Jump to content

சசிகலா படத்தை கிழிப்பவர்களை பிடித்தால் 10 ஆயிரம் பரிசு - நெல்லை கலாட்டா !


Recommended Posts

சசிகலா படத்தை கிழிப்பவர்களை பிடித்தால் 10 ஆயிரம் பரிசு - நெல்லை கலாட்டா !

சசிகலா பேனர்

நெல்லை : அ.தி.மு.க பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள சசிகலாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு பகுதிகளில் ஃபிளக்ஸ் பேனர்கள் கிழித்தும், சேதப்படுத்தப்பட்டும் வரும் நிலையில், 'இவ்வாறு ஃபிளக்ஸ் பேனர்களை சேதப்படுத்துபவர்களை கண்டுபிடித்தால் அவர்களுக்கு பரிசு வழங்கப்படும்' என அறிவிப்பு வெளியிட்டு பரபரப்பை கிளப்பியுள்ளார்கள் அ.தி.மு.க. நிர்வாகி ஒருவர்.

தமிழக முதல்வராகவும், அ.தி.மு.க. பொதுச்செயலாளராகவும் இருந்த ஜெயலலிதா மறைவையடுத்து, அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் சசிகலா. இதற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் எதிர்ப்பு நிலவுகிறது. பல இடங்களில் சசிகலா படங்களை சேதப்படுத்தியும், கிழித்தெறிந்தும் தங்களது எதிர்ப்புகளை மக்கள் காட்டி வருகிறார்கள்.  

திருநெல்வேலி மாவட்டங்களிலும் சசிகலாவுக்கு கணிசமான அளவு எதிர்ப்புகள் இருந்து வருகிறது. கடையநல்லூர், தென்காசி. சங்கரன்கோவில், திசையன்விளை, வள்ளியூர் உள்ளிட்ட பல இடங்களில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவுக்கு ஆதரவாக ஃபிளக்ஸ் பேனர்களை வைத்துள்ள அ.தி.மு.க.வினர், சசிகலாவின் பேனர்கள், போஸ்டர்களை கிழித்தெறிந்து வருகின்றனர். பல இடங்களில் சசிகலாவின் படம் கிழிக்கப்பட்டும், தார் ஊற்றியும், சாணத்தை பூசியும் சேதப்படுத்தி வருகிறார்கள். இது சசிகலா ஆதரவாளர்களை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது. தார் ஊற்றியும், சாணத்தை பூசியும் சேதப்படுத்தப்பட்ட பேனர்களை கழுவியும், கிழிக்கப்பட்ட பேனர்களை உடனடியாக மாற்றியும் வருகிறார்கள்.

சசிகலா பேனர்

காவல்துறையில் வாய்மொழியாக புகார் அளிக்கப்பட்டபோதும், பெரும்பாலான இடங்களில் இவ்வாறு நடப்பதால் யார் செய்கிறார்கள் என்பதை கண்டறிய முடியவில்லை. தீவிரமாக கண்காணித்தும் யார் இப்படிச் செய்கிறார்கள் என்பதை கண்டறிய முடியாததால் சசிகலா ஆதரவாளர்கள் தவித்து வருகிறார்கள்.
அ.தி.மு.க. நிர்வாகிகளின் வாட்ஸ் அப் குழுவிலும் இதை தடுப்பது எப்படி என்பது தொடர்பாக அ.தி.மு.க. நிர்வாகிகள் விவாதித்து வந்தனர். இந்த குழுவின் அட்மினாக மாநகர மாவட்ட ஜெ பேரவைச் செயலாளரான கே.ஜே.சி.ஜெரால்ட் செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில், அந்த வாட்ஸ் குருப்பில் இந்த விவகாரம் தொடர்பாக  அ.தி.மு.க. மாநகர மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணிச் செயலாளரான பல்சசிகலா வாட்ஸப் பேனர்லிக்கோட்டை செல்லத்துரை என்பவர், 'சின்னம்மா படத்தை சேதப்படுத்துபவர்களை கண்டறிபவர்களுக்கு 10 ஆயிரம் பரிசுத்தொகை வழங்கப்படும்' என அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு பரபரப்பை கிளப்பியுள்ளார்.

அம்மாவின் நல்லாசியோடு சின்னம்மா கழகப் பொதுச்செயலாளராக தலைமையேற்று நடத்தும் அ.தி.மு.க.வின் ஆற்றல் மிக்க தொண்டர்களே..’ என்று தொடங்கும் அந்த அறிவிப்பில், ‘‘நமது கழகத்தின் மீது காழ்ப்புணர்ச்சி கொண்ட சூது மதியாளர்களின் சூழ்ச்சியால் குழப்பம் விளைவிக்கும் நோக்கத்தில் மாற்றுக் கட்சியினரின் தூண்டுதலுடன் செயல்படும் வன்முறையாளர்களின் செயல்களைத் தடுக்கும் கடமை நமக்கு உள்ளது.

குறிப்பாக, நமது கட்சியினர் வைக்கும் ஃபிளக்ஸ் போர்டுகளைச் சேதப்படுத்துபவர்களை அடையாளப்படுத்தும் பணியினைச் செய்ய நாம் நம்மை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். அவ்வாறு சின்னம்மாவின் படங்களை சேதப்படுத்தும் செயலில் ஈடுபடுபவர்களை கண்டுபிடிக்கும் பணியில் நாம் அனைவருமே இணைந்து செயல்படுவோம். இதற்காக இரவில் நாம் பாதுகாப்பில் ஈடுபட வேண்டும். ஃபிளக்ஸ் போர்டுகளைச் சேதப்படுத்தும் வன்முறையாளர்களைக் கண்டுபிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைக்கும் பணியில் ஈடுபட கட்சியினர் அனைவரும் முன்வர வேண்டும்.

அவ்வாறு அனைவரும் இரவு நேரங்களில் தீவிரமாக செயல்பட்டு கூடுதல் கண்காணிப்புடன் இருந்தால் போர்டுகளை சேதப்படுத்தும் நபர்களைப் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைக்க முடியும். நமது கட்சியின் ஃபிளக்ஸ் போர்டுகளை சேதப்படுத்தும் வன்முறையாளர்களைக் கண்டுபிடிப்பவர்களுக்கு மாநகர மாவட்ட எம்.ஜி.ஆர் மன்றத்தின் சார்பில் 10,000 ரூபாய் பரிசாக வழங்கப்படும்,’’ எனக் குறிப்பிட்டு உள்ளார்.

சசிகலா படம் அச்சடிக்கப்பட்ட ஃபிளக்ஸ் பேனர்களை கிழிப்பவர்களைக் கண்டுபிடித்தால் பரிசுத் தொகை வழங்கப்படும் என்கிற இந்த அறிவிப்பு குறித்து கட்சியினர் பரபரப்பாக பேசப்படுகிறது.

http://www.vikatan.com/news/tamilnadu/76875-admk-functionary-announce-prize-money-to-find-the-suspect-who-tore-sasikala-flex-banner.art

Link to comment
Share on other sites

பேசும் படம்: சசிகலா முதல்வராகக் கோரி போஸ்டர்

 

 
படங்கள்: எல்.சீனிவாசன்
படங்கள்: எல்.சீனிவாசன்
 
 

அதிமுக பொதுச் செயலாளராக உள்ள சசிகலா தமிழகத்தின் ஆட்சித் தலைமையையும் ஏற்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தும், முதல்வராக அழைப்பு விடுத்தும் அதிமுகவினரால் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன.

இப்படி சசிகலா ஆதரவு போஸ்டர்களை அதிமுகவினர், மக்கள் கவனம் பெறும் பகுதிகளில் ஒட்டி வருகின்றனர்.

இன்று சென்னை அண்ணா சாலையில் ஒட்டப்பட்ட போஸ்டரில் 'முதல்வராய் தலைமை ஏற்க வாருங்கள்' என்று சசிகலாவுக்கு ஆதரவாக அதிமுகவினர் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

அதன் புகைப்படப் பதிவுகள்

sasi1_3113101a.jpg

sasi_2_3113106a.jpg

sasi_3_3113107a.jpg

 

http://tamil.thehindu.com/tamilnadu/பேசும்-படம்-சசிகலா-முதல்வராகக்-கோரி-போஸ்டர்/article9459247.ece

Link to comment
Share on other sites

சசிகலா போஸ்டர் கிழிப்பு அதிகரிப்பு
 
 
 

சென்னையில், அ.தி.மு.க., நிர்வாகிகள் ஒட்டிய போஸ்டர்களில், சசிகலா புகைப்படத்தை,
அதிருப்தியாளர்கள் கிழித்தெறிவது, அதிகரித்து வருகிறது.

 

Tamil_News_large_168385820170104232553_318_219.jpg

அ.தி.மு.க., பொதுச் செயலராக, சசிகலா பொறுப் பேற்று உள்ளார். அவருக்கு வாழ்த்து தெரிவித் தும், அவர் முதல்வராக வர வேண்டும் என வலியுறுத்தியும், சென்னையில், கட்சி நிர்வாகி கள் ஆங்காங்கே, போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.

கட்சி நிர்வாகிகள், சசிகலாவிற்கு ஆதரவு தெரிவித்தாலும், கீழ்மட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், கடும் அதிருப்தியில் உள்ளனர். சசிகலா படம் போட்ட போஸ்டர்

ஒட்டப்பட்டதும், அதில் உள்ள சசிகலாவின் புகைப்படத்தை, அவர்கள் கிழித்துவருகின்றனர்.

சில இடங்களில், சசிகலா புகைப்படம் மீது சாணம் வீசி உள்ளனர். அதே போல், பேனர்களை கிழிக்கும் சம்பவமும் தொடர்கிறது. நேற்று, அ.தி.மு.க., தலைமை அலுவலகம் அருகே, சசிகலாவிற்கு வாழ்த்து தெரிவித்து ஒட்டப்பட்டிருந்த போஸ்டர் களிலும், சசிகலா புகைப்படம் கிழிக்கப்பட்டிருந்தது.

இது குறித்து, கட்சி நிர்வாகிகள் சிலர் கூறுகையில், 'போஸ்டர் ஒட்டிய, சிறிது நேரத்தில், அதில் உள்ள சசிகலாபடத்தை மட்டும், சிலர் கிழித்து விடுகின்ற னர்; எங்களால் தடுக்க முடியவில்லை' என்றனர்.
 

ஓ.பி.எஸ்., தொகுதியில் சசிகலா பேனர் கிழிப்பு


முதல்வர் பன்னீர்செல்வம் தொகுதியான, தேனி மாவட்டம் போடியில், சசிகலா ஆதரவு பேனர் கிழிக்கப்பட்டது.போடி தொகுதியில், 1989 தேர்தலில், முதன்முதலில் போட்டியிட்ட ஜெயலலிதா, வெற்றி பெற்று எதிர்க்கட்சி தலைவ ரானார். தற்போது, இத்தொகுதியில், முதல்வர் பன்னீர்செல்வம்,

 

 

 

 

spaceplay / pause

qunload | stop

ffullscreen

shift + slower / faster

volume

mmute

seek

 . seek to previous

126 seek to 10%, 20% … 60%

 

எம்.எல்.ஏ.,வாக உள்ளார். போடி அருகே, சில மலையில், சசிகலா ஆதரவு பேனர், கிழிக்கப் பட்டது; அது, உடனடியாக அகற்றப்பட்டது.

- நமது நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1683858

Link to comment
Share on other sites

சசிகலா பேனர்கள் கிழிப்பு
போலீஸ் ஆதரவுடன் மூடி மறைப்பு
 

 

  • gallerye_001311399_1684689.jpg

 

 
 

சேலத்தில், ஒரே நாளில், 10 இடங்களில், சசிகலாவுக்கு வாழ்த்து தெரிவித்து வைக்கப் பட்ட பேனர்களை, தொண்டர்கள் கிழித்தனர். அதை, போலீஸ் ஆதரவுடன், நிர்வாகிகள் மூடி மறைத்தனர்.

 

Tamil_News_large_168468920170106001255_318_219.jpg

அ.தி.மு.க., பொதுச் செயலராக, சசிகலா தேர்வு செய்யப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு

கிளம்பியுள் ளது. பதவியில் இருப்பவர்கள், நிர்வாகி கள், சம்பாதித்ததை பாதுகாக்க நினைக்கும் நிர்வாகி கள் மட்டுமே, தங்களின் வாழ்க்கை ஓட்டத்திற்காக, சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்து பேனர்கள் வைக்கின்றனர்.

ஆனால், சசிகலாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ள கட்சி தொண்டர்கள், செய்வதறியாது உள்ளனர். தீபாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்தா லும், தீபா முடிவை அறிவிக்காததால், குழப்பத்தில் உள்ளனர்.

தங்கள் கோபத்தை வெளிப்படுத்த, சசிகலாவுக்கு ஆதரவாக வைக்கப்படும் பேனர்கள், போஸ்டர் களை, கிழிப்பது, அகற்றுவது போன்ற செயல்களில் தொண்டர்கள் ஈடுபடுகின்றனர்.இது, அ.தி.மு.க., நிர்வாகிகளுக்கு பெரும் பிரச்னையாக உள்ளது. தமிழகம் முழுவதும் பல இடங்களில், சசிகலாவுக்கு

 

எதிராக பல தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. இதனால், நிர்வாகிகள், போலீஸ் உதவியுடன் மூடி மறைக்கபார்க்கின்றனர்.

இந்த வகையில், சேலத்தில் நேற்று ஒரே நாளில், 10 இடங்களில் சசிகலா ஆதரவு பேனர் கள் கிழித்தெறியப்பட்டன. இவற்றை, போலீசார் உத்தரவின் பேரில் நிர்வாகிகள் அகற்றினர்.

தொண்டர்களின் ஆக்ரோஷம், நிர்வாகிகள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது. போலீசார் கூறுகையில், 'அ.தி.மு.க., நிர்வாகி களால் வைக்கப்பட்டுள்ள பேனர்களை, அக் கட்சி தொண்டர்கள் கிழித்தனர்.

இதனால், பேனரை வைத்த நிர்வாகிகளுக்கே தகவல் தெரிவித்து, கிழிக்கப்பட்ட பேனர்களை மட்டும் அகற்றியுள்ளோம். நல்ல நிலையில் உள்ள பேனர்களை கண்காணிக்கும்படி, ரோந்து போலீசாருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது' என்றனர்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1684689

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சீமான் தமிழ் தேசியத்தைப் பேசுகிறார், உண்மை - ஈழத்தில் கஜேந்திரகுமார் அணி தமிழ் தேசியத்தைப் பேசுவது போல பேசுகிறார்😎. இதனால் மட்டும் தமிழ் தேசியம் வாழும் என்றால், நீங்கள் குறிப்பிடும் தமிழ் தேசியம் "யூ ரியூப்" வியாபார தமிழ் தேசியம் என எடுத்துக் கொள்கிறேன்! இந்த "திராவிடர்-தமிழர் ஆணி" ஈழவருக்கு தேவையில்லாத ஆணி என்கிறேன். இதனால், தமிழ் நாட்டில் ஆட்சியில் இருக்கப் போகும் கட்சிகளோடும் (குறைந்த பட்சம் புலத்தில் வாழும்) ஈழவர் பகைத்துக் கொள்ள வேண்டி வரும். இன்னொரு பக்கம், சீமான் தம்பிகள் முன்மாதிரியில் போலிச் செய்திகள், வைரல் வீடியோக்கள், யாழில் நடப்பது போன்ற எங்களிடையேயான அர்த்தமில்லாத சண்டைகளும் வளரும். இதெல்லாம் "ஈழவரான எங்களுக்கு ரொம்ப நல்லது!" என்று நீங்கள் சொன்னால் நான் நம்புகிறேன்!  
    • உங்களுக்கு இந்தியா பற்றி நான் தந்திருப்பது தரவுகளை. நீங்கள் மேலே அலம்பியிருப்பது இந்தியா தொடர்பான உங்கள் ஆத்திரக் கருத்துக்களை. இந்தியா மீது அபிமானம் எனக்கும் இல்லை - ஆனால், தரவுகளை நோக்கித் தான் ஒரு நாட்டின் முன்னேற்றம் பற்றிய கருத்துக்கள் வர வேண்டும், அந்த நாட்டை விரும்புகிறோமா வெறுக்கிறோமா என்பதை ஒட்டியல்ல. பொருளாதார வளர்ச்சி ஊழலால் பெரிதும் பாதிக்கப் பட்டிருக்கிறது இந்தியாவில். ஆனால், மனித வளம் அதையும் மீறி இந்தியாவை முன்னேற்றி வருகிறது. இந்தியா போன்ற கலாச்சாரப் பின்னணி கொண்ட, ஆனால் மனித வளம் மிகக் குறைந்த பாகிஸ்தானிலோ. வங்க தேசத்திலோ இந்தியாவில் இருப்பது போன்ற வளர்ச்சி இல்லை - இது உங்களுக்குக் கசக்கலாம், ஆனால் யதார்த்தம் அது தான்.
    • அருமையான கண்ணோட்டம் அழகான சிந்தனைகள் ......நல்லாயிருக்கு ......!  👍 இந்தக் கவிதையை நீங்கள் யாழ் அகவை 26 ல் பதியலாமே .......இப்பவும் நிர்வாகத்தில் சொன்னால் மாற்றிவிடுவார்கள்.........நாளையுடன் திகதி முடியுது என்று நினைக்கிறேன்.........!  
    • சீமானை எதிர்ப்பவர்கள் தங்களை அதிபுத்திசாலிகளாகவும் சீமானை ஆதரிப்பவர்கள்  கண்மூடித்தனமாக உணர்ச்சிகரமான பேச்சுக்களுக்கு மயங்கி சீமானை ஆதரிப்பது போலவும் ஒரு மாயை நிலவுகிறது.நாங்கள் சீமானை ஆதரிப்பதற்கு காரணம் தமிழ்த்தேசியத்தின் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் .அதை அடுத்த சந்ததிக்கு கடத்த வேண்டும்.இல்லாவிட்டால் ஆரியத்தை விட திராவிடமே தற்போதைய நிலையில் தமிழ்த்தேசியத்தை அழிப்பதில் முன்நிற்கிறார்கள்.ஆரியம் வட இந்தியாவில் நிலை கொண்டிருப்பதால் அதன் ஆபத்து பெரிய அளவில் இருக்காது.ஆனால் தமிழ்நாட்டுக்குள் இருந்து கொண்டு தமிழ்ப்பற்றாளர்களாக காட்டிக்கொண்டு தமிழ்த்தேசியத்தை இல்லாதொழிப்பதற்கு திராவிடம் அயராது வேலை செய்கிறது.சீமானின் எழுச்சி அவர்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்குகிறது.முன்பும் ஆதித்தனார் சிலம்புச்செல்வர் கிபெவிசுவநாதம் பழ நெடுமாறன் போன்றோர் தமிழ்த்தேசியத்தை முன்னெடுத்திருந்தாலும் அவர்கள் இயக்கமாக இயங்கினார்களே ஒழிய தேர்தல் அரசியலில் கவனத்தை பெரிய அளவில் குவிக்க வில்லை.திராவிடத்திற்கும் தமிழ்த்தேசிய இயக்கங்கள் இருப்பதில் பிரச்சினை இல்லை.அவர்கள் தேர்தல் அரசியலில் ஈடுபடுவது தமது தேர்தல் அரசியலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற காரணத்தினாலே தமிழ்த்தேசியத்தை மூர்க்கமாக எதிர்க்கிறார்கள்.
    • நல்ல கருத்து எனது  கேள்விக்கு உங்களிடமிருந்து  தான்  சரியான  பதில் வந்திருக்கிறது   ஆனால் நீங்கள்  குறிப்பிடும்  (ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள்) இவர்கள்  எத்தனை  வீதம்?? இவர்கள் 50 க்கு  அதிகமான  வீதம்இருந்தால் மகிழ்ச்சியே...  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.