Jump to content

பங்கு பிரித்தார் சசிகலா! - ஆட்சிக்கு நடராஜன்... கட்சிக்கு திவாகரன்!!


Recommended Posts

பங்கு பிரித்தார் சசிகலா! - ஆட்சிக்கு நடராஜன்... கட்சிக்கு திவாகரன்!!

 

‘‘மன்னார்குடி குடும்பத்துக்குள் அதிகாரப் பங்கீடுகள் நடந்து முடிந்துவிட்டன” என்ற பீடிகையுடன் ஆஜரானார் கழுகார். அவரைப் பேசவிட்டுக் காத்திருந்தோம்.

p42c.jpg‘‘சில மாதங்கள் காத்திருப்பார். தனது குடும்பத்திலேயே யாரையாவது நியமித்துவிட்டு சசிகலா அமைதியாக இருப்பார், ஏப்ரல் மாதம் வரை துணைப் பொதுச்செயலாளராக இருந்துவிட்டு அதன்பிறகு பொதுச்செயலாளர் ஆவார் என்றெல்லாம் பலரும் சொல்லி வந்தார்கள். அதை பொய்யாக்கிவிட்டு அ.தி.மு.க பொதுச்செயலாளராக சசிகலா நியமனம் செய்யப்பட்டுவிட்டார். தலைமை அலுவலகத்துக்கு வந்த சசிகலா, ‘இனி எல்லாமே நான்தான்’ என்பதைச் சொல்லிச் சென்றுவிட்டார். தலைமை அலுவலகத்தில் நடந்ததை எல்லாம் உமது நிருபர்கள் விரிவாகச் சொல்லி இருப்பார்கள். அடுத்தகட்ட நடவடிக்கைகளைப் பற்றி மட்டும் சொல்கிறேன்.”

‘‘சொல்லும்!”

‘‘பொதுச்செயலாளர் பதவியை ஏற்பதற்கு சசிகலாவுக்கு முதலில் தயக்கம் இருந்ததற்கு காரணம், ‘அனைத்து நிலைமைகளையும் தன்னால் சமாளிக்க முடியுமா?’ என்பதால்தான். ஆனால், அவருக்கு தன்னம்பிக்கை ஊட்டியது மொத்தமும் அவரது கணவர் நடராஜன்தான். ‘இன்றைய சூழ்நிலையில் நீங்கள்தான் பொதுச்செயலாளர் ஆகவேண்டும். நமது குடும்பத்திலேயே யாரை நியமித்தாலும் இந்தக் கட்சியை நடத்திச் செல்ல முடியாது. ஜெயலலிதாவைத் தெரிந்தவர்களுக்கு எல்லாம் சசிகலாவைத் தெரியும். மேடம், சின்ன மேடம்.... அம்மா, சின்னம்மா.... என்று ஜெயலலிதாவின் இமேஜுடன் சேர்ந்து உங்கள் இமேஜும் வளர்ந்துள்ளது. தமிழ்நாட்டு மக்களுக்கு உங்களைப் புதிதாக அறிமுகப்படுத்த வேண்டியது இல்லை. அதனால், இந்தப் பொறுப்பை தயங்காமல் எடுத்துக்கொள்ளுங்கள்’ என்று சசிகலாவின் கணவர் எம்.நடராஜன் சொல்லி இருக்கிறார். ‘எனக்குப் பேச வராது’ என்று சசிகலா சொல்ல... ‘ஜெயலலிதாவே எழுதி வைத்துக்கொண்டுதான் வாசித்தார். ஸ்டாலினும் பலநேரங்களில் எழுதிவைத்துதான் பேசுகிறார். அதனால், எழுதிப் படிப்பது தவறு இல்லை’ என்று அவருக்கு உற்சாக வார்த்தைகள் சொல்லப்பட்டன. சசிகலாவின் இந்த தயக்கத்தைப் பார்த்து சில ஏற்பாடுகள் செய்யப்பட்டனவாம்.”

p42big.jpg

‘‘அது என்ன?”

‘‘கட்சி, ஆட்சி என இரண்டு பெரிய பிரிவுகள் பிரிக்கப்பட்டன. ஆட்சியை எம்.நடராஜன் மேற்பார்வை பார்ப்பது. கட்சியை திவாகரன் கவனித்துக்கொள்வது. கட்சி ரீதியான விஷயங்களில் திவாகரனே அனைத்தையும் தீர்மானிப்பார். நடராஜன் அதில் அதிகமாகத் தலையிட மாட்டார். ஆட்சி நிர்வாகம், அதிகாரிகள் போன்ற விஷயங்களில் நடராஜனே கட்டளைப் பிறப்பிப்பார். அதில் திவாகரன் தலையிட மாட்டார். இப்படி அவர்களுக்குள் ஓர் ஒப்பந்தம் நடந்துள்ளதாம். ஒரேநாளில் நான்கைந்து தடவை திவாகரனுக்கு முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் போன் செய்ததாகவும், ‘அத்தானிடம் இதுபற்றி பேசுங்களேன்’ என்று அவர் சொன்னதாகவும் சொல்லப்படுகிறது. ‘அத்தான்’ என்று திவாகரன் சொல்வது, அக்கா சசிகலாவின் கணவர் என்ற அடிப்படையில் நடராஜனை!”

‘‘ஓஹோ!”

‘‘ராம மோகன ராவ் வீட்டில் ரெய்டு நடந்ததைத் தொடர்ந்து அவரை தலைமைச்செயலாளர் நாற்காலியில் இருந்து அதிரடியாகத் தூக்கினார்கள். இதனை ராம மோகன ராவ் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. தன்னை முழுமையாகக் காப்பாற்றுவார்கள் என்று அவர் நினைத்தார். நடராஜன்தான், ‘இப்படி ஒரு நடவடிக்கைக்கு உள்ளானவரை தலைமைச்செயலாளராக வைத்திருக்க முடியாது’ என்று சொல்லி ஆக்‌ஷனுக்குத் தூண்டினாராம். இதை அறிந்துதான், ‘தமிழக அரசுக்குத் துணிச்சல் இல்லை. எனக்கு எதிராகப் பலரும் செயல்படுகிறார்கள்’ என்ற தொனியில் ராம மோகன ராவ் பேட்டியில் சீறினார். அதிகாரிகள் நியமனம், மாற்றம் போன்றவை நடராஜன் மேற்பார்வையில் நடக்க ஆரம்பித்துவிட்டன.”

‘‘திவாகரனும் நடராஜனும் உட்கார்ந்துகொண்டு சசிகலாவை ஆட்டிவைக்கிறார்கள் என்கிறீரா?”

“இப்படித்தான் கோட்டையில் பேசிக்கொள்கிறார்கள். நடராஜனின் நண்பரும் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியுமான பன்னீர்செல்வம் அவருடன் இருக்கிறார். அனைத்துக் கட்டளைகளையும் அவர்கள் பிறப்பிக்கிறார்கள் என்று அதிகாரிகள் மட்டத்தில் பேச்சு இருக்கிறது. ஜெயலலிதா ஆட்சியில் கோலோச்சிய ஷீலா பாலகிருஷ்ணனும் வெங்கடரமணனும் சைலன்ட் ஆகிவிட்டார்களாம். இப்போது வந்துள்ள தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், எதிலும் பட்டுக்கொள்ளாதவர்.”

‘‘திவாகரன், கட்சிக்காரர்களை கன்ட்ரோல் பண்ணிவிடுவாரா?”

p42b.jpg

“அவரை அ.தி.மு.க-வினர் எப்போதும் ‘பாஸ்’ என்றுதான் அழைப்பார்கள். ஜெயலலிதா இருந்தபோதே, ‘பாஸ்’ என அழைக்கப்பட்ட அவர், ஜெயலலிதா இல்லாதபோது சும்மா இருப்பாரா? புத்தாண்டு தினத்தில் அவரது வீட்டை நோக்கிப் பலரும் படையெடுத்தார்கள். எம்.ஜி.ஆர். நினைவு தினத்தன்று உறுதிமொழி வாசிப்பை திவாகரனின் ஆளான ஓ.எஸ்.மணியனிடம் கொடுத்ததில் இருந்தே இதனை அறியலாம். இந்த அடிப்படையில் 12 மாவட்டச் செயலாளர்களை மாற்றப் போகிறார்கள். போயஸ் கார்டன் வீட்டில் இருந்து கட்சியைக் கவனிக்கிறார் டி.டி.வி.தினகரன். தலைமைக்கழகத்தில் இருந்து கட்சியைக் கவனிக்கப் போகிறார் டாக்டர் வெங்கடேஷ்.”

‘‘அமைச்சரவையில் மாற்றம் வருமா?”

“வரலாம். உதயகுமார், செல்லூர் ராஜு, பாலகிருஷ்ண ரெட்டி, கருப்பணன், துரைக்கண்ணு, எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகிய அமைச்சர்களின் தலைக்கு மேல் கத்தி தொங்கிக்கொண்டு இருக்கிறதாம். சில அமைச்சர்களின் துறைகள் மாறலாம். சிலர் புதிதாகச் சேர்க்கப்படலாம். செங்கோட்டையன், செந்தில்பாலாஜி, பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோரின் பெயர்கள் புதிய அமைச்சர்கள் பெயருக்கு அடிபடுகின்றன. கவுண்டர், நாடார் சமூகத்துக்கு முக்கியத்துவம் தரும் வகையில் இந்த மாற்றம் அமையுமாம். தேவர் டாமினேஷன் தெரியாதது மாதிரி இந்த மாற்றத்தைச் செய்யப் போகிறார்களாம்.”

‘‘சசிகலா முதலமைச்சரானால், பன்னீர்?”

‘‘ஓ. பன்னீர்செல்வம், சபாநாயகர் ஆக்கப்படலாம். சபாநாயகராக இருக்கும் தனபால், அமைச்சர் ஆகலாம். பன்னீர் வகித்த நிதித்துறை மாஃபா பாண்டியராஜனுக்குப் போகலாம் என்கிறார்கள்.”

‘‘அ.தி,மு.க-வில்கூட அதிரடி மாற்றங்கள் இருக்கும்போல?”

‘‘ஆமாம். அது அ.தி.மு.க பொதுக்குழுவிலேயே தெரிந்துவிட்டது. சுமார் 20 மாவட்டச் செயலாளர்களின் பெயர்களை தீர்மானம் முன்மொழிதல் பட்டியலில் இருந்து தூக்கிவிட்டார்கள். அதுவே பலருக்கும் பீதியைக் கொடுத்துள்ளது. முக்கிய அமைச்சர்களில் சிலரும் பார்வையாளர்கள் வரிசையில் உட்கார வைக்கப்பட்டார்கள். தலைமைக்கழக நிர்வாகிகளில் சிலருக்கும் பொதுக்குழுவில் உரிய முக்கியத்துவம் தரப்படவில்லை. பொதுக்குழு மேடையில் அமரவேண்டியவர்கள், பார்வையாளர்கள் வரிசையில் முக்கியத்துவம் தரப்படவேண்டியவர்கள், தீர்மானங்களை முன்மொழிபவர்கள் என்று போயஸ் கார்டனில் முன்கூட்டியே ரிகர்சல் நடந்தது. அனைத்தும் சசிகலா மேற்பார்வையில்!”

“அட!”

“ஜெயலலிதா இருந்தவரை, அ.தி.மு.க பொதுக்குழுவுடன், செயற்குழுக் கூட்டமும் பெரும்பாலும் சேர்த்தே நடத்தப்படும்.  சிறப்பு அழைப்பாளர்கள் என்ற பெயரில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பொதுக்குழுவில் அனுமதிக்கப்படுவார்கள். இப்போது சசிகலா குடும்பத்தினர் `டிக்’ செய்தவர்களுக்குத்தான் வாய்ப்பு கிடைத்ததாம். கடந்த காலங்களில் சசிகலாவால் மறைமுகமாகத் தட்டி வைக்கப்பட்ட
வர்கள், சசிகலாவை நிச்சயமாக ஆதரிக்க மாட்டார்கள் என்ற சின்ன சந்தேகம் உள்ளவர்களுக்கும் சிறப்பு அழைப்பாளர்கள் என்கிற பேனரில் தப்பித்தவறிக்கூட அழைப்பிதழ் போகாமல் பார்த்துக்கொண்டனர். அதாவது, நிர்வாகிகள் அளவில் யாருமே தனக்கு எதிர்ப்பாக இல்லை என்பதைக் காட்ட நினைக்கிறார் சசிகலா!”

‘‘அவைத்தலைவரில் மாற்றம் உண்டா?”

‘‘பண்ருட்டி ராமச்சந்திரன் அவைத்தலைவர் ஆக்கப்படலாம் என்கிறார்கள். பொன்னையனுக்கும் அந்த ஆசை இருக்கிறது. செங்கோட்டையன் பெயரைச் சிலர் சொல்கிறார்கள். கட்சிப் பதவியில் இருந்துகொண்டு ஆட்சிக்கு ஆலோசனை சொல்லும் ஒரு குழுவை உருவாக்கப் போகிறார்களாம். அமைப்புச் செயலாளர் பதவியிலும் மாற்றங்கள் வரப்போகின்றன. டெல்டா ஏரியாவில் முன்பு கோலோச்சினார் வைத்திலிங்கம். இனி, அந்த இடத்துக்கு ஓ.எஸ்.மணியன் வருவார். சசிகலா இனி கட்சிக்குள் செய்யப்போகும் கல்தா, புது நியமனம்... போன்ற நடவடிக்கைகளைக் கட்சியின் முன்னணி தலைவர்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகிறார்கள். அவரின் நடவடிக்கையைப் பொறுத்து அதிருப்தி கோஷ்டிகள் உருவாகும்.”

p42a.jpg

“தம்பிதுரைக்கு முக்கியத்துவம் கூடுமோ?”

‘‘அப்படித் தெரியவில்லை. நாடாளுமன்ற மக்களவை துணை சபாநாயகராக அவர் இருப்பதால் டெல்லிக்கும் இந்த ஆட்சிக்குமான மீடியேட்டராக தம்பிதுரை இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள். அவர் அனைத்துக்கும் முன்னால் வந்து நிற்பதை முதல்வர் பன்னீர் விரும்பவில்லை. டெல்லி பி.ஜே.பி தலைமையிடம் நெருக்கம் இருப்பதாக ஒரு தோற்றத்தைக் காட்டிக்கொண்டு நிறைய விஷயங்களில் தம்பிதுரை தலையிடுவதாகச் சொல்கிறார்கள். ‘சசிகலாவே முதலமைச்சர் ஆகவேண்டும், ஆட்சியும் கட்சியும் ஒரே நபரிடம்தான் இருக்க வேண்டும்’ என்று தம்பிதுரை, சசிகலாவுக்கு ஏகத்துக்கும் ஐஸ் வைத்துள்ளார். இதன் மூலமாக சசிகலாவிடம் தனக்கு செல்வாக்கு உயரும் என்று நினைக்கிறாராம். ஆனால், அ.தி.மு.க எம்.பி-க்கள் தம்பிதுரைக்கு சசிகலா முக்கியத்துவம் தருவதை ரசிக்கவில்லையாம். புலம்பிக்கொண்டு இருக்கிறார்கள்.!”

‘‘அப்படியா?”

“தேசிய அளவில் எங்காவது இயற்கை பாதிப்பு ஏற்பட்டால் எம்.பி-க்கள் விருப்பப்பட்டால், அவர்களது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து குறிப்பிட்ட தொகையை அங்கே தரலாம். தமிழகத்தில் சென்னை உட்பட மூன்று மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட போது எம்.பி-க்கள் நிதியில் இருந்து பணம் தரலாம் என்று மத்திய அரசு வழக்கம்போல் ஒரு அறிவிப்பை வெளியிட்டதாம். அ.தி.மு.க எம்.பி-க்கள் பலரும் பணம் தர முன்வரவில்லை. ஆனால், தம்பிதுரை முந்திக்கொண்டு தமிழகத்திலுள்ள அ.தி.மு.க-வின் 50 எம்.பி-க்களும் அவர்களின் நிதியில் இருந்து தலா ஒரு கோடி ரூபாய் வீதம் கட்டாயமாகத் தர வைத்துவிட்டாராம். இது பல எம்.பி-க்களுக்குப் பிடிக்கவில்லை. அடுத்த அதிருப்தி... நாடாளுமன்ற மக்களவைத் துணை சபாநாயகர் பதவியுடன் அனைத்து எம்.பி-க்கள் நிதியை கையாளும் குழுத் தலைவர் பதவியையும் வைத்திருக்கிறார். ஆறு வருடங்கள் கடந்துவிட்ட சூழ்நிலையில், அந்த நிதியை உயர்த்தி வாங்கவேண்டிய பொறுப்பு தம்பிதுரையிடம்தான் உள்ளதாம். ஆனால், இதை அவர் மத்திய அரசிடம் இதுவரை கொண்டுபோகவே இல்லை என்கிற புலம்பலும் அகில இந்திய அளவில் எம்.பி-க்கள் மத்தியில் கேட்கிறது. இவை ஒட்டுமொத்தமாக தம்பிதுரைக்கான எதிர்ப்பாக மாறி வருகிறது.”

‘‘சசிகலா உடனடியாக முதல்வராவதற்கான ஏற்பாடுகள் நடக்கின்றனவா?”

‘‘இரட்டை மனநிலையில் இருக்கிறார் சசிகலா. உடனடியாக அவர் முதல்வர் ஆகிவிடுவது நல்லது என்று உளவுத்துறை ரிப்போர்ட் போட்டிருக்கிறதாம். ‘எதிர்ப்பு மனநிலை இருக்கிறது என்பதை வைத்து முதலமைச்சர் பொறுப்பை ஏற்றுக்கொள்ள தயங்கத் தேவையில்லை. லேசான எதிர்ப்பு இருக்கும்போதே பதவி ஏற்றுக்கொண்டால் அது வளராமல் அமுங்கிவிடும்’ எனச் சொல்லியிருக்கிறாராம் உளவுத்துறை அதிகாரி ஒருவர். சசி தரப்புக்கு எதிர்ப்பாக இருந்து இப்போது மாற்றுப் பதவியில் இருக்கும் ஓர் அதிகாரியும் இதனை ஆதரித்தாராம். அதனால், வெகுசீக்கிரமே பதவிப்பிரமாணத்தை கிண்டியில் பார்க்கலாம்” என்றபடி எழுந்த கழுகார்,

‘‘1991-96-ம் ஆண்டு நடந்த மோசமான கேடுகளுக்கு அந்த மூத்தவல்லியைக் காரணம் என்பார்கள். அவர் மீண்டும் தனது ஆட்டத்தை ஆரம்பித்துவிட்டார்” என்றபடி பறந்தார்.

அட்டை ஓவியம்: க.நன்மாறன்


p42.jpg

‘‘நான் சாதி அரசியல் பண்ண மாட்டேன்!”

சிகலாவை விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் சந்தித்தது அரசியல் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது. அப்போலோவில் இருந்த ஜெயலலிதாவை சந்திக்கச் சென்ற முதல் அரசியல்வாதி திருமாதான்.
அதன்பிறகுதான் அனைத்துத் தலைவர்களும் படையெடுத்தனர். அதேபோல், சசிகலாவைப் பாராட்டச் சென்றுள்ளார் திருமா. ‘‘சசிகலா பொதுச்செயலாளராகி உள்ளார். அவரை நீங்கள் சென்று வாழ்த்த வேண்டும்” என்று கட்சி நிர்வாகிகள் சிலரே திருமாவைத் தூண்டினார்களாம். ‘‘என்ன பேசுகிறார் என்பதைவைத்து அவரைச் சந்திக்கலாம்” என்றாராம் திருமா.

பொதுச்செயலாளராக பதவி ஏற்ற அன்று பேசிய சசிகலா, ‘‘சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு இந்த இயக்கத்தை நடத்துவேன்” என்று சொன்னார் அல்லவா? அதன்பிறகுதான் சசிகலாவைப் பார்க்கலாம் என்று முடிவெடுத்தாராம். சசிகலாவை சந்திக்க நேரம் கேட்டதும் உடனடியாகத் தரப்பட்டது. திருமாவுடன் வி.சி.க-வின் பொதுச்செயலாளர் ரவிக்குமாரும் சென்றார்.

http://www.vikatan.com/juniorvikatan

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பையன் மைண்ட் வொய்ஸ்:   அப்பாடா .......... பெரியப்பாவுடன்  10 பேர் ஆச்சுது ....... இனி போட்டிக்கு பங்கமில்லை........!  😂 கிருபன் & பையன்.......!  🤣
    • சுற்றுலாப் பிரதேசங்களில் சிறப்பு சோதனை நடவடிக்கை! நாட்டிலுள்ள சுற்றுலாப் பகுதிகளில் சிறப்பு சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. அதன்படி, கொழும்பு – காலி முகத்திடல், புதுக்கடை, பேருவளை, பெந்தோட்டை, ஹிக்கடுவ, காலி, எல்ல ஆகிய பகுதிகளில் இரவு நேரச் சோதனைகள் நடத்தப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபையின் சோதனைகள் மற்றும் விசேட விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் சங்ஜய இரசிங்க தெரிவித்துள்ளார். நாட்டில் அண்மைக்காலமாக  சுற்றுலாப் பயணிகள்  அச்சுறுத்தப்படுதல் மற்றும் ஏமாற்றப்படும் சம்பவங்கள் அதிகளவில் இடம்பெற்று வருகின்றன. அண்மையில், கொழும்பு – புதுக்கடை மற்றும் களுத்துறை நகரப் பகுதிகளில் இவ்வாறு இரு சம்பவங்கள் நடைபெற்றிருந்தன. இதையடுத்தே, இந்த விசேட இரவு நேரச் சோதனைகள் நடத்தப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபையின் சோதனைகள் மற்றும் விசேட விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் சங்ஜய இரசிங்க தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1378849
    • யாழில் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல். தியாகத்தாய் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தலின் இறுதிநாள் நினைவுதிம் யாழ்ப்பாணத்தில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலிபனின் நினைவுத் தூபிக்கு முன்பாக இவ் நினைவேந்தல் நடைபெற்றது. அன்ணை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் வடக்கு கிழக்கு மற்றும் புலம்பெயர் தேசங்களிலும் நடைபெற்று வருகின்றது. இதன் அங்கமாகக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாண தலைமை அலுவலகத்தில் நினைவுநாள் தொடர்ச்சியாக அனுஷ்டிக்கப்பட்டு வந்ததுடன் இறுதிநாள் நிகழ்விற்காக ஊர்திப் பவணியொன்றும் இங்கிருந்து மட்டக்களப்பிற்கு சென்றிருந்தது. இதன் தொடராக நினைவுநாளின் இறுதிநாளான இன்று அக் கட்சியின் ஏற்பாட்டில் நல்லூரில் கொட்டகை அமைத்து நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது. இதன் போது பொதுச்சுடர் ஏற்றி மலர்மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் அரசியல் கட்சி உறுப்பினர்கள் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1378867
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.