Jump to content

‘வர்லாம் வர்லாம் வா’ என்ற பிறகும் வெளியாகாமல் காத்திருக்கும் படங்கள்!


Recommended Posts

‘வர்லாம் வர்லாம் வா’ என்ற பிறகும் வெளியாகாமல் காத்திருக்கும் படங்கள்!

இப்போ ரிலீஸாகி விடும், அப்போ ரிலீஸாகி விடும் என ரொம்ப நாட்களாகவே நம்மை எதிர்பார்க்கவைத்து, இன்று வரை ரிலீஸாகாமல் இருக்கும் சில தமிழ் சினிமாக்கள் லிஸ்ட் இதோ...

தமிழ் சினிமாக்கள்  இரண்டாவது படம்

 

ரெண்டாவது படம் :

'காதலுடன் கூடிய ஆன்மிக ஆக்‌ஷன் நிறைந்த கிராமிய அனிமேஷன் காவியம்' என ஆரம்பத்திலேயே அலப்பறையாக போஸ்டர் அடித்தார் இந்த படத்தின் இயக்குநர் சி.எஸ்.அமுதன். 'தமிழ் படம்' படத்திற்குப் பிறகு சி.எஸ்.அமுதன் இயக்கிய இந்த படத்தில் விமல், அரவிந்த் ஆகாஷ், ரிச்சர்டு, விஜயலட்சுமி, ரம்யா நம்பீசன் என நட்சத்திரப் பட்டாளமே நடித்திருக்கிறது. படத்தின் டிரெய்லரும் முற்றிலும் வித்தியாசமாக இருந்தது. முதல் படத்தை போலவே இந்த படத்திலும் இயக்குநர் ஏதாவது பண்ணியிருப்பார் என ரிலீஸுக்காக காத்திருந்தவர்கள் நாலைந்து வருடங்களாகியும் இன்றும் காத்துக்கொண்டே இருக்கிறார்கள். கண்ணுல படத்தை காட்டுங்கப்பா...

 

மதகஜராஜா madhagajaraja


மதகஜராஜா :

மூன்று ஆண்டிற்கு முன்பே வெளியாகியிருக்க வேண்டிய படம். இந்த படத்திற்கு பின்பு, தீயா வேலை செய்யணும் குமாரு, அரண்மனை 1, அரண்மனை 2, ஆம்பள என நான்கு படங்களை இயக்கிவிட்டு அடுத்த படத்திற்கு தயாராகிவிட்டார் சுந்தர்.சி. விஷாலுக்கும் இந்த படத்திற்கு ஹீரோவாக நடித்த 11 படங்கள் ரிலீஸாகிவிட்டது. ஆனால், இந்த படம் மட்டும் இன்னும் ரிலீசாகவே இல்லை. படத்தின் இரண்டு டிரெய்லர்களும், விஜய் ஆண்டனியின் இசையில் பாடல்கள் மட்டும் சில ஆண்டுகளுக்கு முன்பே வெளியாகிவிட்டது. வா ராஜா வா வா...

இடம் பொருள் ஏவல் idam porul eval


இடம் பொருள் ஏவல் :

நீர்ப்பறவை படத்திற்கு பிறகு இயக்குநர் சீனுராமசாமி இயக்கிய படம். விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால் இணைந்து நடித்திருக்கும் இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்து ரொம்ப நாட்களாகவே ரிலீஸுக்கு காத்திருக்கிறது. இந்த படத்திற்கு சீனுராமசாமி விஜய்சேதுபதியை வைத்து 'தர்மதுரை' படத்தை இயக்க, அந்த படமும் ரிலீஸாகி 100 நாட்களுக்கு மேல் கடந்துவிட்டது. யுவன் ஷங்கர் ராஜா இசையில் பாடல்களும், படத்தின் டிரெய்லரும் சென்ற ஆண்டிலேயே வெளியாகிவிட்டது. 

வா டீல் vaa deal


வா டீல் :

தடையறத்தாக்க படத்தின் வெற்றிக்கு பிறகு அருண் விஜய் நடித்த மாஸ் கமர்ஷியல் படம். விஜய் சேதுபதியை வைத்து 'றெக்க' படத்தை இயக்கிய ரத்ன சிவா தான் இந்த படத்தின் இயக்குநர். அருண் விஜய். இந்த படத்தில் நடித்ததற்கு பிறகு என்னை அறிந்தால் படத்தில் வில்லனாக நடித்து, தெலுங்கு, கன்னடம் என ஒரு ரவுண்டு அடித்துவிட்டு, மீண்டும் தமிழில் 'குற்றம் 23' படத்தின் மூலம் ஹீரோ அவதாரம் எடுத்துவிட்டார். ஆனால், இந்த படத்தின் ரிலீஸ் எப்போது என தெரியவில்லை. வா டீல் வா...

சிப்பாய் sippai


சிப்பாய் :

சிம்பு நடித்த 'சிலம்பாட்டம்' படத்திற்கு அடுத்தாக இயக்குநர் சரவணன் இயக்கிய படம். கௌதம் கார்த்திக், லட்சுமி மேனன் இயக்கத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவான இந்த படத்தின் டீசர் எப்போதோ வெளியாகிவிட்டது. தல, தளபதி ரெஃபரென்ஸ், மாஸ் சண்டைக்காட்சிகள் கொண்ட டீசர் வெளியான சமயங்களில் படத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு மிகுந்திருந்தது. இப்போதோ இந்த படத்தை பலரும் மறந்தேவிட்டார்கள்.

காதல் 2 கல்யாணம் kadhal 2 kalyanam


காதல் 2 கல்யாணம் :

நடிகர் ஆர்யாவின் தம்பி சத்யா முதன்முதலாக நடித்த படம். இந்த படத்திற்கு பிறகு இவர் நடித்த புத்தகம், அமரகாவியம் என பல படங்கள் வெளியாகிவிட்டது. இந்த படத்தில் இவருக்கு ஹீரோயினாக நடித்தவர் திவ்யா ஸ்பந்தனா. இதன் மூலம், இந்த படம் எவ்வளவு காலமாக ரிலீஸ் ஆகாமல் இருக்கிறது என்பதை நீங்கள் அறியலாம். யுவன் ஷங்கர் ராஜா இசையில் வெளியான ஆல்பம் நல்ல வரவேற்பை பெற்றது. 'நான் வெட்டப்போற ஆடு' பாடலை இன்றும் சிலர் ப்ளேலிஸ்டில் பார்க்கலாம்.

பஞ்சு மிட்டாய் panju mittai


பஞ்சு மிட்டாய் :

சென்ட்ராயன், காதல் சுகுமார் நடித்த 'கலரு' என்ற குறும்படத்தின் பெரும்பட வெர்ஷன் தான் இந்த 'பஞ்சுமிட்டாய்'. மாகாபா ஆனந்த், சென்ட்ராயன், பாண்டியராஜன் ஆகியோரின் நடிப்பில் உருவான இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்தார். இவரது இசையில் 'மை ஒய்ஃப் ரொம்ப பியூட்டிஃபுல்' பாடல் மட்டும் வெளியாகி பெரும் வரவேற்பைப்  பெற்றது. பஞ்சு மிட்டாய் சீக்கிரம் வரணும். டாட்.

ula உலா


உலா :

முரண் படத்தின் இயக்குநர் ராஜன் மாதவ் அடுத்து இயக்கிய படம். விதார்த், ராதிகா ஆப்தே, அஜ்மல், காயத்ரி, நிவாஷ் என பல பிரபல நடித்திருக்கும் இந்த படத்தின் 70 சதவிகித படப்பிடிப்பு 2014-ஆம் ஆண்டிலேயே நிறைவடைந்துவிட்டது. இந்தப் படத்தில் கிரிக்கெட் வீரர் டுவைன் பிராவோ ஆடிப்பாடி வெளியான 'ஏன்டா...' பாடலும் வைரல் ஹிட். உலா போகணும்னு காத்திருக்கோம்...

ரஜினி, கமல், விஜய், அஜித், சிவகார்த்திகேயன், நயன்தாரானு... 2017-ல் ஜெயிக்கப் போவது யார் படம்னு ஒரு பக்கம் எதிர்பார்ப்பு இருந்தாலும், இந்தப் படங்களும் வரணும் பாஸ்!

http://www.vikatan.com/cinema/tamil-cinema/76775-delayed-movies-in-tamil-cinema.art

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.