் இதுவேண்டும் என்று கேட்டதில்லை.

கடந்த 8 மாதகாலமாக மேடையில் பேசுகிற வாய்ப்பு இல்லாமல்  நான் வீட்டில் வெறுமனே இருந்த காலகட்டங்களில் தன்னுடைய நகைகளை அடகு வைத்து எங்கள் குடும்பத்தினுடைய தேவைகளை அவள் நிறைவேற்றுவதற்கு முன்வந்தாள். எனக்கு என்ன கிடைக்கிறதோ, அதை அவளிடத்திலே போய் ஒப்படைத்துவிடுவேன். இதுவரை நான் மருந்து கடைக்கோ, மளிகைக்கடைக்கோ, துணிக்கடைக்கோ சென்றதில்லை. பருப்பு வாங்குவதிலிருந்து பயணச்சீட்டு வாங்குவது வரை எல்லாமே அவள்தான். எல்லா வேலைகளையும் ஏசு சிலுவையை தூக்கி தானே தோளில் போட்டுக் கொண்டதைப் போல செய்கிறாள். என்னுடைய சுமைகளை முற்றிலுமாக சுமந்து கொள்ளும் சுமைதாங்கியாக அவள் இருக்கிறாள்.

a3_10523.jpg

அரசியல் நடவடிக்கைகளில் எந்த கருத்தும் சொன்னதில்லை. கூட்டத்துக்குப் போக வேண்டாம் என்றோ எதுவும் சொன்னதில்லை. அவள் சுட்டுத்தருகிற வரட்டியும், மட்டன் குழம்பும் அவள் வைத்துக் கொடுக்கும் மீன்குழம்பும் அலாதியான சுவையுடையது. என்னுடைய குடும்பத்தில் அவள் வந்தபிறகு என்னுடைய சுமையையெல்லாம் தூக்கி வைத்துவிட்டேன். எனக்கு பொதுவாழ்வே சுமையாகிப்போனது. கனமாகவும் இருக்கிறது. இதை இறக்கி வைக்க முடியாமல் திண்டாடுகிறேன். ஆனால் என் குடும்பச் சுமையை அவளே தாங்கிக் கொண்டாள். இதன் மூலம் கொடுத்துவைத்தவர்களின் பட்டியலில் நான் இருக்கிறேன். அவர்களுக்காக செலவழிக்கிற வாய்ப்பு இதுவரை எனக்கு கிடைக்கவில்லை. என்னுடைய மகளுக்கு மெடிக்கல் சீட்டு கிடைக்காத போது, அவள் சொல்லிதான் ஹோமியோபதி மருத்துவராக்கினோம்.

அவள் தலைக்குள் ஒரு கட்டி வந்தது. அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் சொன்னார்கள். திருநெல்வேலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள். அவளுக்கு ஒரு மேஜர் ஆபரேஷன் என்று சொன்னார்கள். அறுவைசிகிச்சசை நடைபெறும் அன்று வைகோ அவர்கள் திருச்சி வழக்கறிஞர் மாநாட்டை நடத்தினார். நாளைக்கு உனக்கு அறுவைசிகிச்சை. வழக்கறிஞர் மாநாடு இருக்கிறது என்ன செய்வதென்றே தெரியவில்லை என்றேன். ‘அறுவைசிகிச்சையை டாக்டர்கள்தானே செய்கிறார்கள். மகளும் மகனும் உடன் இருக்கிறார்கள். நீங்கள் போய்வாருங்கள்.’ என்றாள். அதைக் கூட அவள் தாங்கிக் கொண்டார். அவள் துயரப்படுகிற போதெல்லாம் துணையாக நான் இல்லை என்ற கவலை எனக்கு உண்டு. எங்க கிராமத்தில் எங்க குடும்பம்தான் செல்வாக்குள்ள குடும்பம். அப்பா இருக்கும் போது எல்லோரும் தேடி வருவார்கள். எல்லோரையும் உபசரித்து அனுப்புவதிலே, அவள் ஒருநாள் கூட முகம் சுழித்ததில்லை.” என்கிறார்.

இரண்டு சசிகலாவை பற்றியும் என்ன நினைக்கிறீர்கள் என அவரிடம் கேட்டோம். “இந்த சசிகலா அரசியலில் திணிக்கப்படுகிறவர். அந்த சசிகலா என்னுடைய குடும்பத்தை வழிநடத்துபவர். இந்த சசிகலாவை நான் பார்த்ததில்லை. பழகியதில்லை. ஒருநாள் கூட நான் அறிமுகமானதில்லை. ஆனால் அந்த சசிகலா என்னை மணம்முடித்த நாள்முதலாக கணவனே கண்கண்ட தெய்வம் என்று வாழ்கிற ஒரு குலமகளாக இருக்கிறாள்.”  எனச்சொல்லி பேட்டியை முடித்தார் நாஞ்சில் சம்பத்.

நாஞ்சில் சம்பத்துக்கு பரமபதத்தில் வரும் ஏணியும், பாம்பும் போல ‘சசிகலா’ என்ற பெயர் அமைந்து போனது தான் ஆச்சரியம்.

http://www.vikatan.com/news/coverstory/76914-nanjil-sampath-speaks-about-his-wife-sasikala.art

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.