Jump to content

கார்... சேர்... ஹேர்! - ஜெயலலிதாவாக மாறிய சசிகலா!


Recommended Posts

கார்... சேர்... ஹேர்! - ஜெயலலிதாவாக மாறிய சசிகலா!

 

ஜெயலலிதாவின் கார் பின் சீட்டில் அமர்ந்தும் ஆட்சியின் நிழலாகவும் இருந்துவந்த சசிகலா, முன் சீட்டுக்கு வந்துவிட்டார். நிழல் நிஜமாகிவிட்டது.

ஜெயலலிதா, தலைமை அலுவலகம் வந்தால் போயஸ் கார்டன் டு ராயப்பேட்டை லாயிட்ஸ் ரோடு வரை திருவிழாதான். அது வழக்கமான சம்பிரதாயம். முதன்முறையாக சசிகலா பொறுப்பேற்று வரும்போது சும்மா இருப்பார்களா? ஜெயலலிதாவுக்கு இல்லாத அளவுக்குப் பதவிக்காகப் பட்டையை கிளப்பிவிட்டார்கள் கட்சியினர். முதல்வர் பதவியேற்கும்போது அண்ணா, எம்ஜி.ஆர் சமாதிகளில் அஞ்சலி செலுத்துவது ஜெயலலிதாவின் ஸ்டைல். அதை ஃபாலோ அப் செய்தார் சசிகலா. பொதுக்குழு முடிந்து ஊருக்குத் திரும்பிக்கொண்டிருந்தவர்கள் சமாதிக்கு வந்து அட்டெண்டன்ஸ் போட்டார்கள். ஜெயலலிதா பயன்படுத்திய TN07 AD 0006 பதிவு எண் கொண்ட காரில் முன் சீட்டில் அமர்ந்தபடி ஜெயலலிதா சமாதிக்கு வந்தார் சசிகலா. முதல்வர் பன்னீர்செல்வம், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, அவைத்தலைவர் மதுசூதனன் என முன்னணித் தலைவர்கள் பலரும் சசிகலாவுக்காகக் காத்திருந்தார்கள். பொதுக்குழுத் தீர்மானத்தை ஜெயலலிதாவின் சமாதியில் வைத்து வணங்கினார் சசிகலா. அங்கே அஞ்சலி வைபவம் முடிந்ததும் எம்.ஜி.ஆர்., அண்ணா சமாதிகளுக்கும் சென்றார். 

p12.jpg

அடுத்த நாள். கட்சித் தலைமை அலுவலகத்தில் கொண்டாட்டங்கள். ‘‘புரட்சித் தலைவி’’ கோஷத்துக்குப் பதிலாக ‘‘சின்னம்மா வாழ்க’’ என ஸ்ருதி மாறியிருந்தது. கூட்டம் சேர்க்கும் பொறுப்பு சென்னையை சேர்ந்த மாவட்டச் செயலாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. நிர்வாகிகள் மட்டுமே சசிகலாவை ஆதரிக்கும் நிலையில் தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் இந்த ஏற்பாடு. தலைமை அலுவலகத்தில் இருக்கும் எம்.ஜி.ஆர் சிலைக்குச் செல்ல மேடை, சசிகலாவை வரவேற்க நின்ற நிர்வாகிகள் என ஜெயலலிதாவுக்குத் தரப்பட்ட மரியாதைக் காட்சிகள் அப்படியே ரிப்பீட் ஆகின. முதல்வர் பன்னீர்செல்வம் கார் முதலில் வந்து நின்றது. அவர் இறங்கிச் சென்றவுடன் பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீஸார் ஓடிவந்து ‘‘சின்னம்மாவின் கார் இங்கேதான் நிற்கும். உடனடியாக முதல்வர் காரை வெளியே எடுங்கள்’’ என விரட்டினார்கள். பன்னீர் கார் வெளியேறியது. கூட்டம் முடிந்து சசிகலா சென்ற பிறகு, தனது காரைத் தேடி முதல்வர் பன்னீர்செல்வம் ரோட்டுக்கு வர வேண்டியிருந்தது.

சசிகலா வருகைக்காகப் புத்தம் புதிய சஃபாரி உடை அணிந்த போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அந்த சஃபாரி உடைக்குள் வாக்கி டாக்கியும் பிஸ்டலும் தெரிந்தன. வடிகட்டித்தான் உள்ளே நிர்வாகிகளை அனுமதித்தனர் போலீஸார். மாவட்டச் செயலாளர்களும் நிர்வாகிகளும் நுழைந்தபோது அடையாள அட்டையைக் கேட்டனர். ‘‘எங்களுக்கு உறுப்பினர் அட்டைதான் கொடுப்பாங்க. இது என்ன ஃபேக்டரியா? என்ன பொறுப்புன்னு போட்டு கார்டு கொடுக்குறதுக்கு?’’ என எகிறினார்கள். ‘‘அம்மா வந்தபோதுகூட இவ்ளோ கெடுபிடி இல்லை’’ எனப் புலம்பினார் கள். அலுவலகத்துக்குள் குறைவான தொண்டர் களையே அனுமதித்தனர். கூட்டம் குறைவாக இருந்தால் வெளியில் நின்ற மகளிர் அணியினரை உள்ளே அழைத்துச் சென்றார்கள். பால்கனியில் இருந்து மைக் பிடித்த செங்கோட்டையன், அங்கு நின்ற ஆண்களைப் பின்னால் செல்லும்படி கூறினார். அந்தப் பகுதி முழுவதும் மகளிர் அணியினர் இருக்குமாறு பார்த்துக்கொண்டனர்.

p12a.jpg

p12b.jpg

சசிகலா வருவதற்கு முன்பு கார்டனில் இருந்து ஜெயலலிதா பயன்படுத்திய நான்கு குஷன் நாற்காலிகள் எடுத்து வரப்பட்டன. கீழ்த் தளத்துக்கு இரண்டு, மேல் தளத்துக்கு இரண்டு என 4 நாற்காலிகளும் கொண்டு செல்லப்பட்டன. அந்த நாற்காலிகளைத்தான் சசிகலா பயன்படுத்தினார். ஜிம்மி ஜிப் கேமரா, அகண்ட எல்.இ.டி திரைகள் என நிகழ்ச்சியை நேரடி ஒளிபரப்பு செய்வதற்காக ஜெயா டி.வி-யின் 11 யூனிட்கள் சுறுசுறுப்பாகப் பணியாற்றின. வெளியே பிரமாண்ட திரை எல்லாம் ஜெயலலிதா வந்தபோது வைக்கப்பட்டது கிடையாது. ஜெயலலிதாவால் முன்பு நீக்கப்பட்ட டி.டி.வி தினகரனும், டாக்டர் வெங்கடேஷும் அலுவலகத்துக்கு வந்தனர். நான்கு வாகனங்கள் பாதுகாப்புக்கு அணிவகுத்து வர ஜெயலலிதா பயன்படுத்திய TN09 BE 6167 லேண்ட் க்ரூஸர் காரில் வந்து இறங்கினார் சசிகலா. ஜெயலலிதா பெயரில் இருக்கும் இந்த கார், 2010 ஆகஸ்ட்டில் வாங்கப்பட்டது. கார் டேஷ் போர்டில் விநாயகர், பார்த்தசாரதி, ஆஞ்சநேயர் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டிருந்தன. அரசு வீடியோகிராபர் பாபு அ.தி.மு.க. நிகழ்ச்சியை கவரேஜ் செய்து கொண்டிருந்தார்.

கீழ்த் தளத்தில்தான் பொதுச்செயலாளர் அறை இருக்கிறது. அதைப் புதுப்பித்திருந்தார்கள். தரையில் புது டைல்ஸ்கள், இன்டீரியர் மாற்றம் எல்லாம் செய்திருந்தார்கள். அங்கே சென்று சீட்டில் உட்கார்ந்து கையெழுத்துப் போட்டார். பொறுப்பேற்பு சம்பிரதாயங்கள் முடிந்த பிறகு முதல் தளத்துக்கு லிஃப்ட்டில் போனார். இந்த லிஃப்டும் ஜெயலலிதா மட்டுமே பயன்படுத்துவது. பால்கனியில் நின்றபடி தொண்டர்களுக்கு போஸ் கொடுத்தார். இதுவும் ஜெயலலிதாவின் ஸ்டைல். வழக்கமான கம்மலை அணியாமல் ஜெயலலிதா அணிந்து வரும் கம்மலைப் போலவே அணிந்துவந்தார்.  ஹேர் ஸ்டைலும் மாறியிருந்தது. கூந்தலை வலை போட்டு மூடியிருந்தார்.

p12sm.jpg

முதல் மாடிக் கூட்ட அரங்கத்தில் சசிகலா உரையாற்றினார். அவரின் முதல் உரையை கேட்க ஏக எதிர்ப்பார்ப்பு இருந்தது. “என் உயிரில் நான் சுமக்கிற அம்மாவை, எந்நாளும் நெஞ்சத்தில் சுமந்து வாழும், என் அன்பு சகோதர, சகோதரிகளே!” என கன்னிப் பேச்சைத் தொடங்கினார். ‘‘நம் அம்மாவுக்கு இந்த இயக்கம்தான் வாழ்க்கை. எனக்கோ அம்மாதான் வாழ்க்கை. ஆனால், இறைவன் தன் அன்பு மகளை தன்னிடம் அழைத்துக் கொண்டுவிட்டார்’’ என  சொன்ன போது கண்ணீர்விட்டார். உடனே “சின்னம்மா நாங்கள் இருக்கிறோம். நீங்கள் அழக்கூடாது. உங்கள் உருவத்தில் நாங்கள் அம்மாவைப் பார்க்கிறோம்” என அ.தி.மு.க. நிர்வாகிகள் கோஷமிட்டனர். இது அரங்கத்துக்கு உள்ளே நடந்தது. ஆனால், வெளியே இருந்த தொண்டர்கள் மத்தியில் எந்த ரியாக்‌ஷனும் இல்லை. ‘‘ ‘மக்களால் நான், மக்களுக்காகவே நான்’ என்று முழக்கமிட்ட நம் அம்மாவின் வழியில் நம் பயணத்தை மேற்கொள்வோம்” என ஜெயலலிதாவின் வார்த்தைகளுடன் உரையை முடித்தார். கையில் இருந்த கர்ச்சீஃப் அடிக்கடி கண்ணுக்கும் கைக்கும் இடையே ரன்கள்  எடுத்துக் கொண்டிருந்தது.

http://www.vikatan.com/juniorvikatan

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.